எட்டுத்திக்கும் மாதங்கி!!
>> வியாழன், 19 ஜூலை, 2012
எட்டுத்திக்கும் மாதங்கி!!
படங்கள்:மு.சுதாகர்
”யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” இது மாட்சிமை தாங்கிய
யானைகளை செயற்ககையாக்கி விட்டதாக களித்த மனிதன் உருவாக்கிய பழமொழிகளில்
ஒன்று.ஆனால் இன்னும் இப்புவியில் ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலகாடுகளில் 3 இன
யானைகள் சுதந்திரமாக வாழ்கின்றன்.அவை ஆப்பிரிக்க புதர்காட்டு யானை,அடர் காட்டு
யானை,மற்றும் ஆசிய யானை.
ஒரு முழு வளர்ச்சி பெற்ற ஆப்பிரிக்க ஆண் யானை ஏறக்குறைய
7000 கிலோ.அதிக படச உயரம் 13 அடி.இதனால் உலகின் நான்கு கால் விலங்குகளில் பெரிதும்
பலம் கொண்ட்துமாக யானை மதிக்கப்படுகிறது.ஆசிய யானை உயரம் அதிக பட்சமாக 11 அடி,எடை
அதிக அளவு 6000 கிலோ.யானைகளின் நிறம் கருப்பாக இருப்பதாகத் தெரிந்தாலும் உண்மையில்
கருஞ்சாம்பல்.
யானையின் தோல் 25 மி.மீ. வரை தடிப்பானது.கூருணர்வு மிக்கது.ஈ,கொசு
,உண்ணிக் கடிகளை அவற்றால் பெருத்துகொள்ள இயலாது.அதனால் தான் பரிணாமம் அதன்
உடற்பரப்பை விட இரு மடங்கு அகலமான தோலைத தந்துள்ளது.இதனை தோலின்
மடிப்பு,தொயவு,தளர்வு,இடுக்கு ஆகியவற்றின் மூலம் அறியலாம்.இருந்தாலும்
குருதியுறிஞ்சும் பூச்சிகள் பலவும் இவற்றினூடே மறைந்து கொள்வதற்க்கு அதுவே நல்ல வழியாகியுள்ளது.பூச்சிகள்கடிக்கும்
போது யானைகள் ஒரு குச்சியையோ சிறு கிளைகளையோ ஒடித்து அதனால் சொரிந்து
கொள்ளும்.அல்லது அரிக்குமிட்த்தை பாறையின் மீது தேய்த்து கொள்கின்றன.இது போன்ற
பழக்கங்கள யானை மற்ற மிருகங்களை விட அறிவுள்ளதாக காட்டுகிறது.
யானையின் மருப்பு அல்லது தந்தம் என்பது ,மேல் தாடையின்
துருத்திய முன்வெட்டு பல்.யானைக்கு மொத்தம் 26 பற்கள்.இதில் இரண்டு தந்தம் போக
கீழ்த்தாடையில் 12ம்,மேலதாடையில் 12ம் உள்ளது.தமது வாழ்நாளில் 6 முறை பதிய பற்களை
பெறலாம்.வலர்ச்சி பெற்ற ஒரு பல்லின் எடை 5 கிலோ
யானையின் தனிச்சிறப்புகுரிய உறுப்பு 200 கிலோ எடை கொண்ட
அதன் தும்பிக்கை தான்.நீண்டு வளர்ந்த மேல் உதடும் மூக்கும் ஆகும்.150000 தனித் தனி
தசைநார் ,நரம்பு கொண்ட அமைப்பு. இதனால் நுட்பமான சிறு வேலையை கூட அதனால் செய்ய
முடிகிறது.நாணய்த்தைகூட எடுக்க முடியும்.இதன் மூலம் தன் பகைமையோ மற்ற விஅல்ங்களையோ
, தண்ணீரையோ அது 5 கி.மீ தொலைவில இருந்தாலும் கண்டுபிடிக்கமுடியும்.அதன் உயிர்
நாடி..தும்பிக்கை காயம்பட்டலோ துண்டிக்கப்பட்டலோ யானை உயிர் வாழ்வது கடினம்.யானை
தன் பார்வையைவிட கூர்மையான கேட்பு சக்தியையும்,நுடபமான மோப்பத்திறனையுமே நம்பி
வாழ்கிறது.
யானை ஒரு நாளில் 18 ம்ணி நேரத்தை உணவு தேடித் திண்பதிலேயே
செலவிடும். குறந்த்து 100 கிலோ முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணும். குடிக்க மட்டும்
100 லிருந்து 150 லிட்டர் த்ண்ணீர் தேவை.இதற்க்காக கடும் வறட்சி காலத்தில் கூட 40
முதல் 50 கி.மீ தொலைவுக்கு தண்ணீர் தேடி பயணிக்கிறது
யானைகள் சுமார் 5 முதல் 15 வரை குடும்பமாக வாழும்.கூட்ட்த்திற்க்கு
அனுபவமிக்க பெண் யானையே தலைமை ஏற்க்கும்.யானைகள் பயனிக்கும் போது ஒன்றோடு ஒன்று
தொடர்புகொள்ள ஒருவிதமான கமுக்கமான ஒலியை பயன் படுத்துகின்றன.செல்லும் வழியெல்லாம் மரக்கிளைகளை
ஒடித்துக் கொண்டும் வித விதமாக குரலை மாற்றிகொண்டே போகும்.செரிமான
ஏப்பம்.கடமுடாவென மரம் புரட்டும் ஓசை,பன்றி போல உறுமுதல் ,முன்குதல்,கிரீச்சிடுதல்
,கனைப்பு மற்றும் பிளிறல் ஆகியவையே யானைகளின் உரையாடல்கள்.
யானைகள் நடக்கும்போது அதன் பாதங்கள் காற்றுப்பைபோல்
செயல்படுகின்றன். இதனால் சேற்றிலோ,சதுப்பு நிலத்திலோ காலகள் சிக்கி கொள்ளாமல்
பாதுகாப்பதோடு ஓசையின்றி நடக்கவும் வசதியாயிருக்கிறது.நான்கு முழங்கால்களை உடைய
ஒரே விலங்கு யானை தான்.ஆசிய யானையின் முன் கால் பாத்தில் 5 நகங்களும்
பின்கால்களில் 4 நகங்களும் உள்ளன்.அதனால் நான்குகால் பாய்ச்சலாக ஓடவோ ,பாயவே ,குதிக்கவோ
இயலாது.வேகமான நடையே ஓட்டம்.அதிகபட்சமாக மணிக்கி 40 கி.மீ வேகத்தில் அதனால நடக்க
முடியும்.சாதரனமாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நடக்கும்.ஆனால் நீச்சல் நன்றாக
தெரியும்.ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு நீந்தியே சொல்லும்!
பெண் யானைகள் 12 முதல் 15 வயதுக்குள்ளும் ஆண் யானைகள் 15
வயதிலும் பருவமடைகின்றன.ஆனால் 25-30 வயது வரை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை.முதிர்ந்த
யானைகளே இனப்பெருக்கத்தில் வெற்ற அடைகின்றன. 20 முதல் 22 மாதங்களில்
கருக்காலம்.வெகு அரிதாகவே இரட்டை குட்டி ஈனும்.குட்டி மிகுதியான உரோமங்களுடன்
சுமார் 80 முதல் 120 கிலோ எடை இருக்கும்.3 அடி உயரம்.குட்டி பிறந்த ஒரு மணி
நேரத்தில் நடக்கவும்,ஏதாவது உணவு கிடைக்குமா எனத் தேடவும் செய்கிறது.பிறக்கும்
குட்டிகளில் இயற்கையான் குறைபாடுகளால் 5 சதவீதம் இறந்து விடுகின்றன.10 சதவீதம் இரைகொல்லிகளால்
வேட்டையாடுப் படுகின்றன.,4 ஆண்டுகளுக்கு ஒரு முறைகுட்டி ஈன்றாலும் குட்டியை தாய்
யானை 10 ஆண்டுகள் வரை பிரியாது.மண்னுலகிலே பெரிய விலங்கான யானைக்கு முதல் எதிரி
மனிதனே.ஆசிய ,ஆப்பிரிக்க யானைகள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உலக இயற்கை
மற்றும் இயற்கை வள பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.
சிந்து சமவெளி நாகரிக திராவிட மக்கள் சுமார் 4000
ஆண்டுகளுக்கு முன்னர் காட்டு யானையை பழக்கினர்.ஹரப்பா மொகஞ்சதாரோ ஆய்வுகளில்
கிடைத்த யானைகளின் வார்ப்பு ஒவியங்களே அதற்கான நனீன வரலாற்றுப் பதிவுகளாக
அறியப்படுகின்றன. ஆரிய மத்த்தின் பழம் நூலகளான வேதங்கள்,உபநிடதங்கள்,பழந்தமிழ்
இலக்கியம் போன்றவற்றில் யானைகள் கனிசமாக இடம்பெற்றுள்ளன.
கி.மு 320 களில் அலெக்சாண்டர், போரஸ் மன்னன்,கி.மு 280
களில் ரோம அரசன் பைரஸ்,கி.மு 210 களில் ஆப்பிரிக்க மன்னன்
ஹான்னிபால்,கார்த்தேஜியத் தளபதி மற்றும் சீன மன்னர்கள் யாவரும் தங்கள் ராணுவத்தில்
யானைப் படையை வைத்திருந்தனர்.இம்மரபு மூலம் யானைகளை வைத்திராத இந்திய அரசர்களே
இல்லையென எண்ணுமளவுக்கு அது கம்பிரத்தின்,கவுரத்தின் இலச்சினையாக சின்னமாக
கருதப்பட்டது.
தொனமையான தமிழ் பண்பாட்டின் வரலாற்றை ஆராயும் போது யானை, ஒரு பெரிய பலம் கொண்ட ,வளம் கொண்ட அழகு
விலங்காகவே போற்றப் பட்டிருக்கிறது .மாபெரும் சங்க இலக்கியத்தில் யானை, மா, கரி, சிந்தூரம்,
அத்தி, அறுகு, ஆம்பல், ஆனை,இபம்,இம்மடி,களிறு,கைம்மா,போன்று சுமார் 50
புனைபெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அகநானூற்றில் , குறிப்பிட்ட 120 பாடல்களின் ஒரு தொகுப்புக்கு ‘களிற்றி யானை
நிரை’ (ஆண் யானைகளின் வரிசை)
என்னும் பெயர் தரப்பட்டிருந்த்தை ஈண்டு நோக்கவும்.
மொத்ததில் யானையை குறிப்பிடாத பாடலோ
செய்யுளோ செய்திகளோ தமிழில் இல்லை.புராண, இதிகாச ,இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும்
மேலே வள்ளுவரின் குறட்பாக்கள் யானைகளை பகுத்தறிவியல் ரீதியாக பார்க்கின்றன.
கொடும் கூண்டிலடைத்து ,கடும் சங்கிலியால் பிணைத்து,ஒரு
விலங்குயிரின் பிறப்புரிமை புரியாத மக்களால் தலைவர்,ஞானி,முனிவர்,விஞ்ஞானி எனக்
கருதிகொண்டிருக்கும் பலர்,வளர்ப்பு யானையின் தெய்வத்தன்மையும் அறிவுக்கூர்கையையும்
பத்தியையும் பலத்தையும் மெச்சி சிலாகிப்பர்.அப்படியானல் மவுத்தன் கையில் எதற்க்கு
அங்குசமும் தடியும்,இரும்புச்சங்கலியும்,ஈட்டியும்? நம்மைச்சுற்றி
“பாரம்பரியம்,ஆரண்யப் பண்பாடு,திராவிடம் தேசியம் ‘ என்று முழங்குவர் ஒரு புறம்,”உயிர்களிட்த்தில் அன்பு வேண்டும்,ஈசாவாஸ்யம் அதம் ஸ்ர்வம்” என போதிப்போர் மறுபுறம் இந்நிலையில் எதிர்காலத்தில் மிஞ்சப்போவது
மேற்கொண்டோரின் மாளிகைகளில் யானை தந்த்தில் செய்து பூஜீக்கப்படும் ஸ்ரீமகா
கணபதியின் சிலைகள் மட்டுமே.....
அரசியலில் மாறுபாடுகள் ,பண்பாட்டில்
வேறுபாடுகள் , சமுக நீதியில் முரண்பாடுகள்,குடும்பத்தில் கூறுபாடுகள் என்றே வாழும்
மனிதன்,யானைகள் உட்பட்ட காட்டுயிரின்ங்கள் குறித்த சங்கதியிலாவது ஓரணியில் திரள
வேண்டும்.ஏன்னெனில் முன்னர் சொன்னவற்றுக்கெல்லாம் ஒரு மாற்று இருக்க்கூடும். ஆனால்
,காட்டுயிர் பிரச்சனைகளில் மாற்றுக்கு வழியே இல்லை என்பது மெய்ப்பு.
முடிவாக .. இதோ இந்த நிமிடத்தில்..
புவியில்..கோடிக்கனக்கான ஆண்டுகள் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றியடைந்த
.இப்புவியில் வாழும் உரிமையை நம்க்கு முன்பே பெற்றுவிட்ட ,தந்தம் தாங்கிய
“தும்பிக்கை நாயகன்” ஒரு கம்பீரமான ஆண் யானை
சுடப்பட்டு ,காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாக்க் சாய்கிறது.இப்போது நாம் என்ன
செய்யபோகிறோம்?
1 பின்னூட்டங்கள்:
கொடும் கூண்டிலடைத்து ,கடும் சங்கிலியால் பிணைத்து,ஒரு விலங்குயிரின் பிறப்புரிமை புரியாத மக்களால் தலைவர்,ஞானி,முனிவர்,விஞ்ஞானி எனக் கருதிகொண்டிருக்கும் பலர்,வளர்ப்பு யானையின் தெய்வத்தன்மையும் அறிவுக்கூர்கையையும் பத்தியையும் பலத்தையும் மெச்சி சிலாகிப்பர்.அப்படியானல் மவுத்தன் கையில் எதற்க்கு அங்குசமும் தடியும்,இரும்புச்சங்கலியும்,ஈட்டியும்? நம்மைச்சுற்றி “பாரம்பரியம்,ஆரண்யப் பண்பாடு,திராவிடம் தேசியம் ‘ என்று முழங்குவர் ஒரு புறம்,”உயிர்களிட்த்தில் அன்பு வேண்டும்,ஈசாவாஸ்யம் அதம் ஸ்ர்வம்” என போதிப்போர் மறுபுறம் இந்நிலையில் எதிர்காலத்தில் மிஞ்சப்போவது மேற்கொண்டோரின் மாளிகைகளில் யானை தந்த்தில் செய்து பூஜீக்கப்படும் ஸ்ரீமகா கணபதியின் சிலைகள் மட்டுமே.....
//very sad truth.
கருத்துரையிடுக