லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

>> சனி, 24 நவம்பர், 2012





லைப் ஆப் பை-ஒரு காட்டுயிர் –மனித உறவு திரைப்படம்

கடந்த 100 ஆண்டுகளில் சாதி மத மேதமின்றி மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அசைக்க முடியாத சகதியாக இருப்பது திரைப்படம் என்னும் கலை.1967 முதல் 5 முதல்வர்களை தமிழகத்திற்கு தாரை வார்த்த அற்புதவிளக்கு.முதல் இருவர் வசனகர்த்தாக்கள் மற்ற மூவரும் நட்சத்திரங்கள்.திரைப்படத்தின் வலிமை அப்படி.
 
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெறவேண்டுமானால்,பெருவாரியான மக்களின் விருப்பங்களையும் ரசனைகளையும் எதிர்கொள்பவைகளாக இருக்கவேண்டும்..100 ஆண்டுகள் வ்ரலாற்றில் காட்டுயிர் குறித்த திரைப்படம் என்றால் விரல்களின் எண்ணிக்கையில் அடங்கிவிடும். விலங்குரிமை அமைபுகள் போன்ற பல அமைப்புகளின் கடும் கட்டுப்பாடுகளால் இத்த்கைய திரைப்படங்கள் விளிம்புநிலையில் உள்ளன என்றால் மிகையில்லை. அத்தகைய எண்ணத்திற்கு மருந்தளிக்கும் விதமாக தற்போது வந்திருக்கும் திரைப்படம் தான் “லைப் ஆப் பை 

இத்திரைப்படம் இரண்டு விதத்தில் முக்கிய கவனம் ஏற்படுத்துகிறது.ஒன்று கட்டுயிர் குறித்த திரைப்படம்  மற்றொன்று இது ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.கனடாவை சேர்ந்த யான் மார்டல் என்பவர் எழுதி 2001 லில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.புக்கர் பரிசு உட்பட பல விருதுகளை அள்ளியது.இக்கதை யார்ன் மார்டலின் சொந்தக் கதையும் அல்ல. பிரேசில் எழுத்தாளர் சிக்லியர் என்பவரின் “மேக்ஸ் அண்ட் தி கேட்ஸ்என்ற கதையின் பிரதிபலிப்பு.தற்ப்போது ஆங் லீ என்பவரின் இயக்கத்தில் டேவிட் மேகி என்பவரின் திரைக்கதையில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

படத்தின் மையக் கரு காட்டுயிருக்கும் மனிதருக்கும் உள்ள உறவு. அதாவது காட்டுயிருக்கு ஆன்மா உள்ளதா இல்லையா என்பது தான்.ஆனால் இதை சரியாக திரைபடமாக மாற்றினார்களா ...அந்த கருத்தை பார்வையாளரை வசிகரிக்கும் வகையில் தந்தார்களா என்பதை பார்ப்போம்.
திரைப்படத்தின் கதையை அப்படி விமர்சனம் என்ற போர்வையில் சொல்வது இதன் நோக்கம் அல்ல. ஆதலால் கதையை சொல்லப்போவது இல்லை
.
கதைப்படி ஒரு குறிப்பிட்ட காரணத்தால் ஒரு சிறுவனும் வங்காளப் புலியும் நடுக்கடலில் ஒரு படகில் உயிரை காப்பாற்றிக்கொள்ள தத்தளிக்கிறார்கள்.இரு உயிருக்கும் நடக்கும் அந்த சுவரசியமான சம்பவங்களின் கோர்வையே இத்திரைப்படம்.அந்த காட்சிகள் சாதரன திரையிலேயே அபாரமாக செய்திருக்கிறார்கள். நான் இந்தப்படத்தை 3 dயில் பார்க்க இயலவில்லை. உண்மையில் அந்த காட்சிகளை 3-Dயில் பார்க்க வாய்த்திருந்தால் இன்னும் அருமையாக் இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த குறிப்பிட்ட காட்சிகளின் மேக்கிங் வெகு சிறப்பு.. 

ஒரு வழியாக இருவரும் கரையை அடைந்த பிறகு அந்த சிறுவனும் புலியும் பிரியும் இடத்தில் ஒரு முக்கியமான விசயத்தை காட்சி வடிவில் பார்வையாளனுக்கு உணர்த்துகிறார்கள். நான் தியேட்டரில் பார்த்தவரை அது பார்வையாளனுக்கு சென்று சேரவில்லை. பெரும்பாலோர் எப்படா படம் முடியும் என்ற நிலையில் தியேட்டரில் கமெண்ட் அடித்துக்கொண்டே இருந்தார்கள். சிலர் படம் முடியும் முன்னே எழுந்து சென்றுவிட்டார்கள்.

படத்தை அத்துடன் முடித்து இருந்தால் உண்மையில் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் அதற்குப் பிறகும் சில சீன்களை வைத்துள்ளார்கள் . அது இந்த ப்டத்தின் போக்கையே மாற்றிவிடுவது மட்டும் அல்லாமல் கருப்பொருளை பார்வையாளனுக்கு புரியாமல் செய்து விடும் என்பதை எப்படி இவர்கள் இத்தனை செலவு செய்து எடுத்தபிறகும் யோசிக்காமல் விடுகிறார்கள் என்று இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!!.

இது என் பார்வை மட்டுமே. நீங்கள் படம் பார்க்க செல்லும் போது தியேட்டர் ஆப்ரேட்டர் இந்த சீன்களை கத்திரி போட்டு விடலாம்.கண்டிப்பாக குழந்தைகளுக்கு குதுகலமான திரைப்படம்.ஆனால் கண்டிப்பாக 3-D யில் பார்க்க அழைத்துச்செல்லுங்கள். அது முக்கியம்.
பெரும்பாலான விமர்சகர்கள் லைப் ஆப் பை திரப்படத்தை விஸுவல் ட்ரீட் என்கிறர்ர்கள். விஸூவல் ட்ரீட்க்கு சினிமா எடுக்க தேவையில்லை.சினிமாவின் மொழி என்பது வேறு. அது ஒரு கலை. ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கனுமே தவிர டெக்கனிக்கல் விசயங்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்ப்டம் அதற்கான மீடியம் இல்லை.

காட்டுயிர்களை பழக்குவது எனபது ஒருவகையில் மனித மணத்தின் 
வக்கிரம் . இது அதை ஒருவகையில் மனிதனுக்கு அடிமைப்படுத்தி, தான் மட்டுமே இந்த பூவுலகில் உய்ர்ந்தவன என்பதின் அடையாளம்.அதை இந்த படத்தில் காட்டிவிட்டு அதற்கு பிறகு மனிதனும் காட்டுயிர்களும் ஒரு சமரச ஒப்பந்ததில் வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்ற உண்மையை காட்சி படுத்தியிருப்பது ஆகச் சிறப்பு. ஆனால் இந்த விசயம் எத்தனை பார்வையாளர்களை சென்றடையும் என்பது கேள்விக்குரியே!!

இப்படி சில தத்துவார்த்த கேள்விகளை இந்த படம் முன்வைக்கிறது. ஆனால் அவை சாதரன பார்வையாளனை அந்த அளவுக்கு சிந்திக்க வைக்குமா எனபது கடலில் கரைத்த பெருங்காயம் கதை தான்.

இதுபோன்ற காட்டுயிர் மனித உறவுகள் குரித்த திரைப்படம் வரவேற்க்கப்படவேண்டியது. இந்த பூவுலகின் மிகப்பெரிய பிரச்சனையாய் உருவெடுத்து மனித குலத்தையே ஆட்டிப்படைத்திருக்கும் சூழல் குறித்த பிரச்சனையை முன்னிட்டு வந்திருப்பதால் இவை நம் வருங்கால் சந்ததினருக்கு அவசியம் காட்டப்பட வேண்டும். இத்திரைப்படம் காட்டுயிர் குறித்த சொல்லாடல்களை பெருமளவில் உருவாக்கும் போது சூழல் குறித்த அக்கறை இன்னும் மெருகேரும்..

ஆனால் குத்துப்பாட்டு ,மஞ்சல் பாட்டு ,ரத்த சிதறல்கள் ,என்று கற்பனையில் இருக்கும் தமிழக சம்கால ரசிகர்களுக்கு இப்ப்டம்

லைப் ஆப் பை...... ஓட்டை பை!!




Read more...

ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

>> திங்கள், 19 நவம்பர், 2012


 ஒருவேளை உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.......

நீண்ட காலத்திற்குப் பிறகு சமீபத்தில் பணி நிமித்தமாக மேற்குமலைத்தொடர் நகரங்களுக்கு செல்லவேண்டிய வாய்ப்பு கிட்டியது.நகரங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் மக்களால் கொல்லப்பட்டு வருகிறது என்பதை நிதர்சனத்தில் உணர்ந்து மனசுக்கு வலியை ஏற்படுத்தியது.சுற்றுலா என்ற பெயரில் மக்கள் நகரங்களை விரைவாக அழித்துக்கொண்டிருப்பது வரப்போகும் பேராபாத்தை அறிந்தா? அறியாமாலா?
சுமார் 15 வருடங்கள் முன் வரை சுற்றுலா என்பது கல்வி சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா மட்டுமே!பள்ளிகளில் அழைத்துச்செல்லும் கல்வி சுற்றுலாவும் வருடத்து ஒரு முறை குடும்பத்தினர் அழைத்துச்செல்லும் ஆன்மீக ஆலயங்களுக்கு  என்றும் இருந்தது.
90 களில் திறந்துவிடப்பட்ட பொருளாதாரா சந்தை அந்நிய நிருவணங்களை மட்டும் அழைத்து வரவில்லை. அவை புதிய பல சந்தைகளையும் வாய்ப்புகளையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.கூடவே மேலைநாட்டு கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் இங்கே புகுத்தியது.
திறந்துவிடப்பட்ட சந்தை கூடவே பொருளீட்டு வாய்ப்பையும் ஒரு சாரருக்கு அள்ளி கொட்டியது.எந்திரமயமான வாழ்வு,ஆதீத நுகர்வு கலாச்சாரம், உரையாடல் அற்ற வாழ்க்கை முறை போன்றவை இவர்களை இருகிய வாழ்வு நிலைக்கு உந்தி தள்ளியது.கடல் தாண்டி பயணம் செய்துவர்களின் சமீபத்திய தலைமுறை ஒற்றை நாற்காலியில் அமர்ந்து நாள் தோறும் வேலை செய்யவேண்டிய நெருக்குதல். இந்த அதீத நெருக்கடியை தவிர்க்க இந்த தலைமுறை வித்விதமாக சுற்றுலாக்களை தொடங்கியது.  ஆனால் இவை சுற்றுச்சூழலை மட்டுமட்டும் அல்ல சமுக நலத்தையும் மனித சூழலியலையும் குலைக்கப்போகிறது என்று யாரும் அறியவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் எல்லா “இஸங்களில்லும் மோசமானது “டுரிஸம்என்றார் ஜக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் பிரதிநிதி சத்ரூதீன் ஆகாகான்.1989லில் கூடிய உலக சுற்றுலா மாநாடு சுற்றுலாவின் மறுபக்கத்தை உலகிற்கு மனிலா அறிக்கையில் சுட்டிகாட்டியது.

சுற்றுலாவின் மூலம் அதிக அள்வில் சீர்கெடுவது மலைவாஸ்தலங்கள் தான். உதகையில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் தான்.அதுவும் சரணலாயங்களின் கதை கண்ணீர் கதைதான்!!ஒரு சரணலாயத்தில் இத்தனை விலங்குகள் தான் வாழ இயலும் என்று ஒரு கணிப்பு உண்டு.காட்டியிரியாளர்கள் இதை கேரியிங் கெப்பாசிட்டி என்பர்.இது அந்த வனத்தில் உள்ள தாவரங்கள்,இரைவிலங்குகள்,நீர் ஆதாரம் ஆகியவற்றை பொருத்த்து.இதைப்போலவே இத்தனை மனிதர்கள்தான்  ஒரு சமயத்தில் ஒரு சரணலாயத்தின் உள்ளே இருக்க முடியும் என்றொரு கணக்கும் உண்டு.இதன் அடிப்படையில் தான் உருவானது ஈகோ டூரிசம்.ஆனால் நம்மூரில் நடப்பது ஈகோ டூரிசமா?
ஒரு காட்டுக்குள் போகும்போது அடிப்படையில் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பளிச்சிடும் வண்ண உடைகளை அணியக்கூடாது இத்தகைய வண்ணங்களை பார்த்து வனவிலங்குகள் அச்சப்படும். இதுதவிர எந்த வாசனை திரவியங்களையும் பயன்படுத்த கூடாது.காட்டியிர்கள் அதீத மோப்ப சகதியின் மூலம் அறிந்து உங்களை விட்டு வெகுதொலைவில் சென்றுவிடும்.
சமீபத்தில் முதுமலையில் நான் பார்த்த சுற்றுலா குழுவினர் ஏதோ ஆடை அணிவகுப்பில் வரும் அளவுக்கு ஒப்பனைகளுடனும் வாசனை திரவியங்களுடனும் வலம் வந்தனர்.ஒரு வேளை அவர்கள்  வனவிலங்களுக்காக நடந்திருப்பார்களோ என்ற ஜயம் எனக்கிருந்த்து!!
வனத்திற்குள் பயணம் செய்யும்போது சத்தம் எலுப்பாமல் அமைதியாக சென்றால் தான் வனவிலங்களை தொந்திரவு செய்யாமல் காணமுடியும்.நம் மக்களோ அப்போது தான் வாகனத்தில் உச்சபடச சத்த்தில் இசையை ரசிக்கிறார்களாம்.. இதில் நடுவழியில் நிறுத்தி நடனமும் உண்டு!!உண்மையில் வ்னத்தில் வாகனத்தில் இருந்து இறங்கவே கூடாது. மேலும் கைகளை கூட வெளியே நீட்டக்கூடாது. ஆனால் நாம் இறங்குவதுதோடு மட்டும் அல்லாமல் நம் அத்தனை கழிவுகளையும் வனத்தில் இற்க்கிவைக்கிறோம். பிளாஸ்டிக் குப்பிகளில் ஆரம்பித்து உணவுப் பொட்டலங்கள் மலம் கழிப்பது வரை அனைத்தும். அது என்னவோ தெரியவில்லை இவர்களுக்கு  வனத்தை பார்த்தாலே அத்தனையும் செய்ய தோனுகிறது.!!இதன் அடிப்படை சகல உயிரின்ங்களும் தமக்கு ஏதோ ஒரு வகையில் பயனளிக்கவே வாழ்கின்றன என்ற திமிர் எண்ணம்.
பெரும்பாலோருக்கு எந்த இட்த்தில் எப்படி நடக்கவேண்டும் அல்லது வேறுபாடு என்ன என்றே தெரிவதில்லை. உல்லாசப் பயணம் ,சுற்றுலா,வரலாற்றுச்சின்ன்ங்கள், விடுமுறையைகளிக்கும் இடம், ஆன்மீகத்தலங்கள் ,சரணாலயம் ஆகியவற்றிர்க்கு வேறுபாடு உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்வதில்லை.
பல நாடுகளிலும் இப்போது சுற்றுலா குறித்து தீவிர நிலைப்பாடு எடுத்துள்ளனர். ஈகோ டூரிசம் வழியாக காட்டிற்கோ அல்லது காட்டுயிர்களுக்கோ சிறிதும் பாதிப்பின்றி சுற்றுலாவை முறைப்படுத்தியுள்ளனர். நம்மூரில் இதை எளிதாக சரணாலயங்களில் நட்த்தப்படும் சுற்றுலாவிற்கு ஈகோ டூரிசம் என்ற பெயரிட்டு சுற்றுச்சூழலை அழித்த்து தான் மிச்சம்.
நம்மவர்கள் ஈகோ டூரிசம் என்றால் கண்டிப்பாக சில வேலைகளை செய்வார்கள். அது முதலில் அங்கு இயற்கையாக உள்ள தாவரங்களை அழித்து ஒரு பூங்கா உருவாக்குவார்கள். அது சில வாரத்தில் தவறான நபர்களின் சொர்க்கபுரியாக மாறும். அடுத்து அந்த சூழலுக்கு ஒவ்வாத சில காட்டுயிர்களை கொண்டு வந்து காட்சிசாலை அமைப்பார்கள். மறக்காமல் ஒரு குட்டி ரயில் விடுவார்கள். அதை மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பார். பிற்கு அந்த பகுதியில் ஒரு படகு குழாம்!!!இதில் பணியாளர்கள் எவரும் அப்பகுதியின் பூர்வகுடிகளோ அல்லது ஆதிகுடிகளோ இருக்கமாட்டார்கள்.!!!இது இல்லாமல் இறுதியாக ஒன்று செயவார்கள். அது கோடைவிழா நட்த்துவது. ஒரே நாளில் லடசக்கனக்கான மக்களை கூட வைத்து அந்த பகுதியே நாறடித்து விடுவார்கள்.விரைவில் அந்த பகுதி எதற்கு புகழ்வாய்ந்த்தோ அது எதுவும் அங்கே இருக்காது. இது தான் நமது நடைமுறை!!!
ஈகோ டூரிசம் இங்கேயும் மலர வேண்டுமானால் அனைத்து அரசு துறைகளும் இணைந்து பணியாற்றவேண்டும் . உள்ளூர் மக்களுக்கே பணியில் முதன்மை வாய்ப்பு அளிக்கவேண்டும். குறிப்பாக ஆதிகுடிகளின் அபாரமான இய்றகை அறிவை பயன்படுத்த வேண்டும்.சரணாலயங்களில் குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே ஒரு அளவிற்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.இவைதவிர சரணாலயப்பகுதியில் தனியார் வாகணங்களை அனுமதிக்காமல் அரசே வாகன்ங்களை இயக்கவேண்டும்.மேலும் வாகனக்களுக்கு குறிப்பிட்ட தகுதிச்சான்றிதல் இன்றி அனுமத்திக்க கூடாது.சரணாலயங்களுக்கு பார்வையாளர்கள் முன் அனுமதியின்றி நுழைவதை முற்றிலும் தடுத்துவிடவேண்டும்.சிக்கிமிலுள்ள கஞ்ஜூன் ஜங்கா  சரணாலயத்தில் இகோ டூரியசத்தை சிற்ப்பாக கையாள்கிறார்கள். அவர்கள் செய்யும் போது நம்மால் இயலாதா??



1603 லில் கள்ளிக்கோட்டையிலிருந்து இங்கு வந்த ஜேம்ஸ் ஃபினினிசியோ என்ற சேசு சபைத் துறவி ஒருவர் தான உதகை என்னும் சொர்க்கபுரியை வெளியுலகிற்கு முதன் முதலில் தெரிவித்தார்.அவரைத் தொடர்ந்தே கோவையின் அப்போதைய ஆட்சியர் ஜான் சல்லிவன் பவானிகருகே இருந்த டணாயக்கன் கோட்டையிருந்து உதகைக்கு புறப்பட்டார். இந்த சொர்க்கபுரியை பார்த்து அதிசியத்தே தாமஸ் மன்றோவிற்கு கடிதம் எழுதினார்.சிறிய பாதையையும் அவரே முதன் முதலில் எற்படுத்தினார். அவருக்கு உங்களைப்பற்றி தெரிந்திருந்தால்.....கண்டிப்பாக பாதை அமைத்திருக்கமாட்டர்!!! 
மதிப்பு போன நிலையைப் பூட்டி வைத்துக்காப்பாற்றவும் முடியாது.பிறர் பார்வையில் இருந்து மறைக்கவும் முடியாது.எல்லாம் ஒரு நாள் வீதிக்கு வரும்.வரும்போது அவரவர் கைத்தராசு எடுத்து எடைபோடும்.
கத்தரிக்க முத்துனா
சந்தைக்கு வந்துதான் தீரும்!!
சொற்களின் தாக்கத்தில் மயங்கிப்போவதும், சிந்தனை செய்! சிந்தனை செய்!! என்கிற அறைகூவளிலும் காலத்தை களித்தது போதும்... இது சிந்திக்க வேண்டிய நேரம் அல்ல... செயல்படுத்த வேண்டிய நேரம்!!இன்றே செய் நன்றே செய்!! 

Read more...

லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 24 செப்டம்பர், 2012



 லவுட்ஸ்பீக்கர்


அபத்தம்
தமிழக அரசு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகிறது. அது மின்வெட்டு பிரச்சனையில். ஒவ்வொரு முறையும் அடுத்த ஆறு மாத்த்தில் மின்வெட்டு சீராகும் என்று நப்பாசை காட்டியே நாளை தள்ளிப்போடுகிறதோ ..ஆனால் விடை கண்டு கொண்ட்தாக தெரியவில்லை.பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டும் அரசு தமிழக முழுவதும் இருக்கும் தெரு மின்விளக்குகளை சோலார் பவருக்கு மாற்றினால் ஒரளவு மின் வெட்டை சமாளிக்கலாம்.. ஆனால் அரசு ஏனோ மவுனம் காக்கிறது??

தேசத்தின் மதம்
T20 உலக கோப்பை ஆரம்பித்துவிட்ட்து.ஆனால் கட்ந்த காலங்களில் இருந்த பரபரப்போ ..ஒரு எதிர்பார்ப்போ இல்லை. மக்கள் தங்களின் அன்றாட பல பிரச்சனைகளில் தான் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.இது ஒரு நல்ல சைன். இன்னும் 20 வருட்த்தில் மக்கள் உண்மையில் திருந்திடுவாங்க போல?? அப்பறம் இந்த அரசியல்வாதிகளின் நிலை?? அம்போ தான்!!

புஷ்வாணம்
 கூடன்குளம் பிரச்சனை முன்னரே சொன்னது போல் வெடிகாத பட்டாசாக மாறிவிட்ட்து.கூடன்குளம் ,இடிந்தகரை தவிர பல்வேறு கடல்கறையோற கிராமங்கள் மீண்டும் சக்ஜநிலைக்கு திரும்பியுள்ளது வரவேற்க்கப்படவேண்டிய விசயம்.ஆனால் அந்த பகுதி மக்கள்? உதயகுமாரின் நிலை அன்னா நிலை தானா??உசரான உளவுத்துறை பிற்பகுதியில் இந்த பிரச்சனையை நன்றாகவே கையாண்டார்கள்.



சங்கு
கேஸ் மற்றும் டீசல் விலைஏற்றத்தை கண்டித்து எதிர்கடசிகள் அழைப்பு விடுத்த பந்த் ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸ். இது மக்களின் மன்நிலையை வெளிகாட்டுகிறது மத்திய அரசு அடுத்தவருடம் தேர்தலை சந்திக்கும் நிலையில் இது தன்க்கே ஊதிய சங்கு.

ரத்தம் வடியும் ரோஜக்கள்.
இப்போது காதல்களும் அன்புகளும் கொலையில் முடிவது சாதரனவிசயமாகிவிட்டது.மக்களிடம் பழகுவதே பயமாகி விட்டது.இந்த நிலையில் சென்றால் குடும்பங்களின் நிலை? ஒருவேளை குடும்பம் என்ற கட்டமைப்பு நிலை குழைந்து வருகிறதா?

Read more...

லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 17 செப்டம்பர், 2012




லவுட்ஸ்பீக்கர்
இளிச்சவாயன்

தீ ஜூவாலைகள் சிவகாசியில் கோர தாண்டவம் ஆடியதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க இயலாது. அரசின் மிக மோசமான போக்கை வெளிபடுத்தும் துன்பியல் சமபவம் அது. ஆனால் அரசு விழித்துக்கொண்ட்தா என்றால் ..அட போங்கடா... உங்களைப்பற்றி எங்களுக்கு தெரியும் என்ற நினைப்பில் தான் இருக்கிறது. கணதுடைப்புக்கு இழப்பீடு...அவ்வளவே!! பணம் தந்தால் மக்கள் எல்லாத்தையும் மறந்துவிடுவார்கள் என்று அரசு மக்களை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.

அல்வா

சிவகாசி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறேன் என்ற பெயரில் சிலர் முகனூலில் இருந்து கிளம்பினர். முதலில் ஏகோபித்த பாராட்டகளுடன் தொடங்கப்பட்ட பணி இறுதியில் இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சம் ஸ்டண்டு காட்சிகளுடன் முடிந்த்து. உதவும் ..உணர்ச்சி பூர்வமான மக்களின் உனர்ச்சிகளை தவறாக பயன்படுத்தி மக்களிடம் வசூலிக்கப்பட்ட நிதி என்ன ஆனதோ??? இதோ அதோ என்று இறுதியில் போய் சேர்ந்தா இல்லையா என்றே தெரியவில்லை. எவ்வளவு வசூலித்தார்கள் என்றும் தெரியாமல் அவசர அவச்ரமாக மூடி மறைக்கப்பட்டது.இனியாவது சூது வாது தெரிஞ்சு நடந்துக்க இது ஒரு பாடமாக இருக்கட்டும்
மலர்கொத்து

மத்திய அரசு அறிவித்துள்ள ஒளிபரப்பு துறையில் அந்நிய மூதலீடு என்னைப்பொருத்த வரை வரவேற்க்கப்பட வேண்டியதே. தற்போது இருக்கும் தமிழ் காட்சி ஊடகங்களுக்கு செம அடி.. இனியாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்.சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடால் தற்போது இருக்கும் தெருமுனை கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் அவ்வளவு சீக்கிரம் புறகனிக்க மாட்டார்கள். மேலும் 10 லட்சம் மக்கள் வசிக்கும் நகரில் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி கொடுத்துள்ளது. மலைநகரங்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.நம்மூர் மக்கள் இன்னும் மேலைநாடுகள் போல் பொருட்கள் வாங்க அதிக தூரம் பயனிக்க தேவையில்லை.அவர்கள் போல் ஒரு சிஸ்டமெட்டிக் வாழ்க்கை நாம் வாழுவதும் இல்லை.. ஆதலால் வால்மார்ட்,டார்கெட் போன்ற கடைகள் வருவதால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை. மேலும் விக்கர விலைவாசி கொஞ்சம் குறையவே செய்யும்.இவனுங்க அடிக்கர கொள்ளைக்கும் ஆப்பு வைச்ச் மாதிரிதான்.
நீர்க்குமிழி

கூடன்குளம் போராட்டம் ஒரு பக்கத்தில் மதம் சார்ந்த பிரச்சனையாக மாறிக்கொண்டு இருப்பது வருத்தமே! ஆனால் போராட்டம் பரவினாலும் விரைவில் நீர்த்துவிடும். அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேலைகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது சத்தம் இல்லாமல்.. நிரப்பிவிட்டால் இந்த போராட்டம் அர்த்தம்ற்றதாக மாறிவிடும். ஊரை காலிசெய்வதை விட வேறு வழியில்லை.

மை இல்லாத பேனா

கருணா ஆட்சியில் பல குறைகள் சொல்லப்பட்டாலும் ஊடகத்தை பொருத்த வரை சுதந்திரமான காலமே!ஆனால் ஜெ. ஆட்சியில் அப்படி இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் ஜெ . மேல் இருக்கும் பயத்தில் அடக்கியே வாசிக்கின்றன. மாநில பிரச்சனைகள் அதிகம் இடம்பெருவதில்லை. பெரும்பாலும் உள்ளாட்சி பிரச்சனைகளே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன். காட்சி ஊடகங்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது .ஏதோ லோக்கல் சேனல் போல நடந்துகொள்கின்றன்.அச்சு ஊட்கமோ அதை விட மோசம்.. மை தீர்ந்து போன பேனா போல அரைச்சமாவை அரைத்துக்கொண்டு ஜெ.வின் ஊதுகோலாக மாற்விட்ட்து. அது கூடன்குளம் விவகாரத்தில் நன்றாக தெரிகிறது.என்ன செய்வது எல்லாம் விளம்பரம் படுத்தும் பாடு. அனைத்தும் அரசின் விளம்பரங்களை நம்பியே பொழைப்பை ஒட்டுகின்றன. லம்பான அமொண்டை இழக்க யாரும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

Read more...

கருப்பு தினம்-செப்.10

>> செவ்வாய், 11 செப்டம்பர், 2012




கருப்பு தினம்-செப்.10
செப்டம்பர் 10 ..இனி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு தினம்.வரலாற்றில் எத்தனையோ அத்துமீறள்களை மனித இனம் சந்தித்துள்ளது. அத்தனையும் மீறித்தான் தழைத்துள்ளது மனித இனம்.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக காந்திய வழியில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக போராடி வந்தார்கள் இடிந்தகரையை சேர்ந்த மக்கள் . உதயகுமார் தலைமையில்.

கட்ந்த சில நாட்களுக்கு முன் அணு உலைக்கு எதிராக வாழக்காடு மன்றத்தில் தொடுத்த அனைத்து வழக்குகளும் தள்ளூபடி செய்யப்பட்ட்து.அப்போதே இது தீவிர கவனத்துக்கு உள்ளாக்கப்பட்ட்து.ஆனால அரசு மவுனமாக அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.அவை இன்று உலகளவில் இன்று தமிழ்நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.அப்போதே இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இப்படிப்பட்ட கலவரங்கள் ஏற்பட்டிருக்காது..
செப்.9 முதலே மக்கள் கூடி விட்டனர் கடற்கரையோரம் .ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடனே அரசு உசராகி இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்காமல் தடுத்திருக்கலாம். இதில் அரசுக்கு மிகப்பெரிய தோல்வியே.
அணு உலைக்கு ஆதரவாக அரசும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் எதிரானவர்களோ அதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இங்கே இருக்கும் முரணபாடுகளை அரசு களைய வேண்டியது பொறுப்பு.ஆனால் அதை கலையாமல் தொடர்ந்து குரல் எழுப்புவது ஒரு மோசமான சூழலே!!
அணு உலையை பொருத்தவரை வெளியேற்றும் கழிவு நீர் என்பது கடல்வளத்தை பாதிக்க போவது நிதர்சனம் தான். அந்த கடல் வளத்தை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.இதற்கு விலக்கோ அல்லது முடிவோ கண்டிப்பாக இல்லை.

அணு உலையில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு எவ்வளவு கொடுமையானது என்பது உலகில் நடந்த பல சமப்வங்களே சாட்சி. அப்படி இருக்கும் போது அணு உலை தேவையா என்பது பலத்த கேள்வியே!
எதிர்பாளர்கள் சொல்லும் மற்றொரு குற்றச்சாட்டு அணு உலை அமைப்பதின் முக்கிய நோக்கம் மின்சாரம் அல்ல. அது அணுகுண்டிற்கான மூலப்பொருள் எடுப்பதே என்பது. அதற்கான விளக்கம் கேட்கிறார்கள். அப்படி ஒருவேளை இருக்கும் படசத்தில் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயங்களை எல்லோருக்கும் பகிர்வது என்பது மிகவும் அபத்தம்.இது எதிர்பாளர்களை பற்றி அரசு வைக்கும் குற்றசாட்டிற்கு வலுசேர்க்கிறது.
அரசு சொல்லும் அந்நிய நாட்டு சதி.. அதற்கு உடந்தை உதயகுமார் என்பதை சின்ன குழந்தை மாதிரி சொல்வது அபத்தமாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி இருக்கும் படசத்தில் அதற்கான சான்றுகளை மக்களிடம் தந்தாலே மக்கள் உதயகுமாரை புறக்கணித்துவிடுவார்கள். போராட்டமும் பிசுபிசுத்து விடும். ஆனால் அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது தவிர ஒன்றையும் சான்றாக தரவில்லை.
அணு உலை பகுதிக்கு 500  கோடி வளர்ச்சி பணிக்கு ஒதுக்கியது மிக்க்கேவலமான அரசியல் செயல். உண்மையாக அணு உலை எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும் படசத்தில் எதற்கு அரசு 500 கோடி ஆசை வார்த்தை காட்டனும்??தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பணம் கொடுக்கும் மோசமான சூழல் .இது கலையப்பட வேண்டிய விசயம்.
எதிர்பாளர்கள் தீர்ப்பு வந்தவுடன் போராட்ட்த்தில் குதித்து இருந்தால் அவர்களுக்கு இன்னும் அதிக அளவுக்கு ஆதரவு இருந்திருக்கும்.அதை விட்டு விட்டு திட்டம் இட்டு போராட்டம் செய்வது இந்த போராட்ட்த்தின் பின்பலம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
குறிப்பாக போராட்ட்த்தில் குழந்தைகளை முன்வைப்பது பலத்த கண்ட்னத்தை பல இட்த்திலும் இருந்து சந்தித்து வருகிறது. இது குறித்து உதயகுமார் கூட கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். ஒரு வேளை  போராட்ட்த்தில் குழந்தைகளுக்கு ஏதாவது நேர்ந்திருந்தால் இப்போராட்டம் வேறு தளத்திற்கு பயனித்து இருக்கும்.அதற்க்கு தான் திட்டமிட்டாரோ உதயகுமார் என்கிற சந்தேகமும் இப்போது உரத்து எழுகிறது.
இதுபத்தாது என்று விஞ்ஞானிகளும் கூடங்குளம் சார்ந்து அரசியல் பேசுவதால் தேவையில்லாத பதட்ட்த்தை உருவாக்குகிறது.இது எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊத்துகிர கதை.ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பேசிய கருத்துகள் ஜனநாயகத்தையே கேள்விக்குரியாக்குகிறது.
இது இப்போதைய நிலைக்கு முடியப் போவதில்லை. இது வெளியில் பேசுகின்ற பொது தளத்தில் கையாளும் பிரச்சனை அல்ல. இப்பிரச்சனை இருதரப்பும் அமர்ந்து உண்மையான நிலையை தங்களின் ஈகோவை விட்டுவிட்டு புரிந்து பேசினாலே முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடும்.விஞ்ஞான வளர்ச்சியை காலத்திற்கு ஏற்றவாறு மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிதர்சனம். ஆனால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரின் மேல் தான் நவீனத்திற்கு மாறவேண்டும் என்றால் அந்த நவீனமே தேவையில்லை என்பது பெரும்பாலோரின் எண்ணம்.

Read more...

வேங்கை:மவுன யுத்தம்!!

>> திங்கள், 10 செப்டம்பர், 2012






மவுன யுத்தம்!
மனிதன் எப்போது துப்பாக்கி கண்டுபிடித்தானோ அன்றிலிருந்து காட்டுயிர்களுக்கு ஆரம்பித்துவிட்டது அழிவுகாலம்.முதலில் சிங்கத்தை குறிவைத்தான்.. விளைவு கிர் காடுகளில் மட்டுமே இன்று சிங்கம்!!அடுத்து புலி.. விளைவு 40 ஆயிரமாக இருந்த்து இப்போது 1200 மட்டுமே!!
சமீபத்தில் காட்டுயிர் ஆர்வலர் ஒருவர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தன் சாட்டையை சுழட்டி உள்ளது. புலி சரணலாயங்களில் சுற்றுலாவை தடை செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.இது பல்வேறு விவாதங்களை நாடு முழுக்க கிளப்பியுள்ளது.
புலி என்ன அவ்வளவு முக்கியமான காட்டுயிரா??? இது பலரின் கேள்வி..இந்த புவியில் படைக்கப்பட்ட அனைத்தும் சங்கிலி போல ஒன்றை ஒன்று சார்ந்தே படைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்டில் புலியே இல்லை என்றால் காடு இருக்காதா என்ன என்று நீஙகள் கேட்பது புரிகிறது.
இந்தியாவில் உள்ள காடுகள் வெவ்வெறு தகவமைப்பில் உள்ளது.புலி வாழக்கூடிய காடுகளில் யானை இருக்கும். யானைக்கு அதிகம் உணவு தேவை. ஒரு நாளைக்கு குறைந்தப்டசம் 250 கிலோ தாவரங்களும் நல்ல குடிதண்ணீர் வசதியும்.அப்படி என்றால் அந்த காட்டில் எவ்வளவு தாவரங்கள் மரங்கள் இருக்கும்...யோசித்துப் பாருங்கள்.குறிப்பாக மூங்கில்,முட்செடிகளில் வரும் காய்கள், புற்கள் என்பவை மிக முக்கியம் யானைக்கு.. மேலும் இத்த்கைய தாவர வளம் உள்ள காடுகளில் தான் மான் வாழும்.காரணம் புல் என்ற மிக முக்கிய உணவும் தண்ணீரும்.மான் மற்றும் யானைக்கு தேவைப்படும் கால்சியம் சத்திற்க்கு ஆற்றுப்படுகையில் கிடைக்கும் உப்பு மண்ணும் மிக முக்கியமானது .

யானை இவ்வகை காடுகளில் உட்புகுந்து உண்ணும் போது காட்டில் சிறு சிறு இடைவெளி உருவாகும்.அந்த இடைவெளிகள் மானுக்கு மேயும் இடமாகவும் இரை தேட வசதியாகவும் இருக்கும். புலிக்கு தேவையான உணவு குளம்பிகள் வகையை சார்ந்த மான் ம்ற்றும் காட்டு எருதுகள் இந்த வகை வளமான தாவர காடுகளில் தான் இருக்கும் புலியும் இக்காடுகளில் இருக்கும்.காரனம் இரை.இவ்வகையில் புலி ,யானை,மான் போன்ற குளம்பி வகைகள் நெருங்கிய சங்கிலியால் பினைக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை புலி வாழ்ந்த காடுகளில் புலி அற்றுப்போகுமானால் என்ன நடக்கும்..... புலியின் உணவான மான்,காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.அவை உண்ணும் தாவரங்களின் அளவு அதிகமாகும் ..பிற்கு என்ன தாவர உண்ணிகளுக்கு சரியான அளவு உணவு கிடைக்காமல் அருகில் உள்ள மக்கள் வாழிட்த்திற்கு உட்புகும். மனித –காட்டுயிர் மோதல் நடைபெறும் .மேலும் சரியான அளவு தாவர உணவு கிடைக்காமல் காட்டியிர்களின் இறப்பு அதிகரிக்கும். யானை போன்ற விலங்குகள் உண்ணுவதில் 40 சதவீதம் செரிக்கின்றன. மீதி கழிவாக வெளியேறுகிறது. அதில் உள்ள சிறுவிதைகள் பாதி செரித்த அளவில் தான் எளிதாக முளைக்கும் .ஒரு பக்கம் தாவரங்கள் இப்படி காட்டுயிர்களால் உண்ணப்பட்டு மறுபுறம் கழிவு மூலம் வெளியேற்றப்பட்டு மீண்டும் அவை வளர்கின்றன்.தாவரங்கள் பரப்ப படுகின்றன. தாவரங்கள் பல்வேறு பகுதியிலும் பரவப்படுகின்றது. இப்படித்தான் காடு வளம் பெறுகின்றது .உருவாகின்றது. இதை அசைத்தால் காடு அழியும் என்ப்து இப்போது புரியும் உங்களுக்கு. காடு அழிந்தால் மழை இல்லை. மழை இல்லையென்றால் மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான தண்ணீர் கிடைக்காது. மனித இனமே அழியும்.
இதனால் தான் புலியை காப்பாற்ற காட்டுயிர் ஆர்வளர்கள் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு முயற்சியின் விளைவுதான் இந்த அதிரடி தீர்ப்பு.இதுவரை புலியை காப்பாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புலி பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் புலியை காப்பாற்றினார்களா என்றால் புலியின் எண்ணிக்கை குறைந்த்து தான் மிச்சம்.புலியின் பெயரை சொல்லிக்கொண்டு பலரும் தங்களின் சொத்தை பெருக்கிக்கொண்டார்களோ தவிர புலியின் எண்ணிக்கையை பெருக்கவில்லை.
தற்போது வந்துள்ள தீர்ப்பின் படி புலியின் சரணலாயங்களில் சுற்றுலாவாசிகள் தடை செய்யப்பட்டுள்ளனர்.இத்தீர்ப்பை பெரும்பாலோர் வரவேற்றாலும் சிலர் இதனை எதிர்கின்றனர். அவர்கள் சொல்வது இந்த காரணத்தை தான்.இதனால் சுற்றுலா தடை செய்யப்படுகிறது. சுற்றுலாவை நம்பி உள்ளவர்கள் பாதிப்படைகின்றனர் என்பது.
தமிழ்நாட்டில் உள்ளது மூன்று சரணாலயங்கள் தான் .அவை முதுமலை,களக்காடு மற்றும் ஆணைமலை. இதில் புலிகள் அதிகமாக இருப்பது முதுமலையில் இருந்து சத்தியமங்களம் தலைமலை வரை உள்ள பகுதிகள். இப்பகுதியில் தான் விலங்குகளின் தொட்டில் என்று அழைக்கப்படும் தெங்குமராட்ட பகுதியும் அடங்கும்.
தற்போது இந்த பகுதியில் நடப்பது எல்லாம் சுற்றலா என்ற பெயரில் குடி கும்மாளம் மற்றும் பெண்கள் என்று அனைத்து அருவருப்பான காரியங்கள் மட்டுமே!!தற்போது புதிதாக உருவாகியுள்ள ஜ.டி என்னும் கொடிய நோய் பிடித்த இளைஞர்களும் இளம் பெண்களும் சுற்றுலா .... இயற்கையை ரசிக்கிறோம் என்ற பெயரில் இப்பகுதியில் தீயிட்டும் குடித்தும் தங்களின் வார இறுதியை நிறைவாய் செலவழிக்கிறார்கள்.இதற்கு சாமரம் வீசுகின்றன தனியார் தங்கும் விடுதிகள். இவைகளின் அறிவிப்பே தங்களின் பகுதி காட்டியிர்கள் நடமாட்டம் உள்ளது என்பதுதான். இவைகளால் அங்கு வாழும் எந்த ஆதிகுடிகளுக்கும் லாபமோ அல்லது வருமானமோ இல்லை.இந்த ஆதிகுடிமக்களை இங்கு உள்ள தனியார் விடுதி நிர்வாகங்கள் சுற்றுலாவாசிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல பயன்படுத்துகின்றன். அதுவும் மிக்க்குறந்த ஊதியத்தில்.!!
இதுதவிர மற்றொரு கருத்தும் வைக்கப்படுகிறது..அது வனத்துக்குள் பொதுமக்களை அனுமதிக்காத போது வேட்டைக்கார்ர்களுக்கு வசதியாக போய்விடும் என்பது.மேலும் போதுமான வசதிகள் வனத்துறைக்கு இல்லத்தையும் சுட்டி காட்டுகின்றனர். இது வேட்டையாளர்களுக்கு எளிதாக போய்விடும். இதற்கு காட்டுயிர் ஆர்வளர்கள் பலத்த கண்டனம் தெரிவிக்கிறார்கள். வனத்துறையின் முக்கிய வேலை வனத்தை காப்பதுதான்.அவர்களிடம் போதுமான அளவுக்கு வசதிகள் இல்லாததது உண்மை தான். அரசு புலிகள் திட்ட்த்திற்க்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கிறார்கள். அதை செலவழிக்க சொல்லுங்கள்.மேலும் வனத்துறை காவல்துறையிடம் இனைந்து செயல்படவேண்டும் .அப்போது தான் தகவல்களை உடனடியாக பகிர்ந்துகொள்ள முடியும் மேலும்வனத்தில் வேட்டையாடி விட்டோ வனச் செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு நகரத்துக்குள் புகுந்துவிடும் கொள்ளையர்களை எளிதாக பிடிக்கலாம். மேலும் காவலதுறையுடன் இனையும் போது காவல்துறையின் மனித ஆற்றலையும் மற்றும் நவீன வசதிகளையும் எளிதாக பயனபடுத்தலாம் என்கிறார்கள்.
முதுமலையை சுற்றி உள்ளவர்கள் பெரும்பாலோர் ஆதிகுடிகள் அல்ல. அவர்கள் பெரும்பானமையோர் புலம் பெயர்ந்தவர்கள் வணிக நோக்கங்களுக்காக மட்டுமே!!மற்ற படை அவர்களுக்கு வனத்தையோ அல்லது காட்டுயிர் குறித்தோ துளியும் அக்கறை இல்லை.இவர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள் விறகு. அனைத்தும் வனத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது..
குறிப்பாக ஊட்டியில் இருந்து முதுமலைக்கு போகும் பாதை கடினமானது. அல்லது கூடலுர் போய் சுற்றிக்கொண்டு போகவேண்டும்.பொரும்பாலோர் கூடலூர் பாதையை தேர்ந்தெடுக்காமல் கல்லட்டி பாதையையே தேர்ந்தெடுக்கிறர்கள் .வாரத்தில் குறைந்த படசம் மூன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது . இவையும் குறையும்.

பொதுவாக காட்டுயிர்கள் மனித தலையீடு இன்றியே வாழ்ந்து பழகியவை. மனிதர்களின் தலையீடு மற்றும் வாகன்ங்களின் ஓய்வற்ற ஹாரன் சத்தங்கள் அவைகளின் வாழ்வு சூழலை கடினமாக பாதிக்கிறது. அவைகளின் இனப்பெருக்கத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.அதிலும் மான் போன்ற மிகுந்த மென் உயிர்கள் திடிர் அதிக சத்த்த்தால் மரணம் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும்  கட்டுபாடு அற்ற வாகனப் போக்குவரத்துகளால் வெளியேறும் புகையும் அதீத காற்று மாசுபாட்டையும் ஏற்படுத்துகிறது.மேலும் இவ்வளவு வாகனப்போக்குவரத்து தான் வேட்டையாடிகளை சரியாக கவனிக்க இயலாத சூழல்.எளிதாக வனத்துக்குள் சுற்றுளாவாசிகள் பெயரில் ஊடுருவ முடிகிறது.புலி சரணாலயங்களில் முற்றிலும் வெளியாட்கள் நுழைவதை தடுப்பதன் மூலம் இத்தகைய அத்தனை தீமைகளும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.  .
இவைத்தவிர காடு வளம் பேணப்படும் போது காட்டில் கிடைக்கும் புல் ,காய்,கனிகள் ,பட்டை போன்றவை காட்டை சார்ந்து வாழும் ஆதிகுடிகளின் வாழ்வாதரத்திற்கும் மட்டுமே பயன்படும்.
சுமார் 20 ஆண்டுகள் முன் வரை சுற்றுளா என்பது வெறும் கல்வி சுற்றுளா மற்ற்ம ஆன்மீக சுற்றளா மட்டுமே!! மலை பிரதேசங்கள் சுற்றுளா என்பது அதிகரித்த மிடில்கிளாஸ் குடும்பத்தின் எதிரொலி. இவை தற்போது கிளை பரப்பி ஈகோ டூரிசம் ,ட்ரெக்கிங்,பேர்ட் வாட்சிங்,அனிமல் வாட்சிங் என்று பல பெயரில் கல்லா கட்டப்படுகிறது..வனத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் மட்டும் இறந்துபோகும் காட்டுயிர்கள் ஏராளம். அதுதவிர சிறு உயிர்களான பாம்புகள்,தவளைகள் ,பச்சோந்தி, போன்றவை வாகனத்தில் அடிப்பட்டு இறப்பவையும் அதிகம் .இவையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.வருடம் தோறும் வாகனத்தில் அடிப்பட்டு இறக்கும் பாம்புகள் எண்ணிக்கை ம்ட்டுமே ஆயிரத்திற்கும் மேல் என்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
தற்போது அரசும் தனியார் பள்ளிகளும் கல்விச் சுற்றுளாவை ஊக்கிவித்து வருகிறது. பெரும்பாலும் இவை மாணவர்களுக்கு பயன்படும் படி இல்லை. இதை தவிர்க்க ஆதிகுடிகளின் வாழ்வு ஆதாரத்திற்கும் சரணலாயங்களுக்கு மட்டும் பள்ளி மாணவர்களை அனுமதிக்கலாம். அவர்களுக்கு சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் வளரும். மேலும் மேற்சொன்ன எந்த தீமைகளையும் சிறுவர்கள் செய்வதில்லை..அரசு செலவழிக்கும் தொகை பயணுள்ள வகையில் அந்த வனப் பகுதியில் வாழும் ஆதிகுடிகளுக்கே பயனாக சேரும்.அவர்களின் வாழ்வும் உயரும்.

இத்தீர்ப்பு ஓய்ந்து ஒடுங்கிய பிறகு நெருங்கி வரும் வாய்ப்பு. ஆம்..

"சாகப் போற நேரத்தில தான்
ஈசலுக்கு சிறகு முளைக்கும்!!"

இனியாவது முளைக்கட்டுமே!!!......நம்பிக்கைகளும்.... 

Read more...

லவுட்ஸ்பீக்கர்





லவுட்ஸ்பீக்கர்.
அதகளம்
இந்த வருட்த்தின் மிக மோசமான விபத்தாக சிவாகசி பட்டாசு ஆலை விபத்து கருதப்படுகிறது.உயிர்களை பற்றிய அக்கறை இனமை,பாதுகாப்பற்ற ஆலை சூழல் போன்றவையே விபத்தின் காரணம்.இவை இத்துறையில் மட்டும் அல்ல ..நமது அனைத்து ஆலைகளிலும் இதுதான் உண்மை நிலை. அரசு பட்டாசு ஆலையில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் அனைத்து தொழிற்சாலைகளிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.

கில்லி
கூடங்குளம் பிரச்சனை நீதிமன்ற விவகாரத்திற்கு பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அரசோ அடுத்து வர இருக்கும் தேர்தலை நினைத்து கொஞ்சம் அமைதி காக்கிறது.இதில் திடிரென்று ஜெ வை உள்ளே நுழைத்திருப்பது அரசியல் அரங்கில் அனைவராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது.சுமார் 15 ஆயிரம் கோடி என்னவாக போகிறது என்பது உலகம் முழுக்க உற்று கவனிப்படுகிறது.உதய்குமார் கில்லி தான்!!யாருக்கு???

வேதாளம்
மீண்டும் சமுக வலைத்தளங்கள் மற்றும் டுவிட்டர் போன்றவ்ற்றை தடை செய்ய அரசு தீவிர யோசனையில் இருக்கிறது.கட்டற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ள இவைகளை அரசு வதந்தி பரப்புகின்றன என்ற போர்வையில் அமுக்க நினைப்பது மிகுந்த கண்ட்ணத்திற்கு உரியது. தனிக்கைக்கு உடபடுத்தலாமே தவிர தடை என்பது அரசின் பயத்தை வெளிப்படுத்துகிறது.

பூச்சாண்டி
தேர்தல் வருமா வராதா என்றால் வரும் ஆனால் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் படம் காண்பிக்கிறது அரசு.அவ்வளவு சீக்கிரத்திலோ அல்லது முன்பே தேதலை சந்திக்க காங்கிரஸ் தயராக இல்லை என்பதே நிதர்சனம். பிஜேபி இதையும் கேடய்மாக பயன்படுத்த நினைகிறது.வரும் நாடாளுமனற தேர்தலில் மாநிலக் கட்சிகள் சக்கை போடு போடப்போகின்றன். அதுமட்டும் உறுதி.

ஊடகம்.
முழுநேரம் காட்சி ஊடகத்தில் பணியாற்றுவது என்பது என் நெடுநாளைய எண்ணம். பல நிருவணங்களிடமும் தொடர்ச்சியாக முயன்றும் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. ஆனால் சில நாட்கள் முன் ஒரு காட்சி ஊடகத்தில் இருந்து நேரடி நிகழ்ச்சி நட்த்த அழைப்பு வந்துள்ளது . வியாழன் அன்று ஸ்கிரீன் டெஸ்ட்க்கு போகிறேன்.இதுதான் நான் கலந்து கொள்ளும் ஊட்கத்திற்கான கடைசி தேர்வு என்று முடிவு செய்துள்ளேன்.. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..வென்றால் நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணிக்கு உங்கள் முன்னறையில் நான்..


Read more...

லவுட் ஸ்பீக்கர்

>> புதன், 5 செப்டம்பர், 2012




லவுட் ஸ்பீக்கர்
கரம் மசாலா
சஹானா விவகாரம் கடந்த வாரம் முழுவது பட்டைய கிளப்பியது.50 பேரை கலயாணம் செய்திட்டாங்க.. 100 பேரை ஏமாற்றிட்டாங்க என்று திசைக்கு ஒரு வதந்தி இறக்கை கட்டி பறந்த்து. இறுதியில் சஹானாவும் பிடிபட்டு விட்டார்..விரைவில் அவர் எப்படியும் ஊடகத்திற்கு பேட்டி தருவார்..அல்லது ஜி டிவியில் வந்து எல்லாத்தை பற்றியும் வண்டவாலங்களை அவிழ்ப்பார் என்றே எண்ணுகிறேன்
அதிரடி
மதுரையை..திருப்பூர் என்று கலக்கிய புயல் ஆஸ்ரா கார்க் அதிரடியாக தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கு பின்புலமாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தர்மபுரி பகுதியில் ந்டைபெற்று வரும் குவாரி பிரச்சனையில் சரியாக செய்ல்படாதால் தான் அவரின் மாற்றம் என்று பட்சி சொல்கிறது. எனிவே... அதிரடிகள் அங்கேயும் தொடரட்டும்..
அடாவடி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட்து பரவலான ஒரு பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. நீதிமனறத்தின் முடிவை எதிரபார்த்து காத்துக்கொண்டிருந்த எதிர்பாளர்களுக்கு தலையில் இடி. இனி அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் அன்று அரசும் மக்களும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அதிரடியை எதிர்பாளர்கள் எதிர்பார்க்கவில்லை.
அடி மேல் அடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.கட்ந்த ஆண்டில் இதே காலகட்ட்த்தில் 8 சதவீதமாக இருந்த வளர்ச்சி இப்போது அதளபாதலத்தில்.உற்பத்தி துறையில் ஏற்பட்ட பின்னடைவே பொருளாதார வளர்ச்சி குறைய முக்கிய காரணம்.விலைவாசி இன்னும் எகிறப்போகிறது.
அதிர்ச்சி
97 பேரை கொன்ற குஜராத் இனக் கலவர வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு வந்துள்ளது பெண் மந்திரிக்கு 28 ஆண்டுகளும் பஜ்ரங் தளத் தலைவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்ட்னை கிடைத்துள்ளது. இது தேசிய அளவில் மிகமுக்கிய நிகழ்வு. தேர்தல் வர இருக்கும் நிலையில் இது காங்கிரஸ்க்கு செம அதிர்ஷ்டம்!!மேடிக்கு பின்னடைவு.ஆனால் அப்பீல் அப்பீல் என்று இவர்கள் அனைவரும் செத்த பிறகும் வழக்கு நடக்கும்!!

Read more...

முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...

>> வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012



 முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...


இந்தப் படம் அறிவிப்பு வெளிவந்த்தில் இருந்தே எதிர்பார்பு எகிறிவிட்டது.ஜிவாக்கு வேறு கோ பட்டைய கிளப்பியதில் மக்களிடம் இன்னும் எதிர்பார்ப்பு.பத்தாதிற்கு நரேன் வேறு வில்லன் வேடம் வேறு..சொல்லவா வேண்டும்.. ஏகத்திற்கு எதிர்பார்ப்பு...சரி பட்த்திற்கு போவோம்...முதல் நாள் முதல் காட்சி.. யுத்தம் செய் படம் வெகுவாக எனக்கு பிடித்துப்போனதால்... ஆவோலோடு படம் பார்க்கப்போனேன்.
மிடில்கிளாஸ் ஜாலி இளைஞன்...திருட்டு கும்பலை பிடிக்க முயற்சிக்கும் போலிஸ்... குங்குபூ மாஸ்டர் பின்பலம்...மூன்றையும் இனைத்தால் கதை...அதுதாங்க படம்.சத்தியமா கதையை சொல்லமாட்டேன். அதை சினிமா தியேட்டரிலோ..அல்லது திருட்டு சிடியீலோ பாத்துக்குங்க..
நான் ஈரோடு சண்டிகா தியேட்டரில் படம் பார்த்தேன்.. தியேட்டர் சரியில்லையா.. அல்லது பின்ன்னி இசை மிக்ஸிங்க் தவறா என்று தெரியவில்லை... பல வசன்ங்களை இசை தின்றுவிட்ட்து.அடுத்து எதிர்பார்ப்போடு சென்றது பாடலுக்கு காட்சி கொடுத்த வடிவம் ..பொதுவா மிஸ்கின் அதில் சிறப்பா செய்வார்... ஆனால் இந்த வாயமுடி சும்மா இரு பாட்ல் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.. ஜிவா எப்போதும் காஸ்ட்டுயூம் விசயத்தில் நன்றாக கவனம் எடுப்பார்.. இந்த பாட்டுக்கு சொதப்பல் காஸ்ட்டுயூம். ஆனால் பார் பாட்டை கலக்கிட்டார் மிஸ்கின்.. அதுவும் அந்த பாட்டின் நடுவே வரும் வய்லீன் பீஸ்க்கு செம கலக்கல் டான்ஸ்.. செம அழ்கு!!!
சண்டை காட்சி.. டைட்டிலேயே புரூஸ் லீக்கு என்று போட்டுவிட்டார்கள்...அதற்க்கு ஏற்றவாரே சண்டை காட்சிகளில் கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்திருக்கிறார்கள்.மீன் மார்க்கெட் சண்டை அருமை!!அதை தொடர்ந்து வரும் கதாநாயகன் கதாநாயகி காட்சி சூப்பர்... இன்றை பெண்கள் வண்டியில் என்ன எல்லாம் பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார்கள் என்று அட்டகாசமாக் சொல்லியிருக்கிறார். அது ஒரு வகையில் நிதர்சனமான காலத்தை சுட்டிகாட்டுகிறது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை..
முதல் பாதியை கொஞ்சம் இலுக்கிர மாதிரி போனாலும் நல்லா தான் இருக்கு. இரண்டாம் பாதியில் எப்போதும் போல எப்படி முடிக்கிறது என்று தெரியாமல் அவச்ரமாக முடித்த மாதிரி இருக்கிறது.
இது ஹிரோசம் படம். அதனால் வில்லனை எவ்வளவு ஹைப் ஏத்தனுமோ அவ்வளவு ஏத்தியிருக்கலாம்.. ஆனால் அது பட்த்தில் வெகு குறைவு. கடைசி சீன்ல தான் நரேன் பட்டு பட்டுனு சிக்ஸ்ர் அடிக்கிறார். அதுவரைக்கும் அவருக்கு பேட்டிங்க் செய்ய சேன்ஸே தரலை பட்த்தின் கேபடன் மிஷ்கின்.
ஆமா எதுக்கு இந்த பட்த்திற்கு தேவையில்லாம ஒரு ஹிரோயின் ??? அதுவும் பயங்கர மொக்கை பிகர்!!
நிறைய எழுதலாம்.. ஆனால் இன்னும் நிறைய் பேர் விமர்சனம் எழுதனும்லா.. அதுனால் முடிச்சுரேன்..
முகமூடி.-புது பலகாரம்
பலநாள் சாப்பிடாம இருக்கிரவனுக்கு தேவாமிர்தம்!!
சாப்பாட்டு ராமன்களுக்கு இதுவும் ஒரு அயிட்டம் மட்டுமே!!!

Read more...

கொடுமையிலும் கொடுமை.......



 கொடுமையிலும் கொடுமை.......

2000 வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 4 ஆண்டுகள் என் பணி முழுவதும் காடு சார்ந்தே இருந்தது.வீட்டுக்கு வருவது என்பது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை. அதுவும் சில மணி நேரங்கள் மட்டுமே. பெரும்பாலும் சத்தியமங்களம் மற்றும் மேற்கு மலைத்தொடரிலே பெரும்பாலான நேரம் என் வாழ்வு கழிநத்து. அப்போதுதான் காடு மற்றும் காட்டியிர் பற்றிய புரிதல் ஏற்பட்ட்து.அது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிசமே.சுமார் 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சேமித்து வைத்துருந்தேன்.. என் நன்பன் சிவா எல்லாத்தையும் ஒரு நாள் லவட்டி விட்டான். அப்போது தெரியாது இப்படி தமிழுக்கு சோதனை தரும் வகையில் நான் எழுத ஆரம்பிப்பேன் என்று.
அந்த அனுபவம் அந்த பணியில் இருந்து 2004 வெளிவந்த பிறகும் எனது ஆர்வம் தொடர காரணமாக இருந்த்து. புத்தகங்கள் வேறு முழுவீச்சில் படிக்க ஆரம்பித்து இருந்தேன். இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ்நாடு மட்டும் அல்ல பல புதிய நன்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தனர்.அப்போது அறிமுகம் ஆனவர் தான் ரிச்சட்.சென்னை கஸ்டம்ஸில் உயர் பணியில் இருப்பவர்.அருமையான மனிதர்..ஏதாவது இந்த இயற்கையை காப்பாற்ற நம்மால் முடிந்த்தை செய்யவேண்டும் உந்துதலோடு இருப்பவர்.அவரின் தொடர் முயற்சியால் காட்டுயிர் குறித்து ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்னும் சொல்லாடல் நன்பர்களின் மத்தியில் உருவானது. மிகுந்த விவாத்திற்கும் தொடர் அலசல்களுக்குப் பிறகும் ரீடர்ஸ் டைஜிஸ்ட் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுயிர் குறித்த செய்திகளை ஒரே இட்த்தில் கிடைக்கும் வித்த்தில் டைஜிஸ்ட் இதழ் ஆரம்பிக்க முடிவு செய்தோம். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு அதன் பெயர் “மழைக்காடு “ என்று பெயரும் மழைக்காட்டுக்கே உரித்தான் தவளை அதன் லோகவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட்து.

வணிகரீதியலான பத்திக்கையாக இருக்க்கூடாது என்பது விவாதத்தின் போது முடிவு செய்யப்பட்ட்தால் விளம்பரம் வாங்கவோ பிரசரிக்கவோ கூடாது என்பதையும் முடிவு செய்தோம். உடனடியாக பத்திரிக்கையை முறைப்படி பதிவு செய்ய அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிக்கைக்கான வேலைகள் அனைத்தும் பகிர்ந்தழிக்கப்பட்டு அவரவருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்ட்து. முழுவீச்சில் வேலைகள் நடைபெற்றது. பணத்திற்கு ரிச்சட் முழு பெருப்பேற்றுக்கொண்டார். அதுபோக ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியும் செய்ய முடிவுசெய்யப்பட்டது.இதழ் தனி இதழாகவும் வருட சந்தா அடிப்படையில் விநியோகிக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்ட்து.
2006ம்வருட்த்தின் இறுதிப்பகுதியில் முதல் இதழ் தயாரானது. நான் எடிட்டோரியல் குழுவில் இடம் வகித்தேன்.முதல் இதழ் வந்த போது பலராலும் பாராட்டப்பட்டது.இந்திய டுடே மற்றும் தமிழின் பல இதழில் எங்களின் இதழைப்பற்றி எழுதி பரவலான கவனத்திற்கு வித்திட்டது.தொடர்ந்து காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கியது. இந்திய் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சந்தாவும் பல பக்கம் இருந்தும் வர ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் அத்தனை ஊடகங்களுக்கும் நமது இதழ் போய் சேரவேண்டும் என்று கருத்து வலுப்பட்ட்து. அதற்குரிய பணிகளை முழுவீச்சில் எடுத்து செல்லப்பட்ட்து. அதற்கான பணியில் அத்தனை ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் முகவரிகளை சேகரிக்கும் பணியை நான் ஏற்றேன்.
ஒருநாள் காலையில் தின்மலர் அலுவலகத்திற்கு சென்றேன் ..அவர்களின் அத்தனை முகவரிகளையும் வாங்குவதற்காக!அப்போது ஈரோடு அலுவலகத்தில் அவரிகளின் உரிமையாளர் மஞ்சுளா மேடம் இருந்தார்.நான் வரவேற்பு ஊழியரிடம் விசயத்தை சொல்ல அவர் எம்.டியிடம் கேட்க .,அவர் என்னை அவரின் கேபினுக்கு வரவழைத்து என்ன விசயம் என்று கேட்க ..பேச ..பேச சுமார் 2 மணிநேரங்கள் இயற்கையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். அவர் எங்களின் பணியைப் ஒரு நேர்முகம் ஒன்று கொடுங்கள்.. நாங்கல் பிரசரிக்கிறோம். என்றார். அதற்கு நான் எங்களை பற்றி வேண்டாம் இயற்கையின் அவசியத்தை பற்றி தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பத்திரிக்கையில் பதிவு செய்யுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே எழுதுங்கள்.. அதை நாங்கள் பிரசரிக்கிறோம். என்று சொல்லிவிட்டார்..
அட..இது என்னடா புள்ளையார் பிடிக்க போய் புலியை பிடித்த கதையாய் ஆயிற்றே என்று கருதி உதவி ஆசிரியர் கல்பானா அவர்களிடம் என் சூழ்நிலையை சொல்ல அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள் நான் எடிட் செய்து மாற்றிக்கொள்கிறேன் என்றார். அப்படி எழுதினது தான் என் முதல் பத்தி யானைகளை பற்றி....அது ஆச்சு நடந்து 5 வருடம்..அப்ப எழுத ஆரம்பித்தவுடன்.. கலபானா தொடர்ந்து எழுதுங்க சார் என்று சொல்ல எழுத ஆரம்பிச்சது தான்.. இப்ப இங்க வந்து இப்படி உங்களிடம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்....

குறிப்பு:இடையில் SWG ஆசியாவிற்கான கான்பிரன்ஸ் கலந்துகொண்ட வாய்ப்பு ம்ற்றும் அனுபவம்..பசுமைதாயகத்திற்கு எழுத வந்த சுவரசிய கதை எல்லாம் அடுத்த பதிவில்...

Read more...

வீடு கட்டலையோ வீடு ...வீடு....

>> வியாழன், 30 ஆகஸ்ட், 2012



 வீடு கட்டலையோ வீடு ...வீடு....


இன்றைய நாள்  எனக்கு அந்த்ரங்கமாக மகிழ்ச்சி நாள்.அதே நேரத்தில் ஒரு சமுகத்தின் உறுப்பினர் என்ற முறையில் மிகுந்த வருத்தமான நாளும் கூட.
தமிழனாய் பிறந்த அத்தனை பேருக்கும் ஒர் கனவு உண்டு. அது சொந்தமாக வீடு கட்டுதல்.அதுவும் மிடில்கிளாஸ் குடும்பம் சொல்லவே தேவையில்லை..அதுவும் அரசு உத்தியோகத்தில் இருந்தால் அவ்வளவு தான்!!மேற்குரிய எல்லார் மனநிலையும் எப்படியாவதுசொந்தமா வீடு கட்டனும் ..அவ்வளவு தான்.. அது தலையை அடமானம் வைச்சாவது ...கடன் வாங்கியாவது வீடு கட்டனும் அவ்வள்வே...
இந்த மனநிலையை  நச் என்று பிடித்துகொண்டார்கள் தனியார் வங்கிகள். இதில் இவர்கள் அடிக்கும் கொள்ளை... மெகா கொள்ளை..கொஞ்சம் நஞ்சம் அல்ல!!!
நானும் மிடில்கிளாஸ் வகைதான். என் அம்மாவும் அரசு ஊழியர் தான் .. அப்பறம் மீதி கதை எல்லாம் மேற்கூரிய கதைதான். 1999 வாக்கில் சொந்த வீடு கட்ட ஆர்ம்பித்தோம். அப்பொது .பெரியதாய் ஒன்றும் தோன்றாத வயது. ஆனால் அப்போதே சொன்னேன் ...பொருள் நாம் வாங்கி கொடுத்து வீடு கட்டுவோம் என்று.. ஆனால் என் அம்மா கேட்கவில்லை. பிளானில் ஆரம்பித்து அனைத்தும் ஒரு இஞ்சினியரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட்து.வீடும் கட்டி முடிக்கப்பட்ட்து . ஒரு பகுதி பணம் லோன் போடலாம்..அப்போது டேக்ஸ் ரிடெக்ஸ்சன் கிடைக்கும் என்ற ஆசையில் லோனும் போட்டர்கள்.. எல்.ஜ.சியில் லோன் போட்டோம். நியாமான வட்டி .. ஆனால் அவர்கள் பாலிஸி கம்பல் சரியா புதுசாக போடச் சொல்லி தலையில் இரண்டு பாலிஸிகளை கட்டிவிட்டார்கள். வீட்டின் லோனுக்கும் பணம் கட்டனும் மாதம் ..மாதம்.. அதே நேரத்தில் பாலிஸிக்கும் பணம் கட்டனும் ..இது ஓவர் பணச்சுமை...இந்த சமயத்தில் தான் உள்ளே புகுந்தார்கள்... தனியார் வங்கி.. ஜசிஜசிஜ... ஜெகஜ்ஜால கில்லாடிகள்...எதுவும் நீங்க செய்யவேண்டாம்.. லோனுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும். என்ற வார்த்தை என் அம்மாவின் காதில் தேனாய் பாய்ந்த்து விளைவு .. மாற்று லோனை.. ஜசிஜசிஜக்கு.. சூப்பர் பிரய்ன்வாஸ் செய்து ..அழகா மாற்றிவிட்டார்கள்... அப்பறம் தான் தெரிந்த்து.. காலை விட்ட்து முத்லை வாய்க்குள் என்பதை... பணம் கட்டரம் கட்டரம்.. சுமார்.. 5 வருடங்கள் கட்டியும் முதல் குறைந்த்தா என்றால் குறையவில்லை.. சும்மா சொல்லக்கூடாது.. சும்மா குத்து குத்துனு குத்தராங்கப்பா...

சில மாதங்களுக்கு முன்  என் அம்மாவிடம் எதேச்சையாக பேங்க லோன் எவ்வளவு முடிந்திருக்கு என்று கேட்டேன்.. அவங்களுக்கும் சரியாக தெரியாத்தால் வங்கிக்கு சென்று எவ்வளவு கட்டியிருக்கிறோம் ..என்று கேட்டால்.. அதை தருவதேற்க்கே இரண்டு நாள் ஆகும் என்கிறார்கள்.. பிறகு அதையும் வாங்கிப் பார்த்தால்.. மயக்கம்  வராத குறை... மீதி பணத்தை உடனடியாக கட்டி விடுகிறோம்.. எவ்வளவு என்று பணத்தை கேட்டு கடந்த இருபது நாட்களுக்கு முன் மீதி பணத்தை கட்டி விட்டோம்..தலைப்பாகையோடு போகட்டும் என்று... விட்ட்தா சனியன்.. விடாது கருப்பு போல.. தொடர்ந்து வருகிறது.. டாக்குமெண்ட் வந்து விட்ட்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் வங்கியில்.. போனால் அரசு கொடுத்த சான்றுகளுடன் வந்தால் தான் டாக்குமெண்டை தருவார்களாம்.. எவன் வீட்டு டாக்குமெண்டை எவன் தருவது... எனக்கோ செம கோவம்.. சரி என்று அவர்கள் கேட்ட அத்தனை சான்றுகளையும் கொடுத்து டாக்குமெண்ட் கைக்கு வரட்டும் என்று இருந்தேன்.. இன்று அனைத்தும் கைக்கு வந்த்து.
வங்கி மேனஜரிடம் சென்று கேட்டேன்.. “ லோன் கொடுக்கரதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் கேட்க வேண்டியது தானே.. இப்ப இத்தனை டாக்குமெண்டு கேட்கறீங்க.. பணம் கைக்கு வந்துவிட்ட்தால் .. “இத்தனைக்கும் நான் ஊட்கத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தும் முடிந்த வரை லேட் செய்கிறார்கள்...
நான் டாக்குமெண்ட் வாங்க அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் .மத்திய வயது  ..வரின் லேன் ஸ்டேட்மெண்ட் கொடுங்க என்று கேட்டு வாங்கினார்... எவ்வளவு மீதி பணம் கட்ட வேண்டும் என்று கேட்டார் ..அந்த பணியாளர் சொன்னவுடன்.. அந்தம்மாவிற்கு மயக்கம் வராத குறை.. இத்தனைக்கும் அந்த் அம்மா லோனை பிக்ஸிட் வட்டியில் போட சொன்னதை ப்ளோட்டிங்கில் போட்டு இருக்கிறார்கள்.. லோன் போடும் போது 8 சதவீதம் இப்போது 15 சொச்சம் சதவீதம்...அந்த அம்மா கேட்டுச்சு பாருங்க கேள்வி...ஆள் கிடைச்ச போதும்.. உங்கிட்ட மாட்டிட்டா ஆளை கொனுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க.. இப்படி நான் மாசம் மாசம் பணம் கட்டிட்டு இருந்தேனா... நான் செத்த பிறகும் கட்ட வேண்டியது தான்.... நீங்க எல்லாம் உருப்பிடுவீங்க...

நாளை இதே கேள்வியை நீங்களும் கேட்காமல் இருக்க... லோன் போடும் ஆயிரம் முறை அல்ல... பத்தாயிரம் முறை யோசிங்க.. டாக்குமெண்டை நல்லா படியுங்க....

Read more...

டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்...

>> புதன், 29 ஆகஸ்ட், 2012





டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்....

இன்று தமிழ்நாட்டில் மக்கள் மனதில் பரவலாக எதிர்பார்க்கும் ..ஆவோலோடு உள்ள விசயம் டாஸ்மார்க் மூடுவிழா காணுமா ...இல்லையா என்பதே..

முதலில் பூரண மதுவிலக்கா அல்லது டாஸ்மார்க் முடுவிழா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலும் பூரண் மதுவிலக்கு இருக்காது. மூடினால் டாஸ்மார்க்கு மட்டும் தான்.

இரண்டாவது விசயம் .. தற்போது ஜெ .அரசு முன்னை காட்டிலும் பரவாயில்லை என்பது தான் பரவாலான கருத்து. அரசு பணியாள்ர் தேர்வு மற்றும் மக்களின் பிரச்சனைக்கு உடணடியாக ஆலோசிப்பது என்று கொஞ்சம் மக்களின் பல்ஸ் பார்த்துதான் நட்ந்துகொள்கிறார் ஜெ. ஆனால் ஒரு விசய்த்தை தவிர... அது அவரை தூங்க்விடாமல் செய்யும் மின்வெட்டு!!

இப்பிரச்சனை ஜெ அரசு என்னதான் நல்லது செய்தாலும் இப்பிரச்சனை அனைத்து மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் சரியான தீர்வு காணாவிட்டால்.. கருணா கதி தான் இவருக்கும் ....நாடாளுமன்ற தேர்தலில்...

தற்போத நிலையில் திமுக அரசு மத்தியில் ஆட்சி வகிப்பதால் அதிமுக ஆரசால் பலவிசயங்களில் நினைப்பதை செய்ய முடிவதில்லை என்பது நிதர்சனமே!கூடங்குளம் கூட ஜெ வின் கணக்கு வேறு. முதலில் கூடங்குள மக்களை ஆதரித்தார். பிறகு தமிழ்க மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க கூடங்குளம் பிரச்ச்னைக்கு மத்திய அரசுக்கு ஒரு பல்டி அடித்தார்.அது ஒரு சிறந்த யோசனை... நல்ல அரசியல் தான். இப்போதும் கூடங்குள முழு மின்சாரத்திற்கும் ஆட்டைய போட காத்திருக்கிறார்..முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். அது கிடைக்காத படசத்தில் ஜெ .எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் மீண்டும் கூடங்குள மக்களோடு இரண்டற கலந்து கூட போஸ் கொடுப்பார்.

இப்படிப்பட்ட மின்வெட்டால் கிடைக்கும் கெட்ட பெயர் தொடர்ந்தால் நாடாளுமன்ற தெர்தலில் கனிசமான இடங்களை இழக்க நேரிடும் என்பதையும் ஜெ தெளிவாக் உணர்ந்துள்ளார். கருணாவிற்கு தாரை வார்க்க நேரிடம் அந்த கணிச்மான இடங்களை.. மற்ற யாரும் ஆட்டைய போட முடியாது.

ஜெ.வின் கையில் இருக்கும் பிரும்மாஸ்திரம் தான் இந்த டாஸ்மார்க் மூடுவிழா. இதை சும்ம காந்தி பெயருக்கு எல்லாம் அவர் வேஸ்டா விட்டு சும்ம சிம்பிள் தீபாவளி கொண்டாட் விரும்பவில்லை.மேலும் மின்வெட்டு பிரச்சனை ஒருவேளை நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால் .. தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தை அறிவிக்கவே அமைதியாக இருக்கிறார்.

ஜெ.வுக்கு எப்போது டெல்லி நாற்காலியின் மீது ஒரு கண் உண்டு. ஏன் ஆசையும் உண்டு. காங்கிரஸ் தற்போது மிகுந்த ஆட்டம் கண்டு படுத்து கிடக்கு. ஆனால் அதற்கு எதிராக அரசியல் நடத்தும் பாரதிய ஜனதவோ சரியான பிரதம் வேடபாளர் இல்லாமல் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்பதை ஜெ .நன்றாக அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் ஜெ . த்ற்போது மத்தியில் அடக்கி வாசிக்கிறார். ஆனால் காங்கிரஸ்க்கு பிரதம் வேட்பாளர் ரெடி.. ராகுல்.. அப்படி இல்லையென்றால் கூட  சிதம்பரம் ரெடியாக உள்ளார்.. ஒரு வேளை சோனியா கூட ஆகாலாம்.. ஆனால் காங்கிரஸ் இவ்வளவு பிரச்சனையிலும் தில்லாக இருக்க காரணம் சிறுபான்மை ஓட்டுகள் தான். அவர்கள் எக்காரனம் கொண்டும் ப்.ஜ.காவிற்கு ஒட்டு அளிக்க மாட்டார்கள் எபதுதான். அதற்காக தான் சச்சார் கமிட்டி அறிக்கையை கூட திட்டமிட்டு அப்படியே அமுக்கிவிட்டார்கள். அது வெளிப்பட்டு இருந்தால் சிறுபான்மை ஓட்டுகள் விசயத்தில் கொஞ்சம் மாற்றம் நட்ந்திருக்கும் .

இந்த சூழலை தான் ஜெ .திடமாக நம்புகிறார். தேசிய கட்சிகள் பலம் இழந்துள்ள சூழலில் மாநில கட்சிகள் பலமாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்கும் என்று.அப்படி ஓங்கும் படசத்தில் ஒரளவு இடங்களை கைப்பற்றும் நிலையில் நிதிஷ் மற்றும் சில முதல்வர்களின் ஆசியோடு பிரதம நாற்காலியில் அமரும் ஆசையுண்டு ஜெ.விற்கு.அதனால் தான் டாஸ்மார்க்கு மூடுவிழாவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அறிவித்து 40 சீட்டையை அள்ள் அநினைக்கிறார். ஒரே கல்லில் பல மாங்காய்... திமுக் அவுட்,பிரதம்ர் பத்வி, தேசிய அரசியல்.. உலகாளாவிய அரசியல்.. வரலாற்றில் இடம் பிடிப்பது.. மற்றும் இன்ன பிற...

குறிப்பு:இந்த சீனை எதிர்பார்த்தே தமிழக அரசியலில் பல தலைகள் ஆவலோடு திராட்சை பழத்திற்கு ஆசைப்பட்ட நரி போல் காத்திருக்கிறார்கள். ஆம் ஒருவேளை ஜெ .மத்தியில் அமரும் போது ஜெ வின் சுட்டு விரல் நீட்டும் கைநாட்டு தான் தமிழக முதல்வர்  (தலையெழுத்து .. என்ன செய்வது)..இதற்கு காத்து தான் சரத்,சீமான்... பலர் உள்ளனர். இந்த லிஸ்டில் அதிமுக வில் முன்னனியில் உள்ளவர் நீங்கள் நினைக்கிர மாதிரி பண்ணீர் செல்வம் இல்லை... செங்கோட்டையன் தான் இருக்கிறார். ஏன்னென்றால் . செங்கோட்டையன் நீக்கம் என்பதே ஒர் அரசியல் பக்க ஸ்டண்ட்!!!

இதில் ஸ்டாலினும் சந்தோசமாக இருக்கிறார்... ஆமா ஏன்னா திண்ணை காலியான் சரி..... என்ற மன்நிலையில்...

Read more...

லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 27 ஆகஸ்ட், 2012


 லவுட்ஸ்பீக்கர்

கொசுக்கடி
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்தவாரம் மின்வெட்டை தமிழகம் சந்தித்த்து. ஒரு நாளை 12 மணி நேரத்திற்கும் மேல மின்வெட்டு மக்களை என்ன சேதி என்று கேட்டு விட்ட்து.வெகுண்ட மக்கள் ஆங்காங்கே மறியல் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அரசும் மக்களின் கோபத்தை கண்டு அரண்டுவிட்ட்து. தெய்வீனமாக காற்று கண் அசைக்க மக்களும் அரசும் கொஞ்சம் பிழைத்துக்கொண்டனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மின்வெட்டை தவிர்க்க இயலாது என்கிறது ஒரு அரசு பட்சி!!

ஆப்பு
சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் இஞ்ஜினியர்களை பார்க்கும் அவலம் ஏற்பட்ட்து. அதே போல் ஆசிரியருக்கு நல்ல சம்பளம் என்பதாலும் வருட்த்திற்கு சுமார் 180 நாட்கள் தான் வேலை என்பதால் மக்களின் கவனம் ஆசிரியர் வேலை பக்கம் சமீப ஆண்டுகளில் திரும்பியது. விளைவு பெரும்பாலோர் பி.எட் படிக்க ஆரம்பித்தார்கள். இன்று திரும்பியபக்கமெல்லாம் பி.எட் தான். இதனால் ஆசிரியர் வேலைக்கு தயாராய் இருப்பவர்கள் சுமார் 5 ல்டசத்திற்கும் மேல். இவர்களுகான தகுதி தேர்வில் இவர்களின் ல்டசனம் வெளிப்பட்ட்து சுமார் 6 ல்டசம் பேர் எழுதிய தேர்வில் தேர்ச்சியுற்றவர்கள் வெறும் 2 ஆயிரம் சொச்சம் தான். இவர்கள் கையில் குழ்ந்தைகள் எதிர்கால்ம்... தமிழ்நாடு உருப்பிட்டாப்பில மாதிரி தான்...

ஊடகம்
புதிய தலைமுறை முதல் வருட்த்தை கடந்திருக்கிறது. வாழ்த்துகள். துள்ளிய காட்சிகள்,அதிகம் லைவ்கள் என்று புதிய தட்த்தில் பயணிக்கிறது. ஆனால் இவை மாநில அளவிலான செய்திகளை முன்னிலை படுத்தவில்லை.இது ஜிம்கி வேலை.அரசுக்கு எதிர்ப்பு இல்லாதவகையில் காய் நகர்த்துகிறது. இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகம் உள்ளது. அப்போதுதான் நிலையாக ஒரு நல்ல சேனலாக இருக்கமுடியும் இல்லையென்றால் விரைவில் பத்தோடு பதினொன்றாக மாறிவிடும்.

அல்வா
ஈமு கோழி விவகாரம் விஸ்ரூபமெடுத்து அது நாட்டுக்கோழி, கொப்பரைத்தேங்கா என்று பலவகையில் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது. அரசோ இன்னும் கண்டும் காணத்துமாதிரி  போய்கொண்டு இருக்கிறது.ஈமு மோசடியின் சூத்திரதாரி குருவை இன்னும் பிடிக்க முடியாத்து அரசின் மேல் அவந்மபிகையை ஏற்படுத்துகிறது.

கதகளி
கேரளாவை சேர்ந்த சகானா என்ற பெண் 50 ஆண்களை ஆட்டைய போட்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒர் எச்சரிக்கை மணி. தமிழகத்தில் என்ன பெண்களுக்கு அவ்வளவு டிமேண்டா?? ஒவ்வொரு ஆண்களும் சொல்லும் காரணம் எல்லாம் சின்ன புள்ளை தனமாக உள்ளது. கல்யாணம் செய்தாங்களாம் பிறகு இரண்டு வாரத்திலேயே போய்ட்டாங்களாம்... அந்த அளவுக்கு கல்யாணம் டம்மியாகி விட்ட்தா???

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP