என் பிரியமான தோசை!!!

>> ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

என் பால்ய கால பருவத்தில் நான் ஒரு ரோஸ்ட் பிரியன்.ஏன்... இன்றும் கூட ரோஸ்ட் பிரியன் தான் நான்.அப்படி சொல்வதில் எனக்கு ஒன்றும் எந்த இழுக்கும் இல்லை. அப்படி வந்தாலும் கவலைபடபோவதுமில்லை. அது ஒரு ரோஸ்ட்க்கு செய்யும் ஒரு மறியாதையாகவே இருந்து விட்டுப்போகட்டும்.

இன்றும் கூட வயது வித்தியாசமின்றி ரோஸ்ட் மனிதர்களின் மனங்களை வென்று ஆட்சி புரிகிறது.இது ஒரு உளவியள்ரீதியான காரணம்...வீட்டில் இட்லி மற்றும் தோசை என் இத்யாதிகளை அனைத்தும் கிடைக்கும் .ஆனால் உணவகங்களில் கிடைப்பது போல அந்த மிகப்பெரிய ரோஸ்ட் வீட்டில் கிடைப்பதில்லை. காரணம் பெரும்பாலான இல்லங்களில் அவ்வளவு பெரிய தோசைக்கல் மற்றும் அடுப்பு இல்லை.அதனாலோ என்னவோ.
இன்றும் கூட உணவங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது என் முதல் ஆர்டர் ரோஸ்ட் தான். சில சமயங்களில் ரோஸ்ட் சிற்ப்பாக இருந்தால் இரண்டாவது ஆர்ட்ரும் அதுவாக இருக்கும்!!!என் குழந்தையும் அவ்வாறே.அதே சமயத்தில் என் இல்லாள் குன்னூரை சேர்ந்தவர். அங்கே இட்லி சூடாக சாப்பிட முடியாதோ என்னவோ ..எங்கே சென்றாலும் இட்லி. !! இது ஒரு வகை வளர்ப்பு சூழல் காரணமாக கூட இருக்கலாம் என்பது என் எண்ணம்.
யாரிடமாவது தோசைக்கும் ரோஸ்ட்டுக்கு வித்தியாசம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு நிமிடம் முழிப்பார்கள்!! என்ன..... தோசையை இருபக்கமும் வார்க்கவேண்டும் ..ரோஸ்ட்க்கு அப்படி அல்ல. ஒரு பக்க வார்ப்பு மட்டுமே!! திருப்பி போடமாட்டார்கள்.உணவகங்களில் கிடைக்கும் நைஸை கூட திருப்பி போட மாட்டார்கள்.

தோசைக்கு மாவு கரைக்கும் போது மிக முக்கியம் அதில் சேர்க்கும் உப்பு. பல இல்லங்களில் உப்பை சரியாக போடமாட்டார்கள். எனக்கு உப்பு மட்டும் சரியாக இருக்கவேண்டும் ..அது என்ன உணவாக இருந்தாலும். அதிகம் போனாலும் சரி...குறைந்தாலும் சரி.. இந்த சிறப்பு உப்புக்கு மட்டுமே உண்டு.

அடுத்து தோசை எப்படி இருக்கவேண்டும்... என்னைப்பொருத்தவரை தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னிக்கு நார்மலாக எண்ணை அல்லது நெய் ஊற்றி சுட்டால் போதும் . சாம்பாருக்கு தோசை கொஞ்சம் மித மொத்தமாக இருக்கவெண்டும்.மெல்லியதாக் இருந்தாலும் சரி...நன்றாக இருக்கும் .
காரணம்.. சாம்பாரை ஓரு ஒரத்தில் அதாவது தோசையில் 35 சதவீதம் நனைந்த மாதிரி ஊற்றிவிட்டு அது ஊர ஊர சூடான தோசையை வெறும் சாம்பாரில் தொட்டு தொட்டு விள்ளல் போட்டால்.... அதற்கு முன் தோசை பிட்டு வாய்க்கு அருகில் செல்லும் போது நாசியில் நெய் வாசம் உணரவேண்டும்.அது மூளைக்கு போய் நெய் தோசை வரப்போகிறது என்று நாக்கின் ருசி அரும்புகளுக்கு செய்தி அனுப்ப... நாக்கும் மனது ஆவலுடன் காக்க ஒரு விள்ளல் தோசை சரியாக வாய்க்குள் போக முதலில் நெய்யின் உப்பு சுவை உணர பிறகு வெந்த மாவின் சுவை உணர..... ஆஹா பேஷ் ..ஆஹா பேஷ் என்று மனது சொல்லனும்.

சாம்பாரில் பொதுவாக எல்லா வகை சாம்பாரும் தோசைக்கு ஆப்டாக இருக்கும் . காய்களை மட்டும் சின்னதாக அறிந்து போட்டால் போதும். பெரியதாக போடக்கூடாது.

உணவகங்களில் கிடைக்கும் நைஸ் போன்ற பதத்தில் வீட்டில் வார்க்கப்படும் தோசைக்கு தக்காளி கடையலும் நன்றாக இருக்கும். அதுவும் கிராம்பு பட்டை எல்லாம் போட்டது தளித்து வைத்தால் அன்று எப்போதும் உள்ளே போகும் தோசை உடன் இரண்டு சேர்த்துப்போகும்.

எல்லா வகை சட்னிகளும் சாம்பாரும் செட் ஆனாலும் வேளாங்கன்னியில் ரோட்டு ஓரத்தில் தோசை மற்றும் ஆப்பம் சுட்டு அதனை அரச இலை தட்டுகளில் வைத்து தருவார்கள்.அதற்கு வெங்காயம் பிளஸ் கார சட்னி தருவார்கள் பாருங்க.... அது போல இதுவரை எங்கும் நான் அவ்வளவு ருசியாக சாப்பிட்டதில்லை.

நம்மூரில் வெங்காயத்தை வணக்கி செய்யும் சட்னிகள் இனித்துக்கொண்டு இருக்கிறது.எனக்கு அதை பார்த்தாலே தோசை இன்று சாப்பிட்ட மாதிரி தான் என்கிற எண்ணம் வந்துவிடும்.

ரோஸ்டை பிய்ப்பது என்பதே பலருக்கு கைவராத கலை. பலரும் ரோஸ்ட்டை அமுத்தி ஏதோ பல்துளக்கும் பேஸ்ட்டை பிதுக்குவது போல அமுத்தி பிய்த்து அதை கையிலேயே இட்லி ஆக்கிவிடுவார்கள்.

 ரோஸ்ட்டை ஒரு பூவின் இதழை கொய்வது போல அதன் பதம் மாறாமல் அதன் மெல்லிய தேகம் காயம் படாமல் கொய்யவேண்டும்.அப்போது தான் அது மெல்லியதாக ஒரு லேயராக கைக்கு வரும்.

கைக்கு வந்த ஒரு துண்டு ரோஸ்டை வெள்ளியாய் மின்னும் கெட்டி தேங்காய் சட்னியின் ஓரத்தில் உடலை போர்த்தும் பெட்ஷீட் போல போட்டு கொஞ்சமே சட்னி அந்த துண்டுக்குள் இருக்குமாறு எடுத்து வாய்க்குள் போட்டால் முதலில் ரோஸ்டின் ருசி...அதனை தொடர்ந்து அது பற்களுக்கு போகும் போது கடிப்பட்டு உள்ளே இருக்கும் தேங்காய் சட்னியோடு வார்க்கப்பட்ட பதமான மாவும் கலந்து கிடைக்கும் ருசி... இனிப்பு துவர்ப்பு காரம் மணம் எல்லாம் கலந்த கலவை.இந்த ருசிக்கே மணம் மீண்டும் மீண்டும் சட்னிக்கே போகும்!!
அடுத்த விள்ளல் பொதினா சட்னிக்கு... பச்சையும் மிண்டும் காரமும் க்லந்த கலவை கலக்கல் காம்போ!! அடுத்த துண்டு புளிப்பும் இனிப்பும் காரமும் கலந்த தக்காளி சட்னி...!!

இப்ப கை தானாகவே சாம்பார் பக்கம்போகும்....குளமாய் நிற்கும் சாம்பாரில் ரோஸ்டின் துண்டு அப்படியே மீனை பிடிக்கு வலை விசுவது போல வீசி சில வினாடிகள் கழித்து தான் அந்த துண்டு எடுக்கவேண்டும். காரணம் அப்போது தான் ரோஸ்டு துண்டும் சாம்பாரும் இரு உடல் ஒர் உயிராய் கலந்து இருக்கும்.நாக்கில் முதலில் பட போவது சாம்பாரின் ருசி... மணம் அதற்கு முன் நாசிக்கு போயிருக்கும்!! தூக்கலாய் மணக்கும் சாம்பார் மனதை தென்றலாய் வருடும்.. !

இதில் அடுத்த ரவிண்டில் ரோஸ்டின் துண்டு தேங்காய் சட்னியும் சாம்பாரையும் ஒரு சேர தொட்டு சாப்பிடுவது ..சொர்க்கம்.
இப்படி ரோஸ்டை பாதி உண்ணும் போது ரோஸ்டின் மீது ஊற்றிய சாம்பாரால் ரோஸ்ட் நன்றாக ஊறி இருக்கும் .இப்பதான் கிளைமேக்ஸ்..அந்த ஊரிய ரோஸ்டை அதிகம் அமுத்தாமல் மெல்லிய கிள்ளல்...அந்த துண்டு தான் ரோஸ்டின் உச்சபடச சுவையின் உச்சம்.
இப்படி ருசித்தால் ..அடுத்து ...மனம் சொல்லும் ..............ஒன் மோர் ரோஸ்ட் என்று!!


இன்னும் ருசிப்போம்

Read more...

நாவூரும் மீன் குழம்பும் கலக்கல் குடல் குழம்பும்!!

>> சனி, 21 பிப்ரவரி, 2015

இட்லிக்கு சைவம் ஒரு செம்பாதி என்றால் அசைவம் இன்னொரு துனைவி!!அசைவத்தை பொருத்தவரை இட்லிக்கு கொங்கு பகுதியில் அசரவைக்கும்  செம்பாதி குடல்கறி குழம்பு தான்.திக்காக வைக்காமல் தண்ணீர் போல வைக்கும் குழம்புக்கு கொங்கு பகுதி மக்கள் தீவிர ரசிகர்கள்!.

சின்ன வாழை இல்லையில் நான்கு இட்லியை வைத்து குடல் குழம்பை அதன் மேல் ஊற்றி அந்த குழம்பு இலை முழுவதும் ஓட ...அதனை வழியாமல் இலையை ஆங்காங்கே சரி செய்து அதற்குள் ...ஒடும் குழம்பின் மேல்.... அவசர அவசரமாக இட்லியை பிட்டு ....குழம்பின்.. மேல் போட்டு இட்லியை குழம்போடு சேர்ந்து குழைத்து முதல் விள்ளல் வைக்கும் போது நாக்கில் நார்த்தனம் ஆடும் ருசி ...........முகத்தில் நவரசங்களை கொண்டு வரும்.!! அந்த முகத்தை பார்ப்பதே அழகு!!

கொஞ்சம் அனுபவசாலிகள் இட்லி வைத்து குழம்பு வருவதற்குள் ....இட்லியை துண்டு துண்டாக ..கையில் உள்ள ஆள்காட்டி விரைலையும் கட்டை விரலையும் பயன்படுத்தி ஒரு டிஸ்கோ டான்ஸ் ஆடி சின்ன துண்டுகளாக இலையில் பரப்பி நடுவில் இடம் வைத்து பாத்தி காட்டிவிடுவார்கள்.
பரிமாறுபவர் நல்ல அனுபவத்தில் இருந்தால் அவருக்கு தெரியும் அந்த இட்லியில் எங்கே குழம்பை ஊற்றவேண்டும் என்பது. மிகச் சரியாக இட்லிக்கு துண்டுகளுக்கு நடுவில் குழம்பை ஊற்றுவார். அது வட்டத்தின் சுற்று வட்டாரத்தில் இருக்கும் துண்டுகள் வரை செல்வதற்குள் உள் வட்டத்தில் இருக்கும் இட்லி துண்டுகள் ஊறிவிடனும். அப்பதான் அந்த இட்லி குட்!! இல்லை என்றால் பேட் இட்லி!!

அவுட்டர் ரிங் ரொடில் செல்லும் வாகனம் போல அதீத வேகத்தில் செல்லும் குடல் குழம்பை தடுப்பதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை.குழம்பு இலையை விட்டு வெளியே போகாமல் அதை தடுப்பதற்காக இட்லியை கொண்டு அதற்கு ஒரு தடுப்பனை போல இட்லி துண்டுகலை வைத்து பிசைந்து சாப்பிடுவது .....அனுபவம்!!! ..இல்லை...இல்லை... அது இட்லிக்கும் குழம்புக்கும் செய்யும் கல்யாணம்!!! லிங்காவில் என்னப்பா டேம் கட்டினாங்க... இதில் கட்டர டேம் ...பக்கா பயன் உள்ள செம கலக்கல் டேம்.
இட்லியும் குடல் குழம்பும் சாப்பிடும் போதும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. காரணம் குடலை நன்கு சுகாதாரமாக கழுவே வேண்டும்.கரணம் தப்பினால்..பின் வயிறு அவ்வளவு தான்.உணவு நஞ்சாகிவிடும்.பெரும்பாலும் நம்பகமான உணவகத்தில் மட்டும் இதை சாப்பிடுங்கள். இல்லையென்றால உணவகத்தில் தவிர்த்துவிடுங்கள்.
இடலிக்கு அசைவத்தில் சிக்கனும் சரி மட்டனும் சரி குழம்பு வடிவத்தில் பாத்தி கட்டப்படும்.இந்த வகை காம்போ தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் ருசிக்கப்படுகிறது.

பெரும்பாலும் விடுமுறை நாட்கள் அல்லது விழாக்கால நாட்களில் கன்டிப்பாக அன்றைய காலை வேளை இப்படித்தான் ஆரம்பமாகும். எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து என் பாட்டி வீட்டில் விழாகால நாட்களில் காலை இந்த மெனு தான். அதுவும் என் பாட்டி மசாலவை அம்மிக்கல்லில் அரைப்பார். குழம்பு பட்டைய கிளப்பும். இந்த வருடம் கூட கிறித்துமஸ் அன்றும் புத்தாண்டு அன்றும் காலை உணவு பாட்டி கையில் தான்.

இதுதவிர இட்லிக்கு குழம்பில் உள்ள சிக்கன் துண்டுகளை தோசைக்கல்லில் பிச்சிப்போட்டு அதனோடு கொஞ்சம் வெங்காய்ம் மற்றும் மிளகு தூள் தூவி அதே குழம்பை கொஞ்சம் ஊற்றி கொஞ்சம் செமி கிரேவியாக இடலிக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமாக இருக்கும் இது ஈரோட்டில் மரப்பாலம் முதலியர் மெஸ்ஸில் பிரபலம். இதன் பெயர் பிச்சுப்போட்ட கறி…அட பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்…நமக்கு பெயரா முக்கியம்…ருசி !!



இதுதவிர இருக்குது மீன் குழம்பு. பெரும்பாலும் கடல் மீன் ,டேம் வகை மீன் குழம்புகள் அனைவரும் உண்டு இருப்பர். ஆனால் ஆற்று மீன் குழம்பு தான் இட்லிக்கு கலக்கலாக இருக்கும் ஆற்று மீனின் குழம்பே தனி பிளவர் . அதிலும் விரால் மீனின் குழம்புக்கு ஈடு வெறு எதுவும் இல்லை. உண்மையில் மீன் குழம்பு பழையதாக பழையதாக ருசிக்கும் என்பது பொதுவான வாக்கு. நிதர்சன் என்ன்வென்றால் விரால் மீன் குழம்புக்கு தான் அந்த மகிமை அட்சரமாய் பொருந்தும்.சிலருக்கு மத்தி மீன் என்றாலும் உயிர். எனக்கு அதன் வருவல் மட்டும் நெருக்கம் அதிகம்.


இன்னும் ருசிப்போம்..

Read more...

இஷ்டமான இட்லி!!

>> வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பொதுவாக தமிழர்கள் அதிகம் உண்ணக்கூடிய மற்றும் இல்லத்தில் செய்யக்கூடிய உணவு இட்லி. ஆனால் நிதர்சனம் என்னவோ பெரும்பாலான இல்லத்தில் குக்கர் இட்லிதான். பாவம்/!!!! இட்லி பானைகள் எல்லாம் பழைய சாமானுக்கு எடைக்கு போட்டாகிவிட்டது.
தற்போது மாவு அரைப்பது கைக் கல்லில் இல்லை. இப்போது கல் கொண்ட கிரையண்டரில். பலரும் சொல்வது இரண்டும் கல் தானே.அதெப்படி ருசி கிடைக்காமல் போகும் என்று... கிரைண்டர் கல்லில் ஏற்படும் வெப்பம் காரணமாக மாவின் ருசி மாறிவிடுகிறது.
இவ்வகை மாவில் இட்லியை அலுமினிய பானை பயன்படுத்திசெய்தால் ஒரளவுக்கு சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் அதே குக்கர் என்றால் அவ்வளவுதான். சில சமயம் பானையிலே இந்த வகை மாவை பயன்படுத்தும் போது பல்லிழித்து விடுகிறது. குக்கரில் சொல்லவே வேண்டாம்!!
இக்காலங்களில் சில இல்லங்களில் சமையல் செய்வதே பெரிய விசயம். அத்தகைய சூழலில் கையில் மாவு ஆட்டுங்கள் என்று சொன்னால்..... அவ்வளவுதான். ஆதாலால் முடிந்த அளவு தரமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்துங்கள். அளவும் சரியாக பயன்படுத்தினால் ஒரளவு தரமான ருசியான இட்லியை பெற வாய்ப்பு உண்டு. கடைகளில் கிடைக்கும் மாவு பெரும்பாலும் ரேசன் அரிசி மற்றும் உளுந்து தான்.இதில் விதி விலக்கு உண்டு.
மாவு தரமாக கிடைக்கு ..இடலி ருசிக்க...அரிசியும் உளுந்தும் குறிப்பிட்ட அளவு நேரம் தண்ணீரில் ஊறுவதும் மிக முக்கியம். பெரும்பாலான பெண்கள் தங்களின் சமையலை பற்றி ஏதாவது மாற்றுக்கருத்து சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் வெளியே அதை காட்டிக்கொள்ள வில்லை என்றாலும் கூட உள்ளுக்குள் பொறுமி தள்ளிவிடுவார்கள்.கொஞ்சம் உணவு விசயத்தில் பெண்களை அனுகும் போது எப்போதும் ஜாக்கிரதையாகவே இருங்கள்.!!!
பெண்களை பொறுத்தவரை சமையல் மற்றும் அதன் அறை என்பது அதிகாரத்தின் குறியீடு.சமையளில் குற்றம் சொல்வது என்பது ஒரு நாட்டின் சர்வாதிகரியிடம் சென்று அவன் ஆட்சியை பற்றி கருத்து சொல்வது போல....... தலை எப்படி தப்பிக்கும்?????

இப்படி தமிழர்களை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள எதுவும் செட் ஆகும். மனிதர்களின் ருசிக்கு ஏற்றபடி சர்க்கரையில் இருந்து மிளகாய் பொடி வரை ஆள் ஆளுக்கு மாறும். இதன் ஒரே பலம் எளிதில் ஜீரனம் ஆவதே!! ஆனால் தற்போது இதிலும் குஷ்பு இட்லி என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் இட்லி கொடுமை. ஒரே நாற்றமாக இருக்கிறது. பாவம் எப்படிதான் மக்கள் சாப்பிடுகிறார்களோ???
கடைகளில் ஸ்டீமரில் வேக வைக்கும் இட்லிகள் சப்பையாக இருக்கும்.இவை உள்ள சிறு சிறு ரவை போல கொஞ்சம் கடினமாக இருக்கும். இதை தண்ணிர் குடிக்காமல் சாப்பிடவே முடியாது என்பது என் அசைக்க இயலாத அனுபவம்.
பெரும்பாலோர் உணவகத்தில் முதலில் வாங்குவது ..அல்லது உண்பது இட்லி தான்.ஏன்???? வீட்டில் நன்றாக இட்லி கிடைக்காதவர்கள் உணவகத்தில் ...முயற்சிப்பார்கள். பாவமாக இருக்கும்..அவர்களை பார்ப்பதற்கு!!! கொடுமை ..கொடுமை என்று கடைசியில் கொடுமையிடமே மாட்டுவது என்பது இதுதான்.!!
இட்லிக்கு நல்ல காம்போ என்றால் ..சூடான இட்லிக்கு பொதின சட்னி. இது உணவகத்தில் தருவது செம மொக்கை.அது பொதினா சட்னி என்கிற பயங்கரவாதம்!!இதிதவிர இட்லி குருமா எனப்படும் தக்களி குருமா.இதில் இட்லியை ஊறபோட்டு சாப்பிடனும்.
நான் என்றாவது ஒருநாள் உண்வகம் தொடங்கினால்...அதில் கண்டிப்பாக இடம் பெறும் உணவு இந்த இட்லி குருமாவில் ஊறிய இட்லி.  சாம்பார் இட்லி இதன் அருகில் கூட வர இயலாது.
இதுதவிர தேங்காய் சட்னியில் கெட்டி மற்றும் தண்ணிர் வகை... தக்காளி கடையல், கத்திரிக்க கடையல்(பருப்பு போட்டது)... பாசிபருப்பு போட்ட சாம்பார் அல்லது முருங்கை காய் அல்லது இலை போட்ட சாம்பார்..இப்படி இடத்திற்கு ..மக்களின் கலாச்சாரம் ..பழக்கம் இப்படி பல விசயங்களை சார்ந்து இடத்திற்கு இடம் இட்லியின் காம்போவும் மாறிக்கொண்டே இருக்கும்.

இட்லிக்கு சட்னி சாம்பார் இரண்டும் தான் ஆப்ட்.அல்லது கறிகுழம்பு .இதிலும் சூட்சமம் உண்டு.. சட்னி என்றால் கெட்டி ..மித தன்மை....தண்ணீர் போல இருப்பது செமியாக இருப்பது பல வகைகள் உண்டு.இடலியின் பதத்தை பொறுத்து சட்னி இருக்கவேண்டும் இதே குஷ்பு இட்லிக்கு கெட்டி சட்னி வைத்தால் விக்கி கொண்டு தான் சாகனும்.குக்கர் இட்லிக்கும் இதே போல தான். இடலி குண்டானில் கிடைக்கும் வீட்டு மெது மெது இட்லிக்கு காலையில் கெட்டி சட்னியை விட தாளித்த கொஞ்சம் லிக்வீடாக இருக்கிர சட்னி ஆப்டாக இருக்கும் இதே மாலை என்றால் கெட்டி சட்னி ஆப்டாக இருக்கும்.

இதுதவிர என் பால்ய வயதில் அதாவது சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நாம் வசிக்கும் வீதியில் ஏதாவது ஒரு வீட்டில் இட்லி சுட்டு விற்பார்கள்.அவர்களின் இட்லிக்கு தேங்காய் சட்னி தருவார்கள். அது தண்ணிர் போல தான் இருக்கும் வெள்ளையாக...ஆனால் என்ன ருசி..அது போல இதுவரை எந்த உணவகத்திலும் சாப்பிட்டது இல்லை. அது ஒரு கனாக் காலம்.

 அசைவத்தில்..என்ன கேள்வி இது... குடல் கறி.இதில் இடலிக்கு அசைவ குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் ஊறபோட்டு அடிக்கலாம்...சாம்பார் என்றால் காயக்றிகள் போடாத சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் தான் செம காம்போ!! இது தவிர கத்திரிக்காய் போட்ட சாம்பாரும் நல்ல இருக்கும் ஆனால் இது போன்ற சிற்றுண்டிகளுக்கு சாம்பார் செய்யும் போது காய்களை சின்ன சின்னதாக நறுக்கி போட வேண்டும்.அது தனித்த அனுபவத்தை கொடுக்கும்!!

என் இல்லத்தில் இட்லியை பொறுத்த வரை பயன்படுத்துவது இட்லி பானை தான்.அத்திபூத்தார் போல குக்கர்!! இட்லி பானை இட்லிக்குதான் பாசிபருப்பு சாம்பார் கலக்கலாக இருக்கும் குக்கர் இட்லிக்கு முயற்சிக்க வேண்டாம்.இந்த சாம்பார் செய்யும் போது தேங்காய் சட்னியை தவிருங்கள். இரண்டையும் கலக்காதீர்கள். ருசி கிடைக்காது. மற்றவகை சாம்பாரையும் தேங்காய் சட்னியும் கலந்தால் இரண்டும் கலந்த கலவையில் இட்லி தொட்டு சாப்பிடுவது ...அலாதியான ருசி!!
அதே போல் பாசிப்பருப்பு சாம்பாரில் பூண்டு கருவேப்பிலை போன்ற வற்றை அப்படியே போடுங்கள். பூண்டை உரித்து தட்டிபோடாதீர்கள்.தக்காளியும் இதில் துண்டுகளாக போடுங்கள் .சீரகம் ,சிறிது பெருங்காயத்தூள் எல்லாவற்றிலும் கலந்த தக்காளி துண்டுகளை சாப்பிடுவது ....நாக்கில் உமிழ்நீரை சுரக்க வைக்கும்!!
அதுவும் ஒரு துண்டு இடலியுடன் அலவா துண்டு போல வெந்த முழுப்பூண்டும் தக்காளியும் பாசி பருப்பும் சேர்ந்த கலவை நாக்கில் விழுந்தவுடன்.......அந்த ருசி நாக்கின்பட்ஸிகளில் உணர்ந்து மூளைக்கு போகும் போது..அதை உணரும் தருனம்.....நீஙக்ள் ஜென் துறவியாய் இருப்பீர்கள்


Read more...

எவர்கீரீன் தயிர் சாதம்.

>> செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

என்னதான் எத்தனையோ வெரைட்டி சாதம் இருந்தாலும் சரி….அல்லது எத்தனை விதமான ருசியான உணவு உண்டாலும்சரி….இது இல்லாமல் ஒரு திருப்தி கிடைக்காது. இறுதியில் இரண்டு வாய் கவளம்கிடைத்தாலே போது.அப்போது தான் உண்டவனுக்கு உணடதன் திருப்தி. அப்படி என்ன உணவு???
குழந்தையாய் இருக்கும் போதே நமக்கு அறிமுகம் ஆகும் வெகு சில உணவில் முனனியில் இருப்பது.ஆம் …தி கிரேட் தயிர் சாதம். இதனை அடித்துக்கொள்ள இதுவரை எந்த டெசர்ட்டும் இல்லை!!
இன்றைய விருந்துகளில் ..பப்பேகளிலும் சரி ..பந்தியிலும் சரி…தயிர்சாதம் இல்லாமல் இல்லை.சுமார் 20..25 அண்டுகளுக்கு முன் வரை தயிர் சாதம் என்பது உடல் நிலை சரியில்லாமல் போனாலோ…வயிறு சரியில்லாமல் போனாலோ கிடைக்கும். குறிப்பாக அம்மை நோய் கண்ட காலத்தில் நோய் கண்டவருக்கு தயிர் மற்றும் மோர் சாதம் தான். ஆனால் தற்போது அது அந்தஸ்த்தின் அடையாளம். எப்படி மாறிவிடுகிறது மனிதனின் உணவு பாழக்கம். பல நேரங்களில் என்னை ஆச்சர்ய்படுத்தும் விசயம் இதுதான்.மனிதன் விசித்திரமானவன்.
இடைப்பட்ட காலத்தில் சிறு சிறு உணவகங்களில் மதியம் மட்டும் பொட்டலத்தில் தயிர் சாதம் கிடைக்கும்.ஆத்திர அவசரத்திற்கு ….அலுவலகத்திற்கு மதிய உணவு கொண்டு போகாத நாட்களில் தயிர் சாதம் தான் பலருக்கும். ஆபத்துபாந்தவன்!! இதிலும் சிலர் உண்டு…சுவரசியமாக சாப்பிடுவார்கள்….அது தயிர் சாதமும் வாழைப்பழமும். வெளுத்து கட்டுவார்கள். இந்த காம்போ நானும் ருசித்துப்பார்த்தேன். ஒரு பேஷனான காம்போ!!குழந்தைகளுக்கு பலர் இப்படி ஊட்டுவதை பார்த்துள்ளேன்.
பின்னர் விஷ்வருபம் எடுத்தது தயிர் சாதம்… பப்பே கொஞ்சம் தலை காட்டி ஆங்காஙகே தலைகாட்டிய போது இறுதியில் சாதம் தனியாக வைத்து தயிர் தனியாக வைத்து அதை ஸ்பூனால் எல்லாம் எடுத்து சாப்பிட்டால் அந்த திருப்தி கிடைக்காதால்… அந்த குறையை போக்க தயிர் சாதமாக நேரடியாக பப்பே பாத்திரங்களில் இடம்பிடித்தது. அதுவும் இந்த தலைமுறையில் உருவான டிபன் மற்றும் சாதம் கலந்த விருந்தோம்பல் முறை தயிர் சாதத்தை எங்கையோ தூக்கிக்கொண்டு போய் விட்டது.
ஆம் நம் விருந்தோம்பல் முறை என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. அதாவது  காலை மதியம் இரவு என்று. பொதுவாக காலை  என்றால் சிற்றுண்டியும் மதியம் மற்றும் இரவு என்றால் சாப்பாடும் தான் நம் விருந்தோம்பல் முறை. காலப்போக்கில் வாழ்வியல் மாற்றங்கள்…அனைத்து வேளைகளிலும் சாதம் மற்றும் டிபன் வகைகள் இடம் பெற்றுவிட்டன.இன்று காலையில் கூட வெஜிடபிள் அல்லது காளான் பிரியாணியோடு மெனுக்கள் படம் காட்டுகின்றன. பொதுவாக காலையில் தயிர் சாதம் பரிமாறப்படுவதில்லை. அதற்குப்பதிலாக தயிர் சேமியா சில திருமனங்களில் பரிமாறப்படுகிறது.
பொதுவாக தயிர்சாதம் என்றால் பச்சரிசியில் தான் செய்யப்படுகிறது. சாத்த்திற்கு எப்போதும் வைக்கும் தண்ணிரை விட கொஞ்சம் அதிகமாக வைத்து நன்கு குலையவிட்டு எடுத்து அதில் தயிரை கலப்பது ஒருவகை. இதில் பால் சேர்ப்பது இன்னொரு வகை.ஆனால் மிதமான சூடான சாதத்தில் தயிர் மட்டும் கலப்பது தான் அருமையான தயிர் சாதம். அப்போதே சாப்பிட வேண்டும்…நேரம் ஆக ஆக இருக ஆரம்பித்துவிடும். அதுவும் தயிர் சாதத்தில் கொஞ்சம் சின்ன வெங்காயம்…பச்சைமிளகாய் போட்டு தாளித்த தயிர் சாதம்…..கூட தொட்டுக்கொள்ள மோர் மிளகாய் அல்லது  மாங்காய் ஊறுகாய் ….இரண்டும் சேர்ந்து சாப்பிடும் கிடைக்கும் ஆன்ம திருப்தி…அந்த ருசி… நிகர வேறு எதுவும் இல்லை.
அருமையான புளிக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு இருந்தால்….ஆஹா…முதலில் தயிர்சாதம் கிடைக்குமா என்று பாருங்கள். தயிர் சாதத்தை இலையில் போட்டுக்கொள்ளு்ங்கள்….ஓரத்தில் ..அதன் அருகில் உங்களின் சாப்பிடும் கை பக்கமாக கொஞ்சம் வத்தக்குழம்பு அல்லது புளிக்குழம்பை ஊற்றிக்கொள்ளுங்கள்..இப்போது உஙக்ள் விரல் கொண்டு கொஞ்சம் தயிர் சாதத்தை தனியாக பிரித்து அதை குழம்பில்  கொஞ்சம் எடுத்து  இரண்டையும் கலந்து வாயில் ஒரு விள்ளல் போட்டுப்பருங்கள்… …வாழ்வின் உன்னத தரிசனத்தை அந்த நொடியில் உணர்வீரக்ள். பார்த்து ..ஜாக்கிரதை ..அப்போது உங்கள் சொத்தை யாராவது எழுதி வாங்கிக்கொள்ளப்போகிறார்கள்….. சுவை அப்படி சாமியோவ்!!
அப்ப தயிர்சாதத்திற்கு அசைவ காம்போ இல்ல்லையா என்று அசைவ பிரியர்கள் சண்டைக்கு வராதீங்க…. அசைவ குழம்பான மட்டனோ ..சிக்கனோ வகைக்கிர அன்று தயிர் சாதத்தில் கொஞ்சம் குழம்பை கலந்து அடித்துப்பாருங்கள். கொஞ்சம் மட்டுமே…அந்த வெண்மை நிறம் மாறி இருக்கனும் அந்த அளவுக்கு மட்டும் குழம்பு இருக்கனும். இது எனக்கு ருசிக்க அறிமுகப்படுத்தியவர் என் தாத்தா.. என் பால்ய வயதில் கூட்டுக்குடும்பம். அப்போது என் தாத்தா அசைவ குழம்பு எல்லாம் சாப்பிட்ட பிறகு அவரின் தட்டில் தயிர் விட்டு சாதத்தில் கொஞ்சம் குழம்பையும் கலந்து தருவார்.சில வாய்கள் மட்டும் தான் கிடைக்கும். என்ன ருசி….என் தாத்தா காலத்தில் கரைந்து போனாலும்..இன்னும் என் நினைவில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். அவரின் தொடர்ச்சியாக நானும் அவ்வாறே அசைவ குழம்பு வைத்த அன்று வீட்டில் உண்பது வழக்கம். இப்போது இந்த கலவை சாதத்திற்கு என் செம்பாதியும் என் குழந்தையும் காத்திருப்பார்கள்.பல நாட்கள் இந்த தயிர்சாதம் குழம்பு கலவையை கலந்த எனக்கே கிடைக்காது .இரண்டு பேரும் ஆட்டைய போட்டுவிடுவார்கள். தொடர்கிறது பல தலைமுறை  பந்தம்!!

இந்த குழம்பு கலவையில் ஹைலைட் என்றால் அது மீன் குழம்பும் தயிச் சாதமும் தான்…ருசியில் அடித்துக்கொள்ள எதுவும் அருகில் நெருங்க முடியாது.அதுவும் புளி கொஞ்சம் அதிகமாக ஊற்றிய குழம்போ அல்லது மாங்காய் போட்டு குழம்போ….இன்னும் ரம்மியமாக இருக்கும். அந்த புளிப்பு இல்லாத பிரஷ் தயிரில் புளிப்பு கலந்த மசலா கலவை ….அதுவும் மீன் ஊறி ..அதன் ருசியும் இறங்கிய அந்த குழம்பும்…இரண்டும் சேர்ந்து க்லந்து கிடைக்கிர ருசி………பூலோகமே சொர்க்கம் தான்!!

இன்னும் ருசிப்போம்…  


Read more...

இதமான இட்லியும் ...சாம்பாரும்!!

பெரும்பாலான உணவுகளின் மூலம் என்று பார்த்தால் அவ்வுணவு எங்கே புகழ்பெற்றுள்ளதோ அங்கே தோன்றியது இல்லை.அந்த வகையில் தென் இந்தியா உணவில் உலகெங்கும் பரவி புகழ் பெற்று இருப்பது மூன்று உணவுகள் .அது இட்லி தோசை ,சாம்பார்.

அரிசி என்கிற தமிழ் சொல் தான் ரைஸ் என்று ஆங்கிலத்திலும்  லத்தீனில் ஒரைசா என்றும் அரேபிய மொழியில் அல்ரூஸ் என்றும் ஸ்பேனிய மொழியில் அர்ரோஸ் என்றும் ஒரைசா என்று கிரேக்கத்திலும் ரைசோ என்று இத்தாலியிலும் பெயர் பெற்றது.அரிசி பற்றி பல புனைக்கதைகள் உண்டு. அவை தனிக்கதை!!

தெற்காசியாவின் முக்கிய பயிர் உளுந்து.இந்தியாவில் தான் தோன்றியது.இங்கிருந்து புலம் பெய்ர்ந்தவrகளால் தான் மற்ற பகுதிகளுக்கு பரவியது.இந்த அரிசியும் உளுந்து சேர்ந்து செய்த அற்புத கலவை தான்…..உருவாகிய குழந்தைதான் இடலியும் தோசையும்.
இட்லி எங்கு தோன்றியது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.இட்டு அவி அல்லது இட்டு அளி என்பது தான் இடலியாக மருவியது என்றும் சொல்கிறார்கள்.கன்னட இலக்கியத்தில் கி.பி 920 களில் குறிப்பிடபட்டுள்ளது.ஆனால் அது உளுந்தை வைத்து செய்வது.கன்னட அரசர் மூன்றாம் சோமேஸ்வ்ரா ,அவர் தயாரித்த கலைக்களஞ்சியத்தில் இட்லியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

17 ம் நூற்றாண்டில் தான் அரிசியையும் உளுந்தையும் கலந்தால் அது புளிக்கும் என்பதை கண்டறிந்துள்ளார்கள்.ஆனால் ஆவியில் வேகவைக்கிற பழக்கம் கி.பி.700 வரை இந்தியாவிற்கு தெரியாது.இந்தோனோசியாவில் இருந்து தான் இந்த உத்தி இறக்குமதி ஆகியுள்ளது.

குஜாரத்திலுள்ள “இடாடா” என்கிற தோக்லா உளுந்தையும் அரிசியையும் கொண்டு தயாரிக்கப்படுகிற உணவு வகை.இரவு முழுவதும் புளிக்க வைத்து அடுத்த நாள் ஆவியின் மூலம் தயாரிக்கப்படுகிறது.இந்த உணவு வகை செளராஷ்டிராவை சார்ந்தவர்கள்,மகாராஷ்டிரத்தின் வழியாகச் தெற்குப்பகுதிகளில் பரவியபோது இட்லி என்கிற பெயருடன் பிரபலமானது என்று கூறப்படுகிறது.இட்லி இந்தோனோசியவிலிருந்து தான் இந்தியாவுக்கு வந்தது என்று கூறுபவர்களும் உண்டு.

இது போன்ற தரவுகளை உணவு சார்ந்த வரலாற்றை மீட்டெடுப்பது என்பது அதீத உழைப்பும் அதீத பொருளாதாரம்  கோருகின்ற விசயமாக இருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் 17 ஆம் நூற்றாண்டில் ,மச்சபுராணத்தில்தான் முதன்முதலாக இட்லி என்கிற பதம் குறிப்பிடப்படுள்ளது.
கி.பி 1485 லும் 1600 லும் இட்லியை நிலவோடு ஒப்பிட்ட உவமைகள் தென்னிந்திய இலக்கிய குறிப்புகளில் கிடைக்கின்றன.
இந்தியாவிலிருந்து அரசர்களோடு இந்தோனேசியா சென்ற ராஜ சமையல்காரரக்ள் அங்கிருந்து ஆவியில் சமைக்கும் விதத்தை அறிந்து திரும்பி வந்ததும் அதை பயன்படுத்தியிருக்கலாம்.
இட்லி எளிதில் ஜீரனமாவதாலும் எளிமையான உணவாக இருபத்தாலும் வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் உண்ணப்படுகிறது. இடலியில் ஊறுக்கு ஒன்று பல வெரைட்டிகள். ஆனாலும் சாதரன  இட்லிக்கு இருக்கும் மவுசு மற்றதற்கு இல்லை.

இட்லிக்கு தான் எத்தனை காம்போ!! தேங்காய் சட்னி, தக்காளிசட்னி, புளிச்சட்னி, பொதினா சட்னி இப்படி பல இருந்தாலும் இடலிக்கு அதன் சரி பாதி என்றால் அது சாம்பார் தான்!! என்னைப்பொருத்தவரை இட்லிக்கு அருமையான காம்போ பொதினா சட்னி.என் பேவரிட்!!

எவ்வளவு வகைமை இருந்தாலும் இட்லியை இரண்டு வகையாக தான் பிரிப்பேன் நான். அது ஒன்று மெது மெதுவென்று இருக்கும் இட்லி மற்றொன்று சுட தெரியாமல் சுட்ட கல்லு போன்ற இடலி!!

இட்லிக்கு அரிசையும் உளுந்தையும் ஊற வைப்பதில் இருந்தே ஆரம்பம் ஆகின்றது இட்லிக்கான முஸ்தீப்புகள்.4 க்கு 1 பங்கு என்ற முறையில் அரிசியும் உளுந்தும் கலந்த கலவை தான் அடிப்படை. ஒருகிலோ அரிசியும் உளுந்தும் கலந்த கலவையை அரைத்தால் சுமார் 3.250 கிலோ மாவு கிடைக்கும். சமிபத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதுவகைஅரிசி 3.75 கிலோ மாவு கிடைப்பதாக தகவல்.

அரைத்த மாவு சுமார் 12 மணி நேரத்திற்குப்பிறகு உணவுக்கு தயார். முறை எளிதாக இருந்தாலும் சில இல்லங்களில் மட்டும் தான் இட்லி..இட்லிமாதிரி இருக்கிறது. பெரும்பாலான இல்லங்களில் இட்லி என்றாலே எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்!! பல்லு உடையும் அளவுக்கு பாறங்கல்லு போல!!அல்லது இடலியின் மணம் காணமல் போய் ஒரு வித துர்நாற்றம் வரும்.இதற்கு காரனம் பொருட்களின் தரம் மற்றும் இட்லிதுணியின் நிலை!!
என் இல்லத்தில் இட்லி கலக்கலாக இருப்பதால் பெரும்பாலும் உணவகங்களில் இட்லி சாப்பிட மாட்டேன்.இதுதவிர ஏதாவது வீட்டுக்கு பார்சல் வாங்கி வரும் சூழல் என்றால் தான் இட்லி வாங்குவேன்.இட்லிக்கு ஈரோட்டில் மூன்று இடங்களில் நம்பி சாப்பிடுவேன்.

மரப்பாலம் பகுதியில் உள்ள முதலியார் மெஸ் .இங்கே சாம்பார் தேங்காய் சட்னி மற்றும் இன்னொரு காம்போ  சிக்கன் குழம்பு !! இதைவிட்டால் ஐய்யபவிலாஸ்..இங்கையும் அசைவ குழம்பு மற்றும் குடல் கறி காம்போ!! இதைவிட்டால் மிலிட்டரி பொன்னுசாமி கிச்சனில் ..இங்கையும் காலையில் குடல் கறி மற்றும் அசைவ குழம்புகள் கலக்கலாக இருக்கும்.
இன்னும் அவிப்போம்...

இட்லிக்கு பெரும்பாலும் எந்த காம்போவுடனும் செட் ஆவதும் ஒரு சிறப்பு.சிலருக்கு மிளகாய் பொடி இருந்தால் போதும்!!ஏற்கனவே சில காம்போக்களை பார்த்து விட்டதால் சில காம்போக்களை மட்டும் ஒரு விரைவு பார்வை பார்ப்போம்.

இட்லி வித் சாம்பார்..எவர் கீர்ன் காம்போ!! அடுத்தாக தேங்காய் சட்னி மற்றும் பொதினா சட்னி.இதுதவிர தமிழகத்தில் சில ஊர்களில் மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு சில சிறப்பான காம்போக்கள் உண்டு. உதாரனத்துக்கு கொத்சு.இதுதவிர பீட்ரூட் சட்னி,கேரட் சட்னி, கத்திரி கடையல்,..இப்படி பல உண்டு.சொல்லிமாளாது.

அசைவத்தில் இட்லிக்கு குடல் கறி ,அசைவ தண்ணீர் குழம்பு மற்றும் மீன் குழம்பு ,கருவாட்டு குழம்பு. குறிப்பாக பழைய மீன் குழம்பு மற்றும் இடலிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு தமிழகத்தில்.

இட்லியை ஒவ்வொன்றும் உடன் சேர்த்து சாப்பிடுவது தனிக்கலை.அசைவ தண்ணிர் குழம்புடன் ஒரு விதமாக சாப்பிடவேண்டும் அதே கெட்டியாக இருக்கும் அசைவ குழம்புடன் வேறு மாதிரி சாப்பிடவேண்டும்.சைவத்திலும் அவ்வாறே. வித விதமாக சாப்பிட வைப்பது இட்லி மட்டுமே!!

இன்று தமிழகம் முழுவதும் வெறுமன இட்லியை அவித்து உணவகஙக்ளுக்கு சபளை செய்வது மட்டுமே மிகப்பெரிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஒவ்வொரு ஊரிலும் பல குடும்பங்கள் வாழ்கின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள இடலி வகைகள் மற்றும் அதன் சிறப்பான தொட்டுக்கொள்ள கொடுக்கும் வகைகளை வரிசைப்படுத்தினலோ அல்லது ஆவணப்படுத்தினலோ மிகசுவரசியமாக இருக்கும்.

இன்னும் ருசிப்போம்...


Read more...

மாமு..பஜ்ஜி ...பஜ்ஜி...பஜ்ஜி....மாமு...

>> திங்கள், 9 பிப்ரவரி, 2015

வடை போண்டா வகைமைகளில் கடைசி தம்பி பஜ்ஜி. இதன் சிறப்பே… வெரைட்டி தான்!! ஆனியன் பஜ்ஜியில் தொடங்கி அப்பள பஜ்ஜி வரை ..ஆள் ஆளுக்கு வித விதமாக போட்டு தாக்கிவிட்டார்கள். ஆனால் இதில் ஆகச்சிறப்பு ..இரண்டு தான் ஒன்று ஆனியன் பஜ்ஜி மற்றொன்று வாழைக்காய் பஜ்ஜி .இதற்கு நிகர் இதுதான்.

பொதுவாக பஜ்ஜி வகைகளுக்கு சட்னி கூடவே இருந்தால் தான் சிறப்பு. நம்மூரில் வாழைக்காய் பஜ்ஜிக்கு சட்னி கிடைக்காது. டீக்கடைகளில் பெரும்பாலு சட்னி இருக்காது. வண்டி கடைகளில் தான் சட்னி.
ஆனியன் பஜ்ஜிக்கு தக்காளி சட்னி செம் காம்போ!! இதானை ஈஸ்வரன் கோயில் வீதி வண்டிக்கடையில் மாலையில் சாப்பிடனும்... மிதமான டைலூயூட்டில் தக்காளி மற்றும் புளிச்சட்னிக்கு சுட் சுட ஆனியன் பஜ்ஜி கலக்கலாக இருக்கும். அதுவும் சூடாக இருக்கும் போது மேலே இருக்கும் மாவை மொதலில் கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு அந்த சட்னியில் தொட்டு சாப்பிட...அதற்குள் பஜ்ஜியின் ஒரு பகுதியில் சட்னி ஊறிவிடும்..இப்ப அந்த பகுதி சூடு ஆறிவிடும்..இப்ப அது ஒரு விள்ளல் போடுங்க... ருசி வேறு மாதிரி இருக்கும்.இறுதியில் அந்த ஆனியன் வெந்து இருக்கும் பாருங்க..அதை எடுத்து .அந்த சட்னியோடு சாப்பிடுங்க...தேவாமிரதமாக இருக்கும் .

இப்ப அடுத்த பஜ்ஜி ..அதற்குள் சூடான பஜ்ஜி ஆறி நன்றாக எடுத்து சாப்பிட மிதமான சூட்டில் இருக்கும். இப்ப பஜ்ஜியை சட்னியில் தொட்டு ஒரு கடி!!!!! இப்ப பஜ்ஜியில் ஒரு பகுதி ஒப்பனாக இருக்கும்..அந்த ஒப்பன் பகுதிக்குள் சட்னி உள்ளே புகும்படி சட்னியை ஒரு வாகாக எடுக்க...சட்னியோடு ஒரு கடி!! இப்ப இரண்டாவது கடியின் போது சட்னி பஜ்ஜி மாவு..ஆனியன் எல்லாம் கலந்து நாக்கில் கிடைக்கும்... அதுதான் தேவாமிர்தம்!!

வாழை பஜ்ஜியை பொறுத்தவரை இரண்டவகை உண்டு. ஒன்று சின்னதாக போடுவது மற்றொன்று வாழைக்காயில் நீள வாக்கில் போடுவது. பெரும்பாலும் நீலாவக்கில் போடுவது தான் அதிகம்.இதிலே மற்றொரு வகை நேந்திரம் பழத்தில் போடுவது கோவையில் இது பிரபலம். இதுதவிர ஈரோடு ரயில் நிலையத்தில் கிடைக்கும்  நம்பி சாப்பிட உத்திரவாதம் இல்லை.
எல்லா வண்டிக்கடையிலும் கிடைப்பது வாழைக்காய் பஜ்ஜிதான். கூடவே சட்னியோடு. ஆனால் வாழைக்காய் பஜ்ஜியை பொறுத்தவ்ரை சூடாக சாப்பிடுவது தான் உசிதம். இதற்கு தகுந்த சட்னி என்றால் தேங்காய் அல்லது எப்போதும் போல தக்காளி சட்னி தான். 

வாழைபஜ்ஜியில் சிறப்பே அந்த மாவோடு சாப்பிடும் போது மாவு அதிகமாக வாழைக்காயில் ஒட்டியிருக்க கூடாது.அப்படி இருந்தால் விக்கிவிடும்.கொஞ்சமாக மாவு..அதுவும் கொஞ்சம் காரத்தோடு கலந்து வெந்த வாழைக்காயுடன் ருசிப்பது அலாதி அனுபவம் தான் அதுவும் வாழைக்காயின் முனையில் ஒட்டி இருக்கும் அந்த தோல் தான் தனித்த சுவை.

எப்படி வடை போண்டா வகைகள் மக்களின் மனதில் இடம்பிடித்ததோ அதே போல் சப்பனம் இட்டு அமர்ந்தது மிளகாய் பஜ்ஜி. இன்று எங்கு கண்காட்சியோ விழாக்கலோ நடந்தா எது இருக்கிறதோ இல்லையோ மிளகாய் பஜ்ஜி கடை இருக்கும்.
மிள்காயில் 400 க்கும் அதிகமான வெரைட்டிகள் உள்ளது. நாம் பொதுவாக ப்யன்படுத்துவது சுமார் 5 அல்லது 6 வெரைட்டிகள் தான். அதில் பஜ்ஜிக்கு பயன்படுத்தும் மிளகாய் இரண்டு தான் ஒன்று அதிகமாக பயன்படுத்து நீண்ட பஜ்ஜி மிள்காய். மற்றொன்று குள்ள ரகம். தற்போது இந்த குள்ள ரகத்தை யாரும் பஜ்ஜிக்கு பயன்படுத்துவதில்லை.
என் பால்யகால வயதில் இந்த வகை குள்ள ரக மிள்காயில் போட்ட பஜ்ஜி தான் புகழ்பெற்றது. செம சூப்பராக இருக்கும். இந்த நீண்ட பஜ்ஜி மிள்காயில் சுவரசியம் இல்லை.தற்போது இந்த நீண்ட பஜ்ஜி மிள்காயில் உள்ளே காரத்திற்காக மசால் வைக்கிறார்கள்.

நம்மூரில் மிள்காய் பஜ்ஜியை அப்படியே கொடுத்து விடுவார்கள். முழு பஜ்ஜியாக . இதை கொடுக்கும் போதே சின்ன சின்ன துண்டுகளாக கட் செய்து தர வேண்டும் .அதை கெட்டி தேங்காய் சட்னியில் துவட்டி சாப்பிட்டால் ..கலக்கல் காம்போ.பெரும்பாலும் நம்மூரில் தக்காளி சட்னிதான்.அதுவும் தண்ணிர் மாதிரி இருக்கும். அவை மிளகாய் பஜ்ஜிக்கு செட் ஆகாது.
மிளகாயில் சுவரசியமான விசயம்...ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு ஐரோப்பிய மக்கள் மிளகாயை பயன்படுத்துவதில்லை. உலகிலேயே காரமான மிளகாய் அஸ்ஸாமிலே விளைகிற “நாகஜோலோக்கிய” என்ற வகை மிளகாய் தான்.உலகிலேயே அதிகமாக மிளகாயை உற்பத்தி செய்யும் நாடும் இந்தியா தான். .

இத்துடன் சிற்றுண்டி வகையை முடித்துக்கொண்டு.....அடுத்து.....நாளை பாருங்கள்...அதகளம் தொடரும்...



Read more...

முட்டை பொரியல்

முட்டை பொரியல் ...இதை சாப்பிடாத அல்லது விரும்பாத அசைவ பிரியர்கள் இருக்க மாட்டார்கள்.பொதுவாக எளிய அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்க கூடியது.கடைகளில் கிடைக்கும் பெரிய வெங்காயம் போட்ட முட்டை பொரியல் ஒருவகை .மற்றொன்று வீடுகளில் செய்யப்படும் சின்ன வெங்காயம் போட்டது.

கடைகளில் போடுவது அவசரத்திற்கு .இதில் அவ்வளவாக வெங்காயமும் முட்டையும் ஒட்டாது. முட்டையும் வெங்காயமும் பிரிந்து தான் இருக்கும்.வெங்காய துண்டுகளும் நீள வாக்கில்  என பல சைஸில் இருக்கும். கர்ண கொடூரும்!!!உணவகத்தில் எப்போது முட்டை பொரியல் சாப்பிட்டாலும் அதன் பக்கத்தில் கொஞ்சம் அசைவ குழமபை வைத்து அதனோடு தொட்டு சாப்பிடுவது என் வழக்கம்.அல்லது அசைவ குழம்பு சாப்பாட்டுக்கு தொட்டு கொள்ள முட்டை பொரியலும் அம்சமாக இருக்கும்.

மேலும் கடைகளில் போடும் போது அது ஏற்கனவே எப்போதே வெட்டிய வெங்காயம்.சமையலுக்கு எப்போது வெங்காயத்தை பொறுத்தவரை அவ்வப்போது வெட்டி பயன்படுத்தினால் தான் அதன் உண்மையான ருசி கிடைக்கும்.

வீட்டில் சின்ன வெங்காயைத சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி அதனை நன்கு வதக்கு அதில் போடும் முட்டை பொரியல் ருசியின் உச்சம்.காரணம் வெங்காயமும் முட்டையும் கலந்து பந்து பந்தாக இருக்கும்.. அதன் மெருது தன்மை அபாராமாக இருக்கும் இதில் உச்சபட்ச ருசி என்பது இதில் போடும் பச்சை மிளகாய் தான்.

பலரும் பச்சைமிளகாயை தவிர்ப்பார்கள்.அப்படியே சாப்பிட்டுப்பாருங்கள். முட்டை வெங்காயம் பச்சை மிளாகாய் எல்லாம் நன்றாக வெந்து பந்து போல இருப்பதை ஐந்து விரல் முனையில் பற்றி அதை சாப்பாட்டோடு கல்ந்து நாக்கில் பட்டு சுனை முனைகளில் ருசி உணரப்படும் போது எப்ப டா அடுத்த வாய் சோறு நாக்குக்கு வரும் என்று இருக்கும் இப்படி சாப்பிடும் பல முறை என் நாக்கையோ அல்லது உதடையோ கடித்துவிடும்.

அதுவும் என் குடும்பத்தோடு சாப்பிடும் போது மற்றவர் தட்டில் சாப்பிடாமல் இருக்கும் எல்லாம் பச்சைமிளாகாய் துண்டுகளும் என் தட்டிற்கு வந்துவிடும். அதுவும் அந்த பச்சைமிளாகாயில் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ ...ஏதோ ஒரு முனையில் முட்டை ஒட்டிக்கொண்டு இருக்கும் . அந்த கலவையின் ருசி.........ருசித்துப்பாருஙக்ள்....அந்த நிமிடத்தில் வாழ்க்கையை முழுமையாய் அனுபவிப்பீர்கள்....ஆம்...ஏகாந்தம்!




Read more...

நடுவில் சில போண்டாவை .....

உண்மையில் டீக்கடைகளில் போண்டா என்றால் முதலில் வெங்காய் போண்டாதான். இப்போதுதான் உருளை கிழங்கு போண்டா எல்லாம். பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து அதனை கடலை மாவுடன் கலந்து போண்டாவாக போடுவது மிக எளிது.சுவையும் அருமையாக இருக்கும் .என் சிறுவயது பள்ளி நாட்களில் இந்த வகை போண்டா உண்டது இன்றும் ஞாபகம் உள்ளது.

வெளிப்புறம் முழுவதும் நன்றாக பிரை ஆகி இருக்கும் .உள்ளே மாவு மென்மையாக வெந்த வெங்காயத்துடன் நறுக் ந்றுக்கென்று .........வாவ்....பிறகு ஒரு கப் டீ. வாழ்க்கையை வாழலாம்!!!

!
இந்த வகை போண்டாக்கள் இப்போது கிடைப்பதில்லை. வேளாங்கன்னி போகும் போது திருவாரூரில் இந்த வகை போண்டா சாப்பிட்டதாக நினைவு. மற்ற படி வேறு எந்த ஊரிலாவது இந்த வகை போண்டா கிடைத்தால் தகவல் தாருங்கள்.

போண்டாவில் ஒன்றை விட்டதை சுட்டி காட்டினார் நண்பர் Ruben Jay ...அது முட்டை போண்ட. உண்மையில் முட்டை போண்டா எனக்குத்தெரிந்து கடைகளில் விட தியேட்டர்கலில் தான் பிரபலம்.நான் சொல்வது ஈரோட்டு பகுதியில்.

முதன் முதலில் ஈரோட்டில் ரவி தியேட்டர் தான் முட்டை போண்டாவிற்கு புகழ்பெற்றது.முழு முட்டையை அப்படியே மாவில் போட்டு எடுத்து சுட சுட தருவார்கள். அந்த வெளிப்புற மாவு கொஞ்சம் காரம் கலந்து மெது மெது என்று இருக்கும் .முட்டையின் சிறிய பகுதியில் வெள்ளை கருவில் கடிக்க தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மத்தியில் மஞ்சள் கருவைதனியாக ஒரு கடி ..பிற்கு வெள்ளை கரு மஞ்சள் கரு கலந்த கடி என்று இறுதியில் வெள்ளை கருவில் முடியும் அனுபவமே அலாதியானது. இப்போது இந்த தியேட்டர் இயங்குவது இல்லை.
இதற்கு அடுத்தார்போல் விஎஸ் பி தியேட்டரில் கலக்கலாக இருக்கும். இங்கு கேண்டின் வைத்திருப்பவர் என் நண்பர். இங்கே தான் அடிக்கடி மாலை வேளயில் இருப்பேன். மாலையில் சுட சுட முட்டை போண்டா அருமையாக இருக்கும். 

இங்கையும் தற்போது முட்டை போண்டா போடுவதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு பதிலாக முட்டை பப்ஸ் .நன்றாக இருக்கும்.
தற்போது எந்த தியேட்டரிலும் முட்டை போண்டா போடுவதில்லை. அதற்கு பதிலாக எல்லாம் முட்டை பப்ஸ் மயம். ஈரோட்டில் தியேட்டர் போன்ற பல இடங்களுக்கு என் நண்பன் தான் பப்ஸ் சப்ளை. இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்
.
கருங்கள் பாளையம்போகும் வழியில் ஜீவல்லரிகடைகள் தாண்டிய பிறகு இந்திரா நகருக்கு ஒரு ரோடு திரும்பும்.அதன் முனையில் ஒரு வண்டிக்கடை காலையில் இருந்து மாலை வரை பலகாரங்கள் போடுவார்கள். அவர்கள் முட்டை போண்டா போடுகிறார்கள். சட்னியோடு. சூடாக கேட்டால் அப்போதே போட்டுத்தருவார்கல். இவர்கள் அந்த முட்டை போண்டாவை நான்காக கட் செய்து அதில் தக்காளி சட்னி உற்றிதருவார்கள்.
இதுதவிர முட்டை போண்டா கலாச்சாரத்தை தற்போது டாஸ்மார்க் பார்கள் கையில் எடுத்துக்கொண்டன. ஆம் இவை முட்டை போண்டாவாக இல்லாமல் முட்டை சில்லி என்று வேக வைத்த முட்டையை சிறு சிறுதுண்டுகளாக சில்லி போல போட்டுத்தருவார்கள்.சாப்பிட நான்றாக இருக்கும்.

தொடரும்..

Read more...

எட்டுத்திக்கும் போட்டுத்தாக்கும் போண்டா!!!

உளுந்துவடையும் பருப்பு வடையப்பற்றியும் பேசிட்டு என்னைப்பற்றி பேசாமல் போனால் என்ன என்று காலையில் என்னிடம் டீக் கடையில் சண்டை போட வந்து விட்டர் திருவாளர் போண்ட!!! அப்பறம் என்ன சமாதனம் சொல்லிட்டு வந்து இப்ப டைப்பிங்!!

பொதுவாக உளுந்து வடை அனைத்து உணவகஙளிலும் கிடைக்கும்.பருப்பு வடையை பொறுத்த வரை தள்ளு வண்டிகடைகள் தான் மெயின் மற்றும் டீ கடைகள். இதே அளவுக்கு வண்டிகடைகளிலும் டீ கடைகளிலும் மக்களின் மனதில் பக்கவாக சம்மனம் போட்டு அமர்ந்திருப்பது போண்டா!!
போண்டா உருவத்தை பொருத்தவரை ஒரே வடிவம் தான். ஆனால் இதில் வகைகள் தான் பல. சாதரன மாவு போண்டா,கீரை போண்டா,ஆனியன் போண்டா,மசால் போண்டா எனப அப்பன முருகா....எத்தனை ரகம்!!. ஏன் ஊருப் பெயரில் இடம் பெற்ற தனித்த சிறப்பு உடையது போண்டாதான். ஆம் ..மைசூர் போண்டா!!

கடலை மாவு கொண்டு செய்யப்படும் இந்த பலகாரத்தில் மஹாராஜா என்றால் அது மசால் போண்டா தான். இதற்கு சட்னியே தேவையில்லை. கூட இருந்தாலும் ஒகே!! இதன் பெஸ்ட் கோம்போ என்றால் தேங்காய் சட்னிதான்!! அதுவும் கொஞ்சம் மிதமான அல்லது கெட்டி சட்னி பக்க கோம்போ!!
மேல் பகுதியில் இருக்கும் கடலை மாவு கோட்டிங்கை சட்னியோடு தொட்டு ஒரு விள்ளல் நாக்கில் படும் போது தேங்காய் ருசி...மாவின் ருசி... மசாலின் ருசி என மூன்றும் கலக்கும் போது...... சொல்லவா வேண்டும் நாக்கில் பட்சுகளின் ஆட்டத்தை !!

உருளை கிழங்கு போண்டாவை பொறுத்தவரை ஈரோட்டில் அவ்வளவு பெரிய வித்தியாசம் கடைகளுக்குள் இல்லை. அளவு மற்றும் விலையை தவிர . திருநகர்காலனி டீக் கடை தொட்டு கொல்லம்பாளையும் அரிசி குடோன் வரை.சில இடங்களில் சட்னி உண்டு..சில இடங்களில் இல்லை. இந்த இடத்தில் ஒரு விசயத்தை சொல்லவேண்டும்....தலமை தபால்நிலையம் ரோட்டில் டிப்டாப் எதிர் ரோட்டில் போனால் சுமார் 100 அடியில் லெப்டில் ரோடு கட் ஆகும்.அதன் முனையில் மாலை வேளையில் மட்டும் ஒரு வண்டிக்கடை இயங்கும். இங்கே வடை போண்டா பஜ்ஜி அனைத்தும் தரமாக இருக்கும்.இங்கே என்ன சிறப்பு என்றால் சட்னி ..ஆம்... புளி மற்றும் பொதினா கலந்த சட்னி அருமையாக இருக்கும். வாய்ப்பு இருப்பவ்ர்கள் ருசித்துப்பாருங்கள்.
போண்டாவில் வெரைட்டி காட்டுவது மற்ற வகை போண்டாக்களில் தான் .குறிப்பாக கடலை மாவு போண்டாவை பொறுத்த வரை பெறும்பாலான இடங்களில் கல்லு போலவே இருக்கும். விசேசங்களில் இடம்பெற்றால் கன்பார்ம்...அது கருங்கல்லு தான். விசேங்களில் இந்த மாதிரி கடலை மாவு போண்டாங்களை தவிர்த்து விடுங்கள். பெரும்பாலோர் சாப்பிடமாட்டார்கள். அதுவும் அதை சுட்டு ஆறிப்போய் ..சொல்லவே தேவையில்லை..எதிரிக்கு கூட அந்த நிலமை வரக்கூடாது.

இந்த கடலை மாவு போண்டா கிருஷ்ணா தியேட்டர் முன்புறம் கொஞ்சம் தள்ளி இந்திரா நகர் செல்ல ஒரு ரோடு திரும்பும். அந்த முனையில் உள்ள வண்டிகடை போண்டாவிற்கு தான் .அதுவும் குறிப்பாக கடலைமாவு போண்டாவும் அவர்களின் காரமான சட்னியும் உணவுப்பிரியர்களை சுண்டி இழுக்கும்.இங்கு தவிர கொங்கலாம்மன் தெரு முனையில் இரண்டு வண்டிக்கடைகள் இருக்கும் இங்கும் கடலை மாவு போண்டா சின்ன சின்னதாக போடுவார்கள் மாலை வேளையில் .நன்றாக இருக்கும். எனது பால்ய கால நண்பர்களோடு இங்கு பல முறை உண்டது இன்னும் ஞாபகம் உள்ளது.மற்றொரு வண்டிக்கடை பரிமளம் காம்பிளஸ் எதிர்புற ரோட்டில் வயதான தம்பதிகள் நடத்தும் கடையிலும் நன்றாக இருக்கும்.விலையும் குறைவு.

கடலைமாவு போண்டாவை தொடர்ந்து சாப்பிடாதிங்க. என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை.வயிற்றை அடைத்துக்கொள்ளும்.


கீரை போண்டா ..வெகு எளிமையான செய்முறை..குறைவான பொருட்கள். ஆனால் ருசியோ....பக்கா கலக்கல்.பொதுவாக தண்டுக்கீரையை வீடுகளில் அதிகம் செய்யமாட்டார்கள்.காரணம் அது கொஞ்சம் ருசி குறைவாக சப் என்று இருக்கும் .ஆனால் அதே தண்டுக்கீரை கடலைமாவுடன் கலக்கும் போது கிடைக்கும் சுவை ...டர்போ டாப்.
கீரை போண்டாவில் மாவு கலக்கும் பதம் மிக முக்கியம் .சிலருக்கு போண்டா கெட்டியாக வந்துவிடும். சிவரஞ்சினி எதிர்புறம் உள்ள கடையில் கீரை போண்டா தான் புகழ் பெற்றது.மேலே லேயர் அந்த கடலைமாவும் அரிசி மாவும் கீரையும் கலந்து வறுப்பட்டு உள்ளே சும்மா பஞ்சு போல இருக்கும் போண்டாவை தக்காளி சட்னியில் தொட்டு ஒரு விள்ளல் வாயில் போட்டால் அந்த கீரை மாவு நீண்டாதாக சீவப்பட்ட வெங்காய துண்டுகள் எல்லாம் சேர்ந்து நாக்கில் செம ஆட்டம் போடும்.இந்த வகை கீரை போண்டா சின்னதாக இருக்கும்.

இதே போண்டா பெரியதாகவும் போடுவர் சில கடைகளில். அதற்கு சட்னி தேவையில்லை. என் பேவரிட் இது .காலையில் ஸ்டேட் பேங் ரோட்டில் மாதா ஆலயம் அருகில் வண்டிக்கடையில் போடுவார்கள். சுட சுட....அருமையாக இருக்கும் இதுதவிர ரங்கா சைக்கிள் மார்ட் எதிர்புறம் உள்ள டீக்கடையிலும் காலையில் இந்த வகை பெரிய போண்டா போடுவாரக்ள். மக்கள் காலையிலேயே ரவுண்டு கட்டி அடிப்பார்கள்.

இந்த வகை பெரிய போண்டாவை சாப்பிடுவது தனிக்கலை.போண்டாவை ஒரு விள்ளல் பிட்டு அதை அப்படியே வாயில் போட்டு அந்த ருசியை அனுபவித்துவிட்டு அது கரையும் போது ஒரு சிப் டீ !!! இனிப்பு. காரம்...இனிப்பு...காரம் .இப்படி ஒரு கடி போண்டா ...ஒரு சிப் டீ!!!இதுதான் இதோடு ருசியின் சூட்சுமம். அதுவும் இதில் உள்ள பச்சைமிளகாய் வெந்து அந்த மாவுடோ கிடைக்கும் ருசியே அலாதி.....பெரும்பாலோர் மிளகாய் என்று தூக்கிப்போடுவார்கள். அது தவறு..அந்த மிளகாயோடு சாப்பிடவேண்டும்.அப்பதான் போண்டாவின் பூரண ருசி உஙக்ளுக்கு கிட்டும்!!.........

இன்னும் ருசிப்போம்...



Read more...

தாருமாறான தயிர்வடை!!

>> ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

இன்னும் கொஞ்சம்....சாம்பார் வடையை பொறுத்த வரை ஈரோட்டில் பெரும்பாலும் எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்.எனக்கு பன்னீர் செலவம் பார்க் அருகில் இருக்கும் சுகுணாவில் சாம்பார் வடை பிடிக்கும். இங்கே காலையில் சின்ன வெங்காய பிளைன் சாம்பார்.அது வடைக்கு செம காம்ப்னேசனாக இருக்கும்.
இதுதவிர ஈஸ்வரன் கோவில் வீதியில் கேகேபி அலுவலகம் திரும்பும் முனையில் மாலை வேளையில் பல ஆண்டுகளாக போண்ட பஜ்ஜிக்கு என்றே ஒரு வண்டிக்கடை இயங்குகிறது. இங்கு மாலை வேளையில் சாம்பார் மற்றும் தயிர் வடை கிடைக்கும்.இங்கே எனது சிறப்பு தயிர் வடைதான். ஆனால் சேட்களுக்கும் அங்கு வரும் பலருக்கும் சாம்பார் வடை தான் ஆஸ்தான அயிட்டம்!!! இங்கு கொடுக்கப்படும் சாம்பார் அரைத்து வைத்த குழம்பு போல இருக்கும்..ஆனால்  வடை போண்டா பஜ்ஜி அருமையாக இருக்கும். இரண்டு வகை சட்னி தருவார்கள். அதில் என் பேவரிட் புளியும் தக்காளியும் கலந்த சட்னிதான் \. மற்றொன்றை வாங்கே மாட்டேன். இங்கே கிடைக்கும் ஆனியன் பஜ்ஜி என்னைப்பொருத்த வரை அருமையான பஜ்ஜி. நல்ல பதமாக மாவு கலப்பாரக்ள்.
ஈரோட்டி இருப்பவர்கள் மறக்காமல் ருசிக்க வேண்டிய இடம்

தயிர் வடை.... வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் உணவு வகைமைகள் என்பது வெகு சில தான். அதில் ஒன்று தயிர் வடை.அவ்வளவு எளிதானது அல்ல.....மக்களின் நாக்கை வெல்வது!!.
பொதுவாக  தயிர் வடை இரண்டு வகையான உளுந்து வடை பயன்படுத்தப்படுகிறது.ஒன்று வட்ட வடிவில் பெரிய அளவிளான நடுவில் ஒட்டைபோட்ட ஆனால் வெங்காயம் போன்ற இத்யாதிகள் போடாதது. மற்றொன்று மைசூர் போண்டா போல உளுந்துவில் செய்யப்பட்ட போண்டா வடிவத்தில்.
உணவகங்கள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான். காரணம் இவர்கள் தயிர் வடைக்கு என்று தனியாக வடை சுடுவதில்லை. ஒட்டு மொத்தமாக உளுந்து வடையை சுட்டு சாம்பார் வடை தயிர் வடை எல்லாம் அதிலிருந்து போட்டுக்கொள்கிறார்கள். வடையை தயிரில் ஊற வைக்கிறார்கள்.கூடவே அதன் மேல் கேரட் மற்றும் கொத்தமல்லி தூவி ஆட்டைய போடுவார்கள். உண்மையில் தயிர் வடைக்கு நீரில் ஊற வைக்கனும் .அப்பதான் நன்றாக இருக்கும்.இந்த வகை தயிர் வடை முதலில் நீலகீரிஸில் அருமையாக இருக்கும் .இப்போது இல்லை. பகல் பொழுதுகளில் கடுக்கன் கம்மங்கூழ் கடையில் நன்றாக இருக்கும். வடை அளவும் நன்றாக இருக்கும்.தயிரின் அளவும் சிறப்பாக இருக்கும். அதுவும் மேலே கார பூந்தி போட்டு சாப்பிடுவது பெரும்பாலோரின் விருப்பம்.இது பாசாந்தியின் எதிரொலி. எனக்கு பூந்தி போடாமல் ஆனியன் போட்டு சாப்பிடுவது உகந்தது.மாலை வேளையில் ஈஸ்வரன் கோயில் வண்டிக்கடையிலும் நன்றாக இருக்கும்.
எக்ஸ்க்குளூஸிவ் தயிர் வ்டை ... மைசூர் போண்டா ஸ்டையில் உருண்டையாக வடையாக போட்டு மோரில் ஊற வைத்து பிறகு தயிரில் போட்டு ஊற வைப்பது. இது தான் அல்வா போல இருக்கும்.இந்த வகை தயிர் வடை சனிக்கிழமை காலையில் ரயில்வே காலானி மைதானத்தில் ஒருவர்  கொண்டு வந்து தருகிறார். கிலாசிக்.அந்த வடையை சாப்பிடரதே தனித்த அனுபவம்.சுண்டா காய்ச்சிய  பாலில் முந்தின நாளிலே புரை போட்டு வீட்டில் தயாரிக்கும் தயிர்.அதில் சின்ன வெங்காய்ம் பச்சை மிளகாய் போட்டு தாளித்தது....அதுவும் சும்மாவே சின்ன வெங்காயம் பட்டைய கிளப்பும்...பற்றாதற்கு தாளித்த வெங்காயம்...சொல்லவா வேனும் ருசி ..நாக்கில் பரதநாட்டியம் ஆடும்.
இதே போல சிவரஞ்சனி எதிர்புறம் உள்ள தெருவில் இரண்டு கடைகள் தாண்டிய பிறகு ஒரு வடை போண்ட போடும் கடை இருக்கும். இங்கே தயிர் கொஞ்சம் லிக்வுயூடு இருக்கும்.ஆனால் வடை நன்றாக ஊறி இருக்கும். இவர் ஸ்டேட் பாங்க் ரோட்டில் வண்டி கடை போட்டு இருந்தார். வடை போண்டா கடை மட்டும் சிறப்பாக அமைந்து விட்டால் வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். மனிதர் இன்று எங்கையோ போய்ட்டார்.இவரிடம் தயிர் வடை சாப்பிடும் போது தயிர் வ்டைசாப்பிட்ட பிறகு கொஞ்சம் தயிரை மிச்சம் வைத்து அதில் இவரிடம் கிடைக்கும் கீரை வடையை ஒன்றை பிச்சுப்போட்டு சாப்பிட்டுப்பாருங்கள்.....ஒரத்தில் விருப்ப பட்டால் கொஞ்சம் தக்காளி சட்னியுடன்.....மனுசன் ...வாழ்க்கையை வாழுவீங்க பாஸ் ..அந்த நிமிடத்தில்!!!

தயிர் வடை தான் நம்முடைய உண்மையான டெசர்ட். ஆம் இரவு உணவுக்கு பின் தயிர் வடை சாப்பிட்டுப்பாருங்கள். அதுவும் கொஞ்சம் ஜில் என்று. உணவுப்பின்பு தயிர் வடை சாப்பிடும் போது அதன் மேலே கொஞ்சம் தேன் டாப்பிங்கஸ்….அசத்தும்…இன்னும் பிளவர் ஏத்தனுமா…. கொஞ்சம் ஏலக்காய் தூள்…பாதம் பருப்பை தூளாக மேலே தூவி ருசித்துப்பாருங்கள்…. ஆளை அசத்தும்… உடலுக்கும் நல்லது..குழந்தைகளுக்கு ஐஸ் கீரீம் போன்ற செயற்கை பொருட்களை கொடுப்பதை விட இப்படி போட்டுப்பாருங்க ஒரு கூக்ளி!!சாப்பிட்டால்…கிளீன் போல்டு!!

.....தயிர் வடையை பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம்... கொஞ்சம் சுருக்குவோம்..... ஒருவேளை இத்தொடர் விலாவாரியாக புத்தகமாக வெளி வரும் போது..இன்னும் ஆழமாக தயிர் வடையை ருசிப்போம்

...........

தொடரும்...

Read more...

சாம்பார் வடையும் ...தேங்காய் சட்னியும்!!

>> சனி, 7 பிப்ரவரி, 2015

உளுந்து வடை.. தேங்காய் சட்னி....உளுந்து வடை சைஸ் ரொம்ப முக்கியம் உள்ளங்கை அளவுக்கு தான் இருக்கவெண்டும்.அதைவிட எக்காரனம் கொண்டும் பெரியதாக செல்லத்தேவையில்லை.இதை விசேங்களின் போது தலைவாழை இலையில் வைத்தாலே அந்த இலைக்கு ராயl லூக் !. அதை பார்க்கும் போதே அந்த சாப்பாடு எப்படி இருக்கும் என்று தெரிந்துவிடும்.
நம்மூரில் இப்போது எல்லாம் இதன் சைஸை மிகவும் சிறியதாக்கி விட்டார்கள்.அதுவும் உளுந்து வடை வைக்காமல் ஏதே ஒரு பட்சனத்தை வைக்கும் போதே புரிந்து விடும். இன்னிக்கு வயிற்றுக்கும் நாக்குக்கும் துரோகம் செய்துவிட்டோம் என்பது.திருமணம் ஆகாதவர்கள் .மற்றும் .திருமண வயதில் குழந்தைகள் உள்ளவர்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சமையல் காரரிடம் குறிப்பாக கேளுங்கள். என்ன வகை வடை...என்ன சைஸ் ..இன்னபிற வடையின் அங்க லட்சணங்களை!!..

இதை படித்த பிறகாவது சாப்பிடவருகிறவரக்ளின் மனநிலையை தெரிந்துகொள்ளுங்கள் .புரிந்துகொள்ளுங்கள். கோடி புண்ணியம் கன்பார்ம்!!!

இப்போது எல்லாம் இல்லங்களில் உளுந்துவடைக்கு என்று மாவு அரைப்பதில்லை.எல்லாம் ரெடி மிக்ஸ் மயம் .செம கடுப்பாக இருக்கிறது,பார்க்கவே பாவமாக!! அதுவும் சமீபத்தில் உண்ட உளுந்துவடையை நினைத்தால் ...அய்யோ அது ஒரு கொடூர கனவு என்று என்னையே சமாளித்துக்கொண்டேன்!.
பெரிய வகை உளுந்துவடைக்கு  தேங்காய் சட்னி என்பது ரொம்ப கெட்டியாக இருக்ககூடாது . ஆனால் கரண்டியில் இருந்து எடுத்து வைக்கும் பக்குவத்தில் இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் ஊற்றும் பக்குவத்தில் இருக்ககூடாது.

பச்சைமிளகாய் கலந்து நேகாக அல்லது கொஞ்சம் ட்ரையாக இருந்தாலும் கூட அருமையான பக்குவம்.கூடவே மல்லி இலை பிளவரும் இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சில இடத்தில் வைக்கும் இனிப்பான சட்னியாக இருந்தால் உளுந்து வடை அனுபவம் அன்று கர்ண கொடூரம் ஆகிவிடும்.இந்த வகை பெரிய வடைகளை பிட்டு பிட்டு தான் சாப்பிடனும் .அப்படியே எடுத்து அவசரத்தில் வாய்க்கு கொண்டு போயிராதீரக்ள்.அனுபவம் மிஸ்!!அதுவும் இல்லாமல் பக்கத்தில் இருப்பவர் பயந்து தெரிந்துவிடுவார்!
உளுந்து வடை சாப்பிடும் போது ஒரு வாய் தேங்காய் சட்னி...இன்னொரு வாய் சாம்பார் தொட்டு தொட்டு சாப்பிட ...அவ்வப்போது வடையை சாம்பாரில் துவைத்து சாப்பிடகொடுத்து வைத்திருக்கவேண்டும். முன் ஜென்மத்தில் பரம்பரையில் யாரோ செய்த புண்ணியம். அருகே யார் அமர்ந்திருந்தாலும் மறக்கப்படும். ஆம் சொர்க்கத்தில் இருப்பீங்க..!!

உளுந்து வடைக்கு சாம்பாரை தொட்டு சாப்பிடுவது ஒரு வகை என்றால் சாம்பாரில் ஊறப்போட்டு அடிக்கும் மஹா ஜனங்கள் இந்நாட்டில் பெரும்பாலோர் உண்டு.அதுவும் காலையில் உணவகம் சென்றால் சாம்பார் வடை கட்டாயம் உண்டே தீரவேண்டும் என்று வாழ்நாள் சபதம்  எடுத்தவர் பலர் உண்டு. அவ்வளவு பர்பக்ட் காம்போ இது.
சாம்பாரில் பல வகை உண்டு.அதை தனியே பார்ப்போம்.டிபனுக்கு வைக்கும் சாம்பாருக்கும் சாதத்திற்கு வைக்கும் சாம்பாருக்கும் வானமும் பூமியும் போல!!
டிபனுக்கு வைக்கும் சாம்பாரில் தான் வ்டையை போடுவாரக்ள். இதிலிரண்டு வகை உண்டு. ஒன்று உளுந்து வடையை சுடு தன்னீரில் ஊற வைத்து அது நன்றாக ஊறிய பிறகு அதை தண்ணிரில் இருந்து எடுத்து அதன் மேல் சாம்பாரை ஊற்றுவது.வடை ஏற்கனவே நன்றாக ஊரியிருக்கும் .சாம்பார் அதனுடன் இரண்டர கலக்க ..அந்த பிளாவர் இரங்க சுமார் 10 நிமிடம் போதும். வடை சும்மா பஞ்சு போல இருக்கும்..
இரண்டாவது வடையின் மேல் நேரிடையாக சூடான சாம்பாரை ஊற்றுவது. இதற்கு சாம்பாரில் வடை நன்றாக ஊற கொஞ்சம் நேரம் பிடிக்கும் .குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்விட்டால் தான் நன்றாக வடை சாம்பாரில் ஊறும் இல்லையென்றால் வெளிப்புறம் மட்டுமே சாம்பார் ஊறி உள்ளே வடயின் மைய்யப்பகுதி ஈரத்துடன் இருக்கும் . அதை சாம்பாருடன் கலந்து சாப்பிடுவது என்பது தொட்டு சாப்பிடுவதை போல தான்.
இதில் மிக முக்கியம் சாம்பாரின் பக்குவம்.அதிகம் தண்ணிர் போல் இல்லாமல் ..அதே சமயம் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மித தன்மையில் இருக்கவேண்டும்.அப்போது தான் வடை ஊறவும் வேண்டும் அதே நேரத்தில் வடை சாம்பாரில் உள்ள நீரை உறிஞ்சியபிறகும் சாம்பார் கெட்டியாகமல் இருக்கவெண்டும். அதுவும் சின்ன வெங்காய பிளைன் சாம்பார் அல்லது முருங்கை கீரை சாம்பார் அல்லது முருஙகாய் சின்ன சின்னதாக வெட்டி போட்டு சாம்பார் தான் ருசியாக இருக்கும் வடைக்கும் ஆப்டாக இருக்கும். இதன் மேல் பெரிய வெங்காய துண்டுகளை போட்டு சாப்பிடுவது சிலருக்கு பிடிக்கும்.கூடவே இரண்டு சொட்டு நெய் விட்டு சாப்பிடுவது மணமாக இருக்கும்.சிலருக்கு மட்டுமே இந்த பிளவர் பிடிக்கும். காரணம் நெய் விட்டால்...சாம்பாரின் உண்மையான ருசி கிடைக்காது.அந்த ருசி தனி!!
உணவகங்களில் பெரும்பாலும் வடையில் நேரடியாக சாம்பாரை ஊற்றி அதன் மேல் கொத்த மல்லி இலைகளை தூவி வைத்துவிடுவார்கள். அதே போல சாம்பார் வடை பெரும்பாலும் விசேஷஙக்ளில் இடம் பெறாது
இது காலையில் தான் பெரும்பாலும் விரும்பப் படுகிறது .மதிய நேரத்தில் சாததிற்கு பதிலாக லைட் டிபன் செய்பவர்கள் அல்லது 11 மணியளவில் சிறு சிற்றுண்டி சாப்பிடுபவர்கள் விருப்பத்திலும் இதற்கு இடம் உண்டு.
இது இப்படி என்றால்...உளுந்துவடையும் தயிரும்... என் ஆல்டைம் பேவரிட்....

தொடரும்...


Read more...

வடை,போண்டா,பஜ்ஜி-2

>> வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

திருநகர் காலனி ரோட்டில் கேகே எஸ்கே அலுவலகம் எதிரில் ஒரு டீக்கடை இருக்கிறது. ஈரோடு வாசிகள்...இந்த மாதிரி பலகாரம் சாப்பிடுபவரக்ள் பெரும்பாலோர் இந்த பக்கம் வந்தால் இங்கே அட்டனஸ் போட்டு விட்டு தான் மறு வேலை.டீ முதல் அனைத்து பலகாரமும் தரமாக இருக்கும் .சர்வீஸும் நீட்ட்ட்ட்!!

தரமான பொருடகளை கொண்டு கண்முன்னே அரைத்து அப்போதே சுட் சுட கிடைக்கும்.இவர்களின் பலகாரம் சைஸ் பெரியது.வடை , மெதுவடை, உருளைக்கிழங்கு போண்டா,பஜ்ஜி என அட்டைய பட்டைய கிளப்பும்.இங்கும் காத்திருந்து அல்லது முந்திக்கொண்டால் மட்டுமே கைக்கு வரும். இல்லையென்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டே நாவில் எச்சு ஊர அடுத்த ரவுண்டுக்கு காத்திருக்கனும்.இங்கே சட்னி காம்போ இல்லை.

இப்படி வடை கடை பலது இருந்தாலும் டவுன் போலிஸ் ஸ்டேசன் எதிர்புறம் உள்ள ராமசாமி கடை என்றால் அதற்கு ஈரோடு முழுக்க தனித்த பெயர் உண்டு. இதுவும் ஈரோட்டின் மிகப்பழமையான கடை.தரமாக இருக்கும் .இவரக்ளின் வடை போண்டா ..பஜ்ஜி மிக்சர் என அனைத்தும் தரமாக இருக்கும் .ஆனால் இவர்களிடம் சட்னி கிடையாது.காலையில் ஆரம்பித்தால் இரவு வரை கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.இங்கே வடை கிலாஸிக்.
வடையில் பல வகை இருந்தாலும் ரசம் வடை ...சாம்பார் வடை மற்றும் தயிர் வடைக்கு என்று தனித்த ரசிகர் பட்டாளம் உண்டு.ரசம் வடைக்கு மெதுவடை செட் ஆகாது.அதற்க்கு பருப்பு வடை பெஸ்ட் ஆப்சன். சேலம் டீடீடீசி பாரில் இது சைட் டிஸ்ஸாக தருவார்கள் .டிவைனாக இருக்கும். இங்கே என்னோடு இந்த ரச வடையை ருசித்த மற்றொரு மனிதர் Sundar Vadivel...ஞாபகம் வருதே...!!!அதுவும் பருப்பு வடை பெரியதாக இருக்க கூடாது..சின்ன சின்ன தாக இருக்கவேண்டும்..அப்போது தான் சாப்பிட செம ஆப்டாக இருக்கும்....சாம்பார் வடை...ஆஹா... இதைப்பற்றி தனியாக எழுதலாம் ..ஒரு தல வரலாறே!!!

சாம்பார் வடை.... இதை பற்றி எழுதும் முன் இந்த வடை போண்டா பஜ்ஜிகளுக்கு தோதான செம்பாதிகளை பற்றி எழுதவில்லை என்றால்....அந்த சட்னி பகவான் என்னை எமஹாவில் வந்து அடிப்பான். சரி... இனி சிற்றுண்டிகளின் தோதான அதற்க்கு பக்காவன பக்கவாத்யமான சட்னிகளை பற்றி...ஆமாங்க...ஆமாங்க....
.
முதலில் உளுந்துவடைக்கு ...பக்காவான காம்பினேசன் தக்காளியும் வெங்காயம் வரமிளகாயும் கலந்த கொஞ்சம் மிதமான லிக்யூட் பதத்தில் உள்ள சட்னி. அதுவும் நல்ல உளுந்து வடைக்கு அடையாளம் மேலே மொரு மொருவும் அதாவது தோல் போல கொஞ்சம் பிட்டால் உள்ளே மெது மெது என்று (அதனால் தான் இன்னொரு பெயர் மெதுவடை) முழுதான மிளகு, நறுக்கிய பச்சை மிள்காய் .சிறியதாக நறுக்கிய வெங்காய் துண்டுகள் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை எல்லாம் கலந்து இருக்கனும் அந்த வடையில் அப்படியே ஒரு இளம்பெண்னை முதன் முறையாக சீண்டுவது மென்மையாக பிட்டு அதை அந்த சட்னியில் தொட்டு ....அந்த தொடுதலோடு கொஞ்சம் சட்னி அந்த வடையோடு வர சட்னி மற்றும் வடையோடு கடித்தவுடன் முதலில் சட்னியின் சுவை நாகு ருசியில் விளையாட வேண்டும்.பின் அந்த வடையின் துண்டு அந்த சட்னியின் காரத்தை குறைக்கு மெது மெது பகுதி நாக்கில் புரண்டு பல்லில் அரைத்து மீண்டும் வடை சட்னி எல்லாம் கலந்த காம்போவின் ருசி கிடைக்கும். அப்ப நாக்கில் ஊரும் பாருங்க உமிழ்நீர் அதுதான் வடையை இத்தனை ஆண்டுகள்...தமிழனின் வாழ்வோடு இரண்டர கலந்து ஒரு கலாச்சாரமாக பாரம்பரியமாக மாறியதின் பின்னனி!!

உளுந்துவடையை பொருத்தவரை சிற்றுண்டியாக வண்டி கடையில் சட்னியோடு சாப்பிட பெரியதாக இருக்ககூடாது .அதாவது உள்ளங்கை அளவுக்கு போடும் வடை இப்படி சாப்பிட உகந்தது அல்ல. இந்த வடை மற்றும் சட்னிக்கான சைஸ் என்பது கேரம்போடில் உள்ள ஸ்டைக்கரின் சைஸ் தான் இருக்கவேண்டும். அந்த சின்ன சைசில் வ்டை சாப்பிடும் போது ஒரு மிளகு கடிபடவேண்டும்...கூடவே இரு சின்ன துண்டு மிளக்காய் மாட்டவேண்டும் கூடவே ஒரு துண்டு வெங்காயம் அல்லது சிறு துண்டு அளவு கொத்தமல்லி இலை அல்லது கருவேப்பிலை மாட்டவெண்டும். இந்த காம்போவில் மூன்று அல்லது நான்கு கடியில் வடையின் சுவை மாறிக்கொண்டே இருக்கும் .இது தான் வடையின் உச்சபடச் சுவையாக இருக்கும்.அதுவும் இதை வெறும் தட்டிலோ பிளாஸ்டிக் தட்டிலோ சாப்பிட்டி விடக்கூடாது.தின்சரி பேப்பைரை சதுர வடிவில் கட் செய்து அதன் மேல் அதெ சதுர வடிவிலோ அல்லது செவ்வகவடிவிலோ வாழை இலையில் வைத்து சாப்பிடனும்...அந்த அனுப்வம் ..ஒரு மூறை ரசித்து சாப்பிட்டுப்பாருஙக்ள்...பிற்கு புரியும் தெருவோர கடைகளின் ருசியின் உண்மையை.
இப்படி தக்காளி சட்னியோடு போட்டி போடவிட்டாலும் இன்னொரு காம்பினேசன்....தேங்காய் சட்னி!!! அது எப்படி.... சொல்ரேன்...வெயிட் பாஸ்.... தொடரும்...


Read more...

வடை ,போண்ட,பஜ்ஜி-1

>> திங்கள், 2 பிப்ரவரி, 2015

உளுந்துவடை..பருப்பு வடை,கீரை வடை,மாவு போண்டா,கீரை போண்டா,..இப்படி போனாலும் பஜ்ஜியில் தான் அதிகம் வெரைட்டி. சரி முதலில் வடையை பார்ப்போம்.வடையில் டாப் என்றால் கீரை வடைதான்.இதுக்கும் சிறப்பு ஸ்டேட் வங்கி  நுழைவு வாயிலில் ஒரு வண்டிக்கடையில் சாப்பிட்டேன். இவர் காலையில் வடை போண்ட பஜ்ஜி எல்லாம் போட்டாலும் இவரிடம் இரண்டு தான் பேமஸ். ஒன்று கீரை வடை மற்றும் கீரை போண்டா. தொட்டுக்கொள்ள பெரும்பாலும் கடைகளில் மாலை வேளையில் தான் சட்னி தருவாரகள். ஆனால் இவர் பகலிலேயே தந்தார்..அதுவும் நல்ல குவாலிட்டியான வெங்காயம் மற்றும் தக்காளி கலந்த சட்னி. பட்டையகிளப்பு போண்டாவுக்கு. மனிதர் இப்ப தனியே சிவரஞ்சனிக்கு ஓட்டலுக்கு எதிர்புறம் உள்ள தெருவில் தனி கடையே போட்டுவிட்டார். முதலில் வடையை சட்னி தொட்டுக்கொண்டே சாப்பிட்டு விட்டு பிறகு சூடாக போண்டா பக்கம் போய்....சட்னியில் துவைத்து சாப்பிட்டு விட்டு இறுதியில் இவரிடம் இருக்கும் தயிர் வடையில் ஆனியன் போட்டு ஓரத்தில் கொஞ்சம் கெட்டி சட்னி வைத்து அடித்தால்....ஆஹா..கிடைக்குமே... ஒரு திருப்தி!!! இது இப்படி என்றால் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள கடையில் கிடைக்கும் ருசி.......!!!


இன்று ஒரு பதிவு படித்தேன். இரண்டு மெதுவடை மூன்று மைசூர் போண்டா ஒரு கப் அல்வா ..இதற்கான பில் தொகை சுமார் 140 ரூபாய். சென்னையில்.அப்பாடியோ!! இன்றும் நான் சாப்பிடும் கடையில் வடை போண்டா பஜ்ஜிகளின் விலை 3 ரூபாய் தான்.இதே கடையில் சில நாட்கள் முன் விலை வாசியை காரனம் காட்டி விலையை ஏற்றினார்கள். 5 ரு என்று .சைஸூம் கொஞ்சம் பெரியதாக மாற்றினார்கள்..சில நாட்கள் தான் ....... வியாபாரம் டல்லோ டல்!! மீண்டும் இப்போது பழைய விலைக்கே!! இத்தனைக்கும் கொல்லம்பாளையம் பகுதியில் டீ யுடன் சேர்ந்து பலகாரம் போடும் நல்ல கடைகள் இல்லை. இப்போது ஒரு பேக்கரி சூடு பிடிக்கிறது.
இந்த விலை நிலவரத்திற்கே இப்படி என்றால்.. பரிமளம் காம்பளக்ஸுக்கு எதிர் புறம் உள்ள ரோட்டில் புரோபசனல் கொரியர் தாண்டி வரிசையாக மூன்று வண்டிக் கடைகள் இருக்கும் . இங்கே ஒரு வயதான தாத்தா பாட்டி கடை நடுவில் இருக்கும் .பெரும்பாலும் இவருக்குதான் வாடிக்கையாளர்கள். காரணம் எனக்கு தெரிந்து ஈரோட்டின் பழமையான வடை போண்டா மாஸ்டராக இருப்பார்.இந்த வண்டிக்கடை வைத்தே சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம். அப்ப கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.இதில் என்ன இன்னொரு ஆச்சர்யம் என்றால் இவரிடம் வடை போண்டா இன்றும் 50 பைசா தான். நான் தற்போது போய் சில மாதங்கள் ஆகிறது. இவரிடம் கிடைக்கும் சட்னி வேறு மாதிரியாக இருக்கும் .தக்காளி சட்ணிதான் ..ஆனால் தண்ணிருடன் இருக்கும் .அதில் பலகார தூள்களை சேர்த்து இருப்பார். தனித்த சுவை.
மாலையில் ஸ்வஸ்திக் கார்னரில் சத்தி ரொடு திரும்பும் போது ஒரு வண்டிக்கடை இருக்கும் .இதுவும் அப்போது மிகவும் பிரபலம்.சுமார் 15 வருடஙக்ளுக்கு முன்.அப்போது அலுவலகத்தில் தினம்தோரும் மாலையில் ஒருவர் மாற்றி ஒருவர் என்று சிறு பலகாரங்கள் வாங்கித்தரனும்.அப்போது இங்கே தான் வாங்குவோம்.வடை போண்ட இரண்டுமே சுவையாக சட்னியுடன் இருக்கும்.இப்போது இந்த கடை இருக்கிறதா என்று பார்க்கனும்.


ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பகுதியில் பல கடைகள் உண்டு. ஆனால் அவ்வளவாக ருசித்தது இல்லை. ஏதாவது சில சமயம் மட்டும் உண்டு. ஆனால் அந்த பகுதியில் பிரபலமானது பிரைட் ரைஸ் நுடுல்ஸ் வண்டி கடைகள். பல ஆண்டுகளுக்கு.முன்பே..இப்போது போல சைனீஸ் கடைகள் இல்லை. நான் சொல்வது 20 ..25 ஆண்ட்டுக்ளுக்கு முன்...அப்போது நானும் என் நண்பன் முருகேஷும் சிக்கய நாய்க்கர் கல்லூரி அருகே ஒரு அண்ணாச்சி சைனீஸ் அயிட்டங்களுக்கு வண்டி கடை போட்டு இருப்பார்.... அங்கே தான் சாப்பிடுவோம். அந்த ருசி எல்லாம் இப்போது சுத்தமாக இல்லை.அதுவும் அந்த ரைஸூக்கு ஒரு வெஜ் குருமா ஒன்று தருவார் பாருங்கள். இரண்டையும் காம்பினேட் பன்னி சாப்பிட்டா ....திவ்யமாக இருக்கும்....வடைக்கு வருவோம்...பிறகு இன்னொரு நாள் இந்த சைனீஸ் கச்சேரி வைத்துக்கொள்வோம்.
தற்போது ஐய்யபவிலாஸ் கீழேயும் வடை போண்டா போடுகிரார்கள். மாலை வேளையில். குவலிட்டியாக இருக்கிறது.இரண்டு வகை சட்னி..பனியாரமும் உண்டு. பொதினா சட்னி இங்கே உண்டு.கூட்டமும் ஒரளவு பரவாயில்லை.ஆனால் கிருஷ்ணா தியேட்டர் முன்புறம் கொஞ்சம் தாண்டி ஒரு கணவன் மனைவி வண்டி கடை போட்டு இருப்பார்கள். இதுவும் ஈரோட்டின் பழமையான கடை. எப்போதும் ஒரே ருசி.இவருக்கு பள்ளிபாளையத்தில் இருந்து எல்லாம் வாடிக்கையாளரக்ள் வடை போண்டா சாப்பிடவும் பார்சல் வாங்கவும் வருப்வார்கள். குறிப்பாக இவர்களின் போண்டா செம பிரபலம். எப்போதும் வண்டி கடையில் கூட்டம் சும்மா அம்பும்.காத்திருந்த்து தான் சாப்பிடனும்.இவர்களின் சட்னி ருசியும் மாறுபாடானது. கொஞ்சம் காரம் அதிகமான தக்காளி சட்னி. கலக்கலாக இருக்கும். இந்த பகுதியில் இருக்கும் வட நாட்டினருக்கு இவரின் வண்டி கடை ஆஸ்தானம். கூடுதல் விசயம் இவரின் மகன் என் நண்பர். இவரின் பட்டப்பெயரே போண்டா என்று தான் கூப்பிடுவார்கள். நல்ல டைப். இவரிடம் பல முறை கேட்பது உண்டு...ஏம்பா உங்க அப்பா பன்ற வியாபாரத்தை கற்றுகொள்ளாமே... நல்ல வியாபாரம் ..என்றால் மனிதர் பிடி கொடுக்காமல் நலுவி விடுவார்.. காலம் மாறிவிட்டது. நானாக இருந்தால் அந்த வண்டிக்கடையை தான் என் வணிகமாக மாற்றி இருபேன்.
தற்போது என் நண்பர் மாலை வேளையில் எட்டு மணியளவில் இருந்து கடையை பார்த்துக்கொள்கிறார்.

தொடரும்...

Read more...

வணிகம் ஆரம்பிக்கும் முன் மிக முக்கியமான விசயங்கள்.

வணிகம் ஆரம்பிக்கும் முன் மிக முக்கியமான விசயங்கள்.

முதலில் நீங்கள் வணிகம் ஆரம்பிப்பதில் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கிறீர்க்ள் என்பது மிக முக்கியம்.இதை பல முறை உங்களையே கேட்டு உங்களின் ஆழ்மனதில் இருந்து விடையை பெறுங்கள்.
உடனே பணம் புரட்ட தொடங்காதீர்கள்.வணிகம் செய்ய பணம் என்பது ஒரு பொருட்டல்ல.அதை பல வகைகளிலும் புரட்ட முடியும்.

அடுத்ததாக எந்த வணிகம் ..எந்த துறை என்பதை முடிவு செய்யுங்கள் அல்லது பணம் மட்டுமே உங்களிடம் உள்ளது ஆனால் துறை பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் ஒரு ஆலோசகரை அனுகுங்கள்.

ஆலோசகரிடம் உங்களின் எண்னங்களை தெளிவாக சொல்லுங்கள்.அவர், வணிகத்திற்கு ஏற்றவரா நீங்கள்..உங்களின் ஆர்வம், ஈடுபாடு மற்றும் உங்களின் அனுபவம் ....மற்றும் சிலவற்றை கணக்கிட்டு வணிகம் உங்களுக்கு ஒத்துவருமா என்று ஆலோசனை வழங்குபவர்.

இந்த சமயத்தில் ஒருவேளை  வணிகம் வேண்டாம் என்று உங்கள் ஆலோசகர் சொன்னால்  சத்தம் இல்லாமல் வண்டியை கட்டிவிடுங்கள்.காரனம் உங்களைவிட வணீகம் என்பது ஆலோசகருக்கு முக்கியம்.நீங்கள் வெற்றி பெற்றால் தான் அவருக்கு உங்கள் மூலம் அதிக லாபம். தோல்வி அடைந்தால் மிகப்பெரிய நஷ்டம் அவருக்கும் உண்டு.

ஆலோசகர் உங்களுக்கு ஏற்றவாறு வணிகத்தின் அடிப்படைகளை உங்களுக்கு வழங்குவார்.அதில் உங்களுக்கு விருப்பம் ஆர்வம் நம்பிக்கை அடிப்படையில் ஒகே சொல்லுவீர்கள்.
அடுத்த கட்டமாக ஆலோசகர் வணிகத்தின் விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குவார். அதாவது சாதக பாதகங்கள் சந்தை வாய்ப்பு. முதலீடு போன்றவற்றை விளக்குவார்.
இப்போது தான் முதலீடு பற்றி அதிகம் விவாதிக்கவும் திட்டமிடலும் அவசியம்.ஆதாலால் வனிகத்தை எடுத்து செல்ல ..தொடக்கம் மற்றும் எந்த எந்த கால அளவுகளில் முதலீடு தேவைப்படும் என்பது விவாதிக்கப்படும்.
உங்களின் பொருளாதார நிலையை கொண்டு எப்படி எல்லாம் முதலீடுகான சோர்ஸ்களை உருவாக்கலாம் என்று ஆலோசானை வழங்குவார். கூடவே மொத்த பட்ஜெட்டும் குறிப்பிட்ட காலத்திற்கு திட்டம் பக்காவாக திரட்டப்படும்.கூடவே நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் ஆராயப்படும்.
இந்த இடத்தில் அந்த வணிகம் உங்களால் செய்யமுடியுமா இல்லையா என்பது கன்பார்மாக உஙக்ளுக்கு தெரிந்துவிடும்.
இப்போது உங்களுக்கு வணிகமோ அல்லது அந்த திட்டமோ தமக்கு சரிப்படாது அல்லது அந்த அளவுக்கு செய்யமுடியாது என்றால் அந்த ஆலோசகருக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லிவிட்டு உங்களின் நஷ்டம் தவிர்க்கப்பட்டது என்று அர்த்தம்.சந்தோசமாக போய் வேலையை பாருங்கள்.அக்கடா என்று.


ஆலோசகர் சொன்ன வணிக உத்தி முறை எல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால்... சின்ன சின்ன மாற்றங்கள்..கருத்து வேறுபாடுகள் இருக்கும் ..இருந்தாலும் அது ஒன்றும் பெரியவிசயமில்லை. பேசியோ அல்லது மாற்றியோ செய்து கொள்ளலாம்.
பிறகு உங்கள் வணிகம் பற்றி சில உள்ளீடான ரகசிய விசயங்கள் ......தகவல் ......அதன் மூலம் சந்தை ..மார்க்கெட்டிங் திட்டம் எல்லாம் வகுக்கப்படும்.இதில் இருந்து எல்லா விசயங்களும் ரகசியமாக வைக்கப்படும்.
அடுத்தாக புராடக்டின் வேல்யூஸ்..மற்றும் பாக்கிங் ..இப்படி இன்னபிற விசய்ங்கள் ஆலோசகரோடு சேர்ந்து முடிவு செய்யப்படும்.
சில விசயங்கள் இதற்கிடையில் நடைபெறும்.
இறுதியில் பொருள் சந்தையில் இறக்கப்படும்...
மேற் சொன்ன விசயத்தில் சில விசயங்களை தவிர்த்துள்ளேன்.அது வணிகத்தின் ரகசியம்.
இந்த முறையில் பயணப்பட்டீரக்ள் என்றால் பாதுகாப்பாக பயணப்படலாம்.பல இடங்களில் செக் பாயிண்டு இருக்கும். ஒத்துவரவில்லை என்றால் ஆலோசகருக்கு கட்டணத்தோடு தப்பித்துவிடலாம்.இல்லியென்றால் வணிகம் ஆரம்பித்து பெரும்பாலோர் போல நஷ்டப்பட வேண்டியிருக்கும். இருப்பதும் போச்சுடா என்ற நிலை தான்.
சுமார் 1 லட்சத்தில் இருந்து 20 லடசம் வரை வணிகம் ஆரம்பிக்கும்போது இத்தகைய வழிமுறைகளை பின்பற்றினால் போதும் .

Read more...

வடை, போண்டா,பஜ்ஜி.

>> ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

வடை ,போண்டா ,பஜ்ஜி.... தென் இந்தியாவின் புகழ்மிக்க அடையாளஙக்ளில் ஒன்று.இதை உண்ணாதவர்கள் இருக்க இயலாது.எப்போது முதன் முறை இந்த வகை பலகாரஙக்ளை ருசித்தேன் என்று ஞாபகம் இல்லை.பெரும்பாலோருக்கும் இருக்காது .”வடை போச்சே” என்கிற வசனம் வரும் அளவுக்கு தமிழர்களின் வாழ்வோடு இரண்டர கலந்தது.


உண்மையில் வடைக்கு இயேசுக்கு நிகரான வரலாறு கொண்டது.ஆமாங்க 2000 வருட வாரலாற்றை கொண்டது.கி.பி.920-ஆம் வருஷம் தேதியிடப்பட்ட கன்னட புத்தகமான சிவகோட்யச்சர்ய என்ற நூலில் இட்லி மற்றும் வடை பற்றிய குறிப்பு இருக்கிறது. அதன் பிறகு கி.பி.1130-ஆம் ஆண்டில் சம்ஸ்கிருத புத்தகமான மானசலோல என்ற புத்தகத்திலும் வடை தயாரித்தல் குறித்த குறிப்பு இருக்கிறது. இடைச்சங்க காலங்களான கி.பி.100-300-ஆம் ஆண்டுகளில் இட்லி-வடை முதற்கொண்டு மீன் வகைகள் வரை சமைத்து உண்டதை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன.
மிக முக்கியமாக "தேமல பட்டுவா" என்ற சிங்களத் தமிழர் உருவாக்கிய உணவென்றும் நம்பப்படுகிறது.

தமிழ்நாட்டின் தேசிய உணவாக அறிவிக்கலாம் வடையை. ஊருக்கு ஊர் பகுதிக்கு பகுதி என்று பலவெறு வகை வடைகள் உள்ளது.ஆனால் புகழ்பெற்றதோ ...உளுந்துவடையும் பருப்பு வடையும்.அனுமனுக்கு படைப்பதில் இருந்து கல்யாணம் காது குத்து என்ற தமிழனில் வாழ்வில் பின்னி பினைந்து உள்ளது.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் வடை என்பது ஐந்து பைசா ..பத்து பைசா. பெரும்பாலும் வடை கடைகளில் வாங்கமாட்டார்கள். வீட்டில் சுடுவார்கள்.என் நினைவு தெரிந்து அரிதாக சாப்பாடுக்கு தொட்டுக்கொள்ள வாங்கி வருவார்களே தவிர தற்போது போல சிற்றுண்டியாக உண்ணும் அளவுக்கு கிடையாது..

தேநீர்க்கடைகள் அதிகம் ஆக ஆக அக்கடைகளில் மக்களை கவர கூடுதலாக சில கடைகளில் மட்டுமே பலகாராம் போட ஆரம்பித்தாரக்ள்.அதுவும் வடையும் பஜ்ஜியும்.எனக்கு விவரம் தெரிந்து உருளைக்கிழங்கு போண்டா எல்லாம் பிற்பாடுதான்.
பள்ளி காலங்களில் அதாவது  எட்டாவது வரை பயின்ற காலங்களில் இரண்டு கடைகள் மிகப்பிரபலம். ஒன்று தாலுக்க ஆலுவலகத்தில் இருந்த கடை..பிறகு ராசி டீக்கடை.காலை வேளையில் பள்ளிகளின் டீ டைமில் ஆசிரியைகளுக்காக டி யூம் ஆணியன் போண்டாவும் வாங்கி வருவோம். அந்த தாலுக்க ஆலுவலக கடை செம கூட்டமாக இருக்கும் அப்போது அந்த போண்ட போட்ட பிற்கு தூள் இருக்கும்....அதை அந்த மாஸ்ட்ரிடம் கேட்டு இலவசமாக சாப்பிடுவது என்பதே பெரிய விசயம். அப்போது எல்லாம் 5 அல்லது 10 பைசா கிடைத்தாலே கொண்டாட்டம்.அதற்கு பிறகு சில ஆண்டுகளில் ஸ்டேட்பாங் ரோட்டில் உள்ள ராசி டீக்கடை பிரபலம். வடையும் கலக்கலாக இருக்கு இதே நேரத்தில் கச்சேரி ரோட்டில் இருக்கும் ஒரு கடையும் பிரபலம்..இன்னும் அந்த கடை பிரபலம் தான். ராசி டீக்கடை இப்ப்போது டிபன் எல்லாம் போட ஆரம்பித்துவிட்டர். தாலுக்க கடை தற்போது இல்லை.

இதில் ராசி டீக்கடை என்பது இளைஞர்களுக்கு மிக முக்கியமான இடம். ஆம மகளிர் பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் இந்த வழியாக தான் செல்லுவார்கள்.காலையில் சைட் அடிக்க்க கூட்டம் கூடு நிற்கும்.தங்களின் காதலிகளை காண பல காளைகள் காலையில் தவம் இருக்கும்.பல கடிதஙள் கைமாறும்.இதில் அங்கே இருக்கும் பல பெரிசுகளுக்கு பிடிக்காது.அவ்வப்போது காவல்துறையில் போட்டுக்கொடுத்துவிடுவாரக்ள். திடிரென்று ஒருநாள் போலிஸ் மப்டியில் வரும்.கிடைக்கிர ஆளுக்கு அன்று செம மாத்தாக இருக்கும். இதில் என்ன பாவம் என்றால் காதலில் ..பெண்கள் விசயத்தில் கில்லாடிகள் ..காதலர்கள் மாட்டமாட்டார்கள். அவர்களுக்கு எப்படி தப்பிப்பது என்பது நன்றாக தெரியும்.எஸ்கேப் ஆகிவிடுவாரக்ள்.இந்த அல்லகைகள் ..இளிச்சாவாயன்கள் .....காதலிக்காதவர்கள்....ஆர்வக்கோளருகள் தான் மாட்டிக்கொல்லும் ...பாவமாக இருக்கும் ...தெரிவிலேயே அடி விழும். ராசி டீக்கடைகாரர் அவ்வப்போது போட்டுக்கொடுத்துவிடுவார்....சரி வடைக்கு வருவோம்...
பள்ளி காலங்களில் கருங்கல்பாளையம் காமராஜர் முனிசிபல் பள்ளிக்கு வெளியே பல கடைகள் இருக்கும். அதில் ஒரு கடையில் உருளைக்குழங்கு போண்டா போடுவாரக்ள் 50 பைசா என்று நினைக்கிறேன். சின்னதாக இருக்கும்.மேலும் டீ டைமில் போய் சாப்பிடுவோம்/ஆறிப்போனதாக இருந்தாலும் சுவையாக இருக்கும்.

பொதுவாக 20 ..25 வருடங்களுக்கு முன் இந்த பாக்கெட் மணி கலாச்சாரம் எல்லாம் இல்லை. எனக்கு விவரம் தெரிந்து எட்டாவது வரை கூட காசு தரமாட்டாங்க. மாதம் ஆனால் வீட்டில் சம்பாதிப்பவர்கள் சம்பளம் வாங்கிய கையோடு அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்களுக்கு குழந்தைகளுக்கு தீனி வாங்கித்தருவார்கள்.அல்லது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ருபாய் தருவார்கள்.அதையும் நாம் போய் கடைக்கு பொருள் வாங்கி சாப்பிட முடியாது.தாத்தாக்கள் தான் கூட்டிப்போய் வாங்கித்தருவார். அதனால் அப்பொழுது எல்லாம் கடையில் போய் வாங்கிச்சாப்பிடும் அளவுக்கு ஒரு மண்ணாகட்டியும் தெரியாது. 9 வது 10 அபடிக்கும் போதுதான் வெளியில் சாப்பிடும் அனுபவம்.அதற்கு முன்னால் ஏதோ அத்தி பூத்தார்போல் வாய்ப்பு கிட்டும். அப்போதும் என்ன சாப்பிடவேண்டும் எல்லாம் தெரியாது.முன்ன பின்ன போய் இருந்தால் தானே!!

11 வது 12 வது படிக்கும் போது ஒரளவு வெளிப்பழக்கங்கள்..நண்பர்கள்..இப்படி அமைவதால் வெளியே உண்ணும் சாமார்த்தியம் கிடைக்கிறது .கையிலும் கொஞ்சம் கிடைக்கும்....இப்போது தான் பொதுவாக இந்த வகை சிற்றுண்டிகள் சாப்பிடும் பழக்கமும் தொடங்குகிறது

ஒரளவு ப்ரீயாக இருப்பது என்பது கல்லுரி காலம் தான் .கையிலும் காசு புழங்கும்.கொஞ்சம் ஊர் சுற்றவும் ஆரம்பிக்கும் காலம். இக்காலத்தில் தான் ஆண்கள் ரொம்ப எஞ்சாய் செய்யர காலம்.சரி மேட்டருக்கு வருகிறேன்.கல்லூரியில் எதிர்த்தாப்பில் மூன்று நான்கு கடைகள் இருக்கும் அதில் ஆயா கடைத்தான் எங்களுக்கு கலக்கல். அங்கே சமோசா கிடைக்கும். அதைவிட கல்லூரி கேண்டினில் பஜ்ஜி கிடைக்கும் .காலை நேரத்தில் வடை போடுவார்கள். அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இருக்காது.

 புகைப்படம் “இனையம்.
தொடரும்

Read more...

முகனூல் நாட்குறிப்புகள்.

ஊறுகாய் என்பது உண்மையில் உப்பு தண்ணிரீல் ஊறவைத்த காய் தான்.இன்னும் மேலை நாடுகள் பலவற்றில் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.ஆனா எவன் கன்டுபிடித்தான் என்று தெரியவில்லை..அதில் மசாலா வைச்சேர்த்து நாக்கில் எச்சில் ஊறவைத்தது....இவனுக்கு வைக்கனும் சிலை!!!


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது...யாருக்கு ஆப்பிள் விற்கரவனுக்குதான்!!
எவன் இந்த கட்டுக்கதையை தொடங்கி வைத்தானோ ...அவனை ஆளை வைச்சு அடிக்கனும். பொதுவாக நமது உடலானது நம்மை சுற்றியுள்ள காலநிலை இயற்கை இவற்றோடு நெருங்கிய தொடர்புடையது.அதனால் அந்த கால நிலையில் என்ன விளைகிறதோ அதையே உண்ணும் வகைகையில் இந்த பிரபஞ்சம்அமைந்துள்ளது.பலாப்பழம் கிடைத்த அதை சாப்பிடு... சீத்தாப்பழம் கிடைக்கும் அதை சாப்பிடு....அதை விட்டு விட்டு ஆப்பிள் கிடைக்காத நேரத்திலும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து எல்லாம் சாப்பிட சொல்லலை.


ஒரு உணவின் ருசி என்பது எதை எதனோடு சேர்ந்து பரிமாறுகிறிர்கள் என்பதில் தான் உள்ளது சூட்சமம்.சமீபத்தில் இதை அவதனிக்கும் பெரும்பாக்கியம் கிடைததது.பெரும்பாலான டுமீல் இல்லத்து அரசிகள் டிப்ரண்டாக செய்கிறேன் என்ற பெயரில் உணவு வகைகளை கொலை செய்கிறார்கள். அதே போல் இவர்களின் சட்னியில் பாவம் தக்காளி... இந்த தக்காளி சட்னியேவே போட்டு கொல்ராங்க... எனக்கு என்னமோ ஒரு டவுட் இருக்கு..இவங்க சமையலை இவங்க சாப்பிடராங்களா என்று....நான் நினைக்கிறேன்..சமைச்சு வைச்சு புகைப்படம் எடுத்து முகனூலில் பதிந்துவிட்டு ஒட்டலுக்கு போய் சாப்பிடுவாங்கனு.
# பாவம் குடும்பத்தார்...


இட்லிக்கு சட்னி சாம்பார் இரண்டும் தான் ஆப்ட்.அல்லது கறிகுழம்பு .இதிலும் சூட்சமம் உண்டு.. சட்னி என்றால் கெட்டி ..மித தன்மை....தண்ணீர் போல இருப்பது செமியாக இருப்பது பல வகைகள் உண்டு.இடலியின் பதத்தை பொறுத்து சட்னி இருக்கவேண்டும் இதே குஷ்பு இட்லிக்கு கெட்டி சட்னி வைத்தால் விக்கி கொண்டு தான் சாகனும்.குக்கர் இட்லிக்கும் இதே போல தான். இடலி குண்டானில் கிடைக்கும் வீட்டு மெது மெது இட்லிக்கு காலையில் கெட்டி சட்னியை விட தாளித்த கொஞ்சம் லிக்வீடாக இருக்கிர சட்னி ஆப்டாக இருக்கும் இதே மாலை என்றால் கெட்டி சட்னி ஆப்டாக இருக்கும்.இருப்பதிலேயே இடலிக்கு பக்காவான துணை பொதினா சட்னி தான் சைவத்தில்.அசைவத்தில்..என்ன கேள்வி இது... குடல் கறி.இதில் இடலிக்கு அசைவ குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் ஊறபோட்டு அடிக்கலாம்...சாம்பார் என்றால் காயக்றிகள் போடாத சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் தான் செம காம்போ!! இது தவிர கத்திரிக்காய் போட்ட சாம்பாரும் நல்ல இருக்கும் ஆனால் இது போன்ற சிற்றுண்டிகளுக்கு சாம்பார் செய்யும் போது காய்களை சின்ன் சின்னதாக நறுக்கி போட வெண்டும்.அது தனித்த அனுபவத்தை கொடுக்கும்!!

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP