லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 24 செப்டம்பர், 2012



 லவுட்ஸ்பீக்கர்


அபத்தம்
தமிழக அரசு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகிறது. அது மின்வெட்டு பிரச்சனையில். ஒவ்வொரு முறையும் அடுத்த ஆறு மாத்த்தில் மின்வெட்டு சீராகும் என்று நப்பாசை காட்டியே நாளை தள்ளிப்போடுகிறதோ ..ஆனால் விடை கண்டு கொண்ட்தாக தெரியவில்லை.பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டும் அரசு தமிழக முழுவதும் இருக்கும் தெரு மின்விளக்குகளை சோலார் பவருக்கு மாற்றினால் ஒரளவு மின் வெட்டை சமாளிக்கலாம்.. ஆனால் அரசு ஏனோ மவுனம் காக்கிறது??

தேசத்தின் மதம்
T20 உலக கோப்பை ஆரம்பித்துவிட்ட்து.ஆனால் கட்ந்த காலங்களில் இருந்த பரபரப்போ ..ஒரு எதிர்பார்ப்போ இல்லை. மக்கள் தங்களின் அன்றாட பல பிரச்சனைகளில் தான் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.இது ஒரு நல்ல சைன். இன்னும் 20 வருட்த்தில் மக்கள் உண்மையில் திருந்திடுவாங்க போல?? அப்பறம் இந்த அரசியல்வாதிகளின் நிலை?? அம்போ தான்!!

புஷ்வாணம்
 கூடன்குளம் பிரச்சனை முன்னரே சொன்னது போல் வெடிகாத பட்டாசாக மாறிவிட்ட்து.கூடன்குளம் ,இடிந்தகரை தவிர பல்வேறு கடல்கறையோற கிராமங்கள் மீண்டும் சக்ஜநிலைக்கு திரும்பியுள்ளது வரவேற்க்கப்படவேண்டிய விசயம்.ஆனால் அந்த பகுதி மக்கள்? உதயகுமாரின் நிலை அன்னா நிலை தானா??உசரான உளவுத்துறை பிற்பகுதியில் இந்த பிரச்சனையை நன்றாகவே கையாண்டார்கள்.



சங்கு
கேஸ் மற்றும் டீசல் விலைஏற்றத்தை கண்டித்து எதிர்கடசிகள் அழைப்பு விடுத்த பந்த் ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ். இது மக்களின் மன்நிலையை வெளிகாட்டுகிறது மத்திய அரசு அடுத்தவருடம் தேர்தலை சந்திக்கும் நிலையில் இது தன்க்கே ஊதிய சங்கு.

ரத்தம் வடியும் ரோஜக்கள்.
இப்போது காதல்களும் அன்புகளும் கொலையில் முடிவது சாதரனவிசயமாகிவிட்டது.மக்களிடம் பழகுவதே பயமாகி விட்டது.இந்த நிலையில் சென்றால் குடும்பங்களின் நிலை? ஒருவேளை குடும்பம் என்ற கட்டமைப்பு நிலை குழைந்து வருகிறதா?

Read more...

லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 17 செப்டம்பர், 2012




லவுட்ஸ்பீக்கர்
இளிச்சவாயன்

தீ ஜூவாலைகள் சிவகாசியில் கோர தாண்டவம் ஆடியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க இயலாது. அரசின் மிக மோசமான போக்கை வெளிபடுத்தும் துன்பியல் சமபவம் அது. ஆனால் அரசு விழித்துக்கொண்ட்தா என்றால் ..அட போங்கடா... உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் என்ற நினைப்பில் தான் இருக்கிறது. கணதுடைப்புக்கு இழப்பீடு...அவ்வளவே!! பணம் தந்தால் மக்கள் எல்லாத்தையும் மறந்துவிடுவார்கள் என்று அரசு மக்களை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

அல்வா

சிவகாசி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் சிலர் முகனூலில் இருந்து கிளம்பினர். முதலில் ஏகோபித்த பாராட்டகளுடன் தொடங்கப்பட்ட பணி இறுதியில் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சம் ஸ்டண்டு காட்சிகளுடன் முடிந்த்து. உதவும் ..உணர்ச்சி பூர்வமான மக்களின் உனர்ச்சிகளை தவறாக பயன்படுத்தி மக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி என்ன ஆனதோ??? இதோ அதோ என்று இறுதியில் போய் சேர்ந்தா இல்லையா என்றே தெரியவில்லை. எவ்வளவு வசூலித்தார்கள் என்றும் தெரியாமல் அவசர அவச்ரமாக மூடி மறைக்கப்பட்டது.இனியாவது சூது வாது தெரிஞ்சு நடந்துக்க இது ஒரு பாடமாக இருக்கட்டும்
மலர்கொத்து

மத்திய அரசு அறிவித்துள்ள ஒளிபரப்பு துறையில் அந்நிய மூதலீடு என்னைப்பொருத்த வரை வரவேற்க்கப்பட வேண்டியதே. தற்போது இருக்கும் தமிழ் காட்சி ஊடகங்களுக்கு செம அடி.. இனியாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடால் தற்போது இருக்கும் தெருமுனை கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அவ்வளவு சீக்கிரம் புறகனிக்க மாட்டார்கள். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. மலைநகரங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நம்மூர் மக்கள் இன்னும் மேலைநாடுகள் போல் பொருட்கள் வாங்க அதிக தூரம் பயனிக்க தேவையில்லை.அவர்கள் போல் ஒரு சிஸ்டமெட்டிக் வாழ்க்கை நாம் வாழுவதும் இல்லை.. ஆதலால் வால்மார்ட்,டார்கெட் போன்ற கடைகள் வருவதால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. மேலும் விக்கர விலைவாசி கொஞ்சம் குறையவே செய்யும்.இவனுங்க அடிக்கர கொள்ளைக்கும் ஆப்பு வைச்ச் மாதிரிதான்.
நீர்க்குமிழி

கூடன்குளம் போராட்டம் ஒரு பக்கத்தில் மதம் சார்ந்த பிரச்சனையாக மாறிக்கொண்டு இருப்பது வருத்தமே! ஆனால் போராட்டம் பரவினாலும் விரைவில் நீர்த்துவிடும். அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது சத்தம் இல்லாமல்.. நிரப்பிவிட்டால் இந்த போராட்டம் அர்த்தம்ற்றதாக மாறிவிடும். ஊரை காலிசெய்வதை விட வேறு வழியில்லை.

மை இல்லாத பேனா

கருணா ஆட்சியில் பல குறைகள் சொல்லப்பட்டாலும் ஊடகத்தை பொருத்த வரை சுதந்திரமான காலமே!ஆனால் ஜெ. ஆட்சியில் அப்படி இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் ஜெ . மேல் இருக்கும் பயத்தில் அடக்கியே வாசிக்கின்றன. மாநில பிரச்சனைகள் அதிகம் இடம்பெருவதில்லை. பெரும்பாலும் உள்ளாட்சி பிரச்சனைகளே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன். காட்சி ஊடகங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது .ஏதோ லோக்கல் சேனல் போல நடந்துகொள்கின்றன்.அச்சு ஊட்கமோ அதை விட மோசம்.. மை தீர்ந்து போன பேனா போல அரைச்சமாவை அரைத்துக்கொண்டு ஜெ.வின் ஊதுகோலாக மாற்விட்ட்து. அது கூடன்குளம் விவகாரத்தில் நன்றாக தெரிகிறது.என்ன செய்வது எல்லாம் விளம்பரம் படுத்தும் பாடு. அனைத்தும் அரசின் விளம்பரங்களை நம்பியே பொழைப்பை ஒட்டுகின்றன. லம்பான அமொண்டை இழக்க யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

Read more...

கருப்பு தினம்-செப்.10

>> செவ்வாய், 11 செப்டம்பர், 2012




கருப்பு தினம்-செப்.10
செப்டம்பர் 10 ..இனி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.வரலாற்றில் எத்தனையோ அத்துமீறள்களை மனித இனம் சந்தித்துள்ளது. அத்தனையும் மீறித்தான் தழைத்துள்ளது மனித இனம்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக காந்திய வழியில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக போராடி வந்தார்கள் இடிந்தகரையை சேர்ந்த மக்கள் . உதயகுமார் தலைமையில்.

கட்ந்த சில நாட்களுக்கு முன் அணு உலைக்கு எதிராக வாழக்காடு மன்றத்தில் தொடுத்த அனைத்து வழக்குகளும் தள்ளூபடி செய்யப்பட்ட்து.அப்போதே இது தீவிர கவனத்துக்கு உள்ளாக்கப்பட்ட்து.ஆனால அரசு மவுனமாக அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.அவை இன்று உலகளவில் இன்று தமிழ்நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.அப்போதே இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்படிப்பட்ட கலவரங்கள் ஏற்பட்டிருக்காது..
செப்.9 முதலே மக்கள் கூடி விட்டனர் கடற்கரையோரம் .ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடனே அரசு உசராகி இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்காமல் தடுத்திருக்கலாம். இதில் அரசுக்கு மிகப்பெரிய தோல்வியே.
அணு உலைக்கு ஆதரவாக அரசும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் எதிரானவர்களோ அதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இங்கே இருக்கும் முரணபாடுகளை அரசு களைய வேண்டியது பொறுப்பு.ஆனால் அதை கலையாமல் தொடர்ந்து குரல் எழுப்புவது ஒரு மோசமான சூழலே!!
அணு உலையை பொருத்தவரை வெளியேற்றும் கழிவு நீர் என்பது கடல்வளத்தை பாதிக்க போவது நிதர்சனம் தான். அந்த கடல் வளத்தை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இதற்கு விலக்கோ அல்லது முடிவோ கண்டிப்பாக இல்லை.

அணு உலையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு எவ்வளவு கொடுமையானது என்பது உலகில் நடந்த பல சமப்வங்களே சாட்சி. அப்படி இருக்கும் போது அணு உலை தேவையா என்பது பலத்த கேள்வியே!
எதிர்பாளர்கள் சொல்லும் மற்றொரு குற்றச்சாட்டு அணு உலை அமைப்பதின் முக்கிய நோக்கம் மின்சாரம் அல்ல. அது அணுகுண்டிற்கான மூலப்பொருள் எடுப்பதே என்பது. அதற்கான விளக்கம் கேட்கிறார்கள். அப்படி ஒருவேளை இருக்கும் படசத்தில் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயங்களை எல்லோருக்கும் பகிர்வது என்பது மிகவும் அபத்தம்.இது எதிர்பாளர்களை பற்றி அரசு வைக்கும் குற்றசாட்டிற்கு வலுசேர்க்கிறது.
அரசு சொல்லும் அந்நிய நாட்டு சதி.. அதற்கு உடந்தை உதயகுமார் என்பதை சின்ன குழந்தை மாதிரி சொல்வது அபத்தமாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி இருக்கும் படசத்தில் அதற்கான சான்றுகளை மக்களிடம் தந்தாலே மக்கள் உதயகுமாரை புறக்கணித்துவிடுவார்கள். போராட்டமும் பிசுபிசுத்து விடும். ஆனால் அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது தவிர ஒன்றையும் சான்றாக தரவில்லை.
அணு உலை பகுதிக்கு 500  கோடி வளர்ச்சி பணிக்கு ஒதுக்கியது மிக்க்கேவலமான அரசியல் செயல். உண்மையாக அணு உலை எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும் படசத்தில் எதற்கு அரசு 500 கோடி ஆசை வார்த்தை காட்டனும்??தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பணம் கொடுக்கும் மோசமான சூழல் .இது கலையப்பட வேண்டிய விசயம்.
எதிர்பாளர்கள் தீர்ப்பு வந்தவுடன் போராட்ட்த்தில் குதித்து இருந்தால் அவர்களுக்கு இன்னும் அதிக அளவுக்கு ஆதரவு இருந்திருக்கும்.அதை விட்டு விட்டு திட்டம் இட்டு போராட்டம் செய்வது இந்த போராட்ட்த்தின் பின்பலம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
குறிப்பாக போராட்ட்த்தில் குழந்தைகளை முன்வைப்பது பலத்த கண்ட்னத்தை பல இட்த்திலும் இருந்து சந்தித்து வருகிறது. இது குறித்து உதயகுமார் கூட கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். ஒரு வேளை  போராட்ட்த்தில் குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இப்போராட்டம் வேறு தளத்திற்கு பயனித்து இருக்கும்.அதற்க்கு தான் திட்டமிட்டாரோ உதயகுமார் என்கிற சந்தேகமும் இப்போது உரத்து எழுகிறது.
இதுபத்தாது என்று விஞ்ஞானிகளும் கூடங்குளம் சார்ந்து அரசியல் பேசுவதால் தேவையில்லாத பதட்ட்த்தை உருவாக்குகிறது.இது எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊத்துகிர கதை.ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பேசிய கருத்துகள் ஜனநாயகத்தையே கேள்விக்குரியாக்குகிறது.
இது இப்போதைய நிலைக்கு முடியப் போவதில்லை. இது வெளியில் பேசுகின்ற பொது தளத்தில் கையாளும் பிரச்சனை அல்ல. இப்பிரச்சனை இருதரப்பும் அமர்ந்து உண்மையான நிலையை தங்களின் ஈகோவை விட்டுவிட்டு புரிந்து பேசினாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும்.விஞ்ஞான வளர்ச்சியை காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிதர்சனம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரின் மேல் தான் நவீனத்திற்கு மாறவேண்டும் என்றால் அந்த நவீனமே தேவையில்லை என்பது பெரும்பாலோரின் எண்ணம்.

Read more...

வேங்கை:மவுன யுத்தம்!!

>> திங்கள், 10 செப்டம்பர், 2012






மவுன யுத்தம்!
மனிதன் எப்போது துப்பாக்கி கண்டுபிடித்தானோ அன்றிலிருந்து காட்டுயிர்களுக்கு ஆரம்பித்துவிட்டது அழிவுகாலம்.முதலில் சிங்கத்தை குறிவைத்தான்.. விளைவு கிர் காடுகளில் மட்டுமே இன்று சிங்கம்!!அடுத்து புலி.. விளைவு 40 ஆயிரமாக இருந்த்து இப்போது 1200 மட்டுமே!!
சமீபத்தில் காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தன் சாட்டையை சுழட்டி உள்ளது. புலி சரணலாயங்களில் சுற்றுலாவை தடை செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.இது பல்வேறு விவாதங்களை நாடு முழுக்க கிளப்பியுள்ளது.
புலி என்ன அவ்வளவு முக்கியமான காட்டுயிரா??? இது பலரின் கேள்வி..இந்த புவியில் படைக்கப்பட்ட அனைத்தும் சங்கிலி போல ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்டில் புலியே இல்லை என்றால் காடு இருக்காதா என்ன என்று நீஙகள் கேட்பது புரிகிறது.
இந்தியாவில் உள்ள காடுகள் வெவ்வெறு தகவமைப்பில் உள்ளது.புலி வாழக்கூடிய காடுகளில் யானை இருக்கும். யானைக்கு அதிகம் உணவு தேவை. ஒரு நாளைக்கு குறைந்தப்டசம் 250 கிலோ தாவரங்களும் நல்ல குடிதண்ணீர் வசதியும்.அப்படி என்றால் அந்த காட்டில் எவ்வளவு தாவரங்கள் மரங்கள் இருக்கும்...யோசித்துப் பாருங்கள்.குறிப்பாக மூங்கில்,முட்செடிகளில் வரும் காய்கள், புற்கள் என்பவை மிக முக்கியம் யானைக்கு.. மேலும் இத்த்கைய தாவர வளம் உள்ள காடுகளில் தான் மான் வாழும்.காரணம் புல் என்ற மிக முக்கிய உணவும் தண்ணீரும்.மான் மற்றும் யானைக்கு தேவைப்படும் கால்சியம் சத்திற்க்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் உப்பு மண்ணும் மிக முக்கியமானது .

யானை இவ்வகை காடுகளில் உட்புகுந்து உண்ணும் போது காட்டில் சிறு சிறு இடைவெளி உருவாகும்.அந்த இடைவெளிகள் மானுக்கு மேயும் இடமாகவும் இரை தேட வசதியாகவும் இருக்கும். புலிக்கு தேவையான உணவு குளம்பிகள் வகையை சார்ந்த மான் ம்ற்றும் காட்டு எருதுகள் இந்த வகை வளமான தாவர காடுகளில் தான் இருக்கும் புலியும் இக்காடுகளில் இருக்கும்.காரனம் இரை.இவ்வகையில் புலி ,யானை,மான் போன்ற குளம்பி வகைகள் நெருங்கிய சங்கிலியால் பினைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை புலி வாழ்ந்த காடுகளில் புலி அற்றுப்போகுமானால் என்ன நடக்கும்..... புலியின் உணவான மான்,காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.அவை உண்ணும் தாவரங்களின் அளவு அதிகமாகும் ..பிற்கு என்ன தாவர உண்ணிகளுக்கு சரியான அளவு உணவு கிடைக்காமல் அருகில் உள்ள மக்கள் வாழிட்த்திற்கு உட்புகும். மனித –காட்டுயிர் மோதல் நடைபெறும் .மேலும் சரியான அளவு தாவர உணவு கிடைக்காமல் காட்டியிர்களின் இறப்பு அதிகரிக்கும். யானை போன்ற விலங்குகள் உண்ணுவதில் 40 சதவீதம் செரிக்கின்றன. மீதி கழிவாக வெளியேறுகிறது. அதில் உள்ள சிறுவிதைகள் பாதி செரித்த அளவில் தான் எளிதாக முளைக்கும் .ஒரு பக்கம் தாவரங்கள் இப்படி காட்டுயிர்களால் உண்ணப்பட்டு மறுபுறம் கழிவு மூலம் வெளியேற்றப்பட்டு மீண்டும் அவை வளர்கின்றன்.தாவரங்கள் பரப்ப படுகின்றன. தாவரங்கள் பல்வேறு பகுதியிலும் பரவப்படுகின்றது. இப்படித்தான் காடு வளம் பெறுகின்றது .உருவாகின்றது. இதை அசைத்தால் காடு அழியும் என்ப்து இப்போது புரியும் உங்களுக்கு. காடு அழிந்தால் மழை இல்லை. மழை இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான தண்ணீர் கிடைக்காது. மனித இனமே அழியும்.
இதனால் தான் புலியை காப்பாற்ற காட்டுயிர் ஆர்வளர்கள் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு முயற்சியின் விளைவுதான் இந்த அதிரடி தீர்ப்பு.இதுவரை புலியை காப்பாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புலி பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் புலியை காப்பாற்றினார்களா என்றால் புலியின் எண்ணிக்கை குறைந்த்து தான் மிச்சம்.புலியின் பெயரை சொல்லிக்கொண்டு பலரும் தங்களின் சொத்தை பெருக்கிக்கொண்டார்களோ தவிர புலியின் எண்ணிக்கையை பெருக்கவில்லை.
தற்போது வந்துள்ள தீர்ப்பின் படி புலியின் சரணலாயங்களில் சுற்றுலாவாசிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்.இத்தீர்ப்பை பெரும்பாலோர் வரவேற்றாலும் சிலர் இதனை எதிர்கின்றனர். அவர்கள் சொல்வது இந்த காரணத்தை தான்.இதனால் சுற்றுலா தடை செய்யப்படுகிறது. சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் பாதிப்படைகின்றனர் என்பது.
தமிழ்நாட்டில் உள்ளது மூன்று சரணாலயங்கள் தான் .அவை முதுமலை,களக்காடு மற்றும் ஆணைமலை. இதில் புலிகள் அதிகமாக இருப்பது முதுமலையில் இருந்து சத்தியமங்களம் தலைமலை வரை உள்ள பகுதிகள். இப்பகுதியில் தான் விலங்குகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் தெங்குமராட்ட பகுதியும் அடங்கும்.
தற்போது இந்த பகுதியில் நடப்பது எல்லாம் சுற்றலா என்ற பெயரில் குடி கும்மாளம் மற்றும் பெண்கள் என்று அனைத்து அருவருப்பான காரியங்கள் மட்டுமே!!தற்போது புதிதாக உருவாகியுள்ள ஜ.டி என்னும் கொடிய நோய் பிடித்த இளைஞர்களும் இளம் பெண்களும் சுற்றுலா .... இயற்கையை ரசிக்கிறோம் என்ற பெயரில் இப்பகுதியில் தீயிட்டும் குடித்தும் தங்களின் வார இறுதியை நிறைவாய் செலவழிக்கிறார்கள்.இதற்கு சாமரம் வீசுகின்றன தனியார் தங்கும் விடுதிகள். இவைகளின் அறிவிப்பே தங்களின் பகுதி காட்டியிர்கள் நடமாட்டம் உள்ளது என்பதுதான். இவைகளால் அங்கு வாழும் எந்த ஆதிகுடிகளுக்கும் லாபமோ அல்லது வருமானமோ இல்லை.இந்த ஆதிகுடிமக்களை இங்கு உள்ள தனியார் விடுதி நிர்வாகங்கள் சுற்றுலாவாசிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றன். அதுவும் மிக்க்குறந்த ஊதியத்தில்.!!
இதுதவிர மற்றொரு கருத்தும் வைக்கப்படுகிறது..அது வனத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்காத போது வேட்டைக்கார்ர்களுக்கு வசதியாக போய்விடும் என்பது.மேலும் போதுமான வசதிகள் வனத்துறைக்கு இல்லத்தையும் சுட்டி காட்டுகின்றனர். இது வேட்டையாளர்களுக்கு எளிதாக போய்விடும். இதற்கு காட்டுயிர் ஆர்வளர்கள் பலத்த கண்டனம் தெரிவிக்கிறார்கள். வனத்துறையின் முக்கிய வேலை வனத்தை காப்பதுதான்.அவர்களிடம் போதுமான அளவுக்கு வசதிகள் இல்லாததது உண்மை தான். அரசு புலிகள் திட்ட்த்திற்க்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள். அதை செலவழிக்க சொல்லுங்கள்.மேலும் வனத்துறை காவல்துறையிடம் இனைந்து செயல்படவேண்டும் .அப்போது தான் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள முடியும் மேலும்வனத்தில் வேட்டையாடி விட்டோ வனச் செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு நகரத்துக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்களை எளிதாக பிடிக்கலாம். மேலும் காவலதுறையுடன் இனையும் போது காவல்துறையின் மனித ஆற்றலையும் மற்றும் நவீன வசதிகளையும் எளிதாக பயனபடுத்தலாம் என்கிறார்கள்.
முதுமலையை சுற்றி உள்ளவர்கள் பெரும்பாலோர் ஆதிகுடிகள் அல்ல. அவர்கள் பெரும்பானமையோர் புலம் பெயர்ந்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே!!மற்ற படை அவர்களுக்கு வனத்தையோ அல்லது காட்டுயிர் குறித்தோ துளியும் அக்கறை இல்லை.இவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விறகு. அனைத்தும் வனத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது..
குறிப்பாக ஊட்டியில் இருந்து முதுமலைக்கு போகும் பாதை கடினமானது. அல்லது கூடலுர் போய் சுற்றிக்கொண்டு போகவேண்டும்.பொரும்பாலோர் கூடலூர் பாதையை தேர்ந்தெடுக்காமல் கல்லட்டி பாதையையே தேர்ந்தெடுக்கிறர்கள் .வாரத்தில் குறைந்த படசம் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது . இவையும் குறையும்.

பொதுவாக காட்டுயிர்கள் மனித தலையீடு இன்றியே வாழ்ந்து பழகியவை. மனிதர்களின் தலையீடு மற்றும் வாகன்ங்களின் ஓய்வற்ற ஹாரன் சத்தங்கள் அவைகளின் வாழ்வு சூழலை கடினமாக பாதிக்கிறது. அவைகளின் இனப்பெருக்கத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.அதிலும் மான் போன்ற மிகுந்த மென் உயிர்கள் திடிர் அதிக சத்த்த்தால் மரணம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும்  கட்டுபாடு அற்ற வாகனப் போக்குவரத்துகளால் வெளியேறும் புகையும் அதீத காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.மேலும் இவ்வளவு வாகனப்போக்குவரத்து தான் வேட்டையாடிகளை சரியாக கவனிக்க இயலாத சூழல்.எளிதாக வனத்துக்குள் சுற்றுளாவாசிகள் பெயரில் ஊடுருவ முடிகிறது.புலி சரணாலயங்களில் முற்றிலும் வெளியாட்கள் நுழைவதை தடுப்பதன் மூலம் இத்தகைய அத்தனை தீமைகளும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.  .
இவைத்தவிர காடு வளம் பேணப்படும் போது காட்டில் கிடைக்கும் புல் ,காய்,கனிகள் ,பட்டை போன்றவை காட்டை சார்ந்து வாழும் ஆதிகுடிகளின் வாழ்வாதரத்திற்கும் மட்டுமே பயன்படும்.
சுமார் 20 ஆண்டுகள் முன் வரை சுற்றுளா என்பது வெறும் கல்வி சுற்றுளா மற்ற்ம ஆன்மீக சுற்றளா மட்டுமே!! மலை பிரதேசங்கள் சுற்றுளா என்பது அதிகரித்த மிடில்கிளாஸ் குடும்பத்தின் எதிரொலி. இவை தற்போது கிளை பரப்பி ஈகோ டூரிசம் ,ட்ரெக்கிங்,பேர்ட் வாட்சிங்,அனிமல் வாட்சிங் என்று பல பெயரில் கல்லா கட்டப்படுகிறது..வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டும் இறந்துபோகும் காட்டுயிர்கள் ஏராளம். அதுதவிர சிறு உயிர்களான பாம்புகள்,தவளைகள் ,பச்சோந்தி, போன்றவை வாகனத்தில் அடிப்பட்டு இறப்பவையும் அதிகம் .இவையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.வருடம் தோறும் வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் பாம்புகள் எண்ணிக்கை ம்ட்டுமே ஆயிரத்திற்கும் மேல் என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
தற்போது அரசும் தனியார் பள்ளிகளும் கல்விச் சுற்றுளாவை ஊக்கிவித்து வருகிறது. பெரும்பாலும் இவை மாணவர்களுக்கு பயன்படும் படி இல்லை. இதை தவிர்க்க ஆதிகுடிகளின் வாழ்வு ஆதாரத்திற்கும் சரணலாயங்களுக்கு மட்டும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கலாம். அவர்களுக்கு சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் வளரும். மேலும் மேற்சொன்ன எந்த தீமைகளையும் சிறுவர்கள் செய்வதில்லை..அரசு செலவழிக்கும் தொகை பயணுள்ள வகையில் அந்த வனப் பகுதியில் வாழும் ஆதிகுடிகளுக்கே பயனாக சேரும்.அவர்களின் வாழ்வும் உயரும்.

இத்தீர்ப்பு ஓய்ந்து ஒடுங்கிய பிறகு நெருங்கி வரும் வாய்ப்பு. ஆம்..

"சாகப் போற நேரத்தில தான்
ஈசலுக்கு சிறகு முளைக்கும்!!"

இனியாவது முளைக்கட்டுமே!!!......நம்பிக்கைகளும்.... 

Read more...

லவுட்ஸ்பீக்கர்





லவுட்ஸ்பீக்கர்.
அதகளம்
இந்த வருட்த்தின் மிக மோசமான விபத்தாக சிவாகசி பட்டாசு ஆலை விபத்து கருதப்படுகிறது.உயிர்களை பற்றிய அக்கறை இனமை,பாதுகாப்பற்ற ஆலை சூழல் போன்றவையே விபத்தின் காரணம்.இவை இத்துறையில் மட்டும் அல்ல ..நமது அனைத்து ஆலைகளிலும் இதுதான் உண்மை நிலை. அரசு பட்டாசு ஆலையில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் அனைத்து தொழிற்சாலைகளிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.

கில்லி
கூடங்குளம் பிரச்சனை நீதிமன்ற விவகாரத்திற்கு பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரசோ அடுத்து வர இருக்கும் தேர்தலை நினைத்து கொஞ்சம் அமைதி காக்கிறது.இதில் திடிரென்று ஜெ வை உள்ளே நுழைத்திருப்பது அரசியல் அரங்கில் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது.சுமார் 15 ஆயிரம் கோடி என்னவாக போகிறது என்பது உலகம் முழுக்க உற்று கவனிப்படுகிறது.உதய்குமார் கில்லி தான்!!யாருக்கு???

வேதாளம்
மீண்டும் சமுக வலைத்தளங்கள் மற்றும் டுவிட்டர் போன்றவ்ற்றை தடை செய்ய அரசு தீவிர யோசனையில் இருக்கிறது.கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ள இவைகளை அரசு வதந்தி பரப்புகின்றன என்ற போர்வையில் அமுக்க நினைப்பது மிகுந்த கண்ட்ணத்திற்கு உரியது. தனிக்கைக்கு உடபடுத்தலாமே தவிர தடை என்பது அரசின் பயத்தை வெளிப்படுத்துகிறது.

பூச்சாண்டி
தேர்தல் வருமா வராதா என்றால் வரும் ஆனால் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் படம் காண்பிக்கிறது அரசு.அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது முன்பே தேதலை சந்திக்க காங்கிரஸ் தயராக இல்லை என்பதே நிதர்சனம். பிஜேபி இதையும் கேடய்மாக பயன்படுத்த நினைகிறது.வரும் நாடாளுமனற தேர்தலில் மாநிலக் கட்சிகள் சக்கை போடு போடப்போகின்றன். அதுமட்டும் உறுதி.

ஊடகம்.
முழுநேரம் காட்சி ஊடகத்தில் பணியாற்றுவது என்பது என் நெடுநாளைய எண்ணம். பல நிருவணங்களிடமும் தொடர்ச்சியாக முயன்றும் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. ஆனால் சில நாட்கள் முன் ஒரு காட்சி ஊடகத்தில் இருந்து நேரடி நிகழ்ச்சி நட்த்த அழைப்பு வந்துள்ளது . வியாழன் அன்று ஸ்கிரீன் டெஸ்ட்க்கு போகிறேன்.இதுதான் நான் கலந்து கொள்ளும் ஊட்கத்திற்கான கடைசி தேர்வு என்று முடிவு செய்துள்ளேன்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..வென்றால் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு உங்கள் முன்னறையில் நான்..


Read more...

லவுட் ஸ்பீக்கர்

>> புதன், 5 செப்டம்பர், 2012




லவுட் ஸ்பீக்கர்
கரம் மசாலா
சஹானா விவகாரம் கடந்த வாரம் முழுவது பட்டைய கிளப்பியது.50 பேரை கலயாணம் செய்திட்டாங்க.. 100 பேரை ஏமாற்றிட்டாங்க என்று திசைக்கு ஒரு வதந்தி இறக்கை கட்டி பறந்த்து. இறுதியில் சஹானாவும் பிடிபட்டு விட்டார்..விரைவில் அவர் எப்படியும் ஊடகத்திற்கு பேட்டி தருவார்..அல்லது ஜி டிவியில் வந்து எல்லாத்தை பற்றியும் வண்டவாலங்களை அவிழ்ப்பார் என்றே எண்ணுகிறேன்
அதிரடி
மதுரையை..திருப்பூர் என்று கலக்கிய புயல் ஆஸ்ரா கார்க் அதிரடியாக தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பின்புலமாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தர்மபுரி பகுதியில் ந்டைபெற்று வரும் குவாரி பிரச்சனையில் சரியாக செய்ல்படாதால் தான் அவரின் மாற்றம் என்று பட்சி சொல்கிறது. எனிவே... அதிரடிகள் அங்கேயும் தொடரட்டும்..
அடாவடி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட்து பரவலான ஒரு பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. நீதிமனறத்தின் முடிவை எதிரபார்த்து காத்துக்கொண்டிருந்த எதிர்பாளர்களுக்கு தலையில் இடி. இனி அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் அன்று அரசும் மக்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அதிரடியை எதிர்பாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
அடி மேல் அடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.கட்ந்த ஆண்டில் இதே காலகட்ட்த்தில் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது அதளபாதலத்தில்.உற்பத்தி துறையில் ஏற்பட்ட பின்னடைவே பொருளாதார வளர்ச்சி குறைய முக்கிய காரணம்.விலைவாசி இன்னும் எகிறப்போகிறது.
அதிர்ச்சி
97 பேரை கொன்ற குஜராத் இனக் கலவர வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு வந்துள்ளது பெண் மந்திரிக்கு 28 ஆண்டுகளும் பஜ்ரங் தளத் தலைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்ட்னை கிடைத்துள்ளது. இது தேசிய அளவில் மிகமுக்கிய நிகழ்வு. தேர்தல் வர இருக்கும் நிலையில் இது காங்கிரஸ்க்கு செம அதிர்ஷ்டம்!!மேடிக்கு பின்னடைவு.ஆனால் அப்பீல் அப்பீல் என்று இவர்கள் அனைவரும் செத்த பிறகும் வழக்கு நடக்கும்!!

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP