முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...

>> வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012



 முகமூடி-புது பலகாரம்...ஒரு முதல் பார்வை...


இந்தப் படம் அறிவிப்பு வெளிவந்த்தில் இருந்தே எதிர்பார்பு எகிறிவிட்டது.ஜிவாக்கு வேறு கோ பட்டைய கிளப்பியதில் மக்களிடம் இன்னும் எதிர்பார்ப்பு.பத்தாதிற்கு நரேன் வேறு வில்லன் வேடம் வேறு..சொல்லவா வேண்டும்.. ஏகத்திற்கு எதிர்பார்ப்பு...சரி பட்த்திற்கு போவோம்...முதல் நாள் முதல் காட்சி.. யுத்தம் செய் படம் வெகுவாக எனக்கு பிடித்துப்போனதால்... ஆவோலோடு படம் பார்க்கப்போனேன்.
மிடில்கிளாஸ் ஜாலி இளைஞன்...திருட்டு கும்பலை பிடிக்க முயற்சிக்கும் போலிஸ்... குங்குபூ மாஸ்டர் பின்பலம்...மூன்றையும் இனைத்தால் கதை...அதுதாங்க படம்.சத்தியமா கதையை சொல்லமாட்டேன். அதை சினிமா தியேட்டரிலோ..அல்லது திருட்டு சிடியீலோ பாத்துக்குங்க..
நான் ஈரோடு சண்டிகா தியேட்டரில் படம் பார்த்தேன்.. தியேட்டர் சரியில்லையா.. அல்லது பின்ன்னி இசை மிக்ஸிங்க் தவறா என்று தெரியவில்லை... பல வசன்ங்களை இசை தின்றுவிட்ட்து.அடுத்து எதிர்பார்ப்போடு சென்றது பாடலுக்கு காட்சி கொடுத்த வடிவம் ..பொதுவா மிஸ்கின் அதில் சிறப்பா செய்வார்... ஆனால் இந்த வாயமுடி சும்மா இரு பாட்ல் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.. ஜிவா எப்போதும் காஸ்ட்டுயூம் விசயத்தில் நன்றாக கவனம் எடுப்பார்.. இந்த பாட்டுக்கு சொதப்பல் காஸ்ட்டுயூம். ஆனால் பார் பாட்டை கலக்கிட்டார் மிஸ்கின்.. அதுவும் அந்த பாட்டின் நடுவே வரும் வய்லீன் பீஸ்க்கு செம கலக்கல் டான்ஸ்.. செம அழ்கு!!!
சண்டை காட்சி.. டைட்டிலேயே புரூஸ் லீக்கு என்று போட்டுவிட்டார்கள்...அதற்க்கு ஏற்றவாரே சண்டை காட்சிகளில் கொஞ்சம் அதிகம் கவனம் எடுத்திருக்கிறார்கள்.மீன் மார்க்கெட் சண்டை அருமை!!அதை தொடர்ந்து வரும் கதாநாயகன் கதாநாயகி காட்சி சூப்பர்... இன்றை பெண்கள் வண்டியில் என்ன எல்லாம் பாதுகாப்புக்கு வைத்திருக்கிறார்கள் என்று அட்டகாசமாக் சொல்லியிருக்கிறார். அது ஒரு வகையில் நிதர்சனமான காலத்தை சுட்டிகாட்டுகிறது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை..
முதல் பாதியை கொஞ்சம் இலுக்கிர மாதிரி போனாலும் நல்லா தான் இருக்கு. இரண்டாம் பாதியில் எப்போதும் போல எப்படி முடிக்கிறது என்று தெரியாமல் அவச்ரமாக முடித்த மாதிரி இருக்கிறது.
இது ஹிரோசம் படம். அதனால் வில்லனை எவ்வளவு ஹைப் ஏத்தனுமோ அவ்வளவு ஏத்தியிருக்கலாம்.. ஆனால் அது பட்த்தில் வெகு குறைவு. கடைசி சீன்ல தான் நரேன் பட்டு பட்டுனு சிக்ஸ்ர் அடிக்கிறார். அதுவரைக்கும் அவருக்கு பேட்டிங்க் செய்ய சேன்ஸே தரலை பட்த்தின் கேபடன் மிஷ்கின்.
ஆமா எதுக்கு இந்த பட்த்திற்கு தேவையில்லாம ஒரு ஹிரோயின் ??? அதுவும் பயங்கர மொக்கை பிகர்!!
நிறைய எழுதலாம்.. ஆனால் இன்னும் நிறைய் பேர் விமர்சனம் எழுதனும்லா.. அதுனால் முடிச்சுரேன்..
முகமூடி.-புது பலகாரம்
பலநாள் சாப்பிடாம இருக்கிரவனுக்கு தேவாமிர்தம்!!
சாப்பாட்டு ராமன்களுக்கு இதுவும் ஒரு அயிட்டம் மட்டுமே!!!

Read more...

கொடுமையிலும் கொடுமை.......



 கொடுமையிலும் கொடுமை.......

2000 வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 4 ஆண்டுகள் என் பணி முழுவதும் காடு சார்ந்தே இருந்தது.வீட்டுக்கு வருவது என்பது மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை. அதுவும் சில மணி நேரங்கள் மட்டுமே. பெரும்பாலும் சத்தியமங்களம் மற்றும் மேற்கு மலைத்தொடரிலே பெரும்பாலான நேரம் என் வாழ்வு கழிநத்து. அப்போதுதான் காடு மற்றும் காட்டியிர் பற்றிய புரிதல் ஏற்பட்ட்து.அது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிசமே.சுமார் 500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சேமித்து வைத்துருந்தேன்.. என் நன்பன் சிவா எல்லாத்தையும் ஒரு நாள் லவட்டி விட்டான். அப்போது தெரியாது இப்படி தமிழுக்கு சோதனை தரும் வகையில் நான் எழுத ஆரம்பிப்பேன் என்று.
அந்த அனுபவம் அந்த பணியில் இருந்து 2004 வெளிவந்த பிறகும் எனது ஆர்வம் தொடர காரணமாக இருந்த்து. புத்தகங்கள் வேறு முழுவீச்சில் படிக்க ஆரம்பித்து இருந்தேன். இந்த ஆர்வத்தின் காரணமாக தமிழ்நாடு மட்டும் அல்ல பல புதிய நன்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தனர்.அப்போது அறிமுகம் ஆனவர் தான் ரிச்சட்.சென்னை கஸ்டம்ஸில் உயர் பணியில் இருப்பவர்.அருமையான மனிதர்..ஏதாவது இந்த இயற்கையை காப்பாற்ற நம்மால் முடிந்த்தை செய்யவேண்டும் உந்துதலோடு இருப்பவர்.அவரின் தொடர் முயற்சியால் காட்டுயிர் குறித்து ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டும் என்னும் சொல்லாடல் நன்பர்களின் மத்தியில் உருவானது. மிகுந்த விவாத்திற்கும் தொடர் அலசல்களுக்குப் பிறகும் ரீடர்ஸ் டைஜிஸ்ட் போல தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்டுயிர் குறித்த செய்திகளை ஒரே இட்த்தில் கிடைக்கும் வித்த்தில் டைஜிஸ்ட் இதழ் ஆரம்பிக்க முடிவு செய்தோம். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு அதன் பெயர் “மழைக்காடு “ என்று பெயரும் மழைக்காட்டுக்கே உரித்தான் தவளை அதன் லோகவாகவும் தேர்ந்தெடுக்கப் பட்ட்து.

வணிகரீதியலான பத்திக்கையாக இருக்க்கூடாது என்பது விவாதத்தின் போது முடிவு செய்யப்பட்ட்தால் விளம்பரம் வாங்கவோ பிரசரிக்கவோ கூடாது என்பதையும் முடிவு செய்தோம். உடனடியாக பத்திரிக்கையை முறைப்படி பதிவு செய்ய அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.

பத்திரிக்கைக்கான வேலைகள் அனைத்தும் பகிர்ந்தழிக்கப்பட்டு அவரவருக்கு வேலைகள் ஒப்படைக்கப்பட்ட்து. முழுவீச்சில் வேலைகள் நடைபெற்றது. பணத்திற்கு ரிச்சட் முழு பெருப்பேற்றுக்கொண்டார். அதுபோக ஒவ்வொருவரும் அவர்களால் ஆன உதவியும் செய்ய முடிவுசெய்யப்பட்டது.இதழ் தனி இதழாகவும் வருட சந்தா அடிப்படையில் விநியோகிக்கலாம் என்றும் முடிவுசெய்யப்பட்ட்து.
2006ம்வருட்த்தின் இறுதிப்பகுதியில் முதல் இதழ் தயாரானது. நான் எடிட்டோரியல் குழுவில் இடம் வகித்தேன்.முதல் இதழ் வந்த போது பலராலும் பாராட்டப்பட்டது.இந்திய டுடே மற்றும் தமிழின் பல இதழில் எங்களின் இதழைப்பற்றி எழுதி பரவலான கவனத்திற்கு வித்திட்டது.தொடர்ந்து காலாண்டிதழாக வெளிவரத்தொடங்கியது. இந்திய் முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சந்தாவும் பல பக்கம் இருந்தும் வர ஆரம்பித்தது.
இந்த சமயத்தில் அத்தனை ஊடகங்களுக்கும் நமது இதழ் போய் சேரவேண்டும் என்று கருத்து வலுப்பட்ட்து. அதற்குரிய பணிகளை முழுவீச்சில் எடுத்து செல்லப்பட்ட்து. அதற்கான பணியில் அத்தனை ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அவர்களின் முகவரிகளை சேகரிக்கும் பணியை நான் ஏற்றேன்.
ஒருநாள் காலையில் தின்மலர் அலுவலகத்திற்கு சென்றேன் ..அவர்களின் அத்தனை முகவரிகளையும் வாங்குவதற்காக!அப்போது ஈரோடு அலுவலகத்தில் அவரிகளின் உரிமையாளர் மஞ்சுளா மேடம் இருந்தார்.நான் வரவேற்பு ஊழியரிடம் விசயத்தை சொல்ல அவர் எம்.டியிடம் கேட்க .,அவர் என்னை அவரின் கேபினுக்கு வரவழைத்து என்ன விசயம் என்று கேட்க ..பேச ..பேச சுமார் 2 மணிநேரங்கள் இயற்கையை பற்றி உரையாடிக்கொண்டு இருந்தோம். அவர் எங்களின் பணியைப் ஒரு நேர்முகம் ஒன்று கொடுங்கள்.. நாங்கல் பிரசரிக்கிறோம். என்றார். அதற்கு நான் எங்களை பற்றி வேண்டாம் இயற்கையின் அவசியத்தை பற்றி தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து உங்கள் பத்திரிக்கையில் பதிவு செய்யுங்கள் என்றேன். அதற்கு அவர் நீங்களே எழுதுங்கள்.. அதை நாங்கள் பிரசரிக்கிறோம். என்று சொல்லிவிட்டார்..
அட..இது என்னடா புள்ளையார் பிடிக்க போய் புலியை பிடித்த கதையாய் ஆயிற்றே என்று கருதி உதவி ஆசிரியர் கல்பானா அவர்களிடம் என் சூழ்நிலையை சொல்ல அவர் நீங்கள் எழுதிக் கொடுங்கள் நான் எடிட் செய்து மாற்றிக்கொள்கிறேன் என்றார். அப்படி எழுதினது தான் என் முதல் பத்தி யானைகளை பற்றி....அது ஆச்சு நடந்து 5 வருடம்..அப்ப எழுத ஆரம்பித்தவுடன்.. கலபானா தொடர்ந்து எழுதுங்க சார் என்று சொல்ல எழுத ஆரம்பிச்சது தான்.. இப்ப இங்க வந்து இப்படி உங்களிடம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்....

குறிப்பு:இடையில் SWG ஆசியாவிற்கான கான்பிரன்ஸ் கலந்துகொண்ட வாய்ப்பு ம்ற்றும் அனுபவம்..பசுமைதாயகத்திற்கு எழுத வந்த சுவரசிய கதை எல்லாம் அடுத்த பதிவில்...

Read more...

வீடு கட்டலையோ வீடு ...வீடு....

>> வியாழன், 30 ஆகஸ்ட், 2012



 வீடு கட்டலையோ வீடு ...வீடு....


இன்றைய நாள்  எனக்கு அந்த்ரங்கமாக மகிழ்ச்சி நாள்.அதே நேரத்தில் ஒரு சமுகத்தின் உறுப்பினர் என்ற முறையில் மிகுந்த வருத்தமான நாளும் கூட.
தமிழனாய் பிறந்த அத்தனை பேருக்கும் ஒர் கனவு உண்டு. அது சொந்தமாக வீடு கட்டுதல்.அதுவும் மிடில்கிளாஸ் குடும்பம் சொல்லவே தேவையில்லை..அதுவும் அரசு உத்தியோகத்தில் இருந்தால் அவ்வளவு தான்!!மேற்குரிய எல்லார் மனநிலையும் எப்படியாவதுசொந்தமா வீடு கட்டனும் ..அவ்வளவு தான்.. அது தலையை அடமானம் வைச்சாவது ...கடன் வாங்கியாவது வீடு கட்டனும் அவ்வள்வே...
இந்த மனநிலையை  நச் என்று பிடித்துகொண்டார்கள் தனியார் வங்கிகள். இதில் இவர்கள் அடிக்கும் கொள்ளை... மெகா கொள்ளை..கொஞ்சம் நஞ்சம் அல்ல!!!
நானும் மிடில்கிளாஸ் வகைதான். என் அம்மாவும் அரசு ஊழியர் தான் .. அப்பறம் மீதி கதை எல்லாம் மேற்கூரிய கதைதான். 1999 வாக்கில் சொந்த வீடு கட்ட ஆர்ம்பித்தோம். அப்பொது .பெரியதாய் ஒன்றும் தோன்றாத வயது. ஆனால் அப்போதே சொன்னேன் ...பொருள் நாம் வாங்கி கொடுத்து வீடு கட்டுவோம் என்று.. ஆனால் என் அம்மா கேட்கவில்லை. பிளானில் ஆரம்பித்து அனைத்தும் ஒரு இஞ்சினியரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட்து.வீடும் கட்டி முடிக்கப்பட்ட்து . ஒரு பகுதி பணம் லோன் போடலாம்..அப்போது டேக்ஸ் ரிடெக்ஸ்சன் கிடைக்கும் என்ற ஆசையில் லோனும் போட்டர்கள்.. எல்.ஜ.சியில் லோன் போட்டோம். நியாமான வட்டி .. ஆனால் அவர்கள் பாலிஸி கம்பல் சரியா புதுசாக போடச் சொல்லி தலையில் இரண்டு பாலிஸிகளை கட்டிவிட்டார்கள். வீட்டின் லோனுக்கும் பணம் கட்டனும் மாதம் ..மாதம்.. அதே நேரத்தில் பாலிஸிக்கும் பணம் கட்டனும் ..இது ஓவர் பணச்சுமை...இந்த சமயத்தில் தான் உள்ளே புகுந்தார்கள்... தனியார் வங்கி.. ஜசிஜசிஜ... ஜெகஜ்ஜால கில்லாடிகள்...எதுவும் நீங்க செய்யவேண்டாம்.. லோனுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும். என்ற வார்த்தை என் அம்மாவின் காதில் தேனாய் பாய்ந்த்து விளைவு .. மாற்று லோனை.. ஜசிஜசிஜக்கு.. சூப்பர் பிரய்ன்வாஸ் செய்து ..அழகா மாற்றிவிட்டார்கள்... அப்பறம் தான் தெரிந்த்து.. காலை விட்ட்து முத்லை வாய்க்குள் என்பதை... பணம் கட்டரம் கட்டரம்.. சுமார்.. 5 வருடங்கள் கட்டியும் முதல் குறைந்த்தா என்றால் குறையவில்லை.. சும்மா சொல்லக்கூடாது.. சும்மா குத்து குத்துனு குத்தராங்கப்பா...

சில மாதங்களுக்கு முன்  என் அம்மாவிடம் எதேச்சையாக பேங்க லோன் எவ்வளவு முடிந்திருக்கு என்று கேட்டேன்.. அவங்களுக்கும் சரியாக தெரியாத்தால் வங்கிக்கு சென்று எவ்வளவு கட்டியிருக்கிறோம் ..என்று கேட்டால்.. அதை தருவதேற்க்கே இரண்டு நாள் ஆகும் என்கிறார்கள்.. பிறகு அதையும் வாங்கிப் பார்த்தால்.. மயக்கம்  வராத குறை... மீதி பணத்தை உடனடியாக கட்டி விடுகிறோம்.. எவ்வளவு என்று பணத்தை கேட்டு கடந்த இருபது நாட்களுக்கு முன் மீதி பணத்தை கட்டி விட்டோம்..தலைப்பாகையோடு போகட்டும் என்று... விட்ட்தா சனியன்.. விடாது கருப்பு போல.. தொடர்ந்து வருகிறது.. டாக்குமெண்ட் வந்து விட்ட்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள் வங்கியில்.. போனால் அரசு கொடுத்த சான்றுகளுடன் வந்தால் தான் டாக்குமெண்டை தருவார்களாம்.. எவன் வீட்டு டாக்குமெண்டை எவன் தருவது... எனக்கோ செம கோவம்.. சரி என்று அவர்கள் கேட்ட அத்தனை சான்றுகளையும் கொடுத்து டாக்குமெண்ட் கைக்கு வரட்டும் என்று இருந்தேன்.. இன்று அனைத்தும் கைக்கு வந்த்து.
வங்கி மேனஜரிடம் சென்று கேட்டேன்.. “ லோன் கொடுக்கரதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் கேட்க வேண்டியது தானே.. இப்ப இத்தனை டாக்குமெண்டு கேட்கறீங்க.. பணம் கைக்கு வந்துவிட்ட்தால் .. “இத்தனைக்கும் நான் ஊட்கத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தும் முடிந்த வரை லேட் செய்கிறார்கள்...
நான் டாக்குமெண்ட் வாங்க அமர்ந்திருக்கும் போது ஒரு பெண் .மத்திய வயது  ..வரின் லேன் ஸ்டேட்மெண்ட் கொடுங்க என்று கேட்டு வாங்கினார்... எவ்வளவு மீதி பணம் கட்ட வேண்டும் என்று கேட்டார் ..அந்த பணியாளர் சொன்னவுடன்.. அந்தம்மாவிற்கு மயக்கம் வராத குறை.. இத்தனைக்கும் அந்த் அம்மா லோனை பிக்ஸிட் வட்டியில் போட சொன்னதை ப்ளோட்டிங்கில் போட்டு இருக்கிறார்கள்.. லோன் போடும் போது 8 சதவீதம் இப்போது 15 சொச்சம் சதவீதம்...அந்த அம்மா கேட்டுச்சு பாருங்க கேள்வி...ஆள் கிடைச்ச போதும்.. உங்கிட்ட மாட்டிட்டா ஆளை கொனுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க.. இப்படி நான் மாசம் மாசம் பணம் கட்டிட்டு இருந்தேனா... நான் செத்த பிறகும் கட்ட வேண்டியது தான்.... நீங்க எல்லாம் உருப்பிடுவீங்க...

நாளை இதே கேள்வியை நீங்களும் கேட்காமல் இருக்க... லோன் போடும் ஆயிரம் முறை அல்ல... பத்தாயிரம் முறை யோசிங்க.. டாக்குமெண்டை நல்லா படியுங்க....

Read more...

டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்...

>> புதன், 29 ஆகஸ்ட், 2012





டாஸ்மார்க் மூடுவிழாவும் பிரதமர் நாற்காலியும்....

இன்று தமிழ்நாட்டில் மக்கள் மனதில் பரவலாக எதிர்பார்க்கும் ..ஆவோலோடு உள்ள விசயம் டாஸ்மார்க் மூடுவிழா காணுமா ...இல்லையா என்பதே..

முதலில் பூரண மதுவிலக்கா அல்லது டாஸ்மார்க் முடுவிழா என்பதே கேள்விக்குறி. பெரும்பாலும் பூரண் மதுவிலக்கு இருக்காது. மூடினால் டாஸ்மார்க்கு மட்டும் தான்.

இரண்டாவது விசயம் .. தற்போது ஜெ .அரசு முன்னை காட்டிலும் பரவாயில்லை என்பது தான் பரவாலான கருத்து. அரசு பணியாள்ர் தேர்வு மற்றும் மக்களின் பிரச்சனைக்கு உடணடியாக ஆலோசிப்பது என்று கொஞ்சம் மக்களின் பல்ஸ் பார்த்துதான் நட்ந்துகொள்கிறார் ஜெ. ஆனால் ஒரு விசய்த்தை தவிர... அது அவரை தூங்க்விடாமல் செய்யும் மின்வெட்டு!!

இப்பிரச்சனை ஜெ அரசு என்னதான் நல்லது செய்தாலும் இப்பிரச்சனை அனைத்து மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் இதில் சரியான தீர்வு காணாவிட்டால்.. கருணா கதி தான் இவருக்கும் ....நாடாளுமன்ற தேர்தலில்...

தற்போத நிலையில் திமுக அரசு மத்தியில் ஆட்சி வகிப்பதால் அதிமுக ஆரசால் பலவிசயங்களில் நினைப்பதை செய்ய முடிவதில்லை என்பது நிதர்சனமே!கூடங்குளம் கூட ஜெ வின் கணக்கு வேறு. முதலில் கூடங்குள மக்களை ஆதரித்தார். பிறகு தமிழ்க மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க கூடங்குளம் பிரச்ச்னைக்கு மத்திய அரசுக்கு ஒரு பல்டி அடித்தார்.அது ஒரு சிறந்த யோசனை... நல்ல அரசியல் தான். இப்போதும் கூடங்குள முழு மின்சாரத்திற்கும் ஆட்டைய போட காத்திருக்கிறார்..முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார். அது கிடைக்காத படசத்தில் ஜெ .எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் மீண்டும் கூடங்குள மக்களோடு இரண்டற கலந்து கூட போஸ் கொடுப்பார்.

இப்படிப்பட்ட மின்வெட்டால் கிடைக்கும் கெட்ட பெயர் தொடர்ந்தால் நாடாளுமன்ற தெர்தலில் கனிசமான இடங்களை இழக்க நேரிடும் என்பதையும் ஜெ தெளிவாக் உணர்ந்துள்ளார். கருணாவிற்கு தாரை வார்க்க நேரிடம் அந்த கணிச்மான இடங்களை.. மற்ற யாரும் ஆட்டைய போட முடியாது.

ஜெ.வின் கையில் இருக்கும் பிரும்மாஸ்திரம் தான் இந்த டாஸ்மார்க் மூடுவிழா. இதை சும்ம காந்தி பெயருக்கு எல்லாம் அவர் வேஸ்டா விட்டு சும்ம சிம்பிள் தீபாவளி கொண்டாட் விரும்பவில்லை.மேலும் மின்வெட்டு பிரச்சனை ஒருவேளை நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தால் .. தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தை அறிவிக்கவே அமைதியாக இருக்கிறார்.

ஜெ.வுக்கு எப்போது டெல்லி நாற்காலியின் மீது ஒரு கண் உண்டு. ஏன் ஆசையும் உண்டு. காங்கிரஸ் தற்போது மிகுந்த ஆட்டம் கண்டு படுத்து கிடக்கு. ஆனால் அதற்கு எதிராக அரசியல் நடத்தும் பாரதிய ஜனதவோ சரியான பிரதம் வேடபாளர் இல்லாமல் கோமா ஸ்டேஜில் இருக்கிறது என்பதை ஜெ .நன்றாக அறிந்து வைத்துள்ளார். அதனால் தான் ஜெ . த்ற்போது மத்தியில் அடக்கி வாசிக்கிறார். ஆனால் காங்கிரஸ்க்கு பிரதம் வேட்பாளர் ரெடி.. ராகுல்.. அப்படி இல்லையென்றால் கூட  சிதம்பரம் ரெடியாக உள்ளார்.. ஒரு வேளை சோனியா கூட ஆகாலாம்.. ஆனால் காங்கிரஸ் இவ்வளவு பிரச்சனையிலும் தில்லாக இருக்க காரணம் சிறுபான்மை ஓட்டுகள் தான். அவர்கள் எக்காரனம் கொண்டும் ப்.ஜ.காவிற்கு ஒட்டு அளிக்க மாட்டார்கள் எபதுதான். அதற்காக தான் சச்சார் கமிட்டி அறிக்கையை கூட திட்டமிட்டு அப்படியே அமுக்கிவிட்டார்கள். அது வெளிப்பட்டு இருந்தால் சிறுபான்மை ஓட்டுகள் விசயத்தில் கொஞ்சம் மாற்றம் நட்ந்திருக்கும் .

இந்த சூழலை தான் ஜெ .திடமாக நம்புகிறார். தேசிய கட்சிகள் பலம் இழந்துள்ள சூழலில் மாநில கட்சிகள் பலமாகி வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளின் கை ஓங்கும் என்று.அப்படி ஓங்கும் படசத்தில் ஒரளவு இடங்களை கைப்பற்றும் நிலையில் நிதிஷ் மற்றும் சில முதல்வர்களின் ஆசியோடு பிரதம நாற்காலியில் அமரும் ஆசையுண்டு ஜெ.விற்கு.அதனால் தான் டாஸ்மார்க்கு மூடுவிழாவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அறிவித்து 40 சீட்டையை அள்ள் அநினைக்கிறார். ஒரே கல்லில் பல மாங்காய்... திமுக் அவுட்,பிரதம்ர் பத்வி, தேசிய அரசியல்.. உலகாளாவிய அரசியல்.. வரலாற்றில் இடம் பிடிப்பது.. மற்றும் இன்ன பிற...

குறிப்பு:இந்த சீனை எதிர்பார்த்தே தமிழக அரசியலில் பல தலைகள் ஆவலோடு திராட்சை பழத்திற்கு ஆசைப்பட்ட நரி போல் காத்திருக்கிறார்கள். ஆம் ஒருவேளை ஜெ .மத்தியில் அமரும் போது ஜெ வின் சுட்டு விரல் நீட்டும் கைநாட்டு தான் தமிழக முதல்வர்  (தலையெழுத்து .. என்ன செய்வது)..இதற்கு காத்து தான் சரத்,சீமான்... பலர் உள்ளனர். இந்த லிஸ்டில் அதிமுக வில் முன்னனியில் உள்ளவர் நீங்கள் நினைக்கிர மாதிரி பண்ணீர் செல்வம் இல்லை... செங்கோட்டையன் தான் இருக்கிறார். ஏன்னென்றால் . செங்கோட்டையன் நீக்கம் என்பதே ஒர் அரசியல் பக்க ஸ்டண்ட்!!!

இதில் ஸ்டாலினும் சந்தோசமாக இருக்கிறார்... ஆமா ஏன்னா திண்ணை காலியான் சரி..... என்ற மன்நிலையில்...

Read more...

லவுட்ஸ்பீக்கர்

>> திங்கள், 27 ஆகஸ்ட், 2012


 லவுட்ஸ்பீக்கர்

கொசுக்கடி
எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்தவாரம் மின்வெட்டை தமிழகம் சந்தித்த்து. ஒரு நாளை 12 மணி நேரத்திற்கும் மேல மின்வெட்டு மக்களை என்ன சேதி என்று கேட்டு விட்ட்து.வெகுண்ட மக்கள் ஆங்காங்கே மறியல் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அரசும் மக்களின் கோபத்தை கண்டு அரண்டுவிட்ட்து. தெய்வீனமாக காற்று கண் அசைக்க மக்களும் அரசும் கொஞ்சம் பிழைத்துக்கொண்டனர்.இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மின்வெட்டை தவிர்க்க இயலாது என்கிறது ஒரு அரசு பட்சி!!

ஆப்பு
சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் இஞ்ஜினியர்களை பார்க்கும் அவலம் ஏற்பட்ட்து. அதே போல் ஆசிரியருக்கு நல்ல சம்பளம் என்பதாலும் வருட்த்திற்கு சுமார் 180 நாட்கள் தான் வேலை என்பதால் மக்களின் கவனம் ஆசிரியர் வேலை பக்கம் சமீப ஆண்டுகளில் திரும்பியது. விளைவு பெரும்பாலோர் பி.எட் படிக்க ஆரம்பித்தார்கள். இன்று திரும்பியபக்கமெல்லாம் பி.எட் தான். இதனால் ஆசிரியர் வேலைக்கு தயாராய் இருப்பவர்கள் சுமார் 5 ல்டசத்திற்கும் மேல். இவர்களுகான தகுதி தேர்வில் இவர்களின் ல்டசனம் வெளிப்பட்ட்து சுமார் 6 ல்டசம் பேர் எழுதிய தேர்வில் தேர்ச்சியுற்றவர்கள் வெறும் 2 ஆயிரம் சொச்சம் தான். இவர்கள் கையில் குழ்ந்தைகள் எதிர்கால்ம்... தமிழ்நாடு உருப்பிட்டாப்பில மாதிரி தான்...

ஊடகம்
புதிய தலைமுறை முதல் வருட்த்தை கடந்திருக்கிறது. வாழ்த்துகள். துள்ளிய காட்சிகள்,அதிகம் லைவ்கள் என்று புதிய தட்த்தில் பயணிக்கிறது. ஆனால் இவை மாநில அளவிலான செய்திகளை முன்னிலை படுத்தவில்லை.இது ஜிம்கி வேலை.அரசுக்கு எதிர்ப்பு இல்லாதவகையில் காய் நகர்த்துகிறது. இன்னும் செய்யவேண்டிய வேலை அதிகம் உள்ளது. அப்போதுதான் நிலையாக ஒரு நல்ல சேனலாக இருக்கமுடியும் இல்லையென்றால் விரைவில் பத்தோடு பதினொன்றாக மாறிவிடும்.

அல்வா
ஈமு கோழி விவகாரம் விஸ்ரூபமெடுத்து அது நாட்டுக்கோழி, கொப்பரைத்தேங்கா என்று பலவகையில் இன்னும் ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது. அரசோ இன்னும் கண்டும் காணத்துமாதிரி  போய்கொண்டு இருக்கிறது.ஈமு மோசடியின் சூத்திரதாரி குருவை இன்னும் பிடிக்க முடியாத்து அரசின் மேல் அவந்மபிகையை ஏற்படுத்துகிறது.

கதகளி
கேரளாவை சேர்ந்த சகானா என்ற பெண் 50 ஆண்களை ஆட்டைய போட்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தில் உள்ள அத்தனை ஆண்களுக்கும் ஒர் எச்சரிக்கை மணி. தமிழகத்தில் என்ன பெண்களுக்கு அவ்வளவு டிமேண்டா?? ஒவ்வொரு ஆண்களும் சொல்லும் காரணம் எல்லாம் சின்ன புள்ளை தனமாக உள்ளது. கல்யாணம் செய்தாங்களாம் பிறகு இரண்டு வாரத்திலேயே போய்ட்டாங்களாம்... அந்த அளவுக்கு கல்யாணம் டம்மியாகி விட்ட்தா???

Read more...

புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி

>> ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012


புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி


பொதுவா தமிழில் செய்தி சேனல்கள் என்பது ஒரு ஸ்ட்டி கேமரா முன் ஒருவர் அமர்ந்து செய்தியை பிராம்டில் வாசிப்பதும், கொஞ்சம் பைட் இருந்த போதும் சுமார் 20 நிமிட்த்திற்கு செய்தியை ஒப்பேத்திடர மனநிலை தான் நிலவி வந்தது. நான் செய்தி பிரிவில் உதவி ஆசிரியரை பணியில் இருந்தால் நன்றாகவே தெரியும்..இதை மீறீ நீங்க ஏதாவது கிரியேட்டிவ்வா வேலை செய்யலாம் என்று நினைத்தாலும் ஒன்று நிர்வாகம் ஒத்துவராது அல்லது விசுவல் எடிட்டர் ஒத்துவரமாட்டார். இது நிதர்சனம்.இந்த சமயத்தில் பரவலா முக்க்கிய ஊர்களுக்கு நிருபரை போட்டு அவங்களும் கொஞ்சம் நாலேஜ் கூட இருக்கிர மாதிரி ஆளை போட்டாங்க புதிய தலைமூறை .இதிலையும் எல்லோரும் கொஞ்சம் சின்ன வயதா இருக்கிர மாதிரி பார்த்திட்டாங்க.. காரணம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிரவங்க.. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையில் சொல்வ்தையும் கேடகமாட்டாங்க.. அதனால தேவையில்லாத பிரச்சனை என்று அதை முன்கூட்டிய தவிரத்த்து அழகானவிசயம் ..விவரமான விசயமும் கூட.

இதுவரை செய்தி மொழி பொதுவா எழுத்து நடையாக தான் இருக்கும் வழக்கு மொழியாக இருக்காது. வழக்கு மொழியும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொருவிதமாக பேசுவார்கள். இது கொஞ்சம் பிர்ச்சனையான விசயமும் கூட.. பலரும் சொல்வாங்க வழக்கு மொழியை செய்திக்கு பயனபடுத்தனும் .. ஆனால் எந்த பகுதி வழக்குமொழியை பயன்படுத்தரது என்பது குழப்பமான விசயம். பிரச்சனையான விசயமும் கூட.இதை ந்டைமுறை படுத்த முயற்சி செய்தவகையில் இவர்களை பாராட்டலாம். ஆனால் விவரமாக இவர்கள் தேர்ந்தெடுத்த்து பேச்சு வழக்கு மொழி அல்ல. மிடில்கிளாஸ் மக்கள் பேசும் பொது மொழியை.பொதுவாக் தமிழகம் முழுவதும் மிடில்கிளாஸ் மக்கள் பேசுவதை ந்னறாக கவனித்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தமிழும் ஆங்கிலமும் கலந்த பேச்சு இருக்கும் . அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். அதுதான் இவர்களின் ஆடியன்ஸ் என்பதையும் முதலியே முடிவு செய்துவிட்ட்தால் இவரக்ளுக்கு வசதியாக போய்விட்ட்து.ஆனால் நடைமுறை படுத்தும்போது அதில் கோட்டை விட்டார்கள் என்பதே உண்மை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மொழி உச்சரிப்பலும் தேவையில்லாத சொற்களையும் பயன்படுத்தரது இவங்களிடம் நல்ல தெரியும்.
காட்சி ஊடகத்தை பொருத்தவரை பயன்படுத்த கூடாத சொற்கள் என்பது தான் முக்கியம். அதை இவர்களின் செய்தியாளர்களால் தவிர்க்க இயல்வில்லை. இதற்கு முறையான பயிற்சி கொடுத்தால் அல்லது ஒரு சிஸ்டம் கொண்டுவந்தால் இக்குறையை போக்கலாம்.
இப்படி போய்கொண்டுருக்கும் போது இவர்கள் கண்ணில் பட்ட்துதான் பள்ளிக்கரனை சதுப்புநிலம் தீப்பற்றி எரிந்த்து. அதை நன்றாக கவரேஜ் செய்தார்கள். ஆனால் அதை நல்ல விதமாக காட்டுகிறேன் என்று செம சொதப்பல் சொதப்பினார்கள். அதைவிட அதன் முக்கியதனமை அறியாத இவர்கள் அதன் பாலோப் செய்தியும் மக்களுக்கு வழங்கவில்லை. அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது மட்டும் அல்ல. தமிழக மீனவர்களின் பிரச்சனையிலும் இவர்கள் போதுமான கவரேஜ் அளிக்கவில்லை. அவ்வப்போது மற்ற செய்தி சேனலகள் சொல்வதுபோலதான் ஆட்டைய போட்டார்கள்.இதே தான் ஜெயலலிதாவின் பெங்களுர் வழக்கிலும் செய்தார்கள்.
சமீபத்தில் லண்டன் ஒலிம்பிக்கை சிறப்பாக வழங்குவதற்கு ரம்யாவை லண்டன் அனுப்பினார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அட்டகாசமான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். தற்போது தமிழகத்தை கலக்கி வரும் கிரனை வழக்கிலும் இவர்கள் இதே மாதிரி தான் மக்களுக்கு பாவ்லா காட்டினார்கள். மற்ற கிரானைட் குவாரிகளில் விதி மீறினார்கள் என்று சொல்லிவிட்டு முக்கிய குவாரி அதிபரை பற்றிய செய்தியை மலுங்கடித்தார்கள்...இப்படி இவர்கள் ஆட்டைய போட்ட கதை பல உள்ளது.




கட்டுரை நீண்டு கொண்டே போவதால் இதை முடிப்போம்.இந்த முதல் ஆண்டில் புதிய தலைமுறை பொருத்தவரை செய்தி சேனல்களின் எண்ணத்தை மாற்றியதில் முக்கிய பங்கிருக்கிறது.ஆங்கில ஊடகங்களின் ஸ்டைலில் தர முயற்சி செய்கிறார்கள். ஆனால் அழகா இருந்த பத்தாது.. ஆரம்பத்திற்கு நல்ல இருக்கும் .. மக்களும் பார்ப்பாங்க.. நீண்ட காலம் அல்லது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமரனும் என்றால் தரம் இருக்க வேண்டும் மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக அடிப்படை மக்களின் பிரச்சனைகளை நீண்ட விவாத்திற்கு உள்ளாகவேண்டும் . ஏன்னொனில் இப்போது பல செய்தி சேனலகள் வர இருக்கிறது.. ஏற்கொனவே GTV ம்ற்றும் சத்தியம் போட்டி போட களத்தில் உள்ளது . சத்தியம் ஓரளவு விளம்பரமும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே நெருக்கடி உள்ளது புதிய தலைமூறைக்கு. விரைவில் பாலிமரும் செய்தி சேனலில் களம் இறங்குகிறது.. ஆகவே புதிய தலைமுறை விடியலா... இல்லை ஓணம் பண்டிக்கை போடும் அவியலா என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.. 

Read more...

புதியதலைமுறை முதலாம் ஆண்டு...-2

>> சனி, 25 ஆகஸ்ட், 2012


 புதியதலைமுறை முதலாம் ஆண்டு...


பொதுவா காட்சி ஊடகத்தில் தனக்கான இடத்தை தக்க வைப்பது கொஞ்சம் சிரமான காரியம் அல்ல அது ரத்தம் வடியும் காரியம். மக்கள் போரடிக்குது நினைத்தவுடன் சேனலை மாற்றிவிடுவார்கள். மிண்டும் அவர்களை பார்வையாளரா கொண்டு வருவது மலையை கட்டி இழுப்பது போலத்தான். அதனால் எப்போது மக்களுக்கு புதுப்புது செய்திகளை கொடுத்து தான் ஆகனும்.. அதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிராங்க.. இது ஒரு வகையில் ஒரு சேடிஸ்ட் மனநிலை தான்.. என்ன பன்றது மக்கள் அப்படி ஆயிட்டாங்க...சரி மீண்டும் நம்ம விசயத்து வருவோம்... ஆட்சி மாற்றத்தால் சன் அமைதியா இருக்க .. அதே சமயம் மேக்ஸிஸ் பிரச்சனை.. ஸ்பெக்டராம் பிரச்சனையில் திமுக பம்மி கொண்டு இருந்தால் பிரதர்ஸ் அவங்களை காப்பாத்திக்க்வே ரொமப கூர்மையா இருந்தாங்க.. இது பத்தாது என்று சாக்ஸ் வேற ஒரு பக்கம் நாறிட்டு இருந்தார்.. அப்ப அவங்களின் சேனலின் கதி ரொம்ப சிக்கல் தான்.. பத்தாதுக்கு எஸ் சி வி வேற டப்பா டான்ஸ் ஆடிருச்சு.. சுமார் அதில் மட்டும் 1100 கேடி (வருட வருமானம்) அவுட்.. என்னத்தை தின்ன பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தாங்க...அது இவங்களுக்கு நல்ல வாகா அமைஞ்சது ..இல்லை என்றால் இவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுருப்பாங்க... ஜி டிவி க்கு ஆன கதி தான் இவங்களுக்கும் ஆயிருக்கும்.

சரி ஒரளவு நல்ல பெயர் கிடச்சிருச்ச்சு.. புதுப் புது அர்த்தங்கள், கொஞ்சம் சோறு, என்கவுண்டர் மேட்டர் என்று லைம் லைட்டுக்கு வந்தவங்க அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிச்சு இருந்தப்ப ஜல்லிக்கட்டை நேரடியா லைவ் செய்தாங்க... இது இவங்களை தொடர்ந்து நேயர்களை தக்க வைக்க உதவுச்சு. இதே நேரத்தில் ஆரம்பித்த யெப்பிஸ்க்கு மட்டும் தான் நிகழ்ச்சி ..உள்ள ஒரு மேட்டரும் இல்லை என்றாலும் இரண்டு விசயம் மக்களுக்கு பிடிச்சது .. ஒன்று இது செய்தி சேனலில் புதுசா இருந்த்து ..மற்றொன்று அந்த குண்டு பையனும் ஒல்லி பொண்ணும். அடிக்கிர செம ரகளைகள்.. மக்களின் மனதில் பச்சக்குனு ஒட்டிக்குச்சு.. அப்பறம் என்ன அந்த நிகழ்ச்சியும் நல்ல ஹிட்.. குறிப்பா இளையவர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்..இதை தொடர்ந்து இவங்க அரம்பிச்ச நேர்பட பேசு,களம் இறங்கியவர்கள், ரொளத்திரம் பழகு போன்ற நிகழ்சிகளில் ரொளத்திரம் பழகு தி பெஸ்ட்.. சமுகத்தில் நடக்கும் பல குறைபாடுகளை அட்டகாசமா வெளிப்படுத்தினாங்க.. அதிலும் குறிப்பா தாமிரபரணி மணல் திருட்டை வெளிப்படுத்தினப்ப பொது தளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட்து . அருமையா பதிவு அது. துணிந்து அடிச்சாங்க.. அதற்கு உண்மையில் இவர்களை பாராட்டித்தான் தீரனும். குட்.பாய்ஸ்.. இதற்கிடையில் இவர்களுக்கு அலவா மாதிரி ஒரு பிரச்சனை கிடைச்சுது... அது கூடங்குளம் அணு உலை பிரச்சனை.. கிடைச்ச வாய்ப்பை நல்ல பிடிச்சுகிட்டு சும்ம பிச்சு உதறினாங்க.. போட்டு லைவ்வா தாக்கிட்டாங்க.. அந்த பிரச்சனை எட்டுத்திக்கும் பரவ் இவங்கதான் காரணம்.. நல்ல எடுத்திட்டு போக போக மத்த சேனலகள் எல்லாம் மார்க்கெட்டில் அவுட்டாக ஆரம்பிச்சுட்டாங்க...அப்ப தான் முதலிடம் என்று பேச்சு கிளம்பிச்சு .. உடனே சன் அட்டா .. நாம தூங்கிட்டோம்.. விழித்துக்கொள்ள ஆரம்பிச்சுது.. 

ஆனால் இதே நேரத்தில் இவங்க ஆட்டைய போட ஆரம்பிச்சுட்டாங்க.. கூடங்குளம் பிரச்சனை ஓரளவுக்கு லைம் லைட்டுக்கு வந்தவுடன் இவங்களுக்கு எங்கிருந்து பிரசர் வந்துச்சுனு தெரிய்லை.. இவங்க அப்ப அப்ப பல்டி அடிக்க ஆரம்பிச்சாங்க.. இதே நேரத்தில் புதிய தலைமுறையில் பல உள்ளடி பிரச்சனைகளால் பலரும் வெளியே போக ஆரம்பிச்சாங்க..சொதப்பல் ஆரம்பமாக ஆரம்பிச்சு....
எல்லாரும் போல இவர்களும் ஈழம் பிரச்சனையை கையில் எடுத்தாங்க.. ஆமா தமிழன் உணர்ச்சிக்கு அடிமை என்பதை தெள்ளத்தெளிவா புரிஞ்சுகிட்டு இலங்கைக்கு பயங்கர பிலடப்போடு கிளம்பினாங்க... பலவிளம்பரங்கள் போட்டு தாக்கினாங்க.. உண்மை நிலவரம் என்று கிளம்பினவங்க  சத்தம் இல்லாம திரும்பி வந்தாங்க.. உண்மை நிலவரம் என்று இவங்க அடிச்ச பலடி மெக பல்டி... உட்டாலக்கடி வேலை... நன்றாக ஜிங் ஜிங் அடிச்சாங்க... இலங்கை அரசுக்கு.முதல் முறைய மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி மக்களை ஏமாற்றினாங்க.. இவங்களுக்கு அது இறங்கு முகம்.. செம் அடி ..பார்வையாளர்களை பொறுத்த வரை. அதற்கு பதில் இவங்க அந்த அசைன்மெண்டை தொட்டுருக்கமா இருந்தால் இருந்த ஆடியன்ஸை காப்பாத்தியிருக்கலாம்.. இது மற்ற சானலுக்கு ஒரு பாடம் .. அடவாண்டேஜ்.. தேவையில்லாதில் மூக்கை நுழைத்து அடிவாங்கினாங்க்.....இது மட்டுமா...

இன்னும் தொடரும் இவங்க.. அடி பட்ட...கதை.. 

Read more...

புதியதலைமுறை முதல் ஆண்டு.-- 1

>> வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


 புதிய தலைமுறை  முதல் ஆண்டு...


புதிய தலைமுறை முதல் ஆண்டு... எழுத்தாழுமை மாலன் அவர்களை ஆசிரியராக கொண்டு இதழாய் மக்களின் கைகளில் இளமையாய் நுழைந்தது. புலனாய்வு இதழ்கள் சக்க போடு போட்டு காசு பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் அதிகம் டேபிள் ஜேர்னலிசம் கொஞ்சம் மக்களின் குறிப்பாக இளையவர்களின் மனதில் உள்ள சே இதை திருந்த முடியாது என்கிற பிரச்சனைகளை மையப்படுத்தி வெளிவந்து மக்கள் மனதில் நச் என்று இடம் பிடித்தது. குறிப்பாக ஒரு இதழுக்கு காட்சி ஊடகத்தில் நாள் முழுவதும் விளம்பரம் கொடுத்து நாளிதழ்களிலும் நல்ல விளம்பரம் கொடுத்து கும் என்று வந்திருங்கினார்கள். எஸ் ஆர் எம் என்னும் பலதுறை வியாபார நிருவனத்திடம் இருந்து மிகுந்த பணபலம் உள்ள பின்புலத்தில் இருந்து பிறந்ததால் இதழுக்கு உள்ள பணப்பிரச்சனை இதற்கு இல்லை என்பது இதற்கு கூடுதல் வரப்பிரசாதம்.

மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி தக்க சமயத்தில்  அதாவது கடந்த ஒரு வருடம் முன் காட்சி ஊடகத்திலும் செய்தி சேனலை ஆரம்பித்து களத்தில் குதித்தார்கள்.இந்த சேனலை தொடக்கத்தில் ஊடக மன்னர்கள் கண்டு கொள்ளவில்லை.எல்லா சேனல்களை போலவே இவர்களும் இருப்பார்கள் என்று நினைத்தார்கள். அதே நேரத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதும் வசதியாக போய்விட்ட்து எஸ் ஆர் எம் குழுவுக்கு.பொதுவாக இவர்களின் தலைவர் பாரிவேந்தரின் கட்சியை முன்னிலைப்படுத்தும் என்று தான் ஊடகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நினைத்தார்கள்.ஆனால் நட்ந்த்தோ... முற்றிலும் வேறு!!
மங்கிய காட்சி,சொன்னதை திருப்பி திருப்பி சொல்லும் ம்னோபாவம்,நான் சொலரது தான் செய்தி ,தனக்கு வேண்டாதவர்களின் நல் செய்தியை மட்டுப்படுத்துவது என்று தான் பெரும்பாலும் செய்தி சேனலகள் இருந்து வந்தன அதுவரை. மேலும் செய்தி சேனல்க்கு என்று இருந்த நவீன மனோபாவங்கள் ஒன்றும் இல்லாத மொக்கை சேனலகள் மத்தியில் கம்பீரமாய் கடையை விரித்த்து புதிய தலைமுறை. சேனல் ஆரம்பிக்கும் முன் டெக்னிக்கல் விசய்ங்களில் இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நல்ல முயற்சி. முதல் முறையாக HD முறையில்..துள்ளிய காட்சிகள்... இளைமை பட்டாளம் .. என்று புதிய கனவுகளோடு களம் இறங்கினார்கள்.
பொதுவாக சிவப்பு,ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்கள் அதிகம் கண்களை ஈர்க்கும். பொதுவாக ஜரோப்பிய மற்றும் ஸ்கேண்டி நாடுகளில் இந்த கலரை அதிகம் பார்க்கலாம்.இதற்க்கு முன்னால் மிகமுக்கியமான விசயத்தை சொல்லனும்.. இது வரை உள்ள அனைத்து செய்தி சேனலகளும் பொதுவாக தங்கள் கொள்கைகளை ,நிகழ்ச்சிகளை தங்களது ஒட்டு வங்கியிடம் சேர்க்கும் எண்ணத்தில் மனதில் வைத்தே ஆரம்பிக்கப்பட்ட்து. இதில் நடுநிலைமை என்னும் பெரும்பானமை வாக்காளர்கள் ,மக்களை கவரதற்கு எந்த சேனலும் நினைக்கவில்லை. அல்லது தெரிவில்லைய???
அந்த நடுநிலை மற்றும் புதியதாக(ஒவ்வொரு தேர்தலிலும் 7 முதல் 10 சதவீதம் புதிய்தாக ஓட்டு போட வாக்குசாவடிக்கு வருகிறார்கள்) ஒட்டுப்போடும் இளையவர்களை மனதில் வைத்து அவர்களையே ஆடியன்ஸாக வைத்து தான் புதியதலைமுறை களம் இறங்கியது.  சபாஷ்.. நல்ல சிந்தனை,
களம் இறங்கியாச்சு.. போன ஆக்ஸ்ட் 24.. வந்து என்ன செய்தார்கள்....
முதலில் அந்த வண்ணம்,துள்ளியம்,இளமை போன்றவற்றால் மக்களுக்கு அட என்று திரும்பி பார்த்தார்கள். குறிப்பாக காலையில் 15 நிமிட நேரடி நிகழ்ச்சி நல்ல கான்சப்டா இருந்த்து. எல்லோருக்கும் பிடிச்சது . செய்திதாள்களில் வரும் செய்திகளை இருவர் அலசுவது ..ஜென்ராம் வழங்கிய நிகழ்ச்சி. பேச்சு சம்பந்தப்பட்ட தமிழ்நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குபவர் அதிகம் பேசிக்கொண்டிருந்த போது குறைவான பேச்சு அதுவும் நேரடியாக என்றவுன் எல்லோருக்கும் சட்டுனு பிடிச்சது....அட என்று எல்லோரும் உற்று கவனிக்க ஆரம்பித்தார்கள்...அடுத்து இறக்கினாங்க பாருங்க....அது..


கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.... சும்மா சொல்லக்கூடாது. பா.ராகவன் எழுதிய புத்தகம் ஊ... வெளிவந்த போது சக்கை போடு போட்ட புத்தகம் கிழக்கு வெளியீடு. அதை அப்படியே பா,ரா திரைகதை எழுத ஹரி தொகுக்க... சும்மா ஆரம்பத்திலெ இருந்து ஜிவ்னு பத்திகிச்சு... முதல் பாலில் சிக்ஸ்ர் அடிச்ச மாதிரி.. அட்டகாசம் பன்னிடாங்க... இப்ப தான் மக்கள் டே இவங்க என்ன்மோ நல்ல பன்றாங்கடா என்று நிமிர்ந்து உடகார்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க...இதை தக்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசனையில் தலையை பிச்சுட்டு இருக்கப்ப... கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்ட லஷ்மி இவங்க மடியில் வந்து அமர்ந்த அந்த சம்பவம்....சென்னை என்கவுண்டர் மேட்டர்...
துக்குடா கேமராவை.. அடரா லைவ்வை... அடிச்சாங்க.. பாருங்க... எல்லோரும் புதிய தலைமுறை சேனலை வைச்சு கண்ணு எடுக்காமா பார்க்க வைச்சாங்க... அந்த தகவலை முதல் முறையா சொன்னவங்க இவங்கதான்.. காலையில் 4 மணிக்கு சூப்பரா முதல் பைட்டை மக்களுக்கு காட்டிடாங்க.. அதை பக்கவா பிடிச்சு நல்ல கிராபிக்ஸ் செய்து சும்மா புலனாயவு பத்திரிக்கைகள் தோர்த்து போகும் அளவுக்கு நல்ல கதை சொன்னாங்க... மக்களும் பாட்டி சொன்ன கதையை கேட்கர மாதிரி .. அப்படியே மகுடிக்கு மயங்கும் பாம்பாய்.. மயங்கிட்டாங்க புதிய தலைமுறையிடம்..
.....கரண்ட் போயிருச்சு... கொசுக்கடி தாங்க முடியலை...இன்னும் எடிட் செய்யலை... கரண்ட் வந்த பிறகு கதையை சொல்ரேன்... ஒகேவா...

Read more...

நீலகண்டப் பறவையைத் தேடி......

>> வியாழன், 2 ஆகஸ்ட், 2012


முத்தமிழை வளர்த்த என் மூதூராம் மதுரையில் பிறந்த என் இனிய தமிழ் தோழியே...ஒரு அந்திமாலையில் முகனூலில் தொடங்கியது நமது நட்பு என்னும் ஒரு பூ!! நந்தவனத்தில் பூத்த  பூக்களுக்கு மத்தியில் மூக்குத்தி அணிந்த அழகிய பூ..நமக்குள் பால் வேறுபாடு இருக்கலாம்... அதை புறங்கையால் ஊதிதள்ளிய ஊதாமலர்!.

ஒவ்வொரு நாளிகையிலும் மறக்காமல் நினைவுபடுத்தினாய் ....பதிவுகளாய்!மனதில் படட்தை துணிந்து சொன்னாய்!தெரியாததை தெரிந்து கொள்ள முனைப்புடன் முனைந்தாய்!

பலர் முயற்சித்தும் பெறாத  “விருப்ப”த்தை விரைவில் பெற்றாய்.கண் அயர்ந்த இரவுக்குள் ஆயிரம் நட்பு பூக்கள்-உன்னோடு!!மலைத்து நின்றேன்...

கடலை கடப்பது போல் பக்கங்களை கடந்து நின்றாய்...!பூரித்துப்போனேன்!!

அப்போது தெரியவில்லை....நீ குறிஞ்சி மலர் என்று!!
கால இடைவெளியில் பூப்பது இயற்கை!அந்த இயற்கையை தான் கொஞ்சம் மாற்றேன்??-என் கடவுளே!

எனக்கு பிடித்தது மூக்குத்தி!!நீ அனிந்தாதாலோ... அல்லது நம் ரசனை ஒத்துப்போனதாலோ!!யார் அறிவார்? 

அதற்காகவாது பதில் சொல்லி விட்டுப் போ!!

பெயர் கேட்டு அறியாத தேசத்தில் இருந்து ஒரு தோழி சொல்கிறாள்.. நீ என்னைப் பற்றி சொன்னதை ..எனக்கே தெரியாததை!!

எழுத்தாளனாவதை என் எழுத்து பார்த்துக்கொள்ளட்டும்!

மனம் சோம்பி அமர்ந்த தருணங்களில் உன் தமிழ் வேண்டும்! 

 தலர்ந்த நிலையில் உன் நேசம் வேண்டும்!

ஆண்டுகள் ஆயிரம் காத்திருந்தால் அகழிகை!!அது இதிகாசம்..

 அஃதென்றால் நம் நட்பும்.....!

எனக்காக வேண்டாம்... உன் நிகழ்வுகளை நினைத்திருக்கும் அயலகத்து தோழிக்காவது ஒரு சொல் தூது விட்டுப்போ!!!

அந்த சொல் கேட்டு விலகட்டும் என் ஜென்ம சாபம்!!

முகனூல் தோழி அலிசா சர்மிளாவுக்காக....

Read more...

நினைவின் தாழ்வோரங்கள்.


சுமார் 13,14 வருடம் இருக்கும்.ஏதோ ஒரு நாள்..இருந்துவிட்டு போகட்டும். அதா முக்கியம்..அந்த நாட்களில் நான்,நனபர்கள் ஈஸ்வர்,மகேஷ், பாலாஜி,.இவர் கருரில் மிகப்பெரிய எக்ஸ்போர்ட் நிருவனத்தின் தலைவர்.இப்போது அவர் உயிருடன் இல்லை.அது தனிகதை. தனிக்கட்டூரையே எழுதவேண்டும்.நான் என் வழ்க்கையில் இழந்த ஈடு செய்யமுடியாத நட்பு. ம்ம்ம்.அப்பொழுது எங்கள் முழுநேர வேலையே புத்தகம் படிப்பது தான்.தனிப்பட்ட செல்வுகளுக்காக மார்கெட்டிங் வேலையில் இருந்தேன்..வேலை முடிஞ்ச எங்காயவது நொருக்கு தீனி சாப்பிட்டே புத்தகங்களை பற்றி பேசுவது தான் முழுநேர பணி.தேடி தேடி படித்த காலம்.அப்பொழுது ராகுல்ஜியின் புத்தகங்களை படித்து விட்டு மணிக்கணக்காக கதைப்பது என்பது அன்றாட கடமை.அப்பொழுது எல்லாம் அலைபேசி கொஞ்சம் காஸ்ட்லி சமாச்சாரம். புத்தகங்களை பற்றி  பாலாஜியிடம் பேசுவதற்க்காகவே அலைபேசி வாங்கிய காலம்.
அப்ப கருரில் புத்தக கடை இல்லை.ஒன்று புத்தகம் வாங்க கோவை செல்லவேண்டும் அல்லது ஈரோடு.நான் ஈரோட்டில் இருந்து அப்பொழுது தினந்தோரும் கருர். தொடர்வண்டியில் செல்வேன்.ஆகவே புத்தகம் என்றால ஈரோடு தான் .புத்தகம் வாங்க ஈரோடு பாரதி புத்தகாலயம் செல்வது வழக்கம் ஆயிற்று.ஒட்டு மொத்தமாக புத்தகம் வாங்கிவிட்டு மாதம் ஒருமுறை பணம் தருவது வழக்கம்.அங்கே போக புத்தக வாசிப்பாளர்கள் வட்டம் விரிவடைந்தது.புதிய புத்தகங்களை இன்னும் அதிகமாக தேடுவதும்,வாசிப்பு பழக்கம் அதிகம் அடைந்த்தும் அந்த காலம் தான் .தேவையான புத்தகங்கள் உடனடியாக கைக்கு வரும்.சுட சுட இரவு முழுக்க படித்து விட்டு அடுத்த நாள் காலையில் பாலாஜிக்கு போய் சேரும். அவர் காலையில் இருந்து படித்து விட்டு மாலையில் கருத்து பரிமாற்றம்.சூடாக சுவையாக... நாக்கு ருசிக்க .. நேரம் போவது தெரியாமல் நடக்கம் கதை கால்ட்சபவம்.

இப்படி இருக்கும் போது தான் எழுத்தாளர் வாமுகோமு பாரதி புத்தகாலயம் மூலம் பழக்கம் ஆனார்.முதலில் மெதுவாக ஆரம்பித்த நட்பு ..வெகு விரைவில் ஜெட் வேகத்தில் பயனிக்க ஆரம்பித்த்து.ஒரு பக்கம் விமரிசன பார்வை,மறுபுறம் வாமுகோமுவின் மூலம் புதிய பார்வைகள் திறந்துவிடப்பட்டது.படைப்பாளி பாரபட்சம் பாரமல் புத்தகங்கள் வாங்கப்பட்டது!வாசிக்கப்பட்டது!.விவாதிக்கப்பட்டது!.புதிய் தரிசன்ங்கள் .புதிய பார்வைகள்..துலக்கப்பட்ட பாத்திரம் போல...எண்ணங்கள் எளிமையாக்கப்பட்டன.பல படைப்பாளிகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
ஏதோ ஒருநாள் வாமுகோமு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ்..அப்பொழுது தான் காவ்ய பதிப்பகம் தஞ்சை பிரகாஷின் கட்டூரைகளை தொகுப்பாக வெளியிட்ட்து.வருடம் 2003..அதை முதலில் படியுங்க என்றார் வாமுகோமு.. அடித்துப்பிடித்து புத்தகத்தை வாங்கி படித்தால் எல்லாம் அக்மார்க் ஹைதரபாத் பிரியானி.பசியா போனவனுக்கு தலைவாலை இலை போட்டு விருந்து வைத்த்து போல. அத்தனையும் அறிவின் சுரங்கம்.கிளம்பினோம் அத்தனைக்கும் ஆசைப்படு என்று. ஒரே நோக்கம் புத்தகதை பிடி,உடனே படி ,.அத்தனை புத்தகங்களையும்.அதில் எல்லா புத்தங்களையும் படித்தோம் முடிந்த வரை. ஆனால் அவர் சொன்ன ஒரு முக்கியமான ஒரு புத்தகத்தை முடியவில்லை.அப்ப சமகால எழுத்தாளர்.,மிக சிறந்த படைப்பாளர் எஸ்,ராமகிருஷ்ன்ன் பழக்கம்.அவர் ஒரு ந்டமாடும் புத்தக களஞ்சியம். அவரிடம் அந்த புத்தகத்தை பற்றி கேடகலாம் என்று கேட்டால் அவரும் அதை படிக்க வில்லை .ஆஹா இது என்ன பூச்சாண்டி வேலை காட்டுதே என்று .. இன்னும் அதிகம் ஆவல் ஆனது அந்த புத்தகத்தை படிக்க..சரி பார்துருவோம் ஒரு கை..தேடல் தீவிரமானது.
எங்களிடம் இருந்த்தோ சில தகவல்கள் மட்டுமே...அந்த நாவலின் பெயர்”கடிதியே கின்லாம்”..”சோழிகள் தந்து வாழ்க்கையை பெற்றேன்”ஆசிரியர் பீமல்மிசரா. 1920 க்கு பின்னால் வ்ந்த நாவல்களில் மிக பிரம்மானடமானது.2500 பக்கம்!வங்காள நாவல்.கலகத்தா பற்றி. 700 கதா பாத்திரங்கள்.இவ்வளவு பிரம்மாண்ட தனமை இருந்தாலும் ஒரு பக்கத்தையும் தவிர்க்க இயலாது என்ற தஞ்சை பிரகாஷின் விமர்சனம் நாவல் பற்றிய எதிர்ப்பு எகிறியது.இதுமட்டுமா..தமிழின் மூத்த விமரிசகர் க.நா.சு 1967 லில் இந்த நாவலை பற்றி சிறந்த விமர்சனம் ஒன்றை தமது “இலக்கிய வட்டம்”இதழில் வெளியிட்டுள்ளார்.அதில் இந்திய நாவலக்ளில் அளவிலும் தரத்திலும் இது மறுபடி மறுபடி படிக்க வேண்டிய சிறப்பு தன்மை கொண்ட்து என்பது இன்னும் கூடுதல் ஆர்வம்! இன்ன பிற எல்லாம்!சரி நாவல் கிடைத்த்தா.. ம்ம்ம் இல்லை.. என்ன முயற்ச்சி செய்து பார்த்தாலும் முடியவில்லையோ அல்லது ஏதோ காரனத்தால தடுங்கி போய்கொண்ட இருந்த்து. அவ்வப்போது ஏற்படும் ஆவல் திரும்ப முயற்ச்சி செய்தாலும் இடையில் வண்டி மக்கர் செய்து நிற்பது போல நின்று நின்று போனது. இத்தனைக்கும் இது இந்தியாவில் 18 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆனால் தமிழில் இல்லை.கொடுமை!!
காலம் கரைந்துபோனது.கால ஓட்ட்த்தில் நானும் புத்தகத்தை சற்றே மறந்து போனேன். நேற்று மாலை முகனூலுக்கு வந்த போது எப்போதும் போல ஒருவர் சேட்டில் வ்ந்தார்.எப்போதும் எல்லோரும் ஆரம்பிக்கும் முறையில் ஆரம்பிக்காமல் தொடக்கமே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.அதனால் இலகுவாக பேச ஆரம்பித்தோம். அவர் பெயர் மகேஷ் நந்தன்.வன உயிர் ஆர்வலர். என் கட்ந்த அழிவின் விழிம்பில் பதிவுகலை படித்து விட்டு பேச வ்ந்திருக்கிறார். துணி வியாபாரம் செய்கிறார்.அடுத்த சொன்னது தான் சிறப்பு. நான் கல்கத்தா என்றார்.எங்கோ ஒரு மூலையில் அடைந்து கிடந்த அந்த ஆவல் பீறீட்டு கிளம்பிற்ற. சூடு பிடித்த்து பேச்சு.அவர் பெங்காலியில் விளக்கம் சொல்ல.. துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல கிளம்பிற்று இருபக்கமும் சொற்கள.70 ,80 வருடங்களுக்கு முன்னால் கலகத்தா சென்று அங்கயே செட்டில் ஆகிவிட்ட இந்த ந்ம்முர்கார்ர் கல்கத்தா பற்றி சொன்ன தகவலகள் ஆர்வத்தை கிளப்பி விட்டது. இந்த நாவல் பற்றி கேடக... பேச்சு நாவல் பற்றி கட்டற்ற ஆற்று வெள்ளம் போல ..அந்த புத்தகத்தின் மேல் உள்ள காதலை புரிந்து கொண்ட அந்த அற்புத மனிதர் புத்தகத்தை பெங்காளி மொழியில் அனுப்பட்டுமா அல்லது ஆங்கிலத்திலா என்றார்.உருகிபோனேன் சூடான சாதத்தில போடப்பட்ட வென்னைகட்டியாய்...
பீமல் மிசரா இந்த நாவலை எழுதிக்கொண்டிருந்த போது வங்க வாசகர்கள் இந்த நாவலுக்காக புத்தக கடைகளில் அலையடித்த கூட்டமாய் நின்று வாங்கினார்கள்.நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த போது இதன் ஆசிரியர் பீமல்மிச்ரா கண்கோளாறு ஏற்பட்டு ஆப்ரேஷ்ன் செய்து கொள்ள தனியார் மருத்தவரிடம் சென்ற போது,அந்த மருத்துவர் இவரின் கையை பிடித்துக்கொண்டு”பீமல் மிச்ரா சாஹிப்,வாழ்க்கையையே சோழிகள் கொடுத்து வாங்குகிற திறன் படைத்த ,தரம் படைத்த உங்களிடம் நான் பணம் வாங்கமாட்டேன்.பல்லாயிரக்கனக்கான ரூபாய் தரவேண்டிய ஆப்ரேஷ்னை நான் சோழிகளுக்காகவே(நாவலுக்காக) நான் தங்கள் எழுத்தின் வாசகனாக ,ஒரு வங்காளி! ஒரு கல்கத்தாகாரனாக நான் செய்து தருவேன்” என்று கூறி ,அவிந்துபோக இருந்த பீமல்மிச்ராவின் கண்களை அறுவை சிகிச்சை மூலம் ஒரு பைசா செலவில்லாமல் செய்து கொடுத்தார் என்பதை இந்த நாவல் மூன்று பாகங்களாக புத்தகமாக வெளிவந்தபோது பிமல் மிச்ரா நன்றியுடன் நினைவுகூர்ந்து ,இது என் கதை!உங்கள் கதை!ஏன்?நம் ஒவ்வொருவரின் கதை .ஆனால் இது கலகத்தாவின் கதை!உலகில் ஒவ்வொரு மூலையிலும் காணப்படும் நகரங்களின் ,நாடுகளின் ,சிற்றூர்களின் அனு தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கிற...அழிந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதனின் கதை! என்றாராம்.நெகழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார் இந்த காலம் சென்ற அறிய பொக்கிசம் தஞ்சை பிரகாஷ்.
எத்தனை ஆண்டுகள்!எவ்வலவோ புத்தகங்கள்!. இத்தனை நாடகள் தேடி அலைந்த புத்தகம் இந்த முகனூல் மூலமாக ,ஒரு முகம் தெரியாத,முன்பின் அறியாத ஒரு மனிதர் மூலமாக என்னை அடைய்வேண்டும் என்பது ஏதோ ஒன்றாக இருந்துவிட்டு போகட்டும்.என்னை பெருத்தவரை பைபிளில் வரும் உதரான கதையில் மைந்தனுக்காக காத்திருக்கும் தந்தையின் நிலையில். எஸ்ரா சொல்வது போல் ஒவ்வொரு புத்தகமும் அதன் வாசகனுக்காக எங்கோ காத்துகொண்டிருக்கிறது போலும்..

நான் மருத்துவன் அல்ல. தஞ்சை பிரகாஷ் போன்ற மிக சிறந்த அறிவாளியும் அல்ல. சாதரனமானவன். ஒரு வாசகன் . அவ்வளவே.இத்தகைய சிறப்பான படைப்பை தந்த படைப்பாளிக்கு மரியாதை ,கொளரவம் என்ற வார்த்தைக்குள் அடக்காமல் அந்த படைப்பை வாசிப்பதன் மூலம் என்னுள் அந்த படைப்பாளியை உள்வாங்குவதன் மூலம் ஏதோ ஒன்றை ..இழந்த ஒன்றை அடைய முற்படுகிறேன்

.என் புத்தக அலமாரியில் உறையும் அச்சுத்தாள்கள் அல்ல அவை. ....

என்னுள், என் நினைவின் தாழ்வாரங்களில், நன்பன் பாலாஜி நினைவாக...





Read more...

அழிவின் விழிம்பில்..-53


கறுப்புக் கழுத்துக் கொக்கு
Black necked crane-grus nigricollis(przevalski)

கருப்பு கழுத்து கொக்கு ,லடாக் பகுதியில் ஏப்ரல்/மே முதல் அக்டோபர் வரையிலான இனச் சேர்க்கை கால்ங்களில் தென்படும்.அருணசாலப் பிரதேசம் மற்றும் பூடானில் செப்டம்பர் முதல் மார்ச் வரை காணப்படும்.பழுப்பு கலந்த கருமையான நீண்ட கால்களும் கன்ன்ங் கரேலென்ற கறுப்பு நிறக் கழுத்தும் கொண்டு ஒரு மீட்டர் வரை உயரம் இருக்கும்.பொதுவாக உடல் மங்கிய சாம்பல் நிறத்துடன் வாலில் தொங்கிய நிலையில் கருமையான இறகுகளுடன் இருக்கும்.


தானியங்கள் ,வேர்கள்,கிழங்குகள் பூச்சிகள் மற்றும் சிறிய முதுகுத் தண்டுள்ள பிராணிகளை ,கருப்பு நிறக் கழுத்து கொக்கு உணவாக்க உட்கொள்ளும். லடாக்கில் இனச் சேர்க்கை பருவம் முடிந்த்தும் தனது குஞ்சுகளுடன் ,குளிர் காலத்தில் வெப்பக் பகுதிகளை நோக்கி புறப்படும்.
அழிவுக்கு இலக்காகி இருப்பதால் இப்பறவை வன உயிர் பாதுகாப்பு சட்டம் அட்டவனை -1 ல் பாதுகாக்ப்பட வேண்டிய பறவையாக அங்கரீக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏறக்குறைய 2100 க்கும் அதிகமான பறவைகளின் உயிரின வகைப்பிரிவுகள்/துணைப் பிரிவுகள், மற்றும் இங்கே குறிப்பிடப்படாத பறவைகள் பேரழிவுக்கு இலக்காகி உள்ளன.வெண்சிறகு மரவாத்து, பெருஞ்சீட்டி நன்னீர் வாத்து.அந்தமான் நன்னீர் வாத்து,இமயமலை கழுகு,நிக்கோபார் பெரும்கால் பறவை,மலபார் இருவாட்சி ஆகியன குறிப்பிட்த்தக்கவை.

Read more...

அழிவின் விழிம்பில்..-52


சைபீரிய
Siberian crane-grus leucogeranus(pallas)
குருயிஃபார்மிஸ்” எனப்படும் இனத்தொகுதியின் கீழ் வரும் சைபீரிய கொக்கு ,ஒரு சதுப்பு நிலப் பறவை ஆகும்.பறப்பதற்கேற்ற உடலைப்பு இல்லாவிடினும்,நீரிலும் நிலத்திலும் நன்கு வாழும் திறம் கொண்ட்து.வடக்கு சைபீரியாவிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகிறது.பீஹாரின் வடபகுதி ,உத்திரப் பிரதேசத்தில் பிரயாக்பூர் ஜீல் மற்றும் பரத்புரில் உள்ள “கிலாடியோ கானா தேசியப் பூங்கா” ஆகியவற்றுக்கு நவம்பர் மாத இருதியிலும் டிசம்பர் மாத தொடக்கத்திலும் சேர்கிறது. பின்னர் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் பகுதியில் மீண்டும் சைபீரியா நோக்கிப் புறப்படுகிறது.

சைபீரியா கொக்கு ,பனிபடர்ந்த  வெண்ணிறமான இறகுகளையும் ,தலையின் முன் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் சிவப்பு நிறத்தையும் கொண்டிருக்கும்.இறக்கையின் சில இறகுகள் கருமையாக இருக்கும்.உலகில் உள்ள சைபீரியா கொக்குகளின் எண்ணிக்கை சில நூறுகளே என்பதால், இதனை காகும் பொருட்டு அகில உலக அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


1950 முதல் 1970 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் பரத்பூர் பகுதிக்கு குளிர்காலத்தில் 100 சைபீரியா கொக்குகள் வருவதுண்டு.நாளாவட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை குறைந்து 1989,90,91 ஆண்டுகளில் முறையே 22,14,7 சைபீரிய கொக்குகளே வந்து சென்றன.பருவ மழை சரிவரப் பெய்யாமையும் ,அவ்வப்போது தோன்றும் வறட்சியும் இதற்குக் காரணமாக தெரிகிறது.பரத்பூர் தேசியப் பூங்காவில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதால் நீர்த்தாவரங்கள் அதிகமாகி இப்பற்வைகளால் நீரின் கீழிறுக்கும் கிழங்குகளை எட்டி தின்ன முடியவில்லை.இப்பூங்கவிற்க்கு  வரும் சைபீரிய கொக்குகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

Read more...

அழிவின் விழிம்பில்..-51


சீர் ஃபெசண்ட்
Cheer pheasant-catreus  wallichii (Hardwicke)

நீண்ட வால் ,நீளமான குறுகிய கருமை படர்ந்த பழுப்பு நிற பின் நோக்கி வளைந்த கொண்டை ஆகியவை இதன் அடையாளங்களாகும்.இதன் இறகுகள் மங்கிய மஞ்சளில் வெள்ளை மற்றும் அழுக்குப் படிந்த வெண்மை நிறத்தில் கருப்பு கோடுகளுடன் காணப்படும்..பெண் பறவை உருவத்தில் ஆண்பற்வையை விட சிறியதாயினும் மற்ற அடையாளங்கள் அதனைப் போன்றே இருக்கும்.



இப்பறவை ஒரு சமயத்தில் காஷ்மீர் ,பஞ்சாப்,,இமாசலப் பிரதேசம்,உத்திரப்பிரதேசத்தில் கார்வல்,குமான் பகுதிகளில் வாசம் செய்தது.தற்போது இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது  

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP