நாளை மற்றுமொரு நாளே...

>> வியாழன், 19 ஜூலை, 2012



நாளை மற்றுமொரு நாளே....


              இருபதாம் நூற்றான்டின் தொடக்கத்தில் உலகம் தொழிற்சாலை,வருமானம் என்று ஓடிக்கொண்டிருந்தது.விளைவு  உலகத்தின் முக்கிய பிரச்சனையாக சுற்றுச்சூழல்.வனம் அழிந்தால் மனித இனம் அழியும் என்று புரிந்துகொண்டது உலகம்.வளர்ந்த நாடுகள்  வனத்தை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன.
             இயற்கையை வணங்கியும்,வனவிலங்குகளை தெய்வங்களாகவும் போற்றும் கலாச்சாரம்  நம்முடையது.இயற்கைக்கு விழா எடுத்து நன்றி சொன்ன தலைமுறை, இத்தகைய  வனச் செல்வங்களை காப்பாற்றினோமா என்றால் கேள்வி மட்டுமே பதிலாய் இருக்கிறது.

மனித இனத்திற்கு அடிப்படை உயிர் வாயு ஆக்சிஜன்.அதற்கு முக்கிய ஆதாரமான மேற்கு மலைத்தொடர் நாம் பெற்ற அரிய செல்வம்.இம் மலைத்தொடர் குசராத் மாநிலத்தின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே தொடங்கி கோவா, கர்நாடகம்,தமிழ்நாடு,கேரளா வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவுருகிறது. நீளம் 1600 கி.மீ.பரப்பளவு 60,000 சதுர கி.மீ. இம்மலைத்தொடர் தனித்துவம் வாய்ந்தது.இமயமலையை விட வயதில் மூத்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதில் 5000 வகை பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலூட்டிகளும்,508 வகை பறவைகளும்,176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இது உயிர் வழமைமிக்க பகுதி என்று யுனெஸ்கோ அறித்துள்ளது.

மேற்கு மலையின் மறைவு பகுதியில் அமைந்தது தான் தமிழ்நாடு.நமது நீர் ஆதாரமான காவிரி ,பாலாறு,தென்பெண்னை ,வைகை ஆறுகள் இம்மலைத் தொடரில் தான் உற்பத்தியாகின்றன.நமது கண்முன்னே பல ஆறுகளும் சீரழிந்து போய்விட்டது.இதற்கு காரணம்  தேடினால் ஆறுகளுக்கும் வனத்திற்கும் உள்ள உறவு புரியும்.எல்லா அறுகளும் மலையில் உள்ள சோலை காடுகளிலில் தான் உற்பத்தியாகும்.தமிழ்நாட்டில் மழை நாட்கள் என்பது 35 முதல் 50 நாடகள் மட்டுமே.900 மில்லி மீட்டர்.குறைவான நாட்களிலில் பெய்த்த மழையை எப்படி சேமிப்பது?அதை தான் சோலா காடுகள் செய்கிறது.ஒருமுறை பெய்யும் மழையை 3 மாதம் வரை சேமித்து வைத்து தருகின்றன.காடுகளை கணக்கில்லாமல் அழித்து நமது நீர் ஆதாரங்களை சீரழித்துவிட்டோம்.சோலைகாடுகளை அழித்தன் விளைவு சுமார் 3000 ஓடைகள் வற்றிவிட்டன என்கிறது ஆய்வு.இந்த காடுகளில் நட்ட தைல ,சீகை மரங்களால் ஒரு பயனும் இல்லை.தைல மரம் பரவாது.நட்டால் தான் வ்ளரும்.ஆனால் சாயபட்டறை பயன் களுக்காக வைக்கப்பட்ட சீகை மரம் அதற்க்கும் பயன்படவில்லை.இந்த மரங்கள் பரவி சோலைகாடுகளை அழித்து விடுகிறது.

காடுகளின் ஆதாரமான வனவிலங்குகள் குறைந்ததும் கூர்ந்து நோக்க வேண்டிய விசயம்.40,000 புலிகள் இன்று 1411 குறைந்தது வேதனையானது.தமிழ் நாட்டில் சுமார் 50 புலிகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.வேகமாக அழிந்து வரும் புலி காடுகளின் வளமையின் குறியீடாக கருதப்படுகிறது.மத்திய அரசு புலிகளை காப்பதற்க்கு 2008-09 ல் 157 கோடியும் 2009-10 ல் 240 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.இப்படியிருந்தும் கடந்த சனவரி முதல் நவம்பர் வரை 76 புலிகளை இழந்திருக்கிறோம் .இது வனத்தில் உள்ள புலிகளில் 7 சதவீதம்.26 புலிகள் வேட்டையில் கொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2 புலிகள்.ஏற்கனவே நாம் சத்தியமங்களம் பகுதியில் இருந்த சிவிங்கி புலி,கொங்கு  பகுதியில் தங்க நிற பாண்டா என்ற் அரிய வகை ஆர்கிட்மலர்,அமராவதி ஆற்றில் கானபட்ட மயில் கெண்டை மீன் மற்றும் பல அரிய வகை இனங்களை முற்றிலும் அழித்துவிட்டோம்.இந்த மீன் காவிரியில் கொஞ்சம் இருக்கிறது.இதை தூண்டிலில் பிடிக்க பலநாட்டில் இருந்தும் வருகிறார்கள்.அழியும் தருவாயில் உள்ள சிலுவைமரம்,வரையாடு,கழுகு,தொட்ர்ந்து நடைபெரும் யானை மரணம் போன்றவை நம் அவலநிலைமையை உலகத்திற்க்கு உரக்க சொல்கிறது.

               மொரிஷியஸ் தீவில் கல்வேரியாமேஜர் என்ற 300 வருட பலமைவாய்ந்த மரம் 18 மட்டுமே உள்ளது.இதன் விதைகளிருந்தும் புதியதாக முளைக்கவில்லை. இதை ஆய்வு மேற்கொண்டதில் உலகம் ஒர் மிகப் பெரிய உன்மையை கண்டுகொண்டது. இங்கு வாழ்ந்து வந்த டோடோ என்ற பறவை முற்றிலும் அழிந்துவிட்டது.அந்த பறைவை உண்டு கழிக்கும் விதைகளுக்கு தான் முளைக்கும் ஆற்றல் உண்டு.இப்போது அந்த பறைவையும் இல்லை.புதிய மரங்களும் இல்லை. இந்த ஆய்வுலிருந்து தான் காட்டில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் பங்களிப்பும் வளமைக்கு முக்கியம் என்பதை உலகம் புரிந்து கொண்டது.முட்காடுகளில்  மான்கள் வாழாது.யானை முட்புதரின் வழியாக செல்லும் போது பாதை ஏற்படும்.யானைகள் இருக்கும் காட்டில் மான்கள் இருக்கும்.மான்களைத் தேடி புலிவரும்.யானைகளின் சானத்தின் மூலம் தாவரங்கள் எளிதாக பரவும்.சானத்தில் முழைக்கும் காளனை சாப்பிட ஆமைகள் வரும்.சானம் மக்கி காட்டிற்க்கு உரமாகிவிடும்.யானையை "ஆதார உயிரினம்"என்கிறார்கள்.காட்டுப்பன்றி கிழங்குக்காக குழி தோண்டுவது காட்டை நன்கு உழுவதற்க்கு சமம்.அந்த குழியில் விழும் விதைகள் எளிதில் முளைக்கின்றன.இறந்த விலங்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும்  கழுகுகள் அதை உண்டு காட்டை சுத்தமாக வைக்கின்றன.இப்படி இந்த உலகில் வாழும் எல்லா உயிரினமும்  ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன.

                  இன்று அழிவிலிருந்து உடனடியாக்  காக்க வேன்டியது தவளைகள் தான்.எங்கு திரும்பினாலும் காயச்சல் .கொசுவர்த்தி ஏற்றாத இரவுகள் இல்லங்களிலில் இல்லை. கொசுவின் லார்வா பருவத்திலேயே தவளைகள் அதை சாப்பிட்டு விடும்.ஒரு கட்டுக்குள் இருந்தது.தேயிலை தோட்டங்கலில் அடித்த பூச்சிக்கொல்லிகள் மழை நீர் மூலம் ஆற்றில் கலந்தன.நாம் பயன்படுத்தும் சானி பவுடர்,ஷம்பு மற்றும் பல ரசாயன பொருள்களும் தவளைகளுக்கு எமன் ஆகிவிட்டது.அழிவின் விழிம்பில் இருக்கிறது தவளை.

                  நமக்கு தேவையான காடுகள் 33 சதம்.ஆனால் இருப்பதே 17.5 சதம் என அரசு குறிப்புகள் தெரிவிக்கின்றன.ஆனால் செயற்கைகோள் படங்கள் அதை விட குறைவாகவே   சொல்லுகின்றன.காடுகளை அதிரிப்பது பற்றி யோசிப்பதற்க்கு முன்னால் இருப்பதை காப்பது மிக முக்கியம்.வன கொள்ளை கடுமையாக தடுக்கப்பட  வன சட்டம் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.மனித வனவிலங்கு மோதலை தடுக்க  நவின முறைகளை அமல் படுத்தலாம்.யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க கென்யாவில் பயனபடுத்தும்  தேனீக்கள் முறையை இங்கும் அமல்படுத்தலாம்.செலவு இல்லாமல் அதிக வருமானம்.  வனப்பகுதிக்குள் அத்துமீறி நுலைவதை தடுக்க வன பாதுகாப்பு அதிகரிக்கலாம்.சரனாலய பகுதியில் இருக்கும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் வீடுகள் அல்லது தகுந்த பொருள் உதவி.அவர்களையும் வன பதுகாப்பில் பயன்படுத்தலாம்.பல மாநிலங்களிலும் இது நடைமுறையில் உள்ளது.வனத்துறையை நவீன படுத்த வேண்டிய காலம்.

அதிகரித்து வரும் மக்கள்தொகை,உயரும் கால்நடைகள்,அதி வேக தொழிற்மயம்,காங்கிரிட் கட்டங்களாக மாறும் காடுகள் என்று  மிகப்பெரிய சவால்களுக்கு முன் முட்களுக்கு மத்தியில் பூத்த குறிஞ்சி மலராய் மிச்சமிருக்கிறது நம்பிக்கை.


Read more...

கங்கை சிறகுகள்!



கங்கை சிறகுகள்!



ஜோத்பூர் மகாராஜா அபய்சிங் 1731-ல் ஒரு புதிய மாளிகையை கட்ட ,பிஷ்னோய்கள் வாழும் ஜால்நாடி கிராமத்துக்குச் சென்று மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை அனுப்பினார்.ஆட்கள் மரங்களை வெட்ட முனைந்த போது,அம்ரிதாஎன்ற பெண்மனி மரத்தை கட்டித் தழுவினாள்.கோடாரிகள் அவர் தலையை பதம்பார்த்தன. .அடுத்து அவருடைய மூன்று மகள்களும்...அடுத்தடுத்து 359 பேர் வரிசையாக கொல்லப்பட்டனர்.அரசர்,தான் எதிர்பார்த்த அளவு மரங்கள் கிடைக்காத்தால், விசாரிக்க ,உண்மை வெளி வந்தது.அபய்சிங் நேரே கிராம மக்களிடம் வந்து மண்னிப்புக்கேட்டு ,இனி பிஷ்னொய்கள் மரப் பொருட்களை தருமாறு கோரப்பட மாட்டார்கள். அந்த கிராமங்களைச் சுற்றி வேட்டையாடுவது தடைசெய்யப்படும்என்றார்.இந்த வரலாற்று நிகழ்வின் பின்னனியில் இந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றியதே..மர அணைப்பு எனப்படும்சிப்கோஇயக்கம்.

1978 லிருந்து அம்ரிதா தேவியின் கிராமத்தில் ,மரங்களை நேசிப்பவர்களின் திருவிழா நடைபெற்றது.கேளிக்கையும் கொண்ட்டாட்டமும் நிரம்பிய விழா அல்ல!.மரங்களை காப்போம் என்ற நம்பிக்கையை உறுதி செய்யும் விழா.

காடுகளை சார்ந்த மக்களின் பொருப்பிலிருந்த காடுகள் பிரிட்டிஷ் அரசால் எடுத்து கொள்ளப்பட்டன.பழங்குடி மக்களூக்கு அனுமதி மறுக்கப்பட்ட காடுகளின் வளங்கள் ஒப்பந்தக்கார்ர்களாள் சூறையாடப்பட்டன.சத்தியகிரக முறையில் காடுகளில் தங்களுக்குள்ள உரிமைகளுக்காகப் போராடிய ‘கொண்டுஇன மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.தேஷ்ரியில் 1930 களில் காடுகள் பற்றிய சட்ட்த்துக்கு எதிராக குரலெழுப்பிய கிராமவாசிகள் கொல்லப்பட்டனர்.

கங்கையும்,யமுனையும் உற்பத்தியாகும் உத்திரகண்டப்பகுதி இமயத்தின் வனப்பு நிறந்த பகுதியாகும்.பிரிட்டிஷ் அரசு இயற்றிய சட்டங்களை வைத்து இப்பகுதியில் வனத்துறையும் ,ஒப்பந்தக்கார்ர்களும் வனத்தை மொட்டையடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது மரத்தை தழுவியவாறு “முதலில் எங்களை வெட்டுங்கள்என்று இப்பகுதியில் உள்ள பல கிராமங்களில் குறிப்பாகப் பெண்கள் ஈடுபட்ட்தால் அன்று இமயமலை பாதுகாக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவிலும் ஆட்சியாலர்களின் கொள்கை மாறவில்லை.இமயமலை பகுதிகளில் பெருவாரியாக காடுகள் வெட்டப்பட அந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் மண் சரிவும் அதிகரித்தன..

1970 ம் ஆண்டு அலெக்நந்தா நதியில் பெரிய வெள்ளம்  ஏற்ப்பட்டது.ஆறு பெரிய பாலங்கள் இடிந்தன.16 கால்நடை பலங்களையும் 25 பேருந்துகளையும் வெள்ளம் சுருட்டி சென்ரதுடன் நூற்றுக்கனக்கான மக்களும் ஆயிரக்கனக்கான கால்நடைகளும் சேதமாயின.
இந்த சமயத்தில் தான் 1970 களில் ‘சிப்கோஇய்க்கம் பிறந்த்து.சிப்கோ என்றால் தழுவுதல் என்று பொருள.வெட்ட வரும் ஒப்பந்தகார்ர்களிடமிருந்தும்,அரசு அதிகாரிகளிடமிருந்தும் மக்கள் மரங்களை தழுவிக் காப்பாற்றினார்கள்.சுந்தர் பகுகுணா போன்ரவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர்.இவ்வியக்கத்தில் முக்கியமானவ்ர் இவர்.பகுகுணாவின் உண்ணாவிரத்த்தையும் ,மக்களின் எழுச்சியையும் கனட அப்போதைய பிரதமர் இந்திரகாந்தி , பேச்சுவார்த்தை நடத்தி “ பதினைந்து வருடங்களுக்கு உத்திரபிரதேசத்திலுள்ள இமயமலைக் காடுகளின் மரங்கள் வியாபார தேவைகளுக்காக வெட்டப்படமாட்டாதுஎன்று உறுதியளித்தார்..இந்த வெற்றியும் ,பதினைந்து வருட அவகாசமும் சிப்கோ இயக்கம் ஒரு மாபெரும் ச்கதியாக உருவாக வழிவகுத்தன்.
இவ்வாறே..1978 பிப்ரவரி மாதம் ஹென்லால் பள்ளத்தாக்கில் உள்ள அத்வானக்காடுகளை காப்பாற்றினர்.1978 டிசம்பர் மாதம் பாடியகட் காடுகளும் காப்பற்றப்பட்டன.20 ஆண்டுகளாக டூன் பள்ளத்தாக்கில் உள்ள குசிக்காலா பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கப்பட்டு சுண்ணாமபுக்கல் தோண்டி எடுக்கப்பட்ட்து.1986 லில் சிப்கோ பெண்கள் பாதைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி இதை தடுத்து நிறுத்தினர்.

வளர்ச்சிஎன்ற போர்வையில் வனப் பகுதிகள் தொடர்ந்து பலியிடப்படுகிறது. தரிசு நில மேம்பாட்டுத் திட்ட்த்தின் கீழ் அரசு மரங்களை நடும்போது 10 சதவீதம் கூட பிழைப்பது இல்லை.மாறாக மக்கள் பங்கேற்ப்பு அடிப்படையில் தாசோலி கிராம சுயராஜ்ய இயக்கம் மரங்களை நடும்போது  80 முதல் 95 சதவீதம் பிழைத்துவிடுகின்றன. இவ்வாறு இந்த இயக்கம் வனங்களை பாதுகாப்புடன் தங்கள் தேவைக்குரிய மரங்களைத் தாங்களே சாகுபடி செய்வதிலும் ஈடுபட்டு வருகிறது.

1981 ஆம் ஆண்டு இந்திய அரசு சுந்தர்லால் பகுகுணாவிற்க்கு பதமஸ்ரீ விருது கொடுக்க முன்வந்தபோது வேண்டாமென்று மறுத்துவிட்டார்.அதற்க்கு அவர் சொன்ன காரணம்இமாலயப் பகுதிகளில் தினம் தினம்  ஏராளமான மரங்கள் அழிக்கப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் மண் அரிப்பு ஏற்படுகிறது.பாரத மாதவின் ரத்தமும் சதையும் ஆக நினைக்கிறோமே அந்த வளமான மண கடலை நோக்கி தினமும் போய் கொண்டு இருக்கிறது.இது என்று தடுக்கபடுகிறதோ, அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும்என்றார்.சிப்கோவின் கொள்கையை பரப்புவதற்காக 1981 -83 களில் காஷ்மீர் முதல் கொஹிமா வரை 9070 கி.மீ நடையாகவே சென்றார்.

அறவழியோ ,அனுபோக வழியோ எதுவாக இருந்தாலும் வனம் எவ்வகையிலும் களங்கம் ஏற்படாமல் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு செழிக்க மனிதரது நிகரற்ற அறிவு, ஆற்றல்,புகழ்,பொருள் எல்லாவற்றையும் பயன்படுத்திப் பார்ப்பது வங்கியில் சேமிக்கும் முதல்போன்றதுகூட.

ஒரு 10 ஹக்டேர் வனப்பகுதி மனித தலையீட்டால் அழியும் போது 1500 வகை பூக்கும் செடி கொடிகளும்,700 வகை மரங்களும்,60 வகை நீர்நில வாழ்விகளும் அழிந்து போகின்றன என்றும் ,ஒரு மழைக்காட்டு மரம் 400 வகை பூச்சிகளுக்கு வாழிடமாக இருக்கிறது என்றும் ஜ.நா வின் சுற்றுச்சூழல் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நாம் இன்னும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவில்லை.காண அஞ்சுகிறேம்.பொய்யும் ,சுயநலமும் ,மூட நம்பிக்கைகளும் மலிந்த மானுடம்.அவற்றுக்காக தமது முற்போக்கை பலியாக்கி வருவது புரியாத புதிர்.இது ஒரு பழத்திலே இருக்கும் புழுவைப் போலவாகும்.ஆனால் புழுவுக்கு பழம்தான் உணவு,மனிதர்க்கு ப்ணமே உணவு.
இயற்கை என்பது பொருள் உள்ளோரின் சொத்து அல்ல.பொதுமக்களின் வாழ்வின் ஆதாரம் எனப்து புரிபடவேண்டும்.இவற்றுக்காக பாடுபட நாம் அணியமாக வேண்டும்.
“காடுகள்தான் நமது கலச்சாரத்தை ,நாகரீகத்தை வளர்த்த புண்ணிய ஸதலங்கள்.அவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதாகத்தான் அர்த்தம்”.. இந்த சொற்களின் வாசத்தை எப்போது நீங்கள் நேசிப்பது...?


Read more...

வனம் காப்போம்!



வனம் காப்போம்


மனித இனம் வாழ வனம் அடிப்படை தேவை.வனம் செழித்தால் நாடும்,மக்களின் வாழ்வும் செழிப்புரும்.நம் நாட்டிற்கு தேவையான வனம் 30 சதம்,ஆனால் இருப்பதோ 7 சதம் தான். தேவையான மரங்கள் 54 கோடி.!!? நிலமை  இப்படியிருக்க, இருப்பதும் வனக்கொள்ளையால் பறிபோவது மனதை வதைக்கிறது.
                                 உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு பகுதிகளில் மேற்குதொடர்சி மலைகளும் ஒன்றாகும்.இதில் 5000 வகை  பூக்கும் தாவரங்களும்,139 வகை பாலுட்டிகளும்,508 வகை பறவைகளும் 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.இம் மலைதொட்ர் மராட்டியம்,குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் வழியாக சென்று கன்னியாகுமா¡¢யில் முடிகிறது.பரப்பள்வு 60,000 ச.கி.மீ.சுமார் 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகள் தனிதன்மை வாய்ந்த புவியல் அமைப்பாகும்.கோதவா¢,கிருஷ்ணா,காவி¡¢  மற்றும் பல சிறு ஆறுகளின் பிறப்பிடமாகும்.
                                       மேற்கு மலைதொடா¢ன் வளமான பகுதி சத்தியமங்களதின் வனபகுதியாகும்.இதில் புலி,யானை உள்ளிட்ட அபூர்வ வகை மான்னினங்கள் வசிக்கின்றன.முக்கியமாக நம்க்கு ஆக்சிஜன் தொழிற்சாலையாக்வும் உள்ளது.இந்த வனப்பகுதியை மய்யமாக வைத்து தான் பிரச்சனை எழுந்துள்ளது. .நமக்கு வந்த சில தகவல்களை உறுதிபடுத்த புறபட்டது நமது பேனா படை.




                                     1993 லில் வீரப்பனை பிடிபதற்காக உருவாக்க பட்ட சிறபபு அதிரடிபடை வீரப்பனுக்கு பிறகு வனக்கொள்ளை ,தீவரவாதிகள் ஊடுருவலையும்  தடுத்துவருகிற்து.15 வருட  வன அனுபவத்தை இந்தியா முலுவதும் உள்ள சக காவல் அதிகா¡¢களுக்கும் பயிற்சி அளித்து வருகிற்து.அதிரடிபடை சமீபத்தில் நீண்ட் காலமாக பலமாநில வனத்துறைக்கும் தண்ணி காட்டிய பவுளோஸ் என்ற வனகொள்ளைகாரனையும், வெங்கட ராமன் என்னும் சந்தன மர கடத்தல்காரனையும் கைதுசெய்தது தேசிய அளவில் திரும்பிபார்க்க பட்டது.இதனால் வனத்துறை அதிகா¡¢களுக்கு மேலிடத்தில் இருந்தும், பல திசைகலிருந்தும் பல  கேள்விகள். சும்மா இருப்பார்களா!??  உடனே!...  மங்களபட்டியிலும் ,புதுபீர்கடவிலும் அமைந்திருக்கும்  அதிரடிபடையின் பயிற்சி இடம் வனவிலங்களுக்கு ஆபத்தாக இருக்கிற்து  என்று  பிரச்சனைக்கு முதல்மணி அடித்தார்கள்.


                                                   காராச்சிகொரை சோதனை சாவடியில் இருந்து 24 கி.மீ.தெங்குமராட்டா.இதில் இருந்து 9 கி.மீ. மங்களப்பட்டி.இந்த பகுதியில்   தான் கல்லம்பாளையம்,அல்லி மாயாறு போனற கிரமங்கள் உள்ளன.  இந்த பகுதி முலுவதும் சரனாலயபகுதியாகும்.தடை செய்யபட்ட பகுதி.  இங்கு தன் புலி,யானை,அழிந்து வரும்  வெளிர்மான்,சருகு மான்,கரடி மற்றும் பல அபூர்வ வகை தாவரங்களும் உள்ளன.சமீபத்தில் கூட புலி ஒன்றின் அ¡¢ய புகைபடம் இங்கு இருந்து தான் எடுக்கப்பட்டது.இங்கு பயிற்சி அளிபதற்கு என்று அதிரடிபடை கட்டிடம் எதுவும் கட்டவில்லை.மாதத்தில் 150 முதல் 180 மணி நேரம் மட்டுமே  பயிற்ச்சி.அதுவும் சிறிய துணியால் ஆன குடில் அமைத்து தங்குகிறார்கள்.பயிற்சி நோக்கம் மொளனத்தின் பலம்,இயற்கையோடு ஒன்றித்தல்,எளிமையான வாழ்வு.  இந்த பகுதியில் வனவிலங்கு வேட்டை நடக்காமல்  கடுமையாக தடுத்துள்ளனர்  என வன ஆர்வளர்கள் சொல்லுகின்றனர்.ஆனால் வனத்தை காக்கவேண்டிய வனத்துறையின் அனுமதியை சிலர் "வாங்க" வேண்டியமுறையில் வாங்கி வார இறுதிநாட்களில் நடக்கும் கூத்திறக்கு அளவே இல்லை என்கிறர்கள் ஊர் மக்கள்.சரணாலயத்தின் பல பகுதிகளில் மது பாட்டில்களும் பிலாஸ்டிக் டம்ளர்களும், சமைத்த இடங்களும் ஆக அலங்கோலமாய் இருக்கிறது சரனலாய பகுதி என்று அவலநிலையில் உள்ளது.வனகொள்ளையரும் இப்போது சத்தியமங்களம் வனத்தையே குறிவைத்துள்ளனரென்பது, தொடர்ந்து பர்கூர் பகுதியில் நடை பெரும் வனகுற்றங்கலே சாட்சி.தொடர்ந்து நடைபெரும் யானைகளின் மரனம் பலத்த கேள்விகளை எழுப்புகிறது. இந்த வனத்தில் சந்தன மரங்கள் அற்று விட்டது.!!??





                                              புதுப்பீர்கடவில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி இடம் சத்தியை ஒட்டியே அமைந்துள்ள இடம்.இடத்தை சுற்றி பட்டா நிலங்களும் ஒரு புறம் மலையும்  அமைந்துள்ளது.இந்த இடம் யானை பயனிக்கும் பாதை என்று சொல்வது யாருக்காக என்பது தான் பு¡¢யவில்லை.ஆனால் யானைக்காக இல்லை என்பது மட்டும் பு¡¢கிறது!!!இங்கும் கட்டிடம் எதுவும் இல்லை.யானை பாதைகளை காப்பாற்ற நினைக்கும் வனத்துறை ஆக்கிரமிப்பில் இருக்கும் கோவையின் 5 யானை பாதைகளையும் மீட்கலாமே.!!??
உலகத்தின் அதிநவீன  "கோஸ்ட் வாக்" போன்ற 21 உத்திகளை பயன் படுத்தும் அதிரடிபடை,இரவுகென்றே சில நவீன முறைகளையும் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்   .இரவில் சத்தம் இல்லாமல் காட்டில் 1 கி.மீ நடப்பத்ற்க்கு 3-4 மணி நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.தீவிரவாதிகள் வனதின் வழியாக ஊடுருவதையும்,களமாக பயன் ப்டுத்துவதையும் த்டுத்துவ்ருகின்ற்னர். இதனால் தான் இன்று இந்தியா முழுவதும் குறிப்பாக நகசல்கள் அதிகம் உள்ள வட மாநிலங்களில் இருந்து  பல காவல் துறையினரும்  பயிற்ச்சி எடுக்க சத்தியம்ங்களம் வருகிறார்கள்.


தற்போது இங்கு 7 முதல் 8 புலிகள் இருக்கும் என்று வன ஆர்வளர்கள் தொ¢விக்கின்றனர்.புலிகள் இருப்பது உறுதிசெய்யபட்டதால் ஆபத்து மேலும் அதிகா¢த்து உள்ளது.உலகில் போதை பொருள் கடத்தலுக்கு அடுத்த இடத்தில் வனவிலங்கு கடத்தல் உள்ளது.ஒரு புலியின் தோல் மட்டும் சீனாவில் 20,000 டாலர் விலை என்றும் ஒரு புலி 35 லட்சம் விலை என்று ஐக்கிய நாட்டு சபை தகவல் .இதில் அதிகம் ஆபத்தில் உள்ளது இந்திய புலிகளே.40,000 புலிகள் இருந்த நம் நாட்டில் தற்போது 1400 மட்டுமே உள்ளது!!எதிர்கால தலைமுறை புலியை படத்தில் மட்டுமே பார்க்கும் அவல நிலைமை!!


தற்போது அதிகா¢த்து வரும் யானை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.இந்திய யானையின் தந்ததிற்கு ஜப்பான்,சீனா மக்களிடையே மிகுந்த ஈர்ப்பு உள்ளது.இதனால் தந்ததிற்க்காக யானை வேட்டை அதிகா¢த்து இருப்பது வன ஆர்வளா¢டையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.புலிகளின் நிலைமை யானைக்கும் வரக்கூடாது .புலி,யானை போன்றவற்றை கடவுளின் தூதுவர்களாக வாகனங்களாக வணங்கும் கலாச்சாரம் நம்முடையது.இயற்கையை போற்றும் சிறப்பு கலாச்சாரத்தை பெறற் நாம் அ¡¢ய இயற்கை செல்வங்கள் கொள்ளை போவதை தடுப்பது நமது அடிப்படை கடைமையாகும்.


                                          ஆட்கள் பற்றாகுறை,தகவல் ஒருங்கினைபில்லாமை,நவீன உத்திகளில் பா¢ச்சம் இல்லாமை,குறைவான ஆயுதங்கள் என்று பின் தங்கி இருக்கும் வனத்துறை தன்னையே   மீட்டுருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டிய காலம் இது .ஒரு வீரப்பனால் கையை சுட்டுக் கொண்டது போதும்.பல வீரப்பன்கள் உருவாகமல் தடுக்கவேண்டியது வனத்துறையின் தலையாய கடைமை.நவீன கருவிகள்,புது புது உத்திகள்,கடுமையான பயிற்சி முறைகள் மூலம் வனத்தையும்,வன விலங்குகளையும் காப்பதோடு மட்டும் இல்லாமல் தேசத்தையும் காப்பாற்றும் அதிரடிபடையை முன் மாதி¡¢யாக கொண்டு வனத்துறையும் வளர்ந்தால் நாட்டிற்கும்,நமக்கும் பெருமை!.25,000 க்கும் மேற்பட்ட உயிர் இனங்கள் வாழம் இந்த பூமிப் பந்தில் மனிதனும் ஒர் உயி¡¢னம் மட்டுமே.!!.மனித சமுதயம்  வளமான  வாழ்வு பெற நிறைவான வனம் தேவை.இல்லையேல் ,விருச்சமாய் வளர்ந்த நாம் காலத்தின் மிச்சமாகி போன எச்சமாகி போவோம்.




Read more...

”ஒளியின் நிழல்”



”ஒளியின் நிழல்”

படங்கள்:மு.சுதாகர்

ஒரு நாட்டின் மக்கள் நலவாழ்வுக்கு நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்று டாகடர் மாலின் என்ற ஸ்வீடன் நாட்டு நீரியல் வல்லுனர் கணக்கிட்டுள்ளர்.இதன் அடிப்படையில் வெப்ப பகுதியில் உள்ள நாட்டின் மக்கள் நல்வாழ்விற்க்கு நபர் ஒருவருக்கு 2000 க.மீட்டர் தண்ணீர் தேவை. 1700 க.மீ விட  குறைந்தால் அவ்வாப்போது அந்த நாட்டில் பலவேறு பகுதிகளில் வறட்சி நிலவும்.அதுவே 1000 க.மீ குறைந்தால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் மக்களின் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படும்.இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளபபட்டது.இந்த கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் தற்போது நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 900 க.மீ மட்டுமே கிடைக்கிறது.இதானால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் சூழலில் உள்ளது.

தமிழ் நாட்டில் ஆண்டு தோரும் சராசரியாக 925 மி.மீ மழை பெய்கிறது.தென்மேற்குப் பருவ காலத்தில் 307.60 மி.மீ,வடகிழக்குப் பருவ காலத்தில் 438.70மி.மீ,குளிர்காலத்தில் 42.20மி.மீ,கோடைகாலத்தில் 136.50 மி.மீ மழை பெய்கிறது.இவை சராசரி அளவுகள். இந்த மழை தமிழ்நாடங்கும் ஒரே மாதிரியாக பெய்வதில்லை.கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 600மி.மீ  க்கும் குறைவாகவும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 2000 மி.மீ க்கும் அதிகமாகவும் மழை பெய்கிறது. சென்ற நூற்றாண்டில் 1709 முதல் 1735 வரை 7 முறையும் 1770,1811,1847,1877 ஆண்டுகளிலும் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கனக்கானோர் மாண்டனர்.1947 க்கு பின் பஞ்ச்சம் இல்லை.ஆனால் மழை குறைந்து வறட்சி நிலை பல முறை நேர்ந்தது.தமிழ் நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் பரப்பு 64 விழுக்காடு .கடந்த 46 ஆண்டுகளில் பெய்த மழை அளவுகளை ஆராய்ந்தால் 60 விழுக்காடு ஆண்டுகளில் சராசரியைவிடக் குறைவாக மழை பெய்திருக்கிறது

தமிழ் நாட்டில் 33 ஆற்றுப் படுகைகள் உள்ளன.இந்த ஆறுகளில் ஓடும் தண்ணீரில் தமிழ் நாட்டு எல்லைக்குள் பெய்யும் மழையால்  கிடைப்பது 24,000 மி.க.மீ.பிற மாநிலங்களில் இருந்து கிடைப்பது12,000மி.க.மீ.மொத்தம் ஆண்டுதோரும் 36,000 மி.க்.மீ மேற்பரப்பு நீர்வளம் கிடைக்கிறது

நிலத்தடி நீர்வளம் எனபது மழை நீர் மண்ணுக்குள் சென்ற பகுதியே.விவசாய நிலங்களில் பாய்ச்சப்படும் நீரின் ஒரு பகுதியும் மண்ணுக்குள்  தான் செல்லும்.இதற்கு ஏற்ற வகையில் மண்ணின் தன்மை இருந்தால்தான் நிலத்தடி நீர்வளம் பெருகும்.தமிழ் நாட்டின் பெரும்பகுதி சுமாராக 73 விழுக்காடு கடினப்பாறைப் படிவங்களால் ஆன நிலப்பகுதி.ஊற்று பெருக  வாய்பிலலாத குறைந்த நீர் வளம் உள்ளவை.நீர்வளம் கிடைக்கும் மணற் பகுதி 27 விழுக்காடு மட்டுமே.இதில் 19 லட்சம் கிணறுகள் உள்ளன.18 லட்சம் கிணறுகளுக்கு பம்ப்செட் வசதி உள்ளது.இந்தியாவிலே அதிக அளவு பம்ப்செட் பயன்படுத்தும் மாநிலம் தமிழ் நாடு.ஊறும் அள்வைவிடவும் அதிகமாக நீரை இரைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.நிலத்தடி நீர் வளத்தைச் சுரண்டுவதைக் கட்டுப்படுத்த 2003 ஆம் ஆண்டு தமிழ்க அரசு ஒரு சட்டம் கொண்டு வந்த்து.ஏராளாமான ஓட்டைகளைக் கொண்ட அந்தச் சட்டத்தை இன்னும் நடைமுறைபடுத்தவில்லை.ஆண்டுதோரும் தமிழ் நாட்டில் ஊற்றுப் பெருகும் நில நீர் அளவு.23,000மி.க.மீ.மேற்பரப்பு நீர்வளம்  , நிலத்தடி நீர் இரண்டும் சேர்ந்து ஆண்டுதோரும் கிடைக்கும் மொத்த நீர் வளம் 59,000மி.க.மீ.

கிடைக்கும் தண்ணிரில் கிட்டதட்ட 75 விழுக்காடு விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது.உலகெங்கும் இதே நிலைமை தான்.இதானால் தண்ணீரின் அளவை குறைக்க குறைந்த கால பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன.தமிழ் நாட்டில் அதிகம் பயிரிடபடும் நெல ரகங்கள் 1950-60 லில் 180 நாள்கள் சாகுபடிக்காலம்.1960 க்குப் பின் 105 நாள ரகங்கள் பயிரிடபட்டன.சாகுபடி காலமும் அதிகரிக்கவில்லை.சாகுபடி பரப்பும் அதிகரிக்கவில்லை.பின் எங்கே போனது தண்ணீர்?உண்மையை சொல்ல போனால் வேளான்மையில் நேர்ந்த மாற்றங்கள்  விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை அதிகரித்தது.நிலத்தடி நீர் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்தது.

1960-80 வரையாலான பசுமை புரட்சி காலத்தில நெல் விளைச்சல் எக்டேருக்கு 600 கிலோ மட்டுமே உயர்ந்தது.அந்த காலகட்டத்தில் ஏரளாமான நீர்பாசன திட்டங்கள் உருவாக்கப்பட்டன.பாசன பரப்பு பன்மடங்கு விரிவடைந்தது.ஒரு போக நிலங்கள் இரு போக நிலங்களாக மாறின.மொத்த உணவு உறபத்தி 2  முதல் 3 மடங்கு வரை அதிகரித்தது.ஆனால உயர் விளைச்சல் ரகங்களும் ரசாயன உரங்களும் வானம் பார்த்த பூமியில் பசுமை புரட்சியை ஏற்படுத்தவில்லை. தண்ணீர் முக்கிய இருபொருளானது. கால்வாயில் உரிய நேரத்தில் தண்ணீர் வரவில்லை என்றால பயிர் விளைச்சல் பாதிக்கும்.போட்ட முதல் கிடைக்காது.இந்த நிலைமையில் விவசாயிகள் பெருமளவில கிணறுகள் தோண்டினர்.கடன் கொடுத்து கிண்று வெட்டத் தூண்டப்பட்டது.1960லில் 4300 இறைவை எந்திரங்கள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது சுமார் 19 லட்சம் இறைவை எந்திரங்கள்.!!இறைக்க இரைக்க ஊருவதர்க்கு நிலத்தடி நீர் என்ன வற்றாத சுரங்காமா?பணவசதி படைத்தவர்கள் மேலும் மேலும் ஆழமாக தோண்டினார்கள்.ஏழைகள் தங்கள் கிணறு வற்றியதும் நிலத்தை விற்றனர்.

விடுதலைக்கு பின் ஏரளாமான நீர்பாசன் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆற்றுப் பாசன பரப்பு 1.59 மி.எக்டேராக விரிவடைந்தாலும், ஆற்று பாசன கால்வாய்கள் மூலம் ஆண்டுக்கு பாசனம் பெறும் பரப்பு 0.9மி .எக்டேரை தாண்டவில்லை. தமிழ் நாட்டு ஆற்று நீர்வளம் அந்த அளவுக்கு தான்..கிணற்றுப்பாசனம் பெரும்பாலும் பணப்பயிர்களான கரும்பு , வாழை ,புன்செய் பயிர்களான நிலக்கடலை பருத்தி ஆகியவற்றுக்கே பயன்படுகிறது.தமிழர்களின் உணவு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழ்னாட்டின் பயிர் வகைகலிலும் மாற்றங்களை ஏற்படுத்தின.புன்செய் தானிய பயிர்கள் குறைந்தன்.நல்லெண்ணெய் கடலை எண்ணெய் போய் பாமாயில் வந்தது.நெல் சாகுபடி பரப்பும் 1979-80 ஆம் ஆண்டில தான் அதிகபட்சமாக 29,06,000 எக்டேரை எட்டியது.ஆனால் நெல் சாகுபடி பரப்பும் குறைந்து கொண்டே வருகிறது.கர்னாடகப் பொன்னியும்,ஆந்திரப் பொன்னியையும் வாங்கி சாப்பிட வேண்டிய நிலை !.1960லில் இருந்த நிலப் பயன்பாட்டையும் தற்போதைய நிலையையும் ஓப்பிட்டால 8.35 லட்சம் எக்டேர்கள் விவசாயம் அல்லாத  பிற பயன்பாட்டிற்கு மாறிவிட்டன.மேய்ச்சல் நிலங்கள் 2.5 லட்சம் எக்டேர்கள் குறைந்துவிட்டது.1.08 லடஸ்ம் எக்டேர் தரிசாக மாறிவிட்டது.

உணவு உற்பத்தியிலும் 1960லில் எக்டேருக்கு 1413 டன்னாக இருந்த நெல் உற்பத்தி திறன் 1970 லில் உயரத் தொடங்கி 1990லில் 3000 டன்னை தாண்டியது.தற்பொது 3000-3300 டன் அளவிலேயே தங்கிவிட்டது.1960லில் நபருக்கு ஆண்டுக்கு 114 கிலோ நெல் உற்பத்தி தற்போது  94 கிலோவாக குறைந்து விட்டது.தமிழ் நாட்டில விளை நிலங்களோடு நாம் நீராதரங்க்களையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

உலக மக்கள் நல்வாழ்வு அமைப்பு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 150 லிட்டர் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.ஆனால தமிழ் நாட்டில் நகர்ப்புற மக்களுக்கு ஒரு நாளுக்கு 140 லிட்டரும் கிராமப்புற மக்களுக்கு 40 லிட்டரும் வாழங்க திட்டமிடப்பட்டாலும் பெரும்பாலான கிராமங்களுக்கு திட்டமிட்ட படி வழங்க்கபடுவதில்லை.மாநகராட்சிகளுக்கு 70-100 லிட்டர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்கப்படுகிறது.கிராமங்களுக்கு அதுவும் இல்லை.

தமிழ் நாடு முழுவதுமே குடி நீர்ப் பிரச்சனையால் வாடும்போது சென்னைக்கு மட்டும் மீண்டும் மீண்டும் புதிதாகத் திட்டங்கள் கோடி கோடியாகப் பணம் கொட்டப்படுகிறது.சென்னையில் பெய்யும் மழை ஆண்டுக்கு 1260 மி.மீ.கடந்த 20 ஆண்டுகளில் 1000மி.மீ குறையாமல் மழை பெய்துள்ளது.இந்தியாவில் இதை விட குறைவாக் மழை பெய்யும் நகரங்களில் 'தண்ணீர் பஞ்சம்' என்ற கூக்குரல் எழவில்லையே?இதுவரை 5000 கோடி செலவிட்டும் 20 விழுக்காடு மக்களுக்குமட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது.வீராணம்,கிருஷ்னா என்று பெரிய திட்டங்கள் தீட்டியும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை..சென்னையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கிண்றுகளை உறுஞ்சி அங்குள்ள விவசாயிகளை அகதிகளாகச் சென்னைக்கு அனுப்பியது தான் இந்த திட்டங்களின் பயன்.

மா நகராட்சிகள் குடிதண்ணீர் வழங்ககுவதை தனியாரிடம் ஒப்படைக்கலாம் எனத் தமிழக அரசு முடிவெடுத்து ஆணை பிறப்பித்துள்ளது.அதில் திருப்பூருக்கு ஒதுக்கப்பட்ட தொகை 1273 கோடி.2002-03 முதல்  30 ஆண்டுகள் ஒப்பந்தம்.நாளொன்றுக்கு 185 மில்லியன் லிட்டர்.இதன் விலை 1000 லிட்டருக்கு 45 ரூபாய்.மக்களுக்காகவே இவ்வளவு செலவில் அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டது.இந்த திட்டப்படி நாளொன்றுக்கு சாயப்பட்டறைக்களுக்கு 115 மி.லிட்டர் வழங்கப்படும்.ஆனால் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள 800 கிராமங்களுக்கு குடிதண்ணீருக்காக 70.மி.லிட்டர் மட்டுமே வழங்கப்படும்.யாருக்காக திட்டம்  மக்களுக்காகவா ? சாயபட்டரைகளுக்காகவா?
கோவை தனியார் குடி நீர் 'தயாரிப்பு' நிருவனத்திற்கு நாள்தோரும் ஒரு மில்லியன் லிட்டர் பவானி ஆற்றிலிருந்து எடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டுள்ளது.அரசுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கட்டணம் !உண்மையில் இந்த நிருவனம் த்ண்ணீரை வேறு ஒரு நிருவனத்திறக்கு விற்கிறது.சிவகங்கையில் சக்தி சர்க்கரை ஆலை நாள்தோரும் 75000 லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி'கோக கோலா' நிறுவனத்திற்க்கு விற்கிறது.இதே நிருவனத்திற்க்கு அரசு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் தாமிரபரணி ஆற்றிலிருந்து நாள்தோறும் ஜந்து லட்சம் லிட்ட்ர் தண்ணீர் எடுத்து 6250 ரூபாய்க்கு விற்கிறது.ஆனால் 'கோக கோலா ' நிறுவனம் ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய்க்கு விற்கிறது!

சட்டீஸ்கர் அரசு சியோநாத் ஆற்றினை 22 ஆண்டுகளுக்கு தனியாரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது.இந்த போக்கு தமிழ் நாட்டிலும் தொடங்கிவிட்டது.தண்ணீர் வணிகத்தில்.  தமிழ் நாட்டில்  புழங்கும் பணத்தின் மதிப்பு 10 ஆயிரம் கோடி!இதை பற்றி கவலைபடாமல் ,பிற மாநிலங்களிலிருந்து தண்ணீர் வரும் என்ற கனவில் ,உள்ளதையும் இழந்து கொண்டிருக்கிறான் தமிழன்.


Read more...

மெர்குரி பூக்கள்!



 மெர்குரி பூக்கள்




உலக சுகாதார நிறுவனம் ஏப்ரல் 7 ம் தினத்தை உலக உடல் நல நாளாக கடைபிடிக்கிறது.பருவநிலை மாற்றங்கள் உடல்நலத்தை பாதிக்காமல் தடுப்பது எப்படி என்பது தான் இந்த ஆண்டின் மையக் கருத்து.2003 கோடையில் வெப்ப நிலை கூடியதின் விளைவாக ஐரோப்பாவில் 70,000 பேர் இறந்தனர்.காற்று மாசுபடுவதின் முலம் ஒவ்வோர் ஆண்டும் 8,00,000 மரணங்கள் நிகழ்கின்றன. அசுத்தமான   நீரினால் ஏற்படும் வயிற்றுபோக்கினால் ஆண்டுதோரும் 18 லட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.சூழல் மாசுபடுதலின் விளைவு அனுகுண்டின் வீரியத்தை விட அபாயகரனமானது என்பதை மினமாட்டா முலம் உலகம் கற்றுக்கொண்ட பாடம்.

ஜப்பானின் கியூஷு தீவின் கரையோரத்தில் உள்ள ஒர் சிறுநகரம் மினமாட்டா.இந் நகர் ஷிரானுயி கடலையும் மினமாட்டா குடாவையும் ஒட்டி அமைந்துள்ளது.வசிப்பவர்களிலில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தலிலும் விவசாயத்திலும் வாழ்க்கையை ஒட்டுபவர்கள்.

1953 லில் நகரத்தின் குடாவிலும்,கரையோரங்கலிலும் கடல் மீன் களும் ,நீர் வாழ் விலங்குகளும் இறந்து தரை ஒதுங்கின.பறைவைகள் வானத்தில் இருந்தும் மரத்திலிருந்தும் விழுந்து இறந்தன.பூனைகள் வாயில் நுரை தள்ள ,எந்த நேரமும் சிரிப்பது போன்ற சத்தத்தை எழுப்பின.தள்ளாடி தள்ளாடி இறக்கும் வரை வட்டமடித்தன.பல பூனைகள் மினமாட்டா குடாவில் விழுந்தும்,உயரமான மாடிகளிலிருந்து குதித்தும் தற்கொலை செய்துகொண்டன.இது ஒரு வகை பைத்தியம் என்றும் அதற்க்கு "நடனமாடும் நோய்"என்று பெயரும் சூட்டப்பட்டது.

மீனைகடித்து ,பூனையைகடித்து ,இறுதியில் மனிதனை கடித்த கதையாய் 1956லில் மக்களும் பாதிப்புக்கு உள்ளாயினர்.உறுப்புகளிலில் உணர்ச்சி மரத்துபோயின.பேச்சு இழந்து,கண்கள் வீங்கி பார்வை பறிபோயிற்று.மூளை பாதிக்கப்பட்டு நிறுத்த முடியாமல் உடல் நடுங்கி பூனைகளை போல தள்ளாட தொடங்கி ,மயங்கி 50 க்கும் அதிகமானோர் பலியாகினர்.குடும்பம் குடும்பமாக ஆயிரக்கனக்கில் பாதிக்கப்பட்டனர்.கர்ப்பிணிபெண்கள் கருச்சிதைவுக்கு ஆளாகினார்.உடல் உருப்புக்கள் சீர்குழைந்த,   மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளை பெற்றெடுத்தனர்.பூனைகளை கண்டு நகரமே நடுங்கிற்று.இந்நோய் ஊரின் பெயரால் "மினமாட்டா நோய்"என்றே அழைக்கப்பட்டது.

புரியாத இந்த புதிருக்கு விடை கண்டு பிடித்தவர் டாக்டர் ஹஜிமி ஹொசோகாவா(dr.hajime hosokawa).இது தொற்று நோய் அல்ல என்றும் மீன் உணவின் மூலம் உடலில் சேரும் நச்சுக்களால் மனிதர்களின் மைய நரம்பு தொகுதி பாதிக்க படுகிறது என்று சோதனைகளின் மூலம் கண்டுபிடித்தார்.இதன் மூலம் இவர் பணிசெய்த சிஸ்ஸோ கூட்டுத் தாபனமே உலோக நச்சுகளின் பிற்ப்பிடம் என்பதும் உறுதி ஆனது.

மினமாட்ட நகரில் 1907.ஆம் ஆண்டு சிஸ்ஸோ தனது உரத்தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.சிஸ்ஸோ என்றால் ஜப்பானிய மொழியில் "நைட்ரஜன்" என்று பொருள்.1925 முதல் தனது கழிவுகளை கால்வாய் மூலம் நேரடியாக கடலுக்குள் அனுப்பியது.சிஸ்ஸோ உர உற்பத்தியை நிறுத்தி விட்டு 1932 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் தயாரிப்பில் இறங்கியது.பிளாஸ்டிக்கின் மூலபொருளான "அசட்டல்டிகைடு(acetaldehyde)வேதிப்பொருளை அதிக அளவில் உற்பத்தி செய்தது.பிளாஸ்டிக்கின் கடினத்தை குறைக்கும் "டீ.ஓ.டி"(d.o.t.diothyl phthalate)என்னும் இரசாயனத்தின் ஒரோ தயாரிப்பு நிருவனமாகவும் இயங்கியது.தொடர்ந்து  கழிவுகளையும் கடலுக்குள் அனுப்பியது.

சிஸ்ஸோவிலிருந்து வெளியேரும் கழிவுகள் தான் மினமாட்டவின் தள்ளாடும் நோய்க்கு காரணம் என்பதை 1959 ல் ஜப்பானின் குமோமோட்டோ விஞ்ஞானிகள் விளக்கினர்.சிஸ்ஸொவின் கழிவுவின் மூலம் வெளியேரும் பாதரச அயன் கள் கடல்சேற்றில் உள்ள பாக்டீரியாக்களால் "மெதையில் மெர்குரி"என்னும் ஆபத்துமிக்க நச்சாக மாருகிறது.இது மீனகளின் உணவுகளிலில் கலந்து மீன்கள் மூலம் பறைவைகள் ,பூனைகள்,மனிதர்களுக்கும் போய் சேருகிறது.இந்த நச்சு உடற்கழிவுடன் வெளியேறாது.சிறுக சிறுக உடலில் தங்கி பெருகிய பிறகு நரம்பு தொகுதியை மோசமாக பாதிக்கிறது.1932 முதல் 1968 வரை சிஸ்ஸோ வெளியிட்ட பாதரச கழிவு 20 டன்கள்.!!!இவற்றின் விலைவுகள் தொடர்ந்தன.


1971 வாக்கில் அமொ¢க்காவின் "லைப்"பத்திரிக்கையின்  புகழ்பெற்ற புகைப்பட இதழியாளர் "இயூஜீன் சிமித்", உடல் ஊனங்களுடன் 1956ல் பிறந்த டொமோக்கோ இமூரா என்னும் பெண்குழ்ந்தையை அதன் 16 வயதில் தாயார் குளியல் தொட்டியில் நீராட்டியபோது எடுக்கப்பட்ட படம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.அப்போது சூடுபிடிக்க தொடங்கிய மக்கள் போராட்டம் பல நீதிமன்றங்களிலும் ஏறி இறுதியில் 2004 அக்டோபர் 15 ஆம் தேதி ஜப்பானின் உச்சநீதிமன்றத்தில் முடிவுக்கு வந்து பாதிப்படைந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.மார்ச்  2001 நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களிலில் 1784 பேர் இறந்து விட்டதாகவும்,பத்தாயிரத்திற்க்கும் அதிகாமானோர் இழப்பீடு பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் தொ¢விக்கின்றன.2004 வரை சிஸ்ஸோ தந்த இழப்பீடு தொகை மட்டும் 86 மில்லியன் டாலர்கள்.!!!

நம்தமிழ் நாட்டில் காவிரி நதிக்கரையில் மட்டும் 4156 தொழிற்சாலைகள் இருப்பதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவிக்கிறது.28 பெரும் தொழிற்சாலைகள் பவானி நதியில் மட்டும் ஆண்டிற்கு 6 கோடி கனமீட்டர் தண்ணீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவிக்கிறது.பவானியில் முன்பிருந்த சாம்பாமுதலை,நீர்ப்பசு,பரிசல் ஆமை போன்றவை அழிந்துவிட்டது.நம்மண்ணுக்கே உரித்தான அவுரி,வாளை,நன்னீர் இரால்,அயிரை,கொறவை,கெண்டை.உளுவை போன்ற மீன் இன்ங்கள் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளது என இயற்கை ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.


"விழித்துக்கொண்டோரொல்லாம் பிழைத்துக் கொண்டார் "என்றார் பட்டுக்கோட்டையார்.விழித்துக் கொள்வோம்.!!

Read more...

பசித்த மானிடம்"



 


"பசித்த மானிடம்"
படங்கள்:மு.சுதாகர்


”ஒவ்வொரு முறை லீவர் இழுக்கப்படும் போதும் விவாவின் உடல் துடித்து துடித்து அவரது உயிர் மிச்சமிருப்பதைக் காட்டியது.அதனால் மறுபடி மறுபடி ஜந்து முறை தூக்கில் போடப்பட்டார் விவா.கடைசியாக வேதனையுடன் அவர் 'கடவுளே என் உயிரை தயவு செய்து எடுத்துக்கொள்.போராட்டம் மட்டும் தொடரட்டும்!'-ஒரோண்டோ டகளஸ் ,விவாவின் வக்கீல்,ஒரு அமெரிக்க வானேலிக்கு தந்த பேட்டியில்.

நைஜர் நதி பாயும் நைஜீரியா அழகான வளமான நாடு.இயற்கை வளம் கொழிக்கும் நாடு.விவசாயமும் மீன் பிடித்தலும் நாட்டின் முக்கிய தொழில்.ஆப்பிரிக்காவில், நைஜீரியாவில் தான் புன்னைமரக்காடுகள் அதிகம்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு,மண் வளம்,மீன்வளம்,மருத்துவம்,இயற்கை எரிசகதி,வனவிலங்கு பாதுகாப்பு என  இக்காடுகளின் பயன் அதிகம்.நைஜர் நதிபாயும் வளமான பகுதிகளிலில் 'ஒகோனி' என்கிற கறுப்பின் மக்கள் அதிகம் .அப்பகுதிகளிலில் ஏராளாமான எண்ணெய் வள்ம் இருப்பதை அறியாமல் விவசாயத்தில அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

1950 களில் அதை மோப்பம் பிடித்தது டச்சு மற்றும் பிரிட்டிஷ் எண்ணெய் நிருவனங்கள். நைஜீரியாவில நிலையான அரசு கிடையாது.அப்போது இருந்தது சர்வாதிகார ரானுவ ஆட்சி.ஆரம்பித்தது கேடுகாலம்! .கொடுக்க வேண்டியதை கொடுத்த எண்ணெய் நிருவணங்கள் அவசரகதியில் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்களை நிறைவேற்றியது.1958 ஆம் வருடம் நைஜர் நதிபாயும் வயல்வெளிகளை அசுரத்தனமாக தோண்டித் துளையாட்டு எண்ணெய் எடுக்க ஆரம்பித்து விட்டது ஷெல் நிருவனம்.காற்றில் கரைந்து போயின சுற்றுச்சூழல் சட்டங்கள்!.கண்காணிப்புக்கும் யாரும் இல்லை!!.விளைவு ஏராளாமான எண்ணெய் கழிவுகள் நைஜர் பூமியில்!எண்ணெய் கிணறுகளிலிருந்து மாபெரும் 'சிம்னி'களின் வழியே வெளியேரும் இயற்கை வாயுவின் பிரும்மாண்ட தீ ஜ்வாலைகள்!.இதை  வின்வெளியிலிருந்து பூமியின் மேற்பரப்பில் தீ ஜ்வாலைகள் தெரிவதாக வின் வெளிவீரர்கள் குறிப்பிட்டார்கள்! துப்பாக்கிகளின் முனையில் 10 லட்சம் ஒகோனி மக்கள்,கண்ணீருடன் மொளனமாக  ரத்தம் சிந்தும் வயலவெளிகளை பார்த்துக்கொண்டிருந்தனர்.எண்ணெயை கொண்டு போவதர்க்கு போடப்பட்ட குழாய்கள் துருப்பிடித்து ஓட்டை விழுந்தால் எண்ணெய் வழிந்து விவசாய நிலங்களில் பரவி மெல்ல மெல்ல ஏரி,குளம் என அனைத்திலும் எண்ணெய் கழிவுகள் கலந்து நைஜர் டெல்டா நரகமாகி போனது.இதை சுத்தபடுத்த தீயிட்டது ஷெல் நிருவனம்.நிரந்திர வடுவாய் எண்ணெய் படிவங்கள் நிலத்தில் அழுத்தமாக படர்ந்தன. பாழ்பட்டது பாவப்பட்ட பூமி.அவ்வப்போது வரும் எதிர்ப்பு குரலுக்கு தகுந்த மாதிரி அடி,உதை,ஆள் கானாமல போகுதல் .இப்படி இன்னபிற போனஸும் உண்டு அம்மக்களுக்கு!.

தட்டி கேட்க ஆள் இல்லாத நிலையில் கண்ணில பட்ட இடத்தில் எல்லாம் துளையிட்டு துளையிட்டு எண்ணெயை உறிஞ்சி தள்ளின 'ஷெல்'லும் அதன் கூட்டாளி'செவ்ரான்'ம்.விளைவு அமில மழை. மிச்சம் இருந்த விவசாய நிலமும் மடிந்தது.மீன் வளம் சொல்லவே தேவையில்லை.. சுத்தம்!கடுமையான சுற்றுச்சூழல்  பாதிப்பால் மக்களுக்கு முச்சுத்திணறல், ரத்தவாந்தி ,தோல் வியாதிகள்,கட்டிகள் ,புற்று நோய் என வரிசை கட்டி அடித்தது. 'க்வாஷியோரோர்' என்னும் சத்துகுறைவு நோயால் மடிந்த குழந்தைகள் ஏராளாம்.நிலமை மோசமானதால் ஒன்று திரண்ட மக்கள் தங்களின் ஆழ்வுரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.அவ்வளவு தான் நைஜீரிய ரானுவம் கொலைவெறியோடு புறப்பட்டது.பெண்கள், சிறுமிகள் என்று பாராமல் பாலியல் பலத்காரம்.இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.நிறைந்தன சிறைகள்.பயத்தில மக்கள் நாட்டுக்குள்ளே அகதிகளாய் காட்டுக்குள் வசிக்க ஆரம்பித்தனர்.நைஜர் டெல்டாவில ஷெல் நிருவனத்தின் கொடுமைகள் உச்ச கட்டத்தை அடைந்தன.கண் எதிரே நடக்கும் படுகொலைகளையும் சித்திரவதைகளையும் சகிக்க முடியாமல் நேரடியாக போராட்ட களத்தில குதித்தார் எழுத்தாளர்,கவிஞர்  கென்-சரோ-விவா!

'ரிவர் ஸ்டேட்' என்று இன்று அழைக்கப்படும் நைஜீரிய டெல்டாவில் 1914-ம் வருடம் பிறந்தவர் விவா.தந்தை ஒகோனி இனக் குழு தலைவர்.தாய் விவசாய பெண்மணி.கல்லூரி பருவத்திலே எழுத ஆரம்பித்த விவா ஒகோனி மக்களின் துயரங்களை அதிகம் பதிவுசெய்துள்ளார்..எழுதுவது  மட்டும் இல்லாமல் ”ஒர் எழுத்தாளன் நிகழ்கால மற்றும் எதிர்கால மாற்றங்களை உருவாக்கும் நிகழ்வுகளிலில் நேரடியாக பங்கு பெருவது அவசியம்” என்ற சிந்தனை உள்ளவர்.'சரோ பப்ளிஷ்ங்” என்ற புத்தக நிருவனத்தையும் தொடங்கி தன் எழுத்துக்களைம் வெளியிட்டு வந்தார்.அவர் எழுதிய 'டிரான்ஸிஸ்டர் ரேடியோ' நாடகம் சூப்பர் ஹிட்.தொடர்ந்து நைஜீரிய மொழியான 'பிட்கின்' மொழியில் எழுதிய ”சோஸாபாய்”(ராணுவ பையன்) என்கிற போர் எதிர்ப்பு நாவல் ஆப்பிரிக்க இலக்கியத்தில் புகழ் பெற்றது.தொடர்ந்து விவா எழுதிய எழுத்துக்கள் ஒகோனி ம்க்களிடையே புத்துனர்ச்சியையும் ,போராட்ட உத்வேகத்தையும் சேர்த்தது.ராணுவமும் ஓரக்கண்ணால் விவாவை கவனித்த படியே தான் இருந்தது.உச்சகட்டமாக பொருத்தது போதும் என்று முழுமையாக நேரடியாக போராட்ட களத்தில குதித்தார் விவா.1990.ம் வருடம் ”Movement for the survival of the ogoni people"(Mosop)  இயக்கத்தை தொடங்கினார்.ஒரே குறிக்கோள் 'ஷெல்' ம்ற்றும் பிற எண்ணெய் நிருவணங்களை நைஜீரியாவை விட்டே துரத்துவது.வன்முறை இல்லாமல்.காந்தி அளித்த அகிம்சை முறையில் மக்களை ஓன்று திரட்டி அறப்  போராட்டத்தை தொடங்கினார்.'ஷெல்லை புறக்கனியுங்கள்” என்கிற ஒகோனி மக்களுக்கான அவரின் குரல் ஆப்பிரிக்காவை தாண்டி ஜரோப்பா,ஆசிய,அமெரிக்கா அரசியல் வட்டாரங்களில் ஒங்கி ஒலிக்க தொடங்கியது.'நைட் ரைட்' என்கிற அவரது நாவல் ஒகோனிய மக்களின் வேதனைகளை வாழ்வை உலக இலக்கிய மேடைகளில் வலிமையாக முன்வைத்தது.பல தடைகலையும் தாண்டி விஸ்ரூபம் எடுத்த விவாவின் போராட்டத்தால்.,நைஜீரிய மக்களின் கொடுமையான வாழ்வு அப்பட்டமாக உலககுக்கு தெரியவந்தது.ஒகோனிய மக்கள் வாழ்வின் விடியலின் நம்பிக்கையாக முன்வைக்க பட்டார் விவா.

நைஜீர்யாவில் அனைத்து கரங்களும் இனைந்தன.எழுத்தாலர் கலைஞர்,விவசாயி,தொழிலாளர்... இப்படி வேறுபாடு பாராமல்!. நம்பிக்கைகள் உயர்ந்தன!!.மக்களின் எழுச்சையை அடக்க முடியவில்லை ராணுவ அரசால்.உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பு ..இறுதியில் விழ்ந்தது ஷெல்லும் ராணுவ அரசும்.1993 ம் வருடம் ஷெல் தனது ஓயாத இயக்கத்தை நிறுத்தியது.தீ ஜூவாலைகல் அனைந்தது.காற்றும் கனிந்தது.இரக்கம் இல்லாத இயந்திரங்க்களின் இரைச்சல் நிண்று போனது.மகிழ்ச்சியின் உச்சியில் விவா ஆப்பிரிக்க மக்களால் கொண்டாடப்பட்டார்.எல்லாம் ஓய்ந்தது என்று நினைத்தார்கள் அந்த அப்பாவி ஒகோனி மக்கள்..இந்த தோல்வியை ஷெல்லும் ராணுவ அரசாலும் பொருத்துக் கொள்ள முடிய்வில்லை.தீட்டப்பட்டது சதிதிட்டம் லண்டனில்.1993ம் வருடம் மே மாதம் 21 ஆம் தேதி நைஜர் டெல்டாவில் நுழைந்த ராணுவம் கண்ணில பட்டவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளி ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.அதில் நான்கு ஒகோனி அரசியல் தலவர்கள் ராணுவத்தால வெட்டிக் கொல்லப்பட்டனர்.அப்பலி விவா மீதும் அவரின் நன்பர்கள் மிதும் போடப்பட்டது.உடனடி கைது!.சிறை!!.உலகம் முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் தன் திட்டங்களை நிறைவேற்ற தொடங்கியது ராணுவ அரசு.கொடுமையின் உச்ச கட்டம் அது.சிறையில் கை காலகளில் இரும்பு சங்க்கலிகள் பூட்டப்பட்டு அடித்து துவைக்கப்பட்டார் விவா.யாரையும் சந்திக்க அனுமதியில்லை.குரல் கொடுத்த ஒகோனி மக்களின் மீது கொலை வெறி தாக்குதலை தொடுத்தது ராணுவம்.பாலியல் வன்முறை,கொலை,கொள்ளை,கிராமங்களை சூறையாடுதல்,திருட்டு .இப்படி ஒன்று விடாமல் அனைத்தும் செவ்வன செயதது ராணுவம்.மக்களை ஓட ஓட காட்டுக்குள் விரட்டி டெல்டா முழுவதும் மயானமாக்கிய பிறகு தான் ஓய்ந்தது .

1995 பிப்ரவரி மாதம் வக்கீலை சந்திக்க விவாக்கு அனுமதி அளிக்கப்பட்டது.அப்போது அவர் வெளியிட்ட கடிதம் அனைவரையும் கண்கலங்க வைத்தது.கடும்பாதுகாப்புடன் ரகசியமாக நடந்த கொலை வழக்கு விசாரனையின் தீர்ப்பு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.திட்டமிட்ட படி விவா மற்றும் எட்டு நன்பர்களுக்கும் மரண தண்டனை.உலகமே இதை கேட்டு குழுங்கியது.காமன்வெல்த் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.கடும் எதிர்ப்பு உலகம் முழுவதும்.அசராத அரசு, 1995ம்வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி விவா என்கிற  மகத்தான் மனிதருக்கும் அவரது எட்டு நன்பர்களுக்கும் போர்ட் ஹர்ர்கோர்ட் சிறைக்குள்ளே தூக்கில் போடப்பட்டார்கள்.விவாவின் உடல் கூட அவரது குடும்பத்திற்க்கு தராமல் ரகசியமாக புதைக்கப்பட்டது.நைஜீரியாவின் காட்டுமிராண்டி தனமான ஊழல் ஆட்சியால் காமன்வெல்த் அமைப்பிலிருந்து தூக்கியெரியப்பட்டது.விவாவின் கல்லறை காயும் முன் எண்ணெய் நிருவனங்கள் மீண்டும் ஒகோனி நிலங்கலில் ஆதிக்கத்தை ஆரம்பித்து விட்டது.சுற்றுச்சூழலுக்காக உயிர் தியாகம் செயது லடசக்கனக்கான ஒகோனி ம்க்களின் மனதில் வாழ்கிற விவா நீதிமன்றத்தில் முழங்க்கியது..

”நானும் எண்து நன்பர்களும் மட்டும் குற்றவாளிகளாக இந்த விசாரணைக் கூண்டில் நிற்கவில்லை 'ஷெல்' நிர்வாகமும் நிற்கிறது.பாரபடசமான இந்த விசாரனையில் அந்த நிர்வாகம் சாமார்த்தியாமாக தப்பிக்கிறது.ஆனால என் மக்களின் மீது அந்த நிர்வாகம் நடத்திய சுற்றுச்சூழல் யுத்தத்தின் கேள்விகள் என்றாவது ஒரு நாள் அதன் முகத்துக்கு நேரே வரும் .அந்தக் கேவலமான யுத்ததின் கடும் குற்றங்க்களுக்கு தண்டனையை அது அனுபவித்தே தீரும்....”  என்னும் விவாவின் ஆன்மாவின் குரல் உலகத்தின் சூடான காற்றில் கலந்து ஒலித்தபடியே இருக்கிறது.

Read more...

பொது சொத்தின் சோகம்'


.'பொது சொத்தின் சோகம்'


காரட் ஹார்டின் என்கிற அமெரிக்க கலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் எழுதிய ஒரு கட்டூரை 1968 ஆம் வருடம் 'சயின்ஸ்' பத்திரிக்கையில் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.'இயற்கை என்பது உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவானது' என்கிற நல்லென்ன நம்பிக்கையை நசுக்கி போட்டது அந்தக் கட்டுரை..'உலகில் உள்ள இயற்கை வளங்களுக்கு கணக்குகள் உண்டு..அவற்றை உபயோகிக்கும் மக்கள் தொகைக்கும் ஒரு வரைமுறை உண்டு.ஆனால் அதை ஏழை மக்கள் உனராமல் வதவதவென்று பெற்றுப் போடுகிறார்கள்.பொறுப்பற்ற இந்த மக்களை கண்கானித்து தண்டிக்க வேண்டும்” என்று கர்ஜித்த ஹார்டின் 'பொது சொத்தாக இயற்கை வளங்கள் இருப்பதால தான் இந்த நிலைமை.பொறுப்பில்லாத மக்கள் கூட்டம் இந்தப் பொது சொத்தை வீணாக்கி அழிக்கிறது.அதனால ஆறு குளம்,காடு,கடல்,ஏரி,.மலைகள் போன்ற இயற்கை பொது சொத்துக்களை தனியார்களுக்கும் ,செலவம் படைத்த நிருவனங்களுக்கும் விற்று விடவேண்டும் .தனக்கு சொந்தமில்லாத எதையும் மனிதன் கண்காணித்துப் பாதுகாப்பதில்லை.அதனால் இயற்கையைத் தனிச்சொத்தாக்குவது மட்டும் தான் அதை பாதுகாப்பதற்கான ஒரே வழி' என்று பெரிய போடாகப் போட்ட  சிந்தனைகளை கப்பென்று பிடித்துகொண்டன மேலை நாடுகள்.

உலகெங்க்கும் உள்ள இயர்கை வளங்களை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு ஹார்டினின் கட்டூரை வேதப்புத்தகமாக காட்சியளித்தது..அந்த நாடுகள் உடனே ஹார்டினின் யோசனையை வேகமாக அமல்படுத்த ஆரம்பித்தன்.இன்று உலகம் முழுவதும் ”தாராளமயமாக்கல்” என்கிற போர்வையில் குடிதண்ணீர் முதல் குழந்தை பிறப்பு வரை எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டதற்கான அடிப்படையே இந்த புதிய பொருளாதார சிந்தனை தான்.வேறுவழியின்றி மேற்கு நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின்  பொருளாதார நிர்பந்தங்களுக்கு 'ஜாலரா'அடித்த ஏழை நாடுகள்  இன்று தங்க்களுடைய இயற்கை வளங்களெல்லாம் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இரையாகி கொண்டுருப்பதை கண்டு கைகளை பிசைந்து கொண்டு நிற்கினறன .அப்படி விழித்துக் கொண்டிருக்கும் நாடுகளிலில் இந்தியாவும் ஒன்று.
 பூமியில கிடைக்கும் தனிமங்க்களுக்கு உலகாலாவிய ஈர்ப்பும் பயன்பாடும் அதிகம்.அதில் பிலாட்டினம்,தங்கம்,தாமிரம்,இரும்பு,நிலக்கரி,எண்னெய் போன்றவை மிக முக்கியம்.இதில வரும் வருமானம் அதிகம் என்பதாலும் பல முன்னனி நிருவனங்களும் போட்டி போட்டு கொண்டு மானிட சமுகத்துக்கு சொந்தமான சொத்தை பின்விளைவுகள் தெரிந்தும் பணத்தாசையால் வஞ்சித்து அபகரித்து வருகின்றன.

90 களிலில் திறந்து விடபட்ட பொருளாதார பின்பக்க கதவுகளின் வழியாக இநத வியாதி இந்தியாவிலும் பரவியது.வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப்ப கட்டமைப்பு வசதிகளும் அதிகரித்து வருகின்றன.இதில சாலை,கட்டட்ம்,அணைகள போன்றவற்றிற்க்கு மிக முக்கிய மூல பொருள் கற்கள் .அதை சார்ந்து கட்ந்து 10 வருடங்க்களாக அதிகரித்து வரும் கல குவாரிகள் இந்தியாவின் மிக முக்கியமான் சுற்றுச்சூழல் பிரச்சனையாக உருவடுத்துள்ளது. தற்போது இந்தியாவில மட்டும் சுமார் 25000க்கும் அதிகமான கல குவாரிகள் உள்ளது.வருடத்திற்க்கான சந்தை மதிப்பு 15000 கோடி ரூபாய்.தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது புற்றுநோய் போல்..இத்துறையில் நேரடியாக சுமார் 15 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதில  அதிகம் வேலை செய்வோர் பழங்ககுடி மக்கள்,கிராம மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியோர் .அதனால கிராமம் நகரம் என்று வேறுபாடி இல்லாமல் தேசம் முழுவதும் பரவியிறுக்கினறன கல்குவாரிகள்.

குவாரிகலில்,கற்களை உடைக்கும்போது வெளிபபடும் தூசுக்கள் காற்றில கலந்து பெரும் ஆபத்தை விலைவிக்கிறது.அப்பகுதிகளிலில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனைகளான ஆஸ்மா மற்றும் நுரையிரல் புற்று நோய் ஏற்படுகிறது. கல்குவாரிகளிலில் பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் அவை நிரில கலந்து அங்கு உள்ள நீரை மாசுபடுத்துகிரது.அந்த நீரினால் தோல வியாதிகள் மர்றும் வயிறு சம்பந்தமாகன நோய்களும் ஏர்படுகிறது.நிலத்தில கலக்கும் நீரினால் நாலைடைவில் நிலம் மாசுபட்டு பயனற்றதாகிறது.குவாரிகளிலில் வேலை செய்வோர் படிப்பறிவு குறைவாக உள்ளதால் அவர்களுக்கு நோய் பற்றிய விளிப்புனர்வும் கிடையாது.அதனால நோயினால ஏற்படும் இறப்பு எண்ண்க்கை அதிகம்.இவர்களுக்கு முறையான ம்ருத்தவ வசதியோ அல்லது கழிப்பிட வசதியோ கூட கிடையாது என்பது தான் மனதை வருத்தும் உண்மை.குவாரிகளுக்கு தேவையான கற்கள் பெரும்பாலும் மலைகளை உடைத்தே எடுக்கப் படுகிறது. அம்மலைகள் பெரும்பாலும் வனம் சார்ந்த பகுதிகளே. அதை சார்ந்துள்ள வன உயிரினங்களின் உயிர் சூழல் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.அவை கட்டாயமாக இடம் பெயரக்கூடிய் சூழல்.அதனால வனவிலங்க்குகள் மற்றும் மனித மோதல்க்ளும் ஏற்படுகிறது. காடுகளை பூர்வீகமாக கொண்ட பழங்குடி மக்களின் வாழ்வு ஆதாரம் மிக கடுமையாக பாதிக்கப் படுகிறது.அரசின் அனுமதி பெற்று வரும் தனியார் நிருவன்ங்க்கள் முதலில் ஆசை வார்த்தை சொல்லி மக்களிடம் காரியம் சாதித்த பிறகு ஆப்பு வைத்த கதைகள் ஏரளாம்.மக்களை மீள்குடியம்ர்த்தும் அரசும் இதில் இன்று வரை ஒரு சரியான கொள்கைகளை பின்பற்றாததும் உண்மை.மேலும் மலைகளை குடையும் போது ஏற்படும் அதிர்வினால ம்லைகளிலில் உள்ள் வீடுகள் பாதிகக்ப படுவதும் கண்டு கொள்ள்பப்டுவதில்லை.இவைகள் தான் மண சரிவிற்க்கும் முக்கிய காரணம்.
 
தரையில் தவித்து கொண்டிருந்த தவளை ஒன்று  தண்ணீர் நிறைந்த  ஒரு பாத்திரத்தில் குதித்து விழுந்தது.குளிர்ந்த நீரை கணட தவளை ஆன்ந்தமாய் அக்களித்தது.தண்ணீர் இருந்த பாத்திரம் மிக மிக மெதுவாக சூடேற்றபபட்டது.. தவளைக்கு நல்ல இதமாக சுகமாக இருந்த்து.தண்ணீர் மிக மெதுவாக சூடேற்ற்ப்படுவதால் தவளையால் முதலில்.எதையும் உண்ரமுடியவில்லை.சில மணி நேரம் சென்றது.ஏதோ ஒன்று நடப்பது போல் தவளை உணர ஆரம்பித்தது.ஆனால அதனுடைய உலகை விட்டு வெளியேற வேறு இடம் இல்லை.சில மணி நேரத்திற்க்குப் பின் தவளை தண்ணீரில் செத்து மிதந்தது.இந்த நிலைமை தான் இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் குறிப்பாக மனிதருக்கும் ஏற்பட்டுள்ளது.ஆம்..நமக்கு தெரிந்தே அழிந்துகொண்டிருக்கிறோம்.  அழியும் உலகைப் பற்றிய அறிவும் ,அதைச் சீர்செய்யும் வழியும், நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டிய ஒன்று.அதை தான் இராயிரம் ஆண்டுக்கு முன்னே சொன்னான் பொய்யாமொழிப் புலவன்..

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்”


Read more...

வரம் தா வனம் காக்க!!


வரம் தா வனம் காக்க


                           "ஏலி,ஏலி லெமா சபக்தானி"
                                                             ---பைபிள்


 அன்று 2000 வருடங்கலுக்கு முன் இயேசு கல்வா¡¢மலையில் சொன்ன வார்த்தைகள் "என் கடவுளே,என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்" .மனித நேயத்தை போதித்தவர். அன்பின் அவசியத்தை சொன்னவருக்கு பா¢சு அவலமான சிலுவை மரணம்.இன்று மனிதகுலம் வாழ தன்னையே அர்பனிக்கும் வனம் மற்றும் வன விலங்குகளுக்கும் இதே வார்த்தைகள் சால பொருந்தும்.


வனம் பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் சூழ்னிலையில் தற்போது காட்டு தீயினாலும் அழிவது  வருத்தமுறும் நிகழ்வு.குறைவாக உள்ள வனம் வருடந்தோரும் இந்தியாவில் மட்டும் 56 விழுக்காடு பாதிக்கப்படுகிற்து .நம்மிடம் அதிகமாக இருப்பது வறண்ட் இலையுதிர்காடுகள் தான்.இவை கோடைகாலத்தில் இலைகள் உதிர்ந்து காய்ந்து ,எளிதில் பற்றிக்கொள்ளும். சில வருடங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 200 க்கும் அதிகமானோர் இறந்தது  வரலாறே சாட்சி.வீடு ,பொருள் இழந்தோர் ஆயிரக்கனக்கில்,!!தற்போது காட்டுத்தீயை கண்கானிக்க  செயற்கை கோள் வசதி இருந்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு அதிகம். அதை அனைப்பதும் கடினம்.பருவனிலை மாற்றம் குறித்து விழிப்புனர்வு அதிகா¢த்து வரும் சூழ்நிலையில் தற்போது ஏற்படும் காட்டுத்தீ தமிழ்நாட்டில் தீவிர விவதத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிற்து.

காட்டுத்தீ பெரும்பாலும் மனிதர்களாலேயே ஏற்படுகிறது.மின்னல் தாக்கி ,மூங்கில்கள் உராயவ்தின் மூலம் ஏற்படும் காட்டுத் தீ வெகு குறைவு. மின்னல் தாக்கும் போது அதை தொடர்ந்து வரும் மழையால் தீ அனைந்து விடுகிறது. காட்டிற்குள்  ஆடு மாடு மேய்பவர்கள் புல்வெளிகளில் செழுமையாக வளரும் என்ற தவறான நம்பிக்கையில் தீ வைத்து விடுகிறார்கள். அவை பல ஏக்கர்களிலில் பரவி பெருத்த சேதத்தை விளைவிக்கின்றன.பாதுகாக்கப் பட்ட வன பகுதிக்குள் கால்நடைகள் மேய்ப்பது தடைசெய்யப் பட்ட சட்டம் பின்பற்றப் படாதது வருத்தமூட்டும் செயல்.இதே போல் இயற்கை செல்வங்களை எடுத்து விற்போறாலும் ஆபத்து ஏற்படுகிறது.புள்ளி மான் ,கடம்பை மான் போன்ற மானினங்கள் வருடத்திற்கு  ஒரு முறை கொம்புகளை உதிர்க்கும்.பிறகு அவை முலைத்து விடும்.இவை வீட்டு அழகு சாதனாங்களாகவும், கத்தி பிடியாகவும் பயன் படுகிறது.புதா¢லும் ,காய்ந்த இலை சருகுகளிலும் மறைந்து இருக்கும் மான் கொம்புகளை கண்டுபிடிபதற்காக தீ வைத்து விடுவார்கள்.மற்றவைகள் எரிந்த பிறகு கொம்புகள் மட்டும் எளிதாக கண்ணில் படும்.இவர்களை போல தேன் எடுக்க செலுவர்களாலும் தேனீக்களை விரட்ட புகை போடுவார்கள் .அதிலிருந்தும் தீ பரவி விடும்.வனபகுதிக்குள் இருக்கும் கோவில்களுக்கு  வருபவர்கள் சமையல் செய்வது மூலமும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அழையா விருந்தாளிகளாக வரும் சுற்றுலாவாசிகள் சுண்டிவிடும் அனையா பீடி, சிகரெட் தொடரும் காட்டுத் தீக்கு  முக்கிய காரணம். இவை தவிர காட்டுக்குள் போகும் மின்சார கம்பிகள் உராய்வதாலும் ,காடுகளை கிழித்து போகும் போக்குவரத்து வாகனங்களான கார்,பஸ்,இரயில் போன்றவற்றில் இருந்து வரும் நெருப்பு பொ¡¢களும் மிக பொ¢ய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.


இவை தவிர வனத் துறையினரே வைக்கும் தீ தனி ரகம்.காடுகளிலில் உள்ள களை செடிகளை அழிக்கும் நோக்கில் வைக்கும் தீ பல சமயங்களில் மிகுந்த அபாயத்தை ஏற்படுத்தி விடுகிறது. அரசு தொடர்ந்து அறிவித்து வரும் புலிகளின் சரனாலய திட்டம் ஒர் புதிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் வசித்து வரும் மக்களை கட்டாயாமாக வெளியேற்ற படும் போது அந்த மக்களின் கோபம் அந்த வனத்தின் மீது திரும்புவது இயற்கையே என்கிறார்கள் இயற்கையாளர்கள். தற்போது .சில நாட்களுக்கு முன்  சத்தியமங்களம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பு தொ¢யாமல் இயற்கை ஆர்வளர்கள் பா¢தவிக்கிறார்கள்.


காட்டுத்தீ ஏற்பட்டால் மீண்டும் காடு வளர்ந்து விடாத? என்று கேட்களாம்.காட்டில் தரையில் இருக்கும் விதைகளும் கிழங்குகளும் தீயால் அழித்து வனதின் தன்மையே மாற்றிவிடும்.  மயில், காட்டுக்கோழி, உடும்பு, பாம்பு,கீ¡¢ போன்ற பல உயி¡¢னங்களை அழித்து விடும்.பல உயி¡¢னங்கள் தரையில் தான் முட்டையிட்டு குஞ்சு பொ¡¢க்கின்றன. இதுமட்டுமில்லாமல் தனது குட்டிகளை வளைகளுக்குள்ளும் புதர்களிலும் தான் மறைத்து  வைத்திருக்கும்.ஒரு காட்டின் பல்லுயிர்வளத்தையே பாதித்து விடும். ஆப்பி¡¢க்க  நாடான சாம்பியா வனம் இதற்க்கு சா¢யான உதாரனம். அங்கு தொடர்ந்து ஏற்பட்ட காட்டுத் தீயால் மென்மையான மரங்கள் அழிந்து கடினமான முப்பேன்  என்ற மரம் மட்டுமே உள்ளது .வன விலங்குகளும் மிகவும் குறைந்து விட்டது. 


வேதாளம் மீண்டும் சாத்துக்குடி மரம் ஏறிய கதையாய் தொடரும் காட்டுத் தீயை அனைக்க நாம் இன்னும் பாரம்பா¢ய முறைகளையே கடைபிடிகிறோம். மேலைநாடுகளில் வனத்தில் செல்லும் இரயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். வானுர்திகளை  தீ அனைக்க பயன்படுத்துகிறார்கள்.  நம் நாட்டில் fire line எனப்படும் சாலையளவு இடைவெளிகல்ளை வனத்தின்  குருக்கே ஏற்படுத்துகின்றனர். தற்போது பார்வை கோபுரங்களையேம் உள்ளுர் மக்களை தீ ஏற்பட்டால் தகவல் தரவும் ஏற்படுத்திருக்கின்றனர்.நமது சரணாலயங்களில் தீஅனைப்பு வாகனங்கள் இல்லை. பெரும்பாலான சரணாலயங்களில் அதை பயன்படுத்தவும் முடியாது. ஆதலால் தீ ஏற்படாமல்  தடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.இதற்கு உள்ளுர் மக்களின் உதவி மிக முக்கியம் .அவர்களை இந்த பணியில் ஈடுபட வைக்கும் போது வன பாதுகாப்பு மட்டுமின்றி அவர்களின் வாழ்வும் பாதுகாக்க படுகிறது.தற்போது சரணாலாயங்கள் முடுவதும் வரவேற்க படவேண்டியது.


மலோ¢யாவால் மன்னாகி போகவேண்டிய மனித இனம் குயினைன் மருந்தை சிங்கோனா மரத்தில் இருந்து பெற்றதை மறந்து போனர்கள்.பூச்சாண்டி விளையாட்டு காட்டும் புற்றுநோய்க்கு பட்டிப்பூவில்லிருந்து வின்பிளாஸ்ரீன்,வின் கிறிஸ் ¡¢ன் மருந்து தந்த வனத்தை இன்னும் அழிக்கிறார்கள். வனம் அழித்ததின் முக்கிய விளைவான பருவநிலை மாற்றம் உலகையே பற்றி எ¡¢கிறது.இழந்து வரும் நீர் ஆதாரம்,உயர்ந்து வரும் வெப்பம்,உருகும் பனிகட்டி மாசுபடிந்த காற்று  போன்ற என்னற்ற  சவால்களுக்கு மத்தியில் மனித இனம். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக உன்னிடம் கேட்கிறேன்  இறைவா   


                  "வரம் தா வனம் காக்க".                         



Read more...

உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது!!


உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது!!

வாழ்க்கை நிகழ்வுகளால் நிறைந்தது.சலிப்புகளுக்கும் சந்தோசத்திற்க்கும் இடையில். வெற்றி தோல்வி என்னும் சம்பவங்கள் கலந்த கலவை.வாழ்வின் சமுக கடைமைகளை முடித்த பின் மிஞ்சி இருப்பவை காலத்தின் நினைவுகள் மட்டுமே. வாழ்வின் இறுதியில் துணை நிற்க்கும் பால்ய கால நினைவலைகள் கொஞ்சம் தனித்துவமானவை.

அமெரிக்க இலக்கியத்தில் ஹெமிங்வேக்கு நிகரானவர் ராபர்ட் ருவாக். சமகாலத்தவர்கள்.இருவரும் பத்திரிக்கையாளராக எழுத துவங்கி எழுத்தாளர்கள் ஆனவர்கள்.ருவாக் நிறைய கட்டுரைகள் நாவல்கள் எழுதியுள்ளார்.இவரது பகடி கலந்த  அரசியல் கட்டூரைகள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு தூக்கத்தை குறைத்தது.இவர் ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையை பற்றி இரண்டு நாவல்கள் எழுதியுள்ளார்.ராபர்ட் ருவாக்கின் ‘கிழவனும் சிறுவனும்,தாத்தாவிற்க்கும் பேரனுக்கும் உள்ள உறவையும், பால்ய கால நினைவுகளையும் பற்றிய உலகின் மிக சிறப்பான புத்தகம்.

கோடைகாலம் என்பது குழந்தைகளின் வசந்த காலம்.வீடு தங்கமாட்டார்கள். எப்பொழுதும் விலையாட்டு.மீன்,கிளி,ஓனான்,குருவி.கொக்கு பிடிக்க போவது, தெருநாயை துரத்துவது,கிணற்றில் குளிப்பது,திருடன் போலீஸ் விளையாட்டு, பம்பரம்,கிட்டி,கபடி,தீப்பட்டி லேபிள்,சிகரட் அட்டை வைத்து விளையாடுவது,ரயில் தண்டவாளத்தில் காசு வைப்பது,காற்றாடி விடுவது,தட்டான், வண்ணத்து பூச்சி, பொன்வண்டு பிடிப்பது,ரயில் விளையாட்டு,கோலிக்குண்டு விளையாட்டு, பல்லாங்குழி, பல்லிமுட்டையை எடுப்பது,சைக்கிளிலில் சுற்றுவது, உப்புக்குதிரை, ஏறுவது,கல்லா  மண்ணா ஆட்டம்,பேய்கதை கேட்பது,நட்ச்த்திரங்களை எண்ணுவது, மரப் பிசின் எடுப்பது,பசை காய்ச்சுவது,மயில் இறகு சேமிப்பது,காகிததில் ஏரோபிலையின்,கத்திக்கப்பல் கேமரா செய்வது,குச்சி ஜஸ் சாப்பிடுவது,எழந்தை , நாவல் பழம் பறிப்பது,நண்டு ,நத்தை சுட்டு சாப்பிடுவது...இப்படி ஏராளமான விளையாட்டுக்கள்.விளையாடி களைத்து வீடு திரும்பும் குழைந்தைகள் சாப்பிட்டும் சாப்பிடாமல் மீண்டும் விலையாட ஓடிவிடுவார்கள்.பெரியவர்கள் திட்டும் வாச்ம் எல்லா இல்லங்களிலிலும் வசித்தது.
இன்று இந்த விளையாட்டுக்கள் இல்லை.இல்லங்களிலில் வாசம் இல்லை. கொண்டாங்கள் இல்லாத வாழ்க்கை.இப்பொழுது அவர்களுக்கு தெரிந்த்து எல்லாம் கிரிக்கெட் ,வீடியோ கேம்,குட்டிசாத்தான் என்னும் தொலைக்காட்சி பெட்டி.இதை விட்டால் சம்மர் கிளாஸ்.சிறுவர்கள் சேர்ந்து விலையாடும் காட்சி மறைந்தே போய்விட்ட்து.
தாத்தாக்களிடம் கதை கேட்கும் பழக்கம் காணாமல் போய்விட்ட்து.தாத்தாகளும் டிவி பார்க்கிறார்கள் ,பேரன்களும் டிவி பார்க்கிறார்கள்.தாத்தாக்கள் வாய் இருந்தும் ஊமையாகி போய் நெடுநாள் ஆகிவிட்ட்து.தாத்தாக்களை முட்டாளாக பார்க்கும் பார்வை சமுகத்தில் புரையோடி போய்விட்ட்து.பேரப்பிள்ளைகளின் கேலிகளுக்கு மத்தியில் தாத்தாக்கள் தலைகவிழ்ந்து போகிறார்கள்.பின்னாளில் யோசித்து பார்க்க பால்ய நினைவுகள் இல்லா தலைமுறை.

ராபர்ட் ருவாக் தனது தாத்தாவை பற்றி மிக விரிவாக எழுதியுள்ளார்.தாத்தா என்ன கற்றுக்கொடுத்தார்,எப்படி கற்றுக்கொடுத்தார் என்பதே கிழவனும் சிறுவனும் புத்தகம். ருவாக்கின் தாத்தா கேப்டன் எட்வர்ட் ஹால் அட்ஹின்ஸ்.தன் பேரன் கோடை விடுமுறையில் வீட்டில் அடைந்து கிடப்பதை விரும்பாமல் அருகில் உள்ள ஏரி, குளம்,காடு,மலை என்று அழைத்து செல்கிறார்.

ருவாக் இயற்கையை தன் தாத்தா வழியாக புரிந்துகொள்ளுகிறார்.தாத்தா மீன்பிடித்தலின் வழியாக தண்ணீரை புரிந்து கொள்வது எப்படி என்று கற்றுதருகிறார். மீன்பிடிப்பவன் மிக பொருமையாக இருக்கவேண்டும்.அது தியானம் என்று புரியவைக்கிறார்.மீன்குஞ்சு மாட்டினால் அதை தண்னீரில் மீண்டும் விட்டு விடவேண்டும் என்கிறார்.மீனுக்கு பதிலாக தவளை மாட்டும்போது இப்படித்தான் பலரும் தங்களுக்குத் தேவையில்லாத இட்த்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்.ருவாக் மீன்பிடித்த்லை மட்டும்மல்லாமல் அதன்பின் உள்ள வாழ்க்கை பற்றிய் புரிதலையும்,த்த்துவத்தையும் அறிந்துகொள்கிறார் சிறுவனாக இருக்கும் ருவாக் புத்தகம் முழுவதும் தானும் பெரிய ஆளாக வேண்டும் என்று பேசியும், ஆடையும் அணிகிறார்.

சிறுவர்கள் எப்போதும் உடனடியாக பெரியவர்களாக ஆசைபடுகிறார்கள்.ஆனால் பால்ய வயதை கடந்த பிறகே அதன் சிறப்பு புரியும்..ருவாக்கின் புத்தகத்தை வாசிக்கும் போது நாமும் நம் பால்ய நினைவுகளிலில் முழ்குவது இனிய அனுபவம். வெற்று மாயத்தோற்றங்களை துணையாக கொண்டுள்ள சிறுவர்களின் உலகை நினைத்து பார்க்கையில் இப்புத்தகம் ஒவ்வொருவரும் வாசிக்கப் படவேண்டிய புத்தகம். உலகம் பெரியவர்களால் நிரம்பியிருக்கிறது.ஆனால் அது சிறுவர்களால் மட்டுமே ருசிக்கப்படுகிறது.
                                                                 

Read more...

எட்டுத்திக்கும் மாதங்கி!!


எட்டுத்திக்கும் மாதங்கி!!

படங்கள்:மு.சுதாகர்

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இது மாட்சிமை தாங்கிய யானைகளை செயற்ககையாக்கி விட்டதாக களித்த மனிதன் உருவாக்கிய பழமொழிகளில் ஒன்று.ஆனால் இன்னும் இப்புவியில் ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலகாடுகளில் 3 இன யானைகள் சுதந்திரமாக வாழ்கின்றன்.அவை ஆப்பிரிக்க புதர்காட்டு யானை,அடர் காட்டு யானை,மற்றும் ஆசிய யானை.

ஒரு முழு வளர்ச்சி பெற்ற ஆப்பிரிக்க ஆண் யானை ஏறக்குறைய 7000 கிலோ.அதிக படச உயரம் 13 அடி.இதனால் உலகின் நான்கு கால் விலங்குகளில் பெரிதும் பலம் கொண்ட்துமாக யானை மதிக்கப்படுகிறது.ஆசிய யானை உயரம் அதிக பட்சமாக 11 அடி,எடை அதிக அளவு 6000 கிலோ.யானைகளின் நிறம் கருப்பாக இருப்பதாகத் தெரிந்தாலும் உண்மையில் கருஞ்சாம்பல்.

யானையின் தோல் 25 மி.மீ. வரை தடிப்பானது.கூருணர்வு மிக்கது.ஈ,கொசு ,உண்ணிக் கடிகளை அவற்றால் பெருத்துகொள்ள இயலாது.அதனால் தான் பரிணாமம் அதன் உடற்பரப்பை விட இரு மடங்கு அகலமான தோலைத தந்துள்ளது.இதனை தோலின் மடிப்பு,தொயவு,தளர்வு,இடுக்கு ஆகியவற்றின் மூலம் அறியலாம்.இருந்தாலும் குருதியுறிஞ்சும் பூச்சிகள் பலவும் இவற்றினூடே மறைந்து கொள்வதற்க்கு அதுவே நல்ல வழியாகியுள்ளது.பூச்சிகள்கடிக்கும் போது யானைகள் ஒரு குச்சியையோ சிறு கிளைகளையோ ஒடித்து அதனால் சொரிந்து கொள்ளும்.அல்லது அரிக்குமிட்த்தை பாறையின் மீது தேய்த்து கொள்கின்றன.இது போன்ற பழக்கங்கள யானை மற்ற மிருகங்களை விட அறிவுள்ளதாக காட்டுகிறது.

யானையின் மருப்பு அல்லது தந்தம் என்பது ,மேல் தாடையின் துருத்திய முன்வெட்டு பல்.யானைக்கு மொத்தம் 26 பற்கள்.இதில் இரண்டு தந்தம் போக கீழ்த்தாடையில் 12ம்,மேலதாடையில் 12ம் உள்ளது.தமது வாழ்நாளில் 6 முறை பதிய பற்களை பெறலாம்.வலர்ச்சி பெற்ற ஒரு பல்லின் எடை 5 கிலோ

யானையின் தனிச்சிறப்புகுரிய உறுப்பு 200 கிலோ எடை கொண்ட அதன் தும்பிக்கை தான்.நீண்டு வளர்ந்த மேல் உதடும் மூக்கும் ஆகும்.150000 தனித் தனி தசைநார் ,நரம்பு கொண்ட அமைப்பு. இதனால் நுட்பமான சிறு வேலையை கூட அதனால் செய்ய முடிகிறது.நாணய்த்தைகூட எடுக்க முடியும்.இதன் மூலம் தன் பகைமையோ மற்ற விஅல்ங்களையோ , தண்ணீரையோ அது 5 கி.மீ தொலைவில இருந்தாலும் கண்டுபிடிக்கமுடியும்.அதன் உயிர் நாடி..தும்பிக்கை காயம்பட்டலோ துண்டிக்கப்பட்டலோ யானை உயிர் வாழ்வது கடினம்.யானை தன் பார்வையைவிட கூர்மையான கேட்பு சக்தியையும்,நுடபமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது.

யானை ஒரு நாளில் 18 ம்ணி நேரத்தை உணவு தேடித் திண்பதிலேயே செலவிடும். குறந்த்து 100 கிலோ முதல் 300 கிலோ வரை தாவரங்களை உண்ணும். குடிக்க மட்டும் 100 லிருந்து 150 லிட்டர் த்ண்ணீர் தேவை.இதற்க்காக கடும் வறட்சி காலத்தில் கூட 40 முதல் 50 கி.மீ தொலைவுக்கு தண்ணீர் தேடி பயணிக்கிறது

யானைகள் சுமார் 5 முதல் 15 வரை குடும்பமாக வாழும்.கூட்ட்த்திற்க்கு அனுபவமிக்க பெண் யானையே தலைமை ஏற்க்கும்.யானைகள் பயனிக்கும் போது ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ள ஒருவிதமான கமுக்கமான ஒலியை பயன் படுத்துகின்றன.செல்லும் வழியெல்லாம் மரக்கிளைகளை ஒடித்துக் கொண்டும் வித விதமாக குரலை மாற்றிகொண்டே போகும்.செரிமான ஏப்பம்.கடமுடாவென மரம் புரட்டும் ஓசை,பன்றி போல உறுமுதல் ,முன்குதல்,கிரீச்சிடுதல் ,கனைப்பு மற்றும் பிளிறல் ஆகியவையே யானைகளின் உரையாடல்கள்.

யானைகள் நடக்கும்போது அதன் பாதங்கள் காற்றுப்பைபோல் செயல்படுகின்றன். இதனால் சேற்றிலோ,சதுப்பு நிலத்திலோ காலகள் சிக்கி கொள்ளாமல் பாதுகாப்பதோடு ஓசையின்றி நடக்கவும் வசதியாயிருக்கிறது.நான்கு முழங்கால்களை உடைய ஒரே விலங்கு யானை தான்.ஆசிய யானையின் முன் கால் பாத்தில் 5 நகங்களும் பின்கால்களில் 4 நகங்களும் உள்ளன்.அதனால் நான்குகால் பாய்ச்சலாக ஓடவோ ,பாயவே ,குதிக்கவோ இயலாது.வேகமான நடையே ஓட்டம்.அதிகபட்சமாக மணிக்கி 40 கி.மீ வேகத்தில் அதனால நடக்க முடியும்.சாதரனமாக மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நடக்கும்.ஆனால் நீச்சல் நன்றாக தெரியும்.ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு நீந்தியே சொல்லும்!

பெண் யானைகள் 12 முதல் 15 வயதுக்குள்ளும் ஆண் யானைகள் 15 வயதிலும் பருவமடைகின்றன.ஆனால் 25-30 வயது வரை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை.முதிர்ந்த யானைகளே இனப்பெருக்கத்தில் வெற்ற அடைகின்றன. 20 முதல் 22 மாதங்களில் கருக்காலம்.வெகு அரிதாகவே இரட்டை குட்டி ஈனும்.குட்டி மிகுதியான உரோமங்களுடன் சுமார் 80 முதல் 120 கிலோ எடை இருக்கும்.3 அடி உயரம்.குட்டி பிறந்த ஒரு மணி நேரத்தில் நடக்கவும்,ஏதாவது உணவு கிடைக்குமா எனத் தேடவும் செய்கிறது.பிறக்கும் குட்டிகளில் இயற்கையான் குறைபாடுகளால் 5 சதவீதம் இறந்து விடுகின்றன.10 சதவீதம் இரைகொல்லிகளால் வேட்டையாடுப் படுகின்றன.,4 ஆண்டுகளுக்கு ஒரு முறைகுட்டி ஈன்றாலும் குட்டியை தாய் யானை 10 ஆண்டுகள் வரை பிரியாது.மண்னுலகிலே பெரிய விலங்கான யானைக்கு முதல் எதிரி மனிதனே.ஆசிய ,ஆப்பிரிக்க யானைகள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை உலக இயற்கை மற்றும் இயற்கை வள பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிக திராவிட மக்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் காட்டு யானையை பழக்கினர்.ஹரப்பா மொகஞ்சதாரோ ஆய்வுகளில் கிடைத்த யானைகளின் வார்ப்பு ஒவியங்களே அதற்கான நனீன வரலாற்றுப் பதிவுகளாக அறியப்படுகின்றன. ஆரிய மத்த்தின் பழம் நூலகளான வேதங்கள்,உபநிடதங்கள்,பழந்தமிழ் இலக்கியம் போன்றவற்றில் யானைகள் கனிசமாக இடம்பெற்றுள்ளன.

கி.மு 320 களில் அலெக்சாண்டர், போரஸ் மன்னன்,கி.மு 280 களில் ரோம அரசன் பைரஸ்,கி.மு 210 களில் ஆப்பிரிக்க மன்னன் ஹான்னிபால்,கார்த்தேஜியத் தளபதி மற்றும் சீன மன்னர்கள் யாவரும் தங்கள் ராணுவத்தில் யானைப் படையை வைத்திருந்தனர்.இம்மரபு மூலம் யானைகளை வைத்திராத இந்திய அரசர்களே இல்லையென எண்ணுமளவுக்கு அது கம்பிரத்தின்,கவுரத்தின் இலச்சினையாக சின்னமாக கருதப்பட்டது.

தொனமையான தமிழ் பண்பாட்டின் வரலாற்றை ஆராயும் போது  யானை, ஒரு பெரிய பலம் கொண்ட ,வளம் கொண்ட அழகு விலங்காகவே போற்றப் பட்டிருக்கிறது .மாபெரும் சங்க இலக்கியத்தில் யானை, மா, கரி, சிந்தூரம், அத்தி, அறுகு, ஆம்பல், ஆனை,இபம்,இம்மடி,களிறு,கைம்மா,போன்று சுமார் 50 புனைபெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அகநானூற்றில் , குறிப்பிட்ட 120  பாடல்களின் ஒரு தொகுப்புக்கு ‘களிற்றி யானை நிரை’ (ஆண் யானைகளின் வரிசை) என்னும் பெயர் தரப்பட்டிருந்த்தை ஈண்டு நோக்கவும்.

மொத்ததில் யானையை குறிப்பிடாத பாடலோ செய்யுளோ செய்திகளோ தமிழில் இல்லை.புராண, இதிகாச ,இலக்கியங்கள் எல்லாவற்றுக்கும் மேலே வள்ளுவரின் குறட்பாக்கள் யானைகளை பகுத்தறிவியல் ரீதியாக பார்க்கின்றன.

கொடும் கூண்டிலடைத்து ,கடும் சங்கிலியால் பிணைத்து,ஒரு விலங்குயிரின் பிறப்புரிமை புரியாத மக்களால் தலைவர்,ஞானி,முனிவர்,விஞ்ஞானி எனக் கருதிகொண்டிருக்கும் பலர்,வளர்ப்பு யானையின் தெய்வத்தன்மையும் அறிவுக்கூர்கையையும் பத்தியையும் பலத்தையும் மெச்சி சிலாகிப்பர்.அப்படியானல் மவுத்தன் கையில் எதற்க்கு அங்குசமும் தடியும்,இரும்புச்சங்கலியும்,ஈட்டியும்? நம்மைச்சுற்றி “பாரம்பரியம்,ஆரண்யப் பண்பாடு,திராவிடம் தேசியம் ‘ என்று முழங்குவர் ஒரு புறம்,உயிர்களிட்த்தில் அன்பு வேண்டும்,ஈசாவாஸ்யம் அதம் ஸ்ர்வம்என போதிப்போர் மறுபுறம் இந்நிலையில் எதிர்காலத்தில் மிஞ்சப்போவது மேற்கொண்டோரின் மாளிகைகளில் யானை தந்த்தில் செய்து பூஜீக்கப்படும் ஸ்ரீமகா கணபதியின் சிலைகள் மட்டுமே.....

அரசியலில் மாறுபாடுகள் ,பண்பாட்டில் வேறுபாடுகள் , சமுக நீதியில் முரண்பாடுகள்,குடும்பத்தில் கூறுபாடுகள் என்றே வாழும் மனிதன்,யானைகள் உட்பட்ட காட்டுயிரின்ங்கள் குறித்த சங்கதியிலாவது ஓரணியில் திரள வேண்டும்.ஏன்னெனில் முன்னர் சொன்னவற்றுக்கெல்லாம் ஒரு மாற்று இருக்க்கூடும். ஆனால் ,காட்டுயிர் பிரச்சனைகளில் மாற்றுக்கு வழியே இல்லை என்பது மெய்ப்பு.


முடிவாக .. இதோ இந்த நிமிடத்தில்.. புவியில்..கோடிக்கனக்கான ஆண்டுகள் வாழ்க்கைப்போராட்டத்தில் வெற்றியடைந்த .இப்புவியில் வாழும் உரிமையை நம்க்கு முன்பே பெற்றுவிட்ட ,தந்தம் தாங்கிய “தும்பிக்கை நாயகன்ஒரு கம்பீரமான ஆண் யானை சுடப்பட்டு ,காடே எதிரொலிக்கும் கதறலுடன் பிணமாக்க் சாய்கிறது.இப்போது நாம் என்ன செய்யபோகிறோம்?

Read more...

விலக மறுக்கும் இருள்



விலக மறுக்கும் இருள்

ஒருநாள் அதிகாலையில் கடவுள் பக்கதனுக்கு தோன்றி இன்று மாலை சூரியன் மறையும் வரை எவ்வளவு தூரம் நீ கடக்கின்றாயோ, அவ்வளவு இடமும் உனக்குச் சொந்தம்என்றார் .பக்தனும் மிக மகிழ்ச்சியுடன் தன்னால் முடிந்த அளவு தூரத்தை அன்றைய மாலைக்குள் கடந்து விட முடிவு செயதான்.நடந்து சென்றால் குறைந்த தூரமே கடக்க முடியும் என்பதால் , காலையிலிருந்தே ஓட ஆரம்பிக்கிறான்.. இடையில் தண்ணீர் அருந்தாமல் மதிய உணவு கூட உண்ணாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தான்.கடைசியில் மாலையில் சூரியன் மறையும் வேலையில் உடலில் உள்ள அனைத்துச் சக்க்திகளும் இழந்து மூச்சு திணறி தன் பேராசையால் கட்ந்து சென்ற அதே நிலத்தில் இறந்து கிடந்தான்.இதே நிலைமையில தான் இன்றைய மனிதர்களும். வளர்ச்சிஎன்ற போர்வையில் பூமியின் செல்வங்கள் சூறையாடப்பட்டு பூமி வறுமைப்பட்டு கிடக்கிறது.
ஆண்டுக்கு 60,000 சதுர கி.மீ புமியின் பரப்பளவு பாலைவனமாக மாறி வருகிறது.1970 லில் இருந்து சுமார் 200 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இது ஆண்டுக்கு சுமார் 17 மி. ஹெக்டேர் காடுகள். இந்தியாவின் மொத்த நிலப்பரப்பான் 326 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 179 மி.ஹெக்டேர்கள் பல வித அழிவிற்க்கும் பாதிப்பிற்க்கும் உள்ளாகியுள்ளன.இதில் 90 மி.ஹேக்டேர்கள் காடுகள் அழிப்பினாலும் மண் அரிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ளன.ஆண்டுக்குக் சுமார் 1.5 மி.ஹெகடேர் பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிண்றன.இன்னும் முப்பது ஆண்டுகளிலில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழியக் கூடிய நிலையில் உள்ளது.இதில் 70 சதவீதம் இந்தியா போன்ற வெப்ப நாடுகளை சார்ந்திருக்கும்.

பழைய ஆவனங்களின் படி இந்தியாவில் 52 சதவிதம் காடுகள் இருந்தன்.ஆனால் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் 35 முதல் 40 சதவீதமாக  குறைந்த்து.1952 -ல் வெளியான் விவசாய அறிக்கையின் படி ஒரு நாட்டிற்கு 33 சதவீதம் தேவை. இன்றைய கனக்கு படி 11.5 சதவீதமே உள்ளது. ஓர் ஆண்டில் நிமிட்த்திற்கு 2.8 ஏக்கர்கள்-நாள் ஒன்றுக்கு 10,000 ஏக்கர்கள் என 37 லட்சம் ஏக்கர்கள் அழிக்கப்படுகின்றன.அப்படி அதிகம் அழிப்பது இமய மலையின் அடிவாரத்திலும் மேற்க்கு தொடர்ச்சி ம்லைகளிலிலும்  மட்டும் தான்.வெள்ளம் ,வறட்சிக்கு முதலாம் ஜந்தாண்டு திட்டத்தில் செலவிட்ட தொகை வெறும் 5.64 கோடி தான்.அதே இப்போது 1500 கோடிகளுக்கும் மேல்! காடுகள் அழிந்து விட்டதால் பெய்யும் மழையைப் பிடித்து வைக்கும் திறன் இழந்து திடீர் வெள்ளம்!!.அந்த ஈரத்தன்மையும் காக்கும் திறன் நிலத்தில் இல்லாமல் வறட்சி.

ஆண்டு தோறும் புத்தாண்டு வாழ்த்து அட்டை தயாரிக்க மட்டும் சுமார் 15 லட்சம் மரங்கள் பலியாகி வந்தன்.இது தவிர தடுப்பு அனைகள் நீர்த்தேக்கங்கள் அணைக்கட்டுகள் கட்டுவதற்காக சுமார் 450 ஆயிரம் ஹெக்டேர் காடுகளும் விவசாயத்திற்க்கு சுமார் 2500 ஆயிரம் ஹெக்டேர்களும் சாலை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகாக சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர்களும் தொழிற்சாலைகள் கட்ட சுமார் 125  ஆயிரம் ஹெக்டேர்கள் என்று கடந்த 25 ஆண்டுகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.இத்தகைய காடு அழிப்பினால் மண் அரிப்பு ஏற்பட்டு விவசாய உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.சத்துள்ள மண், மழை நீரால்,வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு நிலம் வளம் இழந்து பயனற்றதாய் மாறி விடுகிறது.ஒரு அங்குளம் மண் உறுவாக ஏறக்குறைய 500 முதல் 600 வருடங்க்கள் ஆகின்றன.ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள மேல் மண் ஆண்டுக்கு 1.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கிறது. 25 நபர்கள் ஓரு ஆண்டுக்கு உண்ணத் தேவையான் உணவு தாணியங்களை ஊற்பத்தி செய்ய முடியும்.பத்து லிட்டர் மழை நீரை சுத்தம் செய்யும். ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் மண் அரிப்பினால் 30 லிருந்து 50 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி இழப்பு..ஆண்டுக்கு விளை நிலத்திலிருந்து ஆறு மில்லியன் டன்  பயிர் வளர்வதற்கு தேவையான் சத்துக்கள் அடித்து செல்லப்படுகின்றன்..இது செயற்கையாக நிலங்களிலில் கொட்டப்படும் ரசாயன் உரங்களை விட அதிகாமானது.
காடுகள  அழிக்கப்படுவதால் பெரிதும் பாதிக்கப் படுவது ஏழைகளும் பழங்குடி மக்களுமே.பழங்குடி மக்கள் இன்று அழிந்து வருவதற்க்கு முக்கிய காரண்மே காடுகள் அழிக்கப்படுவதால தான்.ஏழை மக்கள் சுள்ளி முறிக்கும் சத்தத்தை கேட்கும் வனத்துறை அதிகாரிகளின் செவிகளுக்கு மரங்களை சாய்க்கும் கோடாரி சத்தம் மட்டும் கேட்காமல் போய விடுகிறது..தமிழ்னாட்டில் மீனவர்களுக்கு கட்டுமரங்க்கள் செய்ய தேவையான் மரங்கள் க்டுமையான் தட்டுப்பாடில் உள்ளது.ஆனால் கொடைக்கான்லில் மலையை அரசாங்கமே தாரைவார்த்து விட்டது .கார்வால் மலைபகுதியில் விவசாயிகளுக்கு 'ஆஷ்' மரத்திற்க்கு பதிலாக அரசாங்கம் 'பைன்' மரத்தை தான் தர முடியும் என்றது .மறுக்கப்பட்ட மரம் விளையாட்டு கருவிகள் செய்யும் நிறுவனத்திற்க்கு !!இதே நிலைமை தான் தீப்பெட்டிக்கும் ஊதுவத்திக்கும்!!உத்திரபிரதேச அரசு பாபார் புல்லை கைத்தொழில் செய்யும் மக்களுக்கு வழங்கி கொண்டிருந்தது.அந்த புல் திடீரென்று காகித தொழிற்சாலைக்கு அனுப்பட்டது.விளைவு அதை நம்பி வாழ்ந்த 40,000 குடும்பங்கள் பட்டினியில்!! 1980க்ளிலில் ஆரம்பிக்கப்பட்ட் தரிசுநில மேம்பாடு  திட்டத்தில் 50 லடசம் ஹெக்டேர் பரப்பை வனபகுதியாக்க முடிவு செய்யப்பட்ட்து ஆனால ஆண்டுக்கு 15 ஆயிரம் சதுர கி.மீ அள்வில் தான் காடுகள் வளர்க்கப்படுகின்றன்.

2009 நவம்பரில் உதகையில் 7 நாட்கள் விடாது பெயத மழை, உதகை வரலாற்றில் மிக பெரிய பேரழிவு.190 இடங்க்களிலில் மண் சரிவு. குன்னுர் தனித்தீவானது.        5 நாட்கள் மின்சாரம் இல்லை.44 பேர் பலி .பெருளாதாரா இழப்பு மட்டும் 1000 கோடிக்கும் மேல்.1992லில் கன்னியகுமாரி கனமழையில கரைந்து போனவர்கள் 211.இந்த நூற்றாண்டில் இந்தியாவின் வட மானிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 1039 பேர் பலியாயினர் .24 ம்ணிநேரத்தில் பெயத மழையின் அளவு 940 மி.மீட்டர்.காடுகள் அழிப்பு ,அழிவின் பிரம்மாண்டத்துக்கு அழைப்பு!

காடுகள்தான் தமது கலாச்சாரத்தை நாகரீகத்தை வளர்த்த புன்னிய தளங்கள்.அவற்றை அழிப்பது நம்மை நாமே அழித்து கொள்வதாகத்தான் அர்த்தம்என்று கூறிய சுந்தர்லால் பகுகுணா,1981 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுக்க முன்வந்த போது வேண்டாமென்று மறுத்து விட்டார்.அவர் சொன்ன காரணம்இமாலயப் பகுதிகளில் தினம் தினம் ஏரளாமான மரங்கள் அழிக்கப்படுகின்றன.காடுகள் அழிப்பதால் மண் அரிப்பு ஏற்படுகின்றது.பாரத மாதவின் ரத்தமும் சதையுமாக நினைக்கிறோமே அந்த வளமான மண் கடலை நோக்கி தினமும் போய கொண்டு இருக்கிறது. இது என்று தடுக்கப்படுகிறதோ அன்று தான் விருது பெறுவதற்குரிய தகுதி எனக்கு வரும்என்றார்
தம்மையே நமக்கு தானமாக்கும் இந்த பூமிக்குக் நாம் தரும் பரிசு அழிவு.மனிதரின் முதல் நன்பன் மரம்.மரத்தின் முதல் எதிரி மனிதன்.மனித குலம் வாழ புவி வாழ வேண்டும்.எதிர்கால சந்தியினர் இம்மண்ணில மலர நாம் வாழும் இப்பூமி பாதுகாகப்பட வேண்டும்.
       செக்களவு பொன் ஆனாலும் செதுக்கித் தின்றால் எத்தனை நாள்?”

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP