சுற்றுச்சூழலும் சட்டமும்-நேர்காணல்,தியோடர் பாஸ்கர்

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


சுற்றுச்சூழியல் சாந்த சொல்லாடல்களை தமிழில் முன்னெடுத்து சென்றவர் தியோடர் பாஸ்கர். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக ,தாமரை பூத்த தடாகம் போன்ற பல் சிறப்பு படைப்புகளை தமிழில் வழங்கியர்.கனடா தமிழ் இலக்கிய தோட்டம் விருது உடபட பல விருதுகளை பெற்றவர். அவரின் நேர்காணல்....

நேர்காணல் -  தியடோர் பாஸ்கரன், அறங்காவலர். WWF.India.    27.5.10


சுற்றுச்சூழல் பிரச்சனைகளிலில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது ஏழை மக்களும்,நடுத்தரமக்களும் .ஏன்?விரிவாக சொல்லுங்கள்.


           இந்தக் கேள்விக்கு பதிலை சுருக்கமாகவே சொல்லலாம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது வாழ்வாதாரங்கள் 
சிதைகின்றன. நதி, நீர் நிலைகள் வரண்டு குடிநீர் தட்டுப்பாடு உருவாகின்றது. ஏழை மக்கள் பல கிலோ மீட்டர் 
சென்று நீர் கொண்டுவர வேண்டியிருக்கின்றது. சுற்றுச்சூழல் சீரழிவின் முக்கிய குறியீடுகள் குடிதண்ணீர் பஞ்சம், குடிநீர் மாசுபட்டிருப்பது. அதே போல் எரிபொருள். எதை வைத்து சமைப்பது. மாசு சார்ந்த
நோய்கள் முதலில் தாக்குவது அவர்களைத்தான். மருத்துவ கவனிப்புக்கு அவர்களிடம் போதிய பணம் இல்லை.
காட்டில் வாழும் ஆதிவாசிகள் பல காரணங்களுக்காக ...அணை, கனிமசுரங்கங்கள்...என காட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள். கடந்த சில பதிற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மலைத்தொடர்களை நான் கவனித்து வருகின்றேன். காடுகள் சூழ்ந்திருந்த பள்ளத்தாக்குகள் சீரழிக்கபட்டுவிட்டன. மலைச்சரிவுகளை போர்த்தியிருந்த மழைக்காடுகள் சரைக்கப்பட்டு அவ்விடத்தில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகியிருக்கின்றன. பல காட்டுப்பகுதிகள் இன்று பொட்டல் வெளியாகி விட்டன. அருவிகள் வரண்டு, பாறைகளில் நீர் வழிந்தோடிய தடம் மட்டும் தெரிகின்றது. வனவளம் செழித்திருந்த காலத்தில் தாவர உண்ணிகளாக காட்டெருது, மான், பன்றி, இவற்றை அடித்து இரையாகக் கொண்ட புலி, சிறுத்தை, செந்நாய், போன்ற இரைகொல்லிகள் இவை நிறைந்திருந்த இக்காடுகளில் இன்று உயிரினங்களின் தடயங்களை காண்பது கூட அரிதாகி விட்டது. காடுகளை அழித்தது, நமது மாடியிலுள்ள தண்ணீர் டாங்கிகளை உடைப்பதற்கு ஒப்பாகும். அதைத்தான் நாம் செய்து விட்டோம். நதிகள் வரண்டு போயின. இயற்கையின் எல்லா வளங்களையும் நாம் ஊதாரித்தனமாக செலவு செய்கின்றோம். மணற்கொள்ளை ஒரு எடுத்துக்காட்டு. நதிப்படுகைகளிலிருக்கும் நீரை அழிக்கும் செயல்.  இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரினத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சாமனிய மக்களும் அறிந்து செயல் பட முடியும். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை நாம் உணர முடியும். நதிகள் வரண்டு போனது ஏன்? நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு போனது ஏன்? இயற்கையில் ஒன்னொன்றுக்கும் உள்ள இணப்பு என்ன? இதை நாம் இங்கு இன்னும் உணரவில்லை. பாரதி சொன்னது போல் 'கஞ்சி குடிப்பதற்கிலார்..அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்" 


 சுற்றுச்சூழல் காக்க நம்மிடம் சட்டங்கள் உள்ளதா?ஆம் எனில் எத்தகைய சட்டங்கள்?அவை நடைமுறையில் பயன் அளிக்கிறதா?


        இந்தத் தளத்தில் சட்டங்கள் என்றவுடன் என் நினைவிற்கு வருபவை Indian Forest Act, Wildlife Protection Act, Forest Conservation Act, Water Pollution Act, Air Pollution Act, Environmental Protection Act, Biodiversity Act.  இவைகளில்  முதல் மூன்றும் ஏறக்குறைய திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்ப்டுகின்றன. எனினும் காடுகளுக்கு வெளியே வாழும் காட்டுயிருக்கு பாதுகாப்பு இல்லை. எடுத்துக்காட்டாக உடும்பு,  தேவாங்கு போன்ற சிற்றுயிர்கள் இன்றும் அழிக்கப்படுகின்றன. நீர், காற்று மாசுபடுவதைப்பற்றிய சட்டத்தை அமுல் செய்வதில் பெரும் எதிர்ப்பு தொழிற்சக்ரவர்திகளிடம் இருந்து வருகின்றது. அதுவும் வேறு வேறு ரூபத்தில் வரும். நதிகளையும், நிலத்தடி நீரையும் சீரழிக்கும் தொழிலதிபர்கள் சட்ட்த்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பி விடுகின்றார்கள். பல்லுயிரிய சட்டம் அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.அதன் தாக்கம் தெரிய சில ஆண்டுகளாகும்.  சட்டங்கள் பல இருந்தாலும் மேம்பாடு (development) என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைக்கப்படுகின்றது. உடனே கையில் கிடைக்கும் காசைப்பற்றித்தான் மனிதனுக்கு அக்கறை. நம் நாட்டில் சட்டங்களுக்குப் பஞ்சமில்லை. கடலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் கட்டடம் ஏதும் கட்டக்கூடாது என்று ஒரு சட்டம் உள்ளது. என்ன நடக்கின்றது என்று நீங்களே சென்னையில் நீலாங்கரை போன்ற இடங்களில் பார்க்கலாம்.


சுற்றுச்சூழல் குறித்த போதுமான விழிப்புனர்வு நம் மக்களிடையே ஏற்படதற்க்கு என்ன காரணம்? அவைகளை கலைய என்ன வழிகள்?


        சுற்றுச்சூழல் அக்கறை பெருவாரியாக ஆங்கிலம் கற்ற மக்களிடையே தான் உருவாகியிருக்கின்றது. தமிழில் அடிப்படையான நூல்கள் கூட இல்லை. தமிழ் மொழி சுற்றுச்சூழல் இயக்கத்திற்காக, இந்த புதிய அக்கறைக்காக தயார்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் கல்வி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல...பொதுமக்களுக்கும் தேவையானது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், கதிரியக்க மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்ற விவரங்களைப்பற்றி அரிச்சுவடு தகவல் கூட நமது அச்சு ஊடகங்களில் காண்பதற்கில்லை.  பள்ளிகளில் சூழியல் போதிக்கப்படுவதில்லை. ஏதோ பேருக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள். சூழியல் கற்றுத்தரும் முறை என்ன?   வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை கூட்டிக்,கொண்டு போகாமல் சூழியலை கற்றுக்கொடுக்க முடியுமா, என்ன? சூழியல் ஒரு பாரம்பரிய வகுப்பறை பாடம் அல்ல...அது ஒரு நோக்கு.  ஒரு விழுமியம். ஒரு வாழ்வுநிலை. அதைக் குழந்தைப்பருவத்திலேயே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.  சூழியலுக்கு நோபல் பரிசு பெற்ற கான்ராட் லாரன்ஸ் கூறினார் "இயற்கையை பராமரிக்க மனிதருக்கு கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே அதை சொல்லிக் கொடுப்பதுதான்." 


நகரத்தில் நடும் மரங்களுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டா?விளக்கி சொல்லுங்களேன்..,தொடர்ந்து ஒருபுற்ம் காடு அழிப்பும் மருபுற்ம் நகரங்களில் மரம் நடுவதும் சமன் ஆகுமா?




 மரம் நடுவதற்கும் மழைபொழிவிற்கும் பிணைப்பு ஏதும் இருப்பதாக அறிவியலாளர் கூறவில்லை. ஆனால் காலநிலை மாற்றம் பற்றி நாம் பேசும் போது, மரம் நடுவது முன்னரை விட பன்மடங்கு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கரியமல வாயுவை கிரகிப்பதில்  மரங்களின் பங்கு நமக்கு தெரியும்.  அது மட்டுமல்ல....ஒவ்வொரு மரமும் அணில், பறவைகள், பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களுக்கு ஒரு வாழிடம் (habitat).  ஆகவே மரங்கள் நட வேண்டும். மரம் நடும் போது நம் நாட்டு மரத்தை நாம் நட வேண்டும். வேம்பன், புங்கை, புளியமரம் போன்று.  இவைகளுக்கு  நீர் அதிகம் தேவையில்லை.இருக்கிற மரங்களை பொன்னென பாதுகாக்க வேண்டும்.


தமிழகம் வரும் அனைத்து அரசியல் தலைவரும் தவராமல் பேசும் விசயம் நதி நீர் இனைப்பு.சாத்தியமா இல்லையா?விளக்கி சொல்லுங்கள்.




  இணையக்கூடிய நதிகள் ஏற்கனவே இயற்கையால் இணைக்கப்பட்டுவிட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காவேரியுடன் அமராவதியும், பத்ரா நதியுடன் துங்காவும் இணைந்து விட்டன. நதிகளை இணைக்க முடியுமா? இது என்ன ப்ளம்மிங் வேலையா? வேறு எந்த நாட்டிலாவது செய்திருக்கின்றார்களா? இதன் சூழியல் தாக்கம் என்ன? அரசியல் அதிர்வுகள்?இயற்கைக்கு எதிர்வினையாக மனிதர் மேற்கொண்ட எந்த செயற்பாடுமே நல்ல விளைவைத் தந்ததில்லை என்பதற்கு நம் கண்முன் பல எடுத்துக்காட்டுகள் இருந்தும் நாம் ஒரு பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. அணுவைப்பிளந்தது, ஆறுகளில் நீரோட்டத்தைத் தடுத்து பேரணைகளைக் கட்டியது போல.  இருக்கின்ற நதிகளை நாம் பராமரித்தால் போதும். செயற்கை இழை ஆலைக்கழிவால் பவானி நதியும், 
தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் பாலாறும், சாயப்பட்டறைகளால் நொய்யலாறும், சாயக்கழிவால் அமராவதியும் வேதியல் ரீதியில் நாசமாக்கப்பட்டு விட்டன. இவைகளைத் தடுத்திருக்க முடியும்.

புலிகளுக்கு பாதுகாப்பு திட்டத்தில் உள்ள 38 பகுதிகளிலில் 12 மட்டுமே நல்ல நிலையில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் அவர்களே ஒத்துக்கொண்டுள்ள நிலையில் இத்திட்டம் அவசியமா?


   Project Tiger அவசியம் என்றே நான் நினைக்கின்றேன். வேங்கை  பாதுகாக்கப்படுவதால் காடும், அதில் வாழும் அனைத்து காட்டுயிரும் பராமரிக்கப்படுகின்றன.  புலி நன்றாக இருந்தால் அந்தக் காட்டில் பன்றி, காட்டெருது, புள்ளிமான் போன்ற இரை விலங்குகள் நிறைய இருக்கின்றன என்று அர்த்தம்.  இந்தத் தாவரஉண்ணிகள் செழித்திருப்பது அவைகளின் வாழிடமான காடு வளமாக இருக்கின்றது என்று அர்த்தம். நமது நீர்வளத்திற்கு அடிப்படையஏ காடுகள் தானே. இவ்வுலகு நீரின்றி அமையதே.  எனவே தான் புலியை காப்பாற்ற வேண்டும். புலி ஒரு குறியீடு மட்டுமல்ல. பல்லூழிகால பரிணாமத்தின் உச்சம். நமது பாரம்பரிய செல்வம். கர்நாடக இசை, தாஜ் மகால்  போல.  வேங்கையை காட்டில் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது.

அற்றுப் போகும் த்ருவாயில் சிங்கம்.அழியும் நிலையில் புலி,அழிவின் தொடக்கத்தில் யானை என்று நம் வனசெல்வங்கள் தொட்ர்ந்து கொள்ளை பேவதின் அடிப்படை காரனம் என்ன சார்


 இதற்கு பல காரணங்கள் உண்டு. நான் முக்கியமாக கருதுவது வனத்துறை மாநில அரசின் கையில் இருப்பது தான்.  நமது சட்டசபை விவாதங்களை படித்துப்பாருங்கள்; காடு, காட்டுயிர் பற்றி எந்த அளவில் விவாதம் இருக்கின்றது என்று. காடு, சுற்றுச்சூழல் ஒரு வாழ்வாதரப் பிர்ச்னை என்று நாம் உணரவில்லை. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் நமக்கு முக்கியமானதான தெரிவதில்லை.  சூழியலுக்கு முன்னுரிமை அளித்ததில் எந்த மாநிலம் இந்தியாவில் முதலிடம் பெற்றது தெரியுமா...சிக்கிம். 


சத்தியமங்கள்ம் வனபகுதி தொடரும் யானை மரணம்,பாதுகாக்கபட்ட வன பகுதிக்குள் பல ஆயிரம் மக்களை நுழையவிட்டது,அதிரடி படையினருடன் மோதல் ,கள்ளதனமான வேட்டை ,தொடரும் காரணம் புடியாத காட்டுத் தீ என்று பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறதே.இதற்க்கான மாற்று வழிகள் என்ன


. சத்யமங்கலம் காடு பல ஆண்டுகளாக பாதுகாப்பு பெற்றிருக்கும் காடு.  இன்று சரணாலய அந்தஸ்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அண்மையில் ஒரு ஆய்வாளர் மூன்று வேங்கைகளை, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் கண்டது பதிவாகியிருக்கின்றது. இது நல்ல செய்தி. அது போல சிங்காராவை (குள்ளமான்) பார்த்தது படமும் எடுத்து விட்டார் ஒரு காட்டுயிர் ஆர்வலர். அவ்வவ்ப்போது  சாம்ராஜநகரிலிருந்து சத்யமங்கலத்திற்கு ரயில்பாதை என்ற அச்சுறுத்தல்தான் கவலையளிக்கின்றது. இந்த வனப்பகுதி பற்றி A.J.T.ஜான்சிங் அண்மையில் Frontline இல் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். 


சுற்றுலா இயற்கைக்கு வரமா?சாபமா?


  20ஆம் நூற்றாண்டு 'இசம்' களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது 'டூரிசம்' தான் என்றார் ஆகா கான்.உலகில் பல இயற்கை வளம் மிகுந்த இடங்கள் சுற்றுலாவால் சீரழிக்கப்பட்டத்தை சுட்டிக்காட்டலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு 1989இல் மணிலாவில் கூடிய பன்னாட்டு சுற்றுலா மாநாடு சுற்றுலாவிற்கும் சுற்றுச்சூழல் சிதைவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை Manilla Declaration என்ற அறிக்கையில் மூலம் சுட்டிக்காட்டியது.  ராந்தம்போர் சரணாலயத்தில்  நாள் ஒன்றுக்கு Rs, .25,000 க்கு வாடகைக்கு அறைகள் உள்ளன. அப்படியானால் காட்டில் எவ்வித பாதிப்பு இருக்கும் என்று பாருங்கள். டூர் ஆப்பரேட்டர்களுக்கு காட்டுயிர்மேல் என்ன அக்கறை? வால்பாறையைப் பாருங்கள் அமைதியாக அழகாக இருந்த இடம்.  சுற்றூலா என்ற பெயரில்,  கோடை விழாவிற்கு இரண்டு நாட்கள் இரண்டு லட்சம் பேர் கூடி அதை நாற அடித்து விட்டார்கள். இது வேறு வருடாவருடம் நடக்கும் என்கிறார்கள்.  அழகிய வால்பாறை காண விரும்புகிறவர்கள் இப்போதே போய் பார்த்துக்கொள்வது நல்லது. வால்பாறை ஒரு சரணாலயத்தின் நடுவே இருக்கிறது என்பதையும் விலை மதிப்பற்ற மழைக்காடுகளால் சூழப்பட்டது என்பதையும், போகும் வழியிலேலே வரையாடு, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) போன்ற அரிய உயிரினங்களின் வாழிடங்கள் இருக்கின்றன என்பதையும், நாம் மனதில் கொள்ள வேண்டும்.


.


Read more...

எழுத்தாளர் கிருஷ்ணாவுடன் நேர்காணல்


1,சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதற்கு எது உங்களை தூண்டியது?
பள்ளி பருவ காலங்களில் நான் வாழ்ந்த கிராமிய சூழல் சந்தித்த மக்கள், அவர்களிடம் கற்ற பாடம், இப்படி நிறைய கூறலாம். அறிவியல் ஆக்கிரமித்த இந்தச் சூழலில், படித்த பண்பானவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எல்லாம், சுற்றுச் சூழலை நாசமாக்குவதும், மற்றொரு காரணம். 

2. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தமிழ் சூழலில் எப்படி உள்ளது? குறிப்பிட்டு கூறும் படியாக ஒன்றும் இல்லை என்று ஒரேயடியாக கூறிவிட முடியாது. சில தமிழ் ஆங்கில பத்திரிக்கைகள், சில பக்கங்களை ஒதுக்கு கின்றன. ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் சூழலிலயலாளர்களை எழுதச் செய்கிறார்கள். அவர்களும் நல்ல தரமான விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகளை எழுதுகிறார்கள். தினமணி ஞாயிறு கொண்டாட்டத்தில் நிறைய அறிமுக எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். உயிர்மையில் தியோடர் பாஸ்கரன் எழுதுகிறார். உயிரோசை இணைய இதழில் நான் எழுதுகிறேன். ஆனால் பள்ளிகளில் ஆதார அறிவே இல்லாமல், புத்தகங்களை மட்டுமே ஆதாரமாக வைத்து பாடம் நடத்துகிறார்கள்.குழந்தைகளுக்கு மதிப்பெண் எடுக்க மட்டுமே பயன்படுகிறது. கிராம மக்களிடம் இது தொடர்பான அறிவு நிறையவே உள்ளது.

3.பழங்குடி மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 
மிக அக்கிரமமான செயலாக கருதுகிறேன். பழங்குடிகள் நம்மை விட தீர்க்க திசனம் அதிகம் உள்ளவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள்.இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதைப்பற்றி நிறையவும் நாம் படித்திருக்கிறோம். வன மேளாண்மைக்கு அவர்களை துரத்தாமல், அவர்களின் துணையோடு நடவடிக்கை மேற்கொள்வது தான் புத்திசாலிதனமாக இருக்கும். 

4.வன உயிரின---மனித மோதலுக்கு என்ன காரணம்?
இதற்கான காரணத்தை பல இயற்கை ஆர்வலர்கள் தெளிவாக ஏற்கெனவே கூறிவிட்டார்கள். நகர்மயமாக்கலில், யானைத்தடம் மற்றும் பிற ஜீவராசிகளின் வாழ்விடத்திற்குள் புகுதல், மக்கள் தொகை அதிகமாக, தேவை அதிகரிக்க, அது உணவு இருப்பிடம், பொருளாதார தேவை என பல கோணங்களில், வன அழிவில் சென்று முடிகிறது. காடுகளை ஒட்டி வாழ்வோர், அதை ஆக்கிரமிப்பு செய்து வயல் வெளிகளை உருவாக்குகிறார்கள், புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றன, நீர் பற்றாக்குறை, இப்படி ஏராளமாக கூறலாம். 
5.வனத்தை காப்பதற்காக தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன நிலையில் உள்ளது?

பூஜ்ஜிய நிலையில் தான் உள்ளது. வனம் என்றில்லை, குளம் ,ஏரி, என சகலமும், நாசத்திற்கும், ஆக்கிரமிப்புக்கும் ஆளாகி வருகிறது. இதில், ஆளும் அரசு சார்ந்த அரசியல் வாதிகளின் பங்கு அதிகம். 

6.உங்களது முதல் புத்தகத்தை பற்றி கூறுங்கள்?
" இப்போது அவை இங்கு வருவதில்லை" என்ற தலைப்பில் எனது முதல் புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. 55 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. பேரினம், சிற்றினம், பொத என்ற தலைப்புகளில் , உயிர்மையின் இணைய இதழான உயிரோசையில் வாரா வாரம் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனது ஆசிரியரான மனுஷ்யபுத்திரன், முழு மனதோடு என்னை ஊக்குவித்து ஆதரவு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. 


7. உங்களது புத்தகம், வெளிநாட்டில் பள்ளி குழந்தைகளால் விரும்பி படிக்கப் படுகிறதாமே?
பொதுவாக ,வெளிநாடுகளில், இயற்கையியல் மற்றும் சுற்றுச் சூழல் கல்வியை பால பாடமாக குழந்தைகளுக்கு புகட்டுகிறார்கள்.ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து பள்ளிகளில் எனது நூலை விரும்பி படிக்கிறார்கள்.உயிரோசை மூலமும் படிக்கிறார்கள். இது எனக்கும், மனுஷ்யபுத்திரன் போன்ற பதிப்பாசிரியருக்கும் கிடைத்த உரிய அங்கீகாரம்.

8.தமிழ்நாட்டின் மிக முக்கிய மூன்று பிரச்சினைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
பிரச்சனைகளை எண்ணிக்கை வடிவிலெல்லாம் அளக்க முடியாது. தண்ணீர், விவசாய சீரழிவு, புதிய கலாச்சார ஊடுருவல் .....இப்படியே நீளும். தண்ணீர் பிரச்சினை உலகையே கபளீகரமாக்கி கொண்டுள்ளது. இது பிரச்சினை என்று நாம் அறிவோம். தீர்வை தான் நாம் அறிய விரும்பவில்லை. எந்த அரசும், இது வரை சரியான தீர்வு கண்டதாக தெரியவில்லை. போர்கால அடிப்படையில் அறிவு சார்ந்து, அரசியல் சாதியியல் ,மனமாச்சர்களை ஒழக்கி வைத்து விட்டு தீர்வு காண வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இன்றெல்லாம் யாரும் ,எனது தொழில் விவசாயம் என்று கூற ஏனோ வெட்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள்! இதற்கெல்லாம் காரணம் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு, புதிய தொழில் துவக்கம், பழமையை புறக்கணித்தல் ,பணத்தின் மீதான மோகம் கடைசியாக ரியல் எஸ்டேட். கலாச்சாரம் சீரழிந்து விட்டது என கூக்குரல் இடாமல், அறிவியல் தொழில் நுட்பத்தின் தேவையான பயன்பாட்டையும், தேவையற்ற ஊடுருவலயும் தடுத்தாலே போதும். 

9. தேசிய நதி நீர் திட்டம் அவசியமா? சாத்தியமா?
அவசியம். ஆனால் சாத்தியமில்லை. பண்நெடுங்காலமாக அரசு பேசி வரும். அபத்த வரிகளாகத் தான் இன்றும் ஜீவித்து வருகிறது. இது குறித்து விரிவான ஒரு கட்டுரையையே உயிரோசையில் எழுதியிருக்கிறேன். இருப்பில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்தால், ஆழ்துளை கிணறுகளை அதிகம் தோண்டாமல் இருத்தல், மழை நீர் அறுவடை ,வன அழிவு தடுப்பு இப்படி நம் பழமையான பழக்கத்தை மீட்டெடுத்தாலே தண்ணீர் பஞ்சம் வராது. 

10. புலிகள் பாதுகாப்பு திட்டம் சத்திய மங்கலத்திற்கு தேவையா?
சத்திய மங்கலம் என்றில்லை, புலிகள் எங்கெல்லாம் வாழ்கின்றனவோ ,அங்கெல்லாம் பாதுகாப்பு தரவேண்டியது அவசியம் தானே.புலிகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, அனைத்து பேருயிர், சிற்றுயிர் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தகுந்த பிரச்சாரமும், ஒத்துழைப்பும் வளர்ச்சிக்கு கை கொடுக்கும். 

11.தற்போதைய புலிகளின் கணக்கெடுப்பு நம்பிக்கையா ,கண் துடைப்பா?
கண் துடைப்பு தான். காரணம், அரசியல் நெருக்கடியும், கடுமையான விமர்சனமும் தான். அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒரு புள்ளி விவரமான கணக்குகளையும், மறுபுறம், சுந்தர்பன் காடுகளை குறிப்பிடும் போது அங்கு வாழும் புலிகள் குறித்து உத்தேசமாக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் ஆர்வலர்கள், ஆய்வாளர்களின் கருத்தை இன்றைக்கும் அரசு புறக்கணித்தே வருகிறது. நவீன ஆய்வுக் கருவிகளை உபயோகிப்பதே இல்லை. பற்றாக்குறைக்கு புலிகளை கொலை புரிவோரிடம், வனத்துறையே நெருக்கம் காட்டுகிறது. பழிகளை மட்டும் அபாண்டமாக பழங்குடிகள் மீதும், மாவோயிஸ்டுகள் மீதும் போட்டுவிடுகிறார்கள். உண்மையில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் புலிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது .இதை அமைச்சரே ஒத்துக் கொண்டுள்ளார். இப்படியான சூழலில் அரசின் அறிக்கைகளை எப்படி உண்மை என நாம் எடுத்துக் கொள்ள முடியும். 

12.மத்திய அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் செயல்பாடுகள்?
தனிப்பட்ட முறையில், நல்ல சீர்திருத்த எண்ணங்கள் இருந்தும், பிற அமைச்சகங்களின் தலையீடு ,மாநில அரசுகளின் ஒத்துழையாமை என பல காரணங்களால் முடங்கிப் போய் உள்ளார். 

13. உங்களின் அடுத்த புத்தகம்? 
சுற்றுச் சூழல் குறித்த அடுத்த தொகுப்பு ஒன்றை வெளியிட எண்ணியிருக்கிறேன். சில மொழி பெயர்ப்புகள், சமயம், கோயில், சிற்பக்கலை தொடர்பான படைப்பு ஒன்றையும் என் மனைவியின் பங்கீடோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். உயிர்மை ஆசிரியரின் முழு ஆதரவும், ஊக்கமும் உள்ளது. நன்றாக அமையும் என எதிர்பார்க்கிறேன். 

14.கரை பட்ட காவிரி கரை தேறுமா?
கரையேற்றுவது காலத்தின் கட்டாயம். இல்லையேல் பாலாறின் நிலைமை தான் வந்து சேரும். 


15. வளர்ப்பு பிராணிகள் ,குறிப்பாக குருவிகள் வளர்ப்பது சரியா?
பண்டைய வரலாற்றை திருப்பி பார்க்கும் போது ,வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் குருவிகள் மற்றும் சிறு ஜீவராசிகளின் பெயர்கள் நிறையவே உள்ளன. நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே திகழ்ந்து வருகின்றன. மேலை நாடுகளில், பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ,மிருக காப்பகங்களுக்கு சென்று ஊழியர்களுடன் பணிகிறார்கள். இவ்விதமான ஏற்பாட்டை ,பள்ளிகளே பெற்றோரின் சம்மதத்துடன் செய்கின்றன. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தந்து , மனச் சுமையை குறைக்க ஏதுவாகின்றன. நம் இந்திய மருத்துவர்கள் கூட இவ்விதமான ஏற்பாட்டை இப்போதெல்லாம் பரிந்துரைக்கிறார்கள். நம் சூழலுக்கும் வசதிக்கும் ஏற்று யாருக்கும் ஊருவிளைவிக்காத வண்ணம் சிறு குருவிகளை வளர்ப்பதில் தவறொன்றுமில்லை என்பதே எனது கருத்து.

Read more...

ஓரு நாள் கழிந்தது...


                     

                           இனிப்பு,குத்து பாடல்,தொலைக்காட்சி,தலைவர்களின் உரை,அயன் பாக்ஸ் உதவி,சமபந்தி ,பள்ளி குழந்தைகளின்  கலைநிகழ்ச்சி .சடங்காகி விட்டது சுதந்திர தினம்.சிந்திக்க வேண்டிய தினம் சிருத்து விட்டது .காலத்தில் அழியாத தினம் வெற்று கடைமையாகி விட்டது.சிட்டுக்குருவின் வீழ்ச்சியை போழ் வீழ்ந்துவிட்டது..அடுத்த தலைமுறை பற்றி அச்சம் இல்லாமல்  அறிவிப்பு செய்ய தலைவர்கள் மட்டும் அதிகம்.மேண்டிஸ் பூச்சியின் வேட்டையில் மாட்டிய இரையாய் மக்கள்.மக்களின் எதிர்கால வாழ்வை சிந்திக்க வேண்டிய தினத்தில் தன் இருப்பை தக்கவைக்க தலைவர்களுக்கு வரமாய் வாய்த்தது சுதந்திர தினம்.

                       மனித குலத்தின் மிகப்பொ¢ய அச்சுருத்தும் காரனி எது ?உங்கள் பதில் பயங்கரவாதம் என்றால் சத்தமில்லாமல் குப்பற படுத்து தூங்குங்கள் அல்லது இமய மலைக்கு செல்லாம்.உலகமயமாக்கல் என்னும் பணம் பன்னும் உத்தியை  உலகம் முழுக்க ஊடுரவிய மேலைநாடுகள் அடிவைத்தில் அடித்துக் கொண்டு அழுகின்றன சூழலியல் குறித்து.இங்கே வந்த வரை லாபம் என்று வனத்தை வாடகைகு விட்டாகி விட்டது.மரத்து போன இதயங்களின் கொள்கை மரக்கொள்ளை .யாசகம் செய்ய யானை வேட்டை.சிக்கும் வரை லாபம் என்று சிறுத்தை வேட்டை.வேண்டிய மட்டும் வேங்கை வேட்டை.வரம்பில்லாத வனக் கொள்ளையால் இயற்கை சீற்றங்கள்.பாதிப்பு என்னவோ சாதரன மக்களுக்குத் தான்.

                                                                                                                                                              வருடம்தோரும் தவறாமல் ஊட்டிக்கு வரும் அழையா விருந்தாளி மழைச்சா¢வு.கூடவே அழைத்து செல்லும் பல உயிர்களுக்கு யார் பொறுப்பு.தடுக்க என்ன செய்தோம்?தொடர்ந்து தேயிலையை வளர்த்து வனத்தை அழித்து மலையை கரைத்தோம்.பட்டும் திருந்த்தாத, பணம் செய்யும்  பாணி.காற்றில் கரையும் கர்ப்பூரம் போல் ஆகிவிட்டது அந்த கருப்பு நிகழ்வு.வீட்டுக்கு ஒரு குழந்தை மாறி மனிதர்க்கு ஒரு மரம் .மரம் வனம் ஆகாது மனிதா!ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளிலில் உருவான அபூர்வம் ,வனம்.மனிதர்களின் ஜீவ நாடி. காரணம் ஏட்டில் இருக்க வேண்டிய சூழல் கல்வி, இருட்டில் இருக்கிறது.அடித்தளம் போட மறந்த மெத்தனம்.

                    சுரண்டப் படும் வனத்தின் விளைவு  வனவிலங்குக்ளின் உணவு சங்கிலி துண்டாடப் படுகிறது.விளைவு வெளியேரும் விலங்கினால் மனித வன விலங்கு மோதல்.இதற்க்கு அடிப்படை காரனம் மனிதனே.ஆனால் சொல்லுவது என்னவோ "விலங்குகளின் அட்டகாசம்".கோவையில் ரெயிலில் பலியான யானைகளின் என்னிக்கை 6.இரு நாள் முன் கூட் ஒன்று.பத்தி¡¢க்கை படத்திற்க்கு முகம் கான்பித்தவர்கலை கான்வில்லை.!   வன அழிவதால் அரசுக்கு மட்டும் கோடிக்கனக்கில் இழப்பு.மனிதர்களுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு.ஆறுகள் வறண்டு கானமல் போய்விடும்.உணவுப்பஞ்சம்,கொள்ளை நோய்கள் இப்படிப் பல.ஊருக்கு புத்தக திருவிழாக்கள் கலை கட்டும் காலம் இது.ஆனால் கடந்த நூற்றாண்டில் நாம் பெற்ற சூழலியல் எழத்தாளர்கள் இருவர் தான்.ம.கிருஷ்னனும் தியோடர் பாஸ்கரும்.இது தான் தமிழ்சூழல்.

                                                                  கடந்த வாரம் ஒ¡¢சாவில் 14 யானைகள் வேட்டையால் கொல்லப்பட்டது.அமைச்சர் அறிவிக்கிறார் பிஸ்த்த பிஸ்கட்டின் ருசியில் கரைந்து விடும் "கமிட்டி"யை.வனத்தை காக்க வேண்டிய வனத்துறை பணத்துறையானதின் விளைவு.சிங்கம் சிங்கிளா தான் வரும்னு தவறா சொன்னார் சினிமா ஸ்டார்.ஆனா போகும் போது டபுளா தான் போகும்னாங்க வண்டலுர் மிருகாட்சி சாலையினர்.மும்பையில் கப்பல்கள் மோதியது அன்னிய நாட்டு சதியல்ல  என்று அமைதியாய் அறிவிக்கிராற் அமைச்சர். நோய்க்கு தேவை மருந்தே தவிர மருந்துசீட்டு அல்ல.  

                                                                  காஷ்மீ¡¢ன் லே மேக வெடிப்பின் ஈரம் காயவில்லை.அந்த மனித உள்ளங்களின் ரணம் ஆறாது.மாத்தி மாத்தி பார்வையிடும் தலைவர்கள் மறந்துபோனது.சுதந்திர தினம் சிந்திக்க வெண்டிய நாள்.நாளைய சமுகத்தை பற்றி முடிவெடுக்கும் நன்னாள்.அதிகா¢த்து வரும் மனநல மருத்துவர்கள் தேசத்தின் உன்மையின் உரைகல்.ஒரு காலில் நிக்கும் கொக்கு போல நாம் இருக்கிறோம்.உறக்கம் கலைய வேண்டிய நேரம்.ஒரு நாள் கழிந்தது என்றில்லாமல் கழிவுகளை அகற்றி விடியலுக்கு வித்திடுவோம். ஆம்,விடியல் என்பது விடிவதில் இல்லை-நீ விழிப்பதில் இருக்கிறது.

                                                                                                                                                      
                     

                                                                                                                               

Read more...

விடியலை நோக்கி...!



எழுத்து:செ.பிரதீப்

“தயவுசெய்து இந்த குரங்கு தொல்லையில் இருந்து காப்பாத்துங்க?..குன்னுரை சேர்ந்த ரோஸ் மேரியின் குரலுக்கு எப்படி பதில் சொல்வது?? “இந்த யானைகளிடம் இருந்து எங்களை காப்பாத்துங்க”  ராமசாமி சத்தியமங்களம் இவரின் கேள்விக்கும் பதில் உண்டா ??
காட்டுயிர் –மனித மோதல், தமிழ்நாட்டில் மேற்கு மலைத்தொடரை ஒட்டியுள்ள ஊர்களில் எழும் குரல்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.இவைகளுக்கு நிரந்திரமான முடிவு இல்லையா?தவிர்க்க தான் என்ன வழி என்று பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறது வனத்துறை.
காட்டுயிர் –மனிதமோதலில் செய்திகளில் அடிபடுவது  குரங்கு,மயில் ,காட்டுப்பன்றி மற்றும் யானை. இதில் யானையை தவிர மற்றவையால் உயிர் இழப்போ அல்லது பெரிய அளவு பொருள் இழப்போ ஏற்படுவதில்லை.
குரங்கு பெரும்பாலும் ஊட்டி குன்னுர் பகுதிகளில் அதிக அளவு வீட்டுப் பகுதியில் காணப்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை ஆள் இல்லாத சமயத்தில் கதவுகள் ,,ஜன்னல்கள் திறந்திருக்கும் வேளையில் உணவுப் பொருட்களில் கைவைக்கின்றன. மற்றபடி வேறு எதுவும் இதனால் ஆபத்து ஏற்படுவதில்லை.
குரங்குகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்க்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் பழமரங்கள் குறைந்தது தான். கொய்யா ,பேரிக்கா ,ஆரஞ்சு போன்ற மரங்கள் இன்று இப்பகுதியில் பெருமளவு குறைந்துவிட்ட்து .உணவுக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டதும் நகர்பகுதியில் வந்த இவைகள் சுற்றுளாவாசிகள் கொடுத்த உனவுப் பொருட்களால் அங்கயே தங்கிவிட்டது. இக்கொடுமைக்கு முதல் காரணம் சுற்றுளாவாசிகள். இதை முதலில் கட்டுக்குள் கொண்டுவந்தாலே இப்பிரச்சனை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் வனத்துறை யூக்கலிப்படஸ் மரங்களை வனப்பகுதியில் வளர்ப்பதற்கு பதில் பழமரங்களை நடலாம். பிரச்சனை தானாக முடிவு வந்துவிடும்
மயில்பிரச்சனை குறிப்பாக அதிகம் இருப்பது கொங்குப்பகுதியில் .இவை விவாசாய நிலத்தில் உள்ள பயிர்களை சேதப்படுத்துகின்றன என்பது குற்றச்சாட்டு. இவை வாழும் இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும்  உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் இவை விவசாய நிலங்களில் உட்புகுகின்றன.இதனால் மயில்களுக்கு விஷம்வைத்து கொல்லப்படும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன் .இப்பகுதியில் சோளம் ,கம்பு போன்ற பயிர்களை தவிர்ப்பதன் மூலம் இப்பிரச்சனையை ஒரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரலாம்.மேலும் இப்பகுதியில் மயிலகளுக்கான சரணாலாயம் அமைப்பதன் மூலம் மயில்களை காப்பதோடு மட்டும் இல்லாமல் இப்பகுதி மக்களுக்கு ஒர் வருமானத்திற்கும் வழி செய்யலாம். இம்மக்களின்  நீண்டகால கோரிக்கை இது.
காட்டுபன்றி பிரச்சனை அதிகளவில் நடைபெறுவது மேற்குமலைத்தொடரை ஒட்டி அமைந்துள்ள கோவை புறநகர் மற்றும் சத்தியமங்களம் பகுதி. இவை குறிப்பாக விவசாய நிலங்களில் பயிர்களின் கிழங்கை சேதப்படுத்துகின்றன என்பதே பொதுவான் குற்றச்சாட்டு. இப்பகுதியில் பெரும்பாலோர் மின்சாரவேலி அமைத்துள்ளனர். இவை இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள் அபகுதியில் மஞ்சள் ,கிழங்கு வகைகளை பயிர் செய்வதை தவிர்க்கலாம்.இதுதவிர மின்வேலிக்கு இரவில் அதிக அழுத்தமுள்ள மின்சாரம் பாய்ச்சுவதால் இதில் சிக்கி இறக்கும் காட்டுப்பன்றிகள் சத்தமில்லாமல் அகற்றப்படுகிறது இவற்றின் இனப்பெருக்க திறன். அதிகமாக இருப்பதால் வனத்துறையும் கண்டும்காணமல் இருக்கிறது.
நாள்தோறும் செய்தியில் அடிபடுகிறது யானை-மனித மோதல். இதில் உயிர்சேதம் ஏற்படுவது வருந்த தக்கதே. ஆனால் உள் நுழைந்தால் மனிதர்களின் அதிகபடச அத்துமீறல் நன்குபுரியும்.
யானைகளின் பாதைகளை ஆக்கிரமித்து  விவசாய நிலங்கள். குடியிறுப்புகள் என்று மனிதர்கள் விளையாடியது அதிகம். யானைகளின் பாதைகளை மனிதர்கள் அபகரித்துவிட்டு அவை அத்துமீறுகின்றன என்பது எவ்வகையில் நியாயம்? கிருஷ்ணகிரி பகுதியில் புகுந்த யானைகள் வெளியேற வழியில்லாமல் கடந்த இருமாதங்களாக சேலம் ,ஏர்காடு என்று அகதிகளாக சுற்றித்திரிகின்ற்ன.இந்நிலையில் அந்த யானைகளை வனத்துறையினர் செய்யும் கொடுரூம் உச்சம் .பட்டாசுகளை பற்றவைத்து அதன் மேல் எறிந்தும் அதனை தொடர்ந்து ஓரிட்த்தில் நிலையில்லாமல் துரத்தி கொடுமை புரிந்துள்ளனர். கருவுற்று இருந்த யானை கூட என்று பாரமல் இவர்கள் செய்த கொடுமையால் அந்த யானை குட்டியை ஈன்றதும் குட்டி இறந்த்து மட்டும் அல்லாமல் தாயும் மரித்துப்போனது.இதுமட்டும் அல்லாமல் அந்த யானை குழுவில் இருந்த ஆண் யானையின் ஒரு தந்த்த்தையும் காணவில்லையாம். என்ன ஆனது என்று இன்று வரை தெரியவில்லையாம் வனத்துறைக்கு???அந்தோ பரிதாபம்!!இந்த கதையை கேட்டு சேலமே சிரித்தது தனிக்கதை!
வன ஆக்கிரமிப்பை அகற்றினாலே பெரும்பாலான யானை-மனித மோதலை தவிர்த்துவிடலாம்.வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழை ,கரும்பு போன்ற பயிர்களை வேளான் செய்யாமல் மாற்றுப் பயிர்களில் விவசாயிகள் கவனம் செலுத்தினாலே இப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும்.
நல்ல மனிதனைக் கடித்த பாம்பு நிச்சயம் நரகத்துக்குத்தான் போகும் என்பது மனம் ஆறுதல் கொள்ளக்கூடிய பிரமை.கடிபட்ட மனிதன் இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகிறான் என்பது தைரியமாய் எதிர் கொள்ளவேண்டிய புரிதல்.
அர்த்தமற்றவை நிறைந்த அவையில் உண்மையானதைத தேட வேண்டியிருக்கிறது. அர்த்தமற்றதும் உண்மையானது போலத்தான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.
கள்ளியிலும் சோறு! கத்தாழையிலும் சோறு!

Read more...

இன்றைய சிந்தனைக்கு


எப்படி இருக்கீங்க ?மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் கேள்வி.இதற்கு பெரும்பாலோனரின் பதில் “எதோ போகுது,இருக்கிறேன்”..இப்படித்தான் பலரும் பதில் அளித்திருக்கிறோம்.ஏன் ..??
இன்றைய அவசரமான உலகத்தில் எல்லோருக்கும் கனவு உண்டு. ஆனால் ஒரு கனவு முடிந்தவுடன் மற்றொரு கனவு நம்மை சூழ்ந்து கொள்கிறது. தயராக இருக்கிறது மற்றொரு கனவு!!நம்மைக் களவு கொள்ள.!! நெருக்கடி!!
அதீத உலகில் வாழ்தல் என்பது ஏதோ பலருக்கு பணம் அல்லது பொருளோ சம்பாதித்து வாழ்வதல்ல.வெறும் ந்ம குடும்பத்துடன் பணத்தை சம்பாதீத்தோமோ பொருளை வாங்கினோமோ என்பதும் வாழ்தல் அல்ல.
சகமனிதரோடு இணைந்து வாழ்தல். இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்து வாழ்தல் என்பது.பேருந்தில் ப்யணம் செய்கிறோம் .முதியவருக்காக உங்களின் இருக்கை விட்டுக் கொடுத்துப்பாருங்கள். அன்றைய நாளில் நீங்கள் மிகுந்த உற்சாகத்தோடு மனநிறைவோடு இருப்பீர்கள்.
இப்படிச் சிறு உதவிகளை சகமனிதருக்கு செய்வதன் மூலம் நீங்கள் இச்சமுகம் உங்களுக்கு வழங்கும் வாழக்கைக்கு சிறந்த பிரதிபகரமாக செய்வதாக இருக்கும்.
வாழ்தலுக்கும் இருத்தியலுக்கும் உள்ள வித்தியாசங்களை உணருங்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே.... மனிதம் மலரட்டும் வசந்தங்களோடு

Read more...

விலகும் பனித்திரை


பேய் மழை பெய்த பின்னும் மீண்டும்; மீண்டும் விடாத மழை ஒரு புறம் சாpயும் மண் மறுபுறம். தண்ணீhpல் தத்தளித்து தண்ணீh; தேசமாய் மாறிய நீலகிhp கண்ணீh;  தேசமாய் ஆனது சிலருக்கு விடியல் கனவாய் போனது பலருக்கு கண்ணீராய் விடிந்தது. வரலாற்றின் கறுப்பு பக்கங்கள் எழுதப்பட்டது மையால் அல்ல குருதியால் சட்டென்று நின்று போன கடிகாரம் போல் ஆனது நிலகிhp


இயற்கை காட்டிய அபாய எச்சாpக்கை தேயிலையும் சுற்றுலாவும் அள்ளித்தந்த மரணப் பாpசு தேயிலை பணப் பயிறு அல்ல மரணப் பயிறு என்று தேசம் உணா;ந்த தோல்வி செய்தி சுற்றுலா கொடுத்த விருந்தில் மதிப்போன கழிவுகள் நீலகிhpயின் மாறாத்தழும்புகளாய் ஆனது.


இயற்கை கற்றுக்கொடுத்தது மெக்காலோ முறை பாடம் அல்ல வாழ்க்கைப்பாடம் வாழ்வின் பாடம் வீட்டுக்கு ஒரு மரம் வளா;ப்போம் என்றது அரசு இல்லை இல்லை தோட்டம் வளா;ப்போம் என்றாh;கள் வைத்தாh;கள் வெடி பிளாந்தாh;கள் பாறையை  தேயிலைப்பயிh; வளா;த்தாh;கள் தேயிலை தோட்டம் ஆனது நீலகிhp


பசுமை பாலைவனம் எச்சாpத்தாh;கள் காடு காப்பாளா;கள் காது இருந்தும் செவிடா;களாய் ஆனாh;கள் மக்கள் விளைவு பல உயிh;பலி பல நூறு கோடி இழப்பு உறைந்த போன உயிh;களும் உறவுகளும் எழுப்பிய கேள்விகள் தொங்கி நிற்கும் பாறைகளாய் மணதில் நிற்கிறது இன்னும்


ரஷ்ய தேயிலை ஏற்றுமதி சொடுத்த ஆசை  ஒரு புறம,; அரசு அள்ளி தந்த ஊக்கத் தொகை மறுபுறம் கூலி வேலைக்கு ஆசைப்பட்டு கால் நூற்றாண்டாய் குடியமா;ந்த குடும்பம் ஆயிரக்கணக்கில் கிடைத்த  இடத்தில் வீடு கழிவுகளை மட்டும் பத்திரமாய் நீலகிhp மலைக்கு தந்தனா; வாங்கித்தள்ளினாh;கள் வாகனங்களை கண்பாh;த்த இடம் எல்லாம் காளான்களாக   முளைத்தன வீடுகளும் பங்களாக்களும் எப்படித் தாங்கும் நீலகிhp?


10 லட்சம் மக்கள் தொகை வருடந்தோறும் 20 லட்சம் சுற்றுலாவாசிகள் நிரப்பினா;கள் நீலகிhpயை வீடுகளும் கழிவுகளுமாய் கழிவு வெளியேற வழியில்லை முழி பிதுங்கியது நீலகிhp மலை கண்ணீh; துளிகளாய் சாpந்தது மண்



கற்றுக்கொண்டது போதும் இனி வீழிப்பது மானிடத்தின் நன்மை அரச அறிவித்திருக்கும் வீடு கட்டித்தரும் அறிவிப்பு பாராட்டக்கூடியது ஆனால் நிலகிர்p மலையில் என்பது மீண்டும் மரண சாசனம்  வீடுகளை மற்ற ஊh;களில் கட்டித்தரலாம் நிலங்களை வாங்குவதும் விற்பதும் சிறிது வருடத்திற்கு தடை செய்ய வேண்டும் தேவைப்பட்டால் அரசிடம் நிலங்ளை விற்கலாம் என்று திட்டம் செயல்படுத்தலாம்.


உயிருக்கு உலை வைக்கும் உல்லாச சுற்றுலா போதும் தேவை உடனடி கட்டுப்பாடு அண்டை மாநிலம் இரவுகளில் வாகனப் போக்குவரத்தை கடை செய்தது போன்று நீலகிhpயின் கட்டுக்குள் அடங்காத வளா;ச்சி புற்றுநோய்க்கு அவசரத்தேவை தகுந்த சிகிச்சை


இயற்கையோடு இயந்த வாழ்வு இறைவனுடன் வாழும் வாழ்வு இயற்கையை அதன் இயல்பில் விடுவோம் இல்லையென்றால் முந்தைய தலைமுறை கொடுத்த தங்க சுரங்கத்தை அடுத்த தலைமுறைக்கு தகவலாய் தந்த அவலம் யாரை சேரும்?

குறிப்பு:என் முதல் பிரசுரமான கட்டுரை!!

Read more...

மாசாய் மாரா----இயற்கை அதிசயம்


ஆப்பிரிக்காவில் காணப்படும் ஒரு மிகப்பெரிய புலம்பெயர்தல் இது.உணவு (புற்கள்) தீர்ந்து விடும் போது வில்டர்பீஸ்ட் எனப்ப்டும் காட்டெருமைகள் ,மானகள்,வரிக்குதிரைகள் எல்லாம் கூட்டமாக ம்ற்றொரு இடத்துக்கும் போகும்.இந்தப் பயணதில் அத்தனை ஆபத்துக்கள் உண்டு.முதலைகள் நிரைந்த நதிகளை கடக்க வேண்டும்.இந்தப் புலம் பெயர்தலை எதிர்பார்த்துப் பசியோடு காத்திருக்கும் சிங்கங்களிடமிருந்தும் ஓநாய்களிடமிருந்தும் கழுதைப்புலிகளிடமிருந்தும் தப்பிக்க வேண்டும்.

செரன்கெட்டி என்ற ஒரு இடத்திலிருந்து மாசாய் மாரா என்ற ஒரு இடம் வரை இவை செல்கின்றன.”இயற்கையின் அதிசய்ங்களில்” இந்தப் புலம் பெயர்தலும் உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பயந்த்தின் பங்கேற்பாளர்களின் பட்டியலைப் கொஞ்சம் மட்டும் பார்ப்போம்...
டொபி மான்கள் ---95,000
இம்பாலா மான்கள்----76,000
காட்டெருமைகள்----46,000
க்ரண்ட் மான்கள்---26,000
கோங்கொணி மான்கள்---14,000
ஒட்டகச்சிவிங்கிகள்---9000
காட்டுப்பன்றி---6000
வாட்டர்பக் மான்கள்--2000
யானைகள்----2000
வில்ட்ர்பீஸ்ட்---13,00,000
வரிக்குதிரை---1,91,000
தாம்சன் மான் ---3,60,600
பட்டியல் போதுமா...
இந்தப் பயந்த்தின் துரம் 500 கி.மீ

Read more...

தித்திக்கும் தீபாவளி


ஜப்பசி மாத்த்தில் தேய்பிறையின் 14 வது நாளில் கொண்டாடப்படும் தீபாவளிப்பண்டிகை “நரக சதுர்ஸி ஸ்நானம் “என்றும் அழைக்கப்படுகிறது.இதற்க்கு காரணம் அன்று சூரிய உதயத்திற்க்கு முன்பாக்வே மக்கள் எழுந்து குளித்துவிடுவதாகும்.இந்த நாளன்று நரகாசுரனை கிருஷ்னர் வதம் செய்த்தை கொண்டாடும் வித்த்தில் அமைந்துள்ளது.
தீபாவளி என்னும் சொல்லின் பொருள் வரிசையாக வைக்கப்பட்ட தீபங்கள் என்பதாகும்.இந்நாளில் கிராமங்களில் தீபங்களை ஏற்றி வைப்பது வழகமாக இருந்தது.காலபோக்கில் தீபங்களை ஏற்றுவது குறைந்து ,பட்டாசுகளை கொளுத்தி மகிழும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.அதிகாலையில் இருட்டு விலகுமுன்பே குழந்தைகளும் பெரியவர்களும் பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியை கொண்டாடுகின்றனர்.புத்தாடைகள் அணிவதும் ப்ட்டாசுகள் வெடிப்பதும் நன்மைகள் ஏற்படுவதன் அடையாளம் எனக் கருதப்படுவதால் மக்கள் புனித நீராடி புத்தாடைகள் அணிந்து தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.
தீபாவளிக்கு அடுத்துவரும் நாள் தீபாவளி அமாவாசை தினமாகும்.அன்று மறைந்த பித்ருக்களை திருப்தி படுத்த மிகவும் உகந்த நாள் எனக் கருத்ப்படுவதால் எள்ளும் நீரும் கொண்டு உறியமுறையில் மந்திரங்களை கூறி தர்ப்பணம் செய்யப்படுகிறது.இதனை தகப்பனார் இல்லாதவர்கள் பிரதி அமாவாசை தினத்தன்றும் செய்கின்றனர்.முன்னோர்களை திருப்தி படுத்துதல் எனும் பொருள் கொண்ட பிதரு தர்ப்பணம் இது.உண்மையில் பிரதி தினம் நீரைப பயனபடுத்தி தேவர்கள்,ரிஷிகள் மற்றும் மறைந்த முன்னோர்களை திருப்திப் ப்டுத்தி அவர்களது ஆசிக்ளைப் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரபஞசத்தின் பிரும்மாண்டாமான ஆண்மீக சக்தி “அதிகாரிக புருஷர்கள்” என்றழைக்கப்படும் இறையறிதல் நிலையை அடைந்து விட்டவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக இந்துக்கள் ந்ம்புகின்றனர்.இவர்களே மனிதர்களின் ஆன்மீக வளர்ச்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பவர்கள்.இவர்கள் இச்சக்தியின் ஒரு பகுதியை மொத்த்திலிருந்து  விடுவித்து குறிப்பிட்ட விசேஷ தினங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் கூடும் பக்தர்கள் மீது பொழிவதாக கருதப்படுகிறது.அத்துடன் அவ்விடங்கள் ,பொருட்களின் உள்ளீர்க்கும் நிலை அனுகூலமாக இருக்கும்போது பொழியப்படும் சக்தியின் ஒரு பகுதியை ஏற்று சிறிதுகாலத்திற்க்கு தக்க வைத்துக் கொள்கின்றன.
எள், சனி அல்லது சாடர்கின் விருப்பத்திற்க்குகந்த விதையாகும். தீபாவளியன்று அதிகாலை பொழுதில்,பல கிரக்ங்களின் பல்வேறு நிலைகளின் காரணமாக சனியானது தனது விதையான எள்ளில் விசேஷ குணங்களை உட்புகுத்துவதாக இருக்க்கூடும்.என்வேதான் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையை அன்று உச்சந்தலையில் தேய்த்து குளிப்பதால் மக்களுக்கு ஆரோக்கியமும் வளமையும் ஆன்மீக வளர்ச்சியும் ஏற்படும் என நம்ப்ப்படுகிறது.அத்துடன் எல்லா இடங்களிலுமுள்ள நீர் தீபாவளியன்று புனித இறைசக்தியை கொண்ட்தாக விளங்கிறது.தீபாவளியன்று அதிகாலை பொழுதில் சூரிய உதயத்திற்க்கு முன்னரே புனித நீராடுவது என்பது இயற்கை மூலிகைகளாலும் கங்கை ந்திக்கரையில் வாழும் பல உன்னத ரிஷிகள் தினசரி அதிகாலை பொழுதில் அதில் நீராடுவதற்க்கு சம்ம்.தீபாவளியன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்தும் போது முதலில் கேடபது”கங்கை ஸ்நானம் ஆயிற்றா?” என்பதாகும்.இந்த தினத்தில் பழம், வெற்றிலைபாக்கு ,சந்தனம்,குங்கும்ம் ஆகியவை விருந்தாளிகளுக்கு வழங்க்ப்படுவது ஒடு முக்கிய வழக்கமாகும்.சிலர் பணமும் கொடுப்பதுண்டு.இதே வழக்கம் புனித நதிகளில் நீராடுவோரால் அதன் முழு புண்ணிய பலனையும் அடைவதற்காக மேற்கொள்ளப்படுவது குறிப்பிட்த்தக்கது.இவ்வாறு தீபாவளியன்று எஅத இட்த்தில் நீராடினாலும் அது கங்கையில் புனித நீராடியதற்க்கு சம்மாக கருதப்படுகிரது.
தீபாவளியன்று துவங்கப்படும் ஏந்தக் காரியமும் சுபமாகவும் வெற்றிகரமாகவும் ந்டைபெறும் என்பதை இந்துக்கள் தீவிரமாக நம்புகின்றனர்.எனவே வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில் வாழும் வணிக மக்கள் தீபாவளியன்று லஷ்மி பூஜை செது விருந்தினரை அழைத்து அவர்களுக்கு இனிப்பும் பரிசுகளும் வழங்கி புதுக்கணக்கினை தொடங்குனின்ற்னர்.அவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து,சதுரங்கம் போன்ற அதிர்ஷ்ட்த்தை அடிப்படையாக கொண்ட விலையாட்டுகளில் ஈடுபடுகின்றனர்.விருந்தாளிகளும் இவ்விளையாட்டுகளில் பந்தையம் கட்டி பங்கேற்க்கின்றனர்.பந்தய் விலையாட்டுகளில் ஜெய்ப்பவர்கள் ஒரு பகுதியை அவ்வப்போது ஏழைகளுக்கு என் ஒதுக்கி வைப்பதும் வழக்கம். .

Read more...

தலைகீழ் விகிதங்கள்.


ஒவ்வொரு வாசகனும் அவனது வாசக அனுபவத்தில் எதிர்கொள்ளும் ஒரு வித இறுக்கத்தின் போது அல்லது சலிப்பின் போது அவன் தன் வாசக நிலையைப் புதுப்பித்துக்கொள்ள  செவ்வியல் ஆக்கங்களே கைகொடுக்கின்றன.சமகால இலக்கிய வடிவங்களோ ஆக்கங்களோ அவனது வாசக அனுபவத்திற்க்கு ருசிக்காதபோது அவன் மனம் இயலபாகவே செவ்வியல் ஆக்கங்களை நாடுகிறது.ஒரு வகையில் ஒரு மொழியின் இலக்கியத் தடத்தை அல்லது போக்கை இத்தகையச் சுழற்சிகளே தீர்மாணிக்கின்றன.

மனிதனுக்கு எப்போதும் தனது முதல் படைப்பு என்பது மிக முக்கியமானது.அதன் மேல் எப்போதும் அவனுக்கு ஒர் காதலுண்டு.இதை நமது இல்லங்களில் கூட காணலாம். தலைச்சான் பிள்ளைக்கு எப்போதும் பெற்றோரிடைய தனித்த ஒர் ஈர்ப்பு இருப்பதை.அவ்வகையில் படைப்பாளிக்கும் சாலப் பெருந்து.உலகிற்க்கு தன்னை முதலில் வெளிக்காட்டிய படைப்பு என்பதால் அதில் தனித்த காதல் அவனுக்கும் உண்டு.

தமிழில் மிக முக்கியமான எழுத்தாளமைகளில் குறிப்பிடத்தக்கவர் க.சுப்பரமணியம் என்னும் நாஞ்சில் நாட்டில் பிறந்த நாஞ்சில் நாடன். இவரின் மொழி ஆளுமை மலைக்க வைக்ககூடியது.இவரின் கட்டூரைகள் முதலில் அறிமுகமாயின எனக்கு. முதல் சந்திப்பிலேயே பற்றிக்கொள்ளும் காதல் போல முதல் வாசிப்பிலேயே இவரின் வாசகனானேன்.அவரின் முதல் நாவல் தான் தலைகீழ் விகிதங்கள்.(1977)

மனிதனின் அகவேட்கைக்கும் யதார்த்ததுக்குமான இடைவெளிகளை சமன்செய்வதே வாழ்வின் சவால். 70 களில் கிராமப்புற பட்டதாரி இளைஞர்கள் உறவுகள் சார்ந்தும் நிலம் சார்ந்தும் எழுந்த நிர்பந்தங்களுக்குத் தமது சுயத்தை இழக்க நேரிட்டது.ஆனால் இன்றைய கணினியுக இளைஞ்ரக்ள் தனி அடையாளங்களை இழந்து பொது அடையாளங்களுக்குள் தங்களது இருப்பை பத்திரப்படுத்திகொள்கினறனர்.கூடவே நவீன வாழ்வின் அபத்தங்களையும் அதன் இலக்கறியா பயணங்களையும்.

நாவலில் திருமனமான ஒரு இருபத்து மூன்று வயதான இளைஞனின் மன அவசங்களை மட்டுமே பிரதானப்படுத்தியிருக்கிறார்.இயல்பான அங்கதம் ,தீர்க்கமான நாஞ்சில் வட்டார மொழி,சமையல் மனம்,கொதிக்கும் சமூக விமர்சனங்கள் என்று நாஞ்சில் நாடனின் தனிப்பட்ட அடையாளங்கள் அவரது முதல் நாவலிலேயே இயலபாக உறுப்பெற்றுள்ளன.

நாவலில் நான் உணரும் தலைகீழ் விகிதங்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் பெரிதாய் ஒன்றும் மாறிப்போய் விடவில்லை என்ற கசப்பான ,மரத்துப்போன யதார்த்தமே இந்த நாவலின் இன்றைய தனமையை அடிக்கோடிட்டு, காலம் கடந்தும் செவ்வியல் படைப்பாக நிற்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.

Read more...

மீறலின் புனித பிரதி- அம்மா வந்தாள்...


வாசித்து மாளாத தமிழ் படைப்புகளின் வரிசையில் ஒன்று தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள்”

பெண் வாழும் சூழ்நிலையில் வெறும் பிள்ளைபெறும் கருவியாகவும் வீட்டைப் பராமரிக்கும் தாதியாகவும் கணவ்னுக்கு சயன் சுகம் தரும் சரீராமாகவும் குருக்கிப்போக விரும்பாமல் தனது பாலூணர்வைத் தனக்குத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டு தேடிப்பார்க்கும் வேடகை கொண்டவளாக இருப்பதை களமாக கொண்ட ப்டைப்புதான் “அம்மா வந்தாள்”. தி.ஜானகிராமன் எழுதிய நாவலின் முதல் பதிப்பு 1966 இல் வெளிவந்தது.ஒரு நாவலாகவே கச்சித்மான வடிவத்தில் எழுதப்பட்ட படைப்பு.
நுட்பமான விவரங்களால் பின்னப்பட்ட தளம் இந்த நாவலின் வலு.ஒவ்வொரு வாசிப்பிலும் அந்த்த் தளங்கள் வெளிப்படுவது வாசிப்பின் தீவிரத்தை கூட்டுக்கிறது.

தாய் என்ற நிலையில் போற்றப்படும் அலங்காரத்தின்  “பிறழ் உறவே” நாவலின் மையப் பிரச்சனை..அவள் பிற ஆடவனின் உறவில் தோய்ந்திருப்பதையும் அந்த உறவின் சாட்சியங்களாக மூன்று பிள்ளைகளைப் பெற்றிருப்பதையும்  கனவ்ர் தண்டபாணி அறிந்திருக்கிறார்.ஆனால் அவரால் அதை “ என்ன பண்றது?” என்ற மழுங்கிய கேள்வியுடன் சகித்துக்கொள்ளத்தான் முடிகிறது.

அலங்காரத்தை உந்துவது காம்ம் மட்டுமல்ல்.தன் உடல்மீதான உரிமையைத் தானே நிர்ணயிக்கும் உரிமை.அதை அவளே எடுத்துக்கொள்கிறாள்.

”அம்மா வந்தாளை” மீறலின் புனிதப் பிரதியாக்க் கொண்டாடலாம்.சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபை கேள்விக்குட்படுத்துகிறது. நாவலின் மையம்..
ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாக சொல்வதில் தி.ஜான்கிராமனுக்கு நிகர் அவரே தான்

தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு..

வெளியீடு.காலச்சுவடு.விலை.ரூ.130

Read more...

சொல்ல மறந்த கதை.


வெறும் வெற்று புகழ்ச்சிகளால் நிரம்பிய, துதிகளை மட்டுமே மையப் பொருளாக கொண்ட வரலாற்று படைப்புகள் தமிழ்ச்சூழலில் அதிகம். சமீபகாலங்களில் மக்களை முன்வைத்த சமகால வரலாற்று படைப்புகள் பூக்க ஆரம்பித்திருப்பது வரவேற்க்கப்பட வேண்டிய விசய்ம்.அந்த வகையில் சமீபத்தில் சயந்தன் எழுதி தமிழினி பெளியிட்டு இருக்கு நாவல் ஆறா வடு.

சமகாலத்தில் அதிகம் விமர்ச்சிக்கப்படுகிற ,அரசியல் போர்த்திய சூடான விசயம் ஈழத் தமிழ்ர்களின் போராட்டமும் அதை ஒட்டிய வாழ்வும்.அதை களமாக கொண்டு வெளிவந்திருக்கும் படைப்பு தான் இது. நாவல் என்ற போதிலும் 21 பகுதிகளாக் பிரித்து எழுதப்பட்டுள்ள இந்த படைப்பு போர்ச்சூழலில் மனிதர்களின் உணர்ச்சிகளை மிக கவனமாக பதிந்துள்ளது.அது எந்த போராக இருந்தாலும் அதற்கு பொருந்தும் வகையில் மிக திறம்பட படைத்துள்ளார் படைப்பாளி. பாராட்டுக்கள்.இலங்கை பிரச்சனையை முனவைத்து கருத்து சொல்லும் கருத்துவாதிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய படைப்பு என்பதில் எந்த மாறுப்பட்ட கருத்தும் இல்லை.

நாவல் இலங்கையின் வழக்கு மொழியில் எழிதியிருப்பது கூடுதல் பலம்.விடுதலைப்புலிகளிகள் மற்றும் இலங்கையின் அரசியல் மற்றும் இந்திய அமைதிபடையினால் ஏற்ப்பட்ட தாக்கம் ஆகியவை தான் இப்படைப்பின் அடிநாதம்.

வெளியீடு:த்மிழினி.விலை.ரூ.120/- 

Read more...

வணக்கம் பஸ்தார்.-இந்திய மாவோஸ்டு இயக்கத்தின் வெளிவராத ஜம்பதாண்டு கால வரலாறு


வணக்கம் பஸ்தார்.-இந்திய மாவோஸ்டு இயக்கத்தின் வெளிவராத ஜம்பதாண்டு கால வரலாறு




சில நேரங்களில் சரித்திரம் ஓர் இல்லத்தரசி போல் நடந்து கொள்கிறது.அது நிகழ்காலத்தினுடைய காதுகளில் எதிர் காலத்திலும் தொட்ரப்போகும் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி முணுமுணுக்கும். நிகழ்காலத்திலேயே அதற்கான கவனம் செலுத்த வேண்டும் .இந்தியாவினுடைய நிகழ்காலம் எப்பொழுதும் ஒரு கர்வம் மிகுந்த பெண்ணைப் போலவே நட்ந்துகொள்கிறது.அவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொண்ட்தேயில்லை. எதையும் கவனித்த்தும் இல்லை.

இன்று உலகெங்கும் ஆட்சியாளர்கள் அதிகம் உச்சரிக்கம் சொல் பயங்கரவாதம்.என்றால் அதில் மாற்றம் இருக்காது.செப் 11 பிறகு அரசியலில் புதிய உத்வேகம் பெற்ற சொல். புதிய பொருள் தரும் சொல். அரசு என்ற அமைப்பு உருவானதில் இருந்தே அதற்க்கு எதிரான குரல் காலம் முழுவதும் ஒலித்துக்கொண்டே இருப்பது காலத்தின் உயிர்மூச்சு போல.

எதிர்ப்புகுரலை அரசு தன் கட்டவிழ்த்து விட்டப்பட்ட கைகள் மூலம் அதை அடித்து நொருக்குவதும் ,அழிப்பதும் வெளி வராத வரலாறு. அது மக்கள் வரலாறு என்று தற்ப்போது வெளிவர ஆரம்பித்திருப்பது வரலாற்று ஆர்வலருக்கும் எதிர்கால சந்த்திக்கும் ஒர் இனிய செய்திதான்.

இந்தியாவிலும் மிக முக்கிய பிரச்சனையாக அரசுகள் மாறினாலும் காட்சி மாறாத கதையாக தொடர்வது நக்சல் மற்றும் மாவோயிஸ பிரச்சனை.60 களின் தொடக்கத்தில் சிலிகுரியில் ஒரு சிறு தீப்பொறியாக உருவாகிய ஒர் சிந்தனை இவ்வளவு பெறிய தீவிபத்தாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

“ புரட்சி என்பது ஒரு கேளிகை விருந்தல்ல ஒரு சித்திரத்தையல் வேலையுமல்ல அதை மெனமையாகவும் ,படிப்படியாகவும் கவனமாகவும் ,மரியாதையுடனும்,நாகரீகத்துடனும் ,வெளிப்படையாகவும் ,பணிவுடனும் நட்த்தி சொல்ல முடியாது.புரட்சி என்பது ஒர் கலகம்.ஒரு நடவடிக்கை மூலம் ஓரினம் மற்றொன்றை தோற்கடிப்பதாகும்”  எனகிற கருத்து அடிப்படையில் தோன்றிய இயக்கம் இன்று இந்திய அரசுக்கு சொப்பன சுந்தரி கணட கனவாய் தீர்க்க முடியாத அமீபா கதையாய் மாறிப்போனதின் கடந்த ஜம்பது ஆண்டு வரலாற்றை பேசுகிறது  “வணக்கம் பஸ்தார்’ எழுதியவர் ராகுல் பாண்டிடா.தமிழில் மு.ந.புகழேந்தி.

வாசிக்கப்பட வேண்டிய நூல்!!வெளியீடு: எதிர் வெளியீடு. விலை. ரூ.150/-

Read more...

அவன் காட்டை வென்றான்.... குருநாவல்


அவன் காட்டை வென்றான்.... குருநாவல்



எனக்கு நள தமயந்திகளின் கதை ரொம்ப பிடிக்கும் அதில் தேவர்கள் நால்வரின் வரத்தால் நளன் தமயந்தியின் அந்தப்புரத்திற்க்கு வருகிறான்.அவன் யார் கண்ணிலும் தெரியமாட்டான்.ஆனால் அவனுக்கு அனைத்தும் தென்படுகிறது.இதே போல் எனக்கும் விருப்பமுண்டு.இது நாவலாசிரியருக்கு  மட்டுமே சாத்தியப்படும்.ஒரு நல்ல நாவலாசிரியர் வாசகனுக்கு தன் இறக்கைகளைத் தந்து காடுகள் ,மலைகள், பாலவன்ங்களிடையே அழைத்து செல்ல முடியும்.
வாழ்க்கை முரன்பாட்டையும் ,போரையும் த்த்துவத்தையும் ஒரு விருவுரையாளர் போல் த்த்துவ ஞானி போல் பற்ற்ற்று உறுதியுடன் சொலவது “அவன் காட்டை வென்றான்” குரு நாவல்.படித்த பின்னர் வாழ்கை நீதி இப்படி இருக்கிறதா, இவ்வளவு கொடுமையானதாக இருக்கிறதா என நாம் திடுக்கிட்டு போவோம்!!

இந்த படைப்பில் மனிதப் பாத்திரம் ஒன்றுதான். அந்தப் பாத்திரத்திற்க்கும் பெயரில்லை. ‘கிழவன்” என்ற பெயர் மட்டுமே.!! அவன் இருப்பிடம் எந்த ஊரோ தெரியாது. இதிலுள்ள மற்ற பாத்திரங்கள் விலங்குகள்,மலைகள்,மடுக்கள்,நீரோடைகள்,பள்ளத்தாக்குகள்,கல மண்!!

கதை முழுவதும் கிழவனை சுற்றியே நடக்கிறது.இதில் முக்கிய பாத்திரம் கிழவன் என்றால் மனிதல்லாத முக்கியப் பாத்திரம் தாய்ப்பன்றி.இப்படைப்பு முழுவதும் கிழவனும் தாய்பன்றியும் சம்பந்தப்பட்டதே .காடே இக்கிழவனின் விளையாட்டுத்தளம்.மிருகங்களும் செடிகொடிகளுமே கிழவனின் நன்பர்கள்.அபயங்கள் அவனுக்கு வெல்லம் போல! இந்த உலக்மே தன் காலகளுக்கு இடையில் இருப்பது போலவும் தான் நினைத்தால் தன் கல்தூண்களைப் போன்ற காலகளால் இந்த உலகையே தூளாக்கிட முடியும் என்ற உறுதியும் அவனுடையது.
ஒரு நூலைப் படித்த பிறகு வாசகனின் எண்ணங்களில் கருத்துகளில் மாற்றத்தை தெரிவிக்கும் அசைவுகள் தோன்ற வேண்டும். நூல் படித்த அனுபவம் பெற்ற பிறகு அந்த நபர் மாற வேண்டும்.இந்த நூலைப்படித்த பிரகு அது நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

காட்டையும் அதன் விசூரூபத்தையும் நமக்கு காட்டும் அற்புதமான படைப்பு!!

வெளீயீடு:நேஷன்ல் புக ட்ரஸ்ட்,எழுதியவர்:முனைவர். கேசவரெட்டி, தமிழில்:ஏ.ஜி.எத்திராஜிலு.விலை ரூ.25/-

Read more...

மொளன வசந்தம்!

மொளன வசந்தம்!


ஜூன் 5,உலக சுற்றுச்சூழல் தினம். 1973 முதல் வருடந்தோரும் தவறாமல் உலக முழுவதும் கடைப்பிடித்து வரும் நாள்.சுற்றுச்சூழலில் அவசியத்தை வலியிறுத்தும் விதமாக கடைபிடிக்கப்படுகிறது.ஒவ்வொருவருடமும் ஒரு நாடு என்ற முறையில் கடந்த வருடம் இநதியா சிற்ப்பித்த்து. இந்த வருடம் பிரேசில் இதை ”பசுமை பொருளாதராம்” என்ற கருத்தில் முன்னெடுத்து செல்கிறது.

கண்காட்சிகள்,பரப்புரைகள்,போட்டிகள் போன்று பலவகையில் இதை முன்னெடுத்து சென்றாலும் மாறாத மனிதர்கள் முன் அவை உழக்கரிசி அன்னதானம் விடிய விடிய மேளதாளம் கதைதான்.

120 கோடி மக்கள் தொகை,உலகின் 7 வது மிகப்பெரிய நில அமைப்பு 3.28 மில்லியன் ச.கிலோ.மீ பரப்பளவை கொண்ட நம் நாட்டில் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா என்றால் .. கேள்வி மட்டுமே மிஞ்சும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் எல்லாம் சூழலியர்கள்!மிருக காட்சிசாலைக்கு பார்வையிடுபவர்கள் எல்லாம் இயற்கையின் மேல் பற்றுகொண்டவர்கள் என்ற சூழல் தான் இங்கே உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு காடு இருக்கவேண்டும் என்பதற்காக கண்படும் இடமெல்லாம் மரம் வைப்பவர்களுக்கு தெரிவதில்லை காடு என்பது உருவாக்கமுடியாதது என்பது!!.அதிகரித்து வரும் நகரமயமாக்கலில் மரம் நடுவதால் ஏற்பட போகும் விளைவுகளை இவர்கள் அறிவதில்லை.
நாம் பயன்படுத்தும் வாகனம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களில் இருந்து வெளியேறும் கரிமில வாயுவை குறைத்தாலே அதிக புண்ணியம் உண்டு இவர்களுக்கு.

கட்ந்த 10 ஆண்டுகளில் தமிழனின் அசராத கனவான வீடு என்பதன் உச்ச விளைவுதான் மணற்கொள்ளை.சாலை வராத கிராமம் எத்தனையோ உண்டு தமிழ்நாட்டில் .ஆனால் மணற்கொள்ளைக்கு வசதியாக சாலை போடாத ஆறு இல்லை இன்று.அண்டை மாநிலங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட இவ்விசயம் தமிழ்நாட்டில் மட்டும் சாதி மதம் கட்சி என்ற எந்த பாகுபடும் இன்றி கனஜோராக நடக்கிறது.
களிமண் தெரிய சுரண்டப்பட்ட ஆறுகளில் இனி எப்படி தண்ணீர் சுத்தமாக இருக்க போகிறது?? தண்ணீர் எப்படி இருப்பு இருக்கும்? 3 டன் நுண்ணியிர்கள் கலந்த மண் 1 டன் தண்ணீரை இருப்பு வைத்திருக்கும். தினம்தோரும் தாமிரபரணி ஆற்றில் 5 டன் மணல் எடுக்கப்படுகிறது. ஒரு ஆற்றுப்படுகையில் மட்டுமே!! தமிழ்நாட்டில் 33 ஆற்றுப்படுகைகள்!! மீதியை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்!!

தண்ணீருக்காக அணடை மாநிலத்தில் கையேந்திக் கொண்டிருக்கும் அப்ல நிலையில் ,பேராபத்தை நாமே விருந்து வைத்து அழைத்துக் கொண்டிருக்கிறோம். தாமிரபரணி ஆற்றோரம் மட்டும் 1 லடசம் தென்னை மரங்கள் பட்டுப்போய் 50,000 பேர் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.ஏற்கனவே மாத பட்ஜெட்டில் இடம் பிடித்து விட்ட குடிதண்ணீர் சத்தம் இல்லாமல் மக்களின் மனிப்பர்சை பதம்பார்த்து வருகிறது.

தேரைகள் திரண்டு பாம்பை வளைச்ச கதையாய் சாயப்பட்டறை அமிலத் தண்ணிரும் தோல் கழிவுகளும் கலந்து அத்தண்ணீரை எந்தப் பயனபாட்டுக்கும் உதவாதாக மாற்றுகிறது.நொய்யலும் ஆம்பூரும் சொன்ன சேதிகள் மனிதர்களுக்கு புரிவில்லை போலும்.வளரும் நாடுகளில் 37 வகையான உயிர்கொல்லி நோயகளில்21 தண்ணீர் சமப்ந்தப்பட்டவை.
செந்நிறமாய் கழிவு கலந்த நீரைப்பயன்படுத்தி வரும் விவசாய பொருட்களும் நஞ்சாகிறது. அதை உண்ணும் மனிதர்களுக்கு அது பரவி புதுப்புது வியாதிகளும் மலட்டுத்தன்மையும் அதிகரித்து வருகிறது.

இதுபத்தாது என்று நிருவனங்களும் போட்டி போட்டிக் கொண்டு மலைகளை உடைத்து காடுகளை அழித்து நீரின் ஆதாரத்தை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.சோலா காடுகளின் மகிமை தெரியாத அதிபர்கள்!!அதில் வாழும் உயிரின்ங்களையும் அழித்து மனித இனத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக சவப்பெட்டி செய்துகொண்டு இருக்கிறார்கள் நவயுக பொருளாதார நிபுனர்கள்!!

அறிவியல் நிபுனர்களோ புரட்சி என்ற பெயரில் வேதியியல் உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தில் புகுத்தி விட்டனர். அதன் நச்சுத்தன்மையை இப்போது எல்லா உணவுகளிலும். விளைவு இன்று நிரழிவு தேசமாய் மாறிக்கொண்டிருக்கிறது தேசம்.டைப் 1 என்ற வகை நிரழிவு நோய் இளைஞர்களை நோயாளிக்கியது தான் மிச்சம்.

இன்று ந்ம்மிடையே ஒன்றுகலந்துவிட்டன பூச்சி கொல்லிகள்.நாம் அறியாம்லே நாம் நஞ்சுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.இவ்வுல்கத்தில் படக்கப்பட்ட அத்தனை உயிர்களும் ஒர் அர்த்த்துடனே உள்ளது அச்சங்கிலி உடைபடும்போது அத்துடன் மடியப்போவது நாமும் தான்.. !
அதிகரித்து வரும் வெப்பம் ,உருகும் பனிக்கட்டிகள்,அதிகரிக்கும் கடல் நீர் மட்டம் எல்லாம் ஓசோனில் நாம் போட்ட ஓட்டையின் விளைவு.அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் கடல்மட்ட்த்தால் நாம் பல கிலோமீட்டர் பரப்பை நாகப்பட்டினத்தில் இழக்க இருக்கிறோம். நிலத்தடி நீர் உப்பு நீரை மாறி எதற்க்கும் பயன் அற்றுப்போயவிடும். அம்மக்களின் வாழ்வாதரம்????
கட்ந்த 20 ஆண்டுகளில் அதிகரித்த பம்பு செட்களால் (சுமார் 18 ல்டசத்திற்க்கும் மேல்)நிலத்தடி நீர் நம்பிக்கையற்ற் தூரத்தில்!தமிழ் மன்னர்கள் வரலாற்றில் எத்த்னையோ போர் புரிந்துள்ளார்கள் .ஒரு மன்ன்ன் கூட ஏரிகளையோ குளத்தையோ அழித்த்தாக வரலாறு இல்லை. இக்காலமோ வேறு மாதிரியாக இருக்கிறது.

சோழர் காலத்தில் உருவான் வீராணம் ஏரியின் கொள்ள்லவு பல் நூற்றாண்டுகளாக குறையவில்லை.1000 ஆண்டுகாளில் நம் முன்னோர்களால் செய்ய முடியாத்தை நாம் 50 ஆண்டுகளில் செய்திருக்கிறோம்.1923 லில் வீராண்ம் ஆற்றின் கொள்ள்ளவு 41 மி.க.மீ. தற்போது.25 மி.க.மீ.ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!!
நகர்புறங்களில் ஏதோ ஒரு காரணம் சொல்லி அதிகம் ஆக்கிரமிப்படுவது ஏரிகள் தான்.கேட்க யாரும் இல்லாதால்!!மதுரையில் மட்டும் 33 பெரிய மற்றும் சிறிய ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.!!
நிலமும் அதில் கிடைக்கும் நீரும்தான் அங்குள்ல உயிர்கலையும் அவற்றின் வாழ்வையும் முடிவு செய்கின்றன.இந்த அடிப்படையில் தான் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெயதல் ,பாலை என நிலத்தை ஜந்தினைகளாக பிரித்து இயற்கையோடு இனைந்து வளமாக வாழ்ந்தார்கள். இதை மறந்தால் வெறும் பாலையாக போய்விடும் தமிழகம்!!!


Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP