ஏற்காடு எனக்கு பிடிக்காது-1

>> வெள்ளி, 30 ஜனவரி, 2015



 டிசம்பர் மாதத்தில் ஏற்காட்டில் ஒரு நல்ல விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்க வேண்டும். காலையில் ஆறு மணிக்கு எல்லாம் எழுந்து அருமையான காப்பி கையில்!!
.டீ சர்ட் வித் டிராக் ஸூட் போட்டுக்கொண்டு ஜெர்கினையும் அனிந்து கொண்டு தலைக்கு ஒரு தொப்பி.... காலுக்கு மறக்காம ஷூ ...... இப்ப .கிளம்புங்கள் .நடந்தே ஏற்காட்டை சுற்றிவாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இது போல ஒரு நாளை என்றும் வரவேற்க்க இயலாது. எவ்வளவு புத்துணர்ச்சியை அடைவீர்கள் என்பதை அனுபவம் உணர்த்தும்.
எட்டு அல்லது ஒன்பது மணிக்கு அறைக்கு திரும்புங்கள்…உஙகளுக்காக குளியலறையில் சுடு தண்ணிர் காத்து இருக்கும்.அருமையான குளியலை போடுங்கள்.சுட சுட இட்லி பொங்கல்..தோசைஅல்லது பூரி உங்களுக்கு காத்திருக்கும்.ஆசை தீர ருசித்து சாப்பிடுங்கள். பத்து மணியளவில் குடும்பத்துடன் ஏற்காடு ஏரிக்கு செல்லுங்கள்.
ஏரியின் அழகை முதலில் தூர இருந்தே ரசியுங்கள். சிறிது அமர்ந்து அதன் மெளனத்தில் கரைந்து போங்கள். ஆம் இயறகையுடன் இரண்டர கலந்து விடுங்கள். அனுபவியுங்கள் ஆன்மீகத்தை ..இப்படி!!
உங்கள் குடும்ப உறுப்பினர்களை கூட்டிக்கொண்டு ஏரியை ஒரு ரவுண்ட் நடந்தே வாருங்கள் ரம்மியமாக இருக்கும் அதன் பாதை எங்கும் .ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஏரி ஒரு அழகை உங்களுக்கு அள்ளி பருகவைக்கும்.அவ்வாறே வரும்போதே ஏரியை சுற்றி நிறைய வண்டிக்கடைகள் இருக்கும். அதில் கிடைக்கும் அருமையான டீ ..மிளகாய் பஜ்ஜி..முட்டை போண்டா.. என் எல்லாவற்றையும் மிக குறைவாய் வாங்கி எல்லோரும் பங்கிட்டு சாப்பிடுங்கள். உதரானத்துக்கு ஒரு முட்டை போண்டாவை வாங்கி நான்காக வெட்டித்தருவார்கள் …ஆளுக்கு ஒரு துண்டாக பங்கிட்டு சாப்பிடுங்கள். அந்த முட்டை போண்டா வைத்து கொடுத்த பேப்பரில் இருக்கும் சிறு துகளைகளை அல்லது சிதறி கிடக்கும் மஞ்சள் கருவின் சிதறிய சிறிய துகளை எடுத்து உங்கள் ஆசை குழந்தைக்கு அல்லது உங்களின் ஆசை மனைவிக்கு ஊட்டி விடுங்கள்.
உங்கள் குடும்பம் இன்னும் அதிகம் உங்களை நேசிக்கட்டும் !!! பிறகு விருப்பம் இருந்தால் ஏரியில் சென்று படகு செலுத்துங்கள். இல்லையென்றால் மீண்டும் திரும்ப் அறைக்கு செல்லுங்கள்.

மதியம் நேரம் நெருங்கியதால் வயிற்றில் ஆசிட் சுரக்கும்....பசி !!. நடந்தே செல்வதால் உண்டதும் உடனடியாக செரிக்கும்! விடுதியில் சாப்பிட விருப்பம் இல்லை என்றால் ஏற்காட்டில் உள்ள செல்வம் மெஸ்ஸுக்கு போங்கள் .மதிய உணவுக்கு ஒரு பிடி பிடியுங்கள். நடப்பன் ஊர்வன நீந்துவன பறப்பன என எல்லாம் உண்டு .ஆனால் இவர்களிடம் சிறப்பே மீன் தான். ஆம்…….உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏறியில் பிடிக்கும் மீன்கள் இங்கே வருவலில் உங்கள் இலைக்கு கிடைக்கும். துண்டுஒன்று இருக்கும் உங்களின் இரண்டு உள்ளங்கை அளவுக்கு!! ருசியும் அமோகமாக இருக்கும்.
சைவமாக் இருந்தால் கவலையே படாதீர்கள் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிர்புறம் ஒரு மெஸ் உள்ளது.அருமையான சைவ சாப்பாடு கியரண்டி. பிறகு என்ன உண்டகளைப்புக்கு…….உறக்கம். அறைக்கு செல்லுங்கள்…அருமையான நித்திரை!!!

மாலை மணி நான்கு….அருமையான டீ அல்லது காபி உங்களை எழுப்பட்டும்.கொறிக்க சூடான ஆனியன் பக்கோட அல்லது காளான் பக்கோட அல்லது காலிபிளவ்ர் சில்லி!!ஏதோ ஒன்றோடு!! உள்ளே தள்ளிய பிறகு மீண்டும் நடந்தே ஏற்காடு…அல்லது இரு சக்கர வாகனம் அல்லது சைக்கிள் கிடைத்தால் சூப்பர். கிளம்புங்கள் சேர்வராயன் கோயில் நோக்கி அதுதான் ஏற்காடு மலையின் அதிகப்படியான உயரம். காற்று எப்போதும் நம்மை தாலாட்டிக்கொண்டே இருக்கும். சைக்கிள் பயனம் என்றால் கூடவே தண்ணிர் பாட்டிலை எடுக்க மறந்துவிடாதீரகள். கோயிலுக்கு செல்லுங்கள்…கொஞ்சம் ஆன்மீகம்…..முடிந்த பிறகு திறந்த வெளி இடத்திற்கு வாருங்கள்..உங்கள் குடும்பத்துடன் ஓடிப்பிடித்து விளையாடுங்கள் கூடவே காற்றையும் இனிய காலநிலையும் இனைத்துக்கொள்ள மறவாதீர்கள்.உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருனங்களில் ஒன்றாக இருக்கும்..நினைவில் வையுங்கள். பொக்கிசங்கள் விலை மதிப்பற்றவை. ஆம் மீண்டும் திரும்ப இயலாத நேரம் என்னும் காலத்தில் உங்கள் குடும்பத்துடன் செலவழித்த ஆகச்சிற்ப்பான தருனஙக்ள் பொக்கிசங்கள் அல்லவா உங்களுக்கு!!

ம்ம்ம் ஜாக்கிரதை..பாருங்கள்…நீங்கள்குடும்பத்துடன் நேரம் செலவிட்டதால் சூரியன் மலை உச்சியில் இருந்து மறைய ஆரம்பித்தை கூட கவனியாமல் விளையாடிக்கொண்டு இருக்கிறீரக்ள்.. ம்ம் கிளம்புங்கள்…விடுதிக்கு….அங்கே இன்னொரு ஆச்சர்யம காத்திருக்கு!!

விடுதிக்கு வந்தவுடன் சிறிய ஓய்வு…அருமையான குளியல்!! மாலை மணி 7.30 ….சூரியன் ஓய்வுக்கு போக…நிலா உங்களின் வரவை நல்வரவாக்க வானில் உதித்து தன் வெண்மை ஒளியால் உஙகளை மகிழ்விக்க முழு அழகையும் வெளிப்படுத்திக்கொண்டு இருக்க… உங்களின் அறைக்கு முன் நிமிர்த்தி வைக்கப்பட்ட பல நீண்ட கட்டைகள். அதற்கும் கீழே பல சுள்ளிகள்… அதை சுற்றிலும் அமர நாற்காலிகள். ஒருவர் அதை பற்ற வைக்க தீ கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக ..இப்போது நன்கு பற்றி எரிய அதை சுற்றிலும் பரவும் வெப்பம்…. ஏற்காடின் குளிர்ந்த கற்றுக்கும் காலநிலைக்கும் இதமாக இருக்கும். அருகில் ஒரு பார்பிக் வைத்து அதில் சில மட்டன் துண்டுகளையும் சிக்கன் துண்டுகளை வேக வைக்க தொடங்கினால்……மற்றொரு பக்கம் மெல்லிய இசையோடு குடும்பத்துடன் அந்த இரவு பொழுது பொண்ணான இரவு. அந்த இரவை எப்படி வேண்டுமானலும் கொண்டாடுங்கள். விடியும் வரை கூட !!!
எத்தனை மணி வரையிலும் வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் மலைப்பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் பாட்ல்களை அதிக சத்ததோடு வைக்க கூடாது. அதனால் முடிந்த வரை இரவு பத்து மணிக்கு மேல் இசைக்கவிடாதீர்கள்.அது மற்றவர்களுக்கு இம்சை அளிக்கும் என்பதால்!!
இது வரை நாம் பார்த்தது ஒருநாளை எப்படி ஏற்காட்டில் செலவழிக்கலாம் என்பது .ஏற்காட்டை பொருத்தவரை பார்க்கவேண்டிய இடங்கள் அல்லது சுற்றுளாக்கான இடங்களின் எண்ணிக்கௌ சுமார் பத்து இருக்கும் அவ்வளவே. பெரும்பாலும் எல்லாமே வீயூ பாயிண்ட்ஸ் போல தான் .ரோஸ் கார்டனை தவிர.

இதுதான் பூச்சி தின்னும் தாவரம்.
ஏற்காட்டில் மிக முக்கியமான் இடம் பொட்டானிக்கல் ரிசர்ச் செண்டர். இங்கே பலவிதமான சிறப்பு தாவரங்கள்,ஆர்கிட்கள் என இது ஒரு சுரங்கம். வார இறுதிநாட்களில் இவை இயங்காது.தவறவிடாத இடம் இங்கே தான் ஆகச்சிறப்பான சிலுவை மரம்,பூச்சி தின்னும் தாவரம் எல்லாம் உள்ளது.இங்கே சில ஆர்கிட்கள் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.தவறவிடாதீர்கள். இதுதவிர வேறு ஒன்றும் ஏற்காட்டில் இல்லை.

மொத்தமே சுற்றிப்பார்க்க என்றால் அதிகபடசம் ஒர் இரவு இரண்டு பகல் போதும். ஆனால் ரிலாக்ஸாக ஏற்காட்டை அனுபவித்து ரசிக்க வேண்டும் என்றால் அதிகபடசம் நான்கு நாள் இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் வெறுத்துப்போய்விடும். அதுவும் வார நாட்களை தேர்வு செய்தால் விடுதியை பொருத்தவரை அறைக்கட்டனம் வெகு குறைவாக கிடைக்கும் .பேரம் பேசுங்கள். அருமையான டிஸ்கவுண்ட் கிடைக்கும் வார இறுதி நாட்கள் என்றால் விடுதிக்காரர்கள் உங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். எப்படியும் விடுதிகள் நிறைந்து விடும் என்பதால்!!

தொடரும்..

Read more...

ஏற்காடு எனக்கு பிடிக்காது!!


என் மனதுக்கு நெருக்கமான இடம் என்பது கடல் மற்றும் மலைகளும்.முதலில் காடு சார்ந்த மலை விசயத்தை பார்ப்போம். மலைகள் என்றேலே அந்த சில்லென்ற குளிர் காற்று..சீதோஷன நிலை அவ்வப்போது தூறல் போடும் மழை…புதுப்பெண்ணைப்போல சினுங்கும் சாறல் மழை…என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் எனக்கு என் மனதுக்கு நெருக்காமானது ஊட்டி.

கடவுளுக்கு என் மேல் அதீத பாசமோ என்னமோ என் மனைவியும் குன்னூரிலே அமைந்தார். இது வரமா சாபாமா என்று தெரியவில்லை.காலம் மட்டுமே பதில் சொல்லும்.

சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவிக்கு ஆசிரியை பணி கிடைத்தது.பணிக்கு சேரும் முன் எந்த ஊரில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுக்கலாம். அதன் பெயர் கவுன்சிலிங்க். அது நடக்கும் இடம் சேலம் … மூன்று நாட்கள் நடைபெற்றதில் மூன்றாம் நாள் தான் என் மனைவிக்கு.வரிசைப்படி..வட மாவட்டங்கள் நிறைய காலியாக இருந்தது ஈரோட்டுக்கு அருகில் என்றால் ஏற்காடும் கொல்லி மலையும் தான். இது தவிர நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கன்னியிலும் காலியிடங்கள் இருந்தது. என்னபொருத்த வரை ஒன்று ஏற்காடு அல்லது வேளாங்கன்னி என்று எடுப்பதாக திட்டம்

ஏற்காட்டில் என் மகளை படிக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை. மேலும் ஏற்காடு வருடம் முழுவதும் மிதமான குளிர். ஈரோடுக்கு பயனம் என்றாலும் சுமார் இரண்டரை அல்லது மூன்று மணி நேரத்தில் போய் விடலாம். அருகில் சேலத்தில் இருந்து போக்குவரத்து வசதி எல்லா ஊருக்கும் உள்ளது போன்றவை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்ததால் ஏற்காடு என்று முடிவு செய்து ஏற்காடு பணியிடம் வாங்கினோம்.

ஏற்கனவே ஏற்காட்டில் வீடு பிடித்த கதை எல்லாம் பேசியபடியால் அது வேண்டாம். இனி ஏற்காட்டை பற்றி பார்ப்போம்.வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாக தெரிவதை உள்ளே போய் பார்ப்போம்.
சேலத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தான் . வெகு அருகில். சேலம் தாண்டியவுடன் மலைப்பாதை தொடங்கிவிடும். சுமார் 17 கிலோ மீட்டர் அவ்வளவே.இருசக்கரவாகணத்தில் 30 அல்லது 40 நிமிடத்தில் போய் விடலாம். பஸ் போக்குவரத்தை பொருத்தவரை 40 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும்.இரவு சர்வீஸ் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு பேருந்து உண்டு அதை விட்டார் மறுபடியும் 4 மணிக்கு தான்.

ஏற்காடு என்பது லேக்கில் இருந்து அதே ரோட்டில் பயனப்பட்டால் மேலே பஸ் ஸ்டாண்டு மற்றும் அப்படியே மேலே போனாக் மாண்ட்போர்ட் பள்ளி அங்கிருந்து அப்படியே கொஞ்சம் கீழே இறங்கினால் கிறித்துவ அருட் சகோதரிகளின் மடம். அவ்வளவே. ஆனால் ஏற்காடு என்பது 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளடக்கிய மலை பகுதி. மொத்த மக்கள் தொகை சுமார் 40 ஆயிரம் .ஏற்காடு பற்றி உள்விசயங்களுக்கு https://www.facebook.com/notes/436786216339386/ இந்த லிங்கில் படிக்கவும்

ஏற்காட்டின் காலநிலை என்பது வருடம் முழுவதும் சுமார் 23 டிகிரி முதல் 27 டிகிரி சராசரியாக இருக்கும். அதனால் வருடம் முழுக்க சுற்றுளாவாசிகள் வரவு இருக்கும் ஆனால் வார நாட்களில் இருக்காது.காற்று வாங்கும் ஊர் இது. ஆம் ..திங்கள் முதல் வெள்ளி மதியம் வரை ஊரில் காக்கை குருவி போல ஆங்காங்கே பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு ஈயோட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.வெள்ளி மாலையில் இர்ந்து சுற்றுளாவாசிகள் ஏற்காடு வரத்தொட்ங்குவார்.அப்போது தான் அவ்வூருக்கு உயிர் வரும். ஞாயிறு மதியம் 4 மணி வரை.ஆம சுற்றுளாவாசிகள் ஞாயிறு அன்று பெட்டிய கட்டினால் ….இங்கே ஏற்காட்டில் போர்வையை இருக்க போத்திக்கொண்டு குப்பற படுத்து தூங்கவேண்டியது தான்.
பொதுவாக தமிழ்நாட்டில் இருந்து குறைவாக தான் சுற்றுளாவிற்கு வருவார்கள் .மிக அதிகமாக கர்நாட்கவில் இருந்து தான்.சில தங்கும் விடுதிகள் சேலம் நாமக்கல் போன்ற ஊர்களிருந்து வருபவர்களுக்கு  அறைகளை தரமாட்டார்கள். நான் பணியில் இருந்த விடுதியில் கூட இந்த விதிகளை திவிரமாக கடைபிடித்தோம்.. தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கவே.

ஜூலை மாதத்தில் இருந்து மழை ஆரம்பிக்கும் ..கொஞ்சம் கொஞ்சமாக மழை அதிகமாகி செப்டம்பர் அக்டோபர் நவம்பரில் மழை வெளுத்து எடுக்கும் .சேலத்தில் இருந்து இரண்டு வழிகள் உண்டு ஏற்காடு வர. தற்போது பயபடுத்தும் வழி இல்லாமல்கொஞ்சம் சுற்றிக்கொண்டு ஒரு வழி உண்டு. அது சிங்கிள் ரோடாக இருந்தாலும் டிராபிக் இருக்காது. இருசக்கர வாகனத்தில் பயனத்தை அனுபவிப்பர்களுக்கு ஏற்ற ரோடு. அருமையாக இருக்கும் பயனம்.கண்ணெக்கு எட்டிய வரை பசுமையாக டிராபிக் இல்லாமல் டிரைவ் செய்ய சூப்பர் ரோடு.அந்த வழியில் ஆற்றுப்பாலம் என்ற பகுதியில் அதிகமான மழை பொழியும் சமயங்களில் சில சமயம் மண் சரிவு ஏற்படும். பெரும் சேதங்கள் இதுவரை ஏற்பட்டதில்லை.இது யானைகளின் வலசை பாதை. சமீபத்தில் கர்நாடகத்தில் இருந்து வந்த யானைகள் இந்த வழியாக தான் ஏற்காடை அடைந்தது. அது செம ரகளையான கதை.

இந்த பகுதியில் விளையும் மாம்பலங்கள் தனித்த ருசியுடையவை. மாம்பல தோட்டங்கள் சில இப்பகுதியில் உண்டு.இது தவிர இப்பகுதி மலைகளும் சமவெளியும் கலந்த பகுதிகள்..இதில் விளையும் கம்பு தினை ,பப்பாளி,கொய்யா எல்லாம் செம ருசியாக இருக்கும். இந்தப் பகுதியில் தான் என் செம்பாதி ஆசிரியராக பணியில் உள்ளார்.


பெரும்பாலோர் ஏப்ரல் மே மாதம் தான் குளிர்பிரதேசங்கள் தங்க பார்வையிட தகுந்த காலாம் என்று நினைக்கிறார்கள் இது ஒரு வகை என்றால் இன்னொரு வகையும் உண்டு. அது அந்த ஊரின் மிக ஆழகான காலத்தில் அந்த ஊரில் தங்குவது என்பது. அந்த வகையில் ஏற்காடை அனுபவிக்க என்றால் டிசம்பர் மாதம் தான் ஆகச்சிறந்தது. இந்த மாதத்தில் அதிகப்பட்சம் 17 டிகிரியும் குறைந்த பட்சம் 13 டிகிரியும் இருக்கும். அருமையான கண்கொள்ள காட்சியாக இருக்கும். ஏற்காடு பொதுவாக சுற்றிகோண்டே இருக்கிற ஊர் அல்ல. இது ஒரு வெஸ்டர்ன் நாடுகளைப்போல அமைதியாக சில நாட்கள் கழித்து நம்மை பூஸ்ட் செய்துகொள்ள…அல்லது குடும்பத்துடன் நேரம் செலவ்ழிக்காமல் இருப்பவர்கள்..அவர்களுக்காக ..அவர்களுடன் நேரம் செலவழிக்க என்று செயல்படவேண்டிய மலைவாஸ்த்தலம் இது.

தொடரும்...

Read more...

காளான் பிரை

காளான் பிரை... சைவ பட்சிகள் மட்டுமின்றி அசைவ பட்சிகளும் விரும்பி உண்ணும் உணவு. நம்முரில் கிடைப்பது பெரும்பாலும் இரண்டு வகை தான்.சிப்பி மற்றும் மொட்டு காளான். காஷ்மீரில் கருப்பு வகை காளன் கிடைக்கிறது.மிகவும் சுவையாக இருக்கும் என்று தகவல். சுவைக்க வாய்ப்பு கிட்டவில்லை. நேற்று இரவு திடிரென்று பிரட் ஆம்லேட் சாப்பிட ஆசை. கூடவே காளான் பிரையும் இருந்தால் ...ம்ம்ம்.. ...இரவு சொர்க்கம் தான்!!

ஈரோடு கொல்லம்பாளையும் லோட்டஸ் மருத்துவமனை தாண்டி ரோடு திரும்பும் போது தூத்துக்குடி மீன் கடை எதிரில் ஒரு வண்டி கடை இருக்கும். இங்கு நன்றாக இருக்கும் என்று நண்பர் சொல்லியிருந்தார். சரி..ருசித்துப்பார்ப்போம் என்று வாங்கினேன். இது இந்தோ -சைனீஸ் முறை . மசால் போட்டு வருத்த காளானை மீண்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஆணியன் போட்டு செமி பிரையாக தருவது. பிரட்டுக்கும் காளானுக்கும் நல்ல காம்பினேசன். ஏற்கனவே கடலை மசால் கடையில் காளான் சாப்பிட்டுள்ளேன். அங்கே பிரட் துண்டுகளோடு கலந்து தருவாரக்ள். கொஞ்சம் காரமாக இருக்கனும் எப்போதும் காளன்.

ஒரு லோப் பிரட் எடுத்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை டைஸ் வடிவத்தில் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்..ஒரு தட்டில் வாங்கி வந்த காளான் பிரையை எடுத்துக்கொள்ளுங்கள்.ஆனியன் துண்டுகளை காளன் பிரை மேல் தூவுங்கள்.பிரட்டை ஒரு துண்டு பிட்டு அதனை ஆனியனும் காளானும் கலந்து பிரையை எடுத்து வாயில் போட்டு பாருங்கள்..சிறிய இனிப்பான பிரட்டும் காரமான ஆனியனும்......மசலா கலந்த காளானும் சேர்ந்து நாக்கில் குத்தாட்டாம் போடும்!!!
‪#‎ஈரோடு‬ வாசிகள் ருசித்து பாருங்க..
குறிப்பு:புகைப்படம் எடுக்கவில்லை...அடுத்த முறை போகும் போது எடுத்து பதிவிடுகிறேன்.

Read more...

நாட்குறிப்புகள்.


இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்குள் சமையளரை இல்லாத இல்லங்கள் உருவாகும்.அதிகரித்துவரும் பெண்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு,பெருகி வரும் தனிக்குடுத்தனங்கள்,ஏறிய வரும் விலைவாசி அதனால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் காரணமாக கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் வாழ்க்கை மூறை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகிய காரணஙக்ளால்.
இன்னும் சொல்லப்போனால் எதிர்காலத்தில் அரசு சமயறை இல்லாத இல்லங்களுக்கு மானியம் வழங்கும் முறை வரும்.வீட்டில் ஒவன் இருந்தால் போதும் என்று காலம் வரும்.முதற்கட்ட நகரங்கள் ஏற்கனவே இதை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது.இரண்டாம் கட்ட நகரங்களில் மெல்ல மெல்ல ப்ரோஜன் புட் நிருவனங்கள் குறிவைக்க ஆரம்பித்துவிட்டன.



ஈரோடு டூ கோவை பேஜன்சர் ரயில் காலை 7 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்புகிறது. இந்த ரயிலில் திருப்பூருக்கு பிற்கு ஒருவர் கருப்பு சுண்டலை சுட சுட மசால் செய்து கொண்டு வருவார். .ஒரு பொட்டலம் பத்து ரூ.தான். மறக்காமா சாப்பிட்டுருங்க வாய்ப்பு கிடைக்கும் போது .இதே போல் அடுத்து 15 நிமிடத்தில் சுட சுட சின்ன ஆனியன் சமோசா வரும் .10 ரூபாய்க்கு மூன்று .மொரு மொரு என்று கலக்கலாக இருக்கும். இந்த சமோசாவுக்கு என் குழந்தை செம ரசிகை!!


இப்போது எல்லாம் கறிக்கடைக்கு பெறும்பாலும் ஆண்கள் தான் வருகிறார்கள் . ஞாயிறு அன்று கொஞ்ச நேரம் இந்த கறிக்கடையில் இருந்தால் செம காமெடியாக இருக்கும். விட்டின் பாஸ் சொல்லிவிட்டதை ....கொஞ்சம் கூட யோசிக்காமல் அச்சரம் பிசகமாக் அப்படியே வந்து கறிக்கடையில் ஆண்கள் ஒப்பிப்பாரக்ள்.அதிலொரு பயங்கர மொக்கை...” சார் எலும்பு இல்லாம கறி கொடுங்க..”



மீன் சாப்பிடுவது என் இல்லத்தில் ஒரு குதுகலமான விசயம் எனக்கும் என் குழந்தைக்கும்.மீணை கண்டிப்பாக தயிரில் கழுவித்தான் செய்யனும் .அப்பதான் மீன் கவிச்சி அடிக்காது. சுமார் 11 மணியளவில் மீன் குழம்பு ரெடி ஆக ஆக மனசு சும்மா பறக்கும்... மீன் குழம்பு கொதிச்சு ரெடியான பிறகு சுட சுட மீன் குழம்பில் இருக்கும் குழம்பு மீனை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டு தொலைகாட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது சொர்க்கத்தின் முதல் படி... முடித்த பிறகு ஒரு அரை மணி நேரம் ஓய்வு ..நக்குக்கு!! அடுத்து மீனை வறுக்க சொல்லிட்டு பெரிய வெங்காயத்தை கட் பன்னி தட்டில் வைத்துக்கொண்டு சுட சுட வருவல் மீனை ஒரு பிடி பிடிக்கனும். கூட தண்ணிர் தாகம் எடுத்தால் தண்ணிர் குடிக்காதீங்க... கருவேப்ப்லை ..கொத்தமல்லி போட்ட மோர் பக்கத்தில் ஒரு செம்பு வைத்துக்கொள்ளுஙக்ள். அதை குடியுங்கள். திவ்ய்மாய் இருக்கும்/.....இறுதியில் வயிற்றில் கொஞ்சம் இடம் இருக்கும்... அப்போது கொஞ்சம் சாதம் போட்டு குழம்பு ஊற்றி சாப்பிட்டு வீட்டு தயிர் போட்டு அதில் மீன் குழம்பை கொஞ்சமாக கலந்து சாப்பீட்டால் ......அந்த ருசி...........அந்த ஞாயிற்றுக்கிழமை உஙக்ள் குடும்பதாருடன் .....சொர்க்க்கம் கன்பார்ம்!!!



என் பேவ்ரிட் ஏரியா தெருவேர உணவு கடைகள்(ஸ்ட்ரீட் புட்) பல புகழ்பெற்ற உணவகங்கள் தெருவோர உணவகங்களில் இருந்து தான் புதிய புதிய உணவு வகைகளை பிடிக்கின்றனர்.தமிழ்நாட்டில் அருமையான தெருவோர கடைகள் உள்ள ஊர் சேலம். இங்க பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியா முழுக்கவே மிகப்பிரபலம். இரவு உணவுகள் சைவத்தில் பின்னி பெடலெடுக்கும். இதை தவிர்த்து கரூரில் டவுனுக்குள் மாரியம்மன் கோவில் ஏரியாவில் இரவு டிபன் பட்டைய கிளப்பும்.மதுரை முருகன் கடை இட்லி கடையில் கிடைக்கும் இட்லியைவிட இங்கே இடலி அம்சமாக இருக்கும். இந்த 6 வகை சட்னி...சாம்பார் எல்லாம் செமகுவாலிட்டி...தோசை அயிட்டங்கள் அதுதனிக்கதை!!

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP