அழிவின் விழிம்பில்..-25

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


எறும்புத் தின்னி
the indian pangolin -manis crassicaudata(gray)

” பங்கோலின்” என்றழைக்கப்படும் எறும்பு தின்னிகள் கூரிய நுண்ணறிவுள்ள விலங்குகளாகும்.மற்ற பாலூட்டிகளை போல் அல்லாமல் உடல் முழுவதும் அமைந்துள்ள செதில்கள் இதற்குப் பாதுகாப்பு கவசமாக பயன் படுகிறது.உடலில் உள்ள முடிகளே காலப் போக்கில் செதில்களாக மாறிவிட்டன.உடலின் அடிப்பகுதியில் செதிள்களுக்கிடையே கரடுமுரடான முடிகள் இருப்பதைக் காணலாம்.அச்சுருத்தப்படும் நேரங்களில் தனது உடலை  இரும்பு குண்டைப் போல சுருட்டிக் கொள்ளும் இதன் தனமை,ஒரு சிறப்பு மிக்க அமசமாகும்.இதர்க்கு நல்ல உடல் வலு இருப்பதால இவ்வாறு சுருட்டி கொண்ட இதன் உடலை திருமப இயலபான நிலைக்கு விரிப்பது என்பது ந்ம்மால் இயலாத செயலே.
 
தந்து முன்னங்காலகளைவிட் நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகலையும் செதிள்களையும் தோண்டியெடுத்து  இது திண்ணும் திறன் கொண்டது.இது பொதுவாக பொந்துக்ளில் வசித்தாலும், ந்ன்கு மரமேறி மர எறும்புக்ளை தேடி உண்ணும்.பற்றிப் பிடிக்கும் திறம் கொண்ட வால்,எறும்புத்தின்னி மரமேறும்போது தேவையான பிடிமானதை கொடுக்கிறது.

இந்திய எறும்புத்தின்னி ச்ம்வெளி பகுதிக்ளிலும் இமயமலையில் சற்றுத் தாழ்வான பகுதிக்ளிலும் காணப்படுகிறது.பங்கோலின் இனத்தைசார்ந்த சீனா பங்கோலின் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமய்மலை பகுதிகளில் காணப்படுகிறது.உறைவிட் அழிப்பாழும் மருத்துவ குண்ம கொண்டது என்ற தவறான நம்பிக்கையாலும் இது வேட்டையாடப் படுவதால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 

Read more...

அழிவின் விழிம்பில்..-24


சிவப்பு பாண்டா
red panada-ailurus fulgens -(f.cuvier)

சிவப்பு பாண்டா இரவில் வேட்டையாடும் மரத்தில் வசிக்கும் விலங்காகும்.கரடிக் குடும்பத்திற்க்கு நெருங்கிய பூனை போன்று தோன்றும் சிவப்பு பாண்டா அழகிய ரோமம் அடர்ந்த செக்கர் நிறத் தோல கொண்டது.வெள்ளையான முகமும் உருண்டையான தலையும் கொண்டது.மென்மயிர்க் கொத்துள்ள வாலும் அதில் மங்கிய அல்லது திண்ணிய செந்நிற வளையங்களும் வால முனையில் கருமையும் காணப்படும்.
தரையில் மெதுவாக செல்லும் சிவப்பு பாண்டா மரங்களில் வேகமாக ஏறக் கூடியது.நேபாளம் ,சிக்கிம்,பர்மா மற்றும் தென் சீனாவை ஒட்டியுள்ள இமயமலை பகுதிகளில் காணலாம்.மூங்கில்  தலைகள் ,பழங்கள்,வேர்கள் ,பூச்சிகள்,பற்வையின் முட்டைகள் ஆகியவற்றை தின்று வாழும்.ஆயினும் உயிரியல் வளர்க்கப்படும் சிவப்பு பாண்டாக்கள் ரொட்டி,பால் ,முட்டைகள் மற்றும் சிறிய பறவைகளை கூடத் தின்னவல்லவை.இது பூனையை போலச் சீறவும் கரடியை போல உறுமவும் ,நாயை போல குரைக்கவும் வல்லது.பொதுவாக இது தந்து மூஞ்சியை நீரில் வைத்து கரடியைப் போல நீரை உறிஞ்சிக் குடிக்கும்.பூனையை போல சிவப்பு பாணட தனது வளை நகங்களை சற்றெ காலுக்குள் இழுத்து வைத்து கொள்ளக்கூடியது. 

Read more...

அழிவின் விழிம்பில்..-23


கரடிப் பூனை
(binturong(or)bear cat-arctictis binturong (raffles)

பூனைக் குடும்பத்தை சார்ந்த மற்ற பூனைகள் போல் அல்லாமல் கரடி போல் இருப்பதாலும் பறட்டையான உடல் இருப்பதாலும் இது கரடி பூனை எனப் பெயர் பெற்றது.இது அடர்ந்த காடுகளில் 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வசிக்கும்.கருமையான முடிகொண்ட தோலுள்ள இப்பூனையின் உடலில் வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள் நிறமுடைய முடிகளும் இருப்பதால் நரைத்தது போல் தோன்றும்.இதன் குறுகிய காதுகளின் முனையில் நீளக் கொத்தாக முடி இருக்கும்.இதன் பற்கள் சிறியன.
 
கரடிப்பூனை மரத்ஹில் வசிக்கவல்லது.இதன் அடர்த்தியான வால் மரக்கிளையைப் பிடிக்க மற்றொரு கரம் போல உதவுகிறது.இது இரவில் வேட்டையாடும் விலங்காதலால் பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் தலையை வாலுக்கடியில் சுருட்டி வைத்து இருக்கும்.பொழுது சாய்ந்ததும் மரப்பொந்தை விட்டு வெளியேறி சற்றெ திறந்த தனது உதடுகள் மூலம் “உஸ்” என்ற சீறல் ஒலி எழுப்பிக்கொண்டே தந்து இரையைதேடிப் புறப்படும்.

அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் காடுகளில் கரடிப்பூனை வசிக்கிறது.அடர்ந்த மரங்களினுடே இது மெதுவாக ஆனால் திறமையாக இடம்பெய்ர்ந்து செல்லக்கூடியது.இது சிறிய வகை பாலூட்டிகள் பறவைகள் மீன் மண்புழுக்கள் பூச்சிகள் மற்றும் பழங்களை தின்று வாழ்கிறது. 

Read more...

அழிவின் விழிம்பில்..-22


புள்ளி லிங்சாங்
(spotted linsang-prionodon pardicolor(hodgson))

புள்ளி லிங்சாங் புனுகுப் பூனை நீள் வடிவான உடலும் முறுகிய் மங்கிய நிறமுள்ள் தோலும் அதில் கரும் புள்ளிகளும் கொண்டு  விள்ங்கும்.நன்கு ம்ரமேறவும் திறமையாக வேட்டையாடவும் வல்லது.கூர்மையான தலை சிறிய காலகள் குறுகிய வால் வாலில் 8 முதல் 10 வரை கரு வளையங்கள் ஆகியவை கொண்டு விளங்கும்.உடல் முழுவது நீளப்பாங்காக வரிசையாக அமையப் பெற்ற் புள்ளிகள் கழுத்து மற்றும் கால்களின் அடிப்பகுதியில் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியான வரிகளைப் போலத்தெரியும்.

மலைப் பகுதிக்ள் மற்றும் காடுகள் நிறைந்த மத்திய மற்றும் கிழக்கு இமயமலை பகுதியில் புள்ளி லிங்சாங் வாழ்கிறது.பூச்சிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலுட்டிகள் இதன் இரையாகும்.தரையில் தந்து வயிற்றுப்பகுதியில் உர்ந்து இஅரை விலங்கினைப் பிடிக்கும்.இது மிகவும் மெலிந்து கணப்படுவதால் ,கனத்த உடல் கொண்ட நஞ்சுடைய பாம்பு என்றே பல சமயம் மறுபட்டுத் எண்ணத் தோன்றும்.

Read more...

அழிவின் விழிம்பில்..-21


புனுகுப் பூனை.
(the civets)

புனுகுப் பூனைகள் (viverridae) ' விவரிடே’ என்னும் குடும்பட்த்தைச் சேர்ந்தது.பூனைகள் இஅவற்றின் உறவினர்கள் என்று சொல்லாம்.புனுகுப்பூனை நீண்ட உடலையும் குறுகிய காலகளையும் நீள் வடிவமான தலையையும் துறுத்திய மூஞ்சியையும் கொண்டது.கூர்மையான பார்வை ந்ன்கு மோப்பம் பிடிக்கும் நாசி ,துல்லியமாக கேட்கும் செவிகள் ஆகியன் இதன் சிறப்பு அம்சங்களாகும்.புனுகுப்பூனைகளை முற்றிலுமான ஊண் உண்ணும் விலங்குகள் என்று வகைப்படுத்த முடியாது .அவ்வப்போது இவை தாவரங்களையும் உண்டு வாழும்.

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP