அடைகலம் கேட்கும் அடைக்கலங்குருவி!!
>> வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
அடைகலம் கேட்கும்
அடைக்கலங்குருவி!!
திலாவர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர்.டைம் இதழ்
உலக சுற்றுளா கதநாயகர்கள் பட்டியலில் இவரையும் சேர்த்து 2008 ஆம் ஆண்டில்
கெளரவபடுத்தியது. காரணம் நமக்கு எல்லாம் காலம் காலமாக தெரிந்த நம் வாழ்வில்
நம்மோடு இருக்கும் சிட்டுக் குருவி.!!
2010 ஆண்டு முதல் மார்ச்20 ம் தேதியை உலக சிட்டுக்குருவிகள்
தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.செய்தி வறுமையில் இருக்கும் ஊடகங்கள்
பெரும்பான்மையானவை கடந்த வருடம் போட்டி போட்டு சிட்டுக்குருவிகள் பற்றி செய்திகள்
வெளியிட்ட்து.நல்லது. மகிழ்ச்சி. ஆனால் சுற்றுச்சுழலுக்கு பெட்டி செய்தியை கூட
ஒதுக்காத ஊட்கங்கள் இப்படி மாய்ந்து மாய்ந்து எழுதியது தான் ஆச்சர்யம்!!
”இந்தியாவில் சிட்டுக் குருவிகள்
அழிகின்றன” என்று அனைவரின் கவனத்தையும் இவ்வுயிரினத்தை நோக்கி
திருப்பியதால் தான் மேற்கூரிய அனைத்தும். அதற்கு மூல காரணம் திலாவர்.
ஊட்கங்கள் உச்சதொனியில் தூக்கிப்பிடித்த
அனைத்தும் உண்மையான பிரச்சனையா? அவை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதா
என்றால்..பதில் ..இல்லை என்பதே.
மனிதரின் உதவியுடன் உலகம் முழுவதும்
பரவிய ஒரே பறவை சிட்டுக்குருவிகள் தான்.இப்படி பரவியதற்குக் காரணம் மனிதர்களுக்கு
நெருங்கி வாழும் பண்புதான்! தமிழில் வீட்டுக்குருவி, அடைக்கலங்குருவி,ஊர்க்குருவி என்று பல
பெயர்களிலும் சுட்டப்படுகின்றது.மனிதர்களிடம் அடைக்கலம் தேடி வந்ததால் , இக்குருவிகளுக்கு தென் மாவட்டங்களில் அடைக்கலங் குருவி என்ற பெயர் வழங்கப்படுவது
சுவரசியமான விசயம்!
மனிதர்களுக்கு மிகவும் நெருங்கிய ஆனால்
வீட்டு விலங்காக மாற்றப்படாத உயிரின்ங்களில் ஒன்று சிட்டுக்குருவி.பொதுவாக இவை
மனித நெருக்கத்திற்கு அஞ்சாதவை.ஒரிடம் பாதுகாப்பாக இருக்கின்றது என்று அவை
உனர்ந்து கொண்டாலே போதும் பிறகு அவை அன்புடன் அங்கே வாழ ஆரம்பித்துவிடும்.
துருவப் பகுதிகளை தவிர்த்து உலகெங்கும்
காணப்படுகிறது.இமயமலையில் கூட 4000 மீட்டர் உயரம் வரை கூட சிட்டுக்குருவிகள்
காணப்படுகிறது.உலகில் கண்டுபிடிக்கும் புதிய நிலப்பரப்புக்கு ஏற்றுமதியாகும் முதல்
பறவை சிட்டுக்குருவிகள் தான் என்கிறார்கள் பறவையிலாளர்கள்.
தானியங்கள்,புழு பூச்சிகள் ,தாவர முளைகள்
,மலர் அரும்புகள்,இளந்தளிர்,தேன்,வீட்டு கழிவுகள் போன்றவற்றை உண்ண ,தோட்டங்கள்
,குப்பைக்கூளங்கள்,திரந்தவெளி உணவகங்கள் ,தானியக்கடைகள்,காய்கறி,பழம்,பூ
விற்கப்படும் இட்ங்களில் உணவுகளை தேடுகின்றன.
சிட்டுக்குருவி குஞ்சுகள் பெரும்பாலும்
பூச்சி,புழுக்களையே உண்கின்றன.அசுவினி எனும்
ஒட்டுப்பூச்சி,சிலந்தி,வண்டுகள்,மூக்கு வண்டுகள் ,வெட்டுக்கிளிகள்
,கம்பளிப்புழுக்கள் போன்றவற்றை பெற்றோர் குருவிகள் குஞ்சுகளுக்கு ஊட்டி
விடுகின்றன.
ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் இப்பறவை,.
பெண் சிட்டுக்குருவிகளை அடைவதற்கு ஆண் சிட்டுக்குருவிகள் இடையே போட்டியும்
சண்டையும் உண்டு.வெற்றி பெரும் ஆண் குருவியே பெண்ணுடன் சேரமுடியும்.இனப்பெருக்க
காலத்தில் ஆணின் அலகு சாம்பல் நிறத்தில் இருந்து கருப்பாக மாறிவிடும்.இனப்பெருக்க
காலத்தில் பாட்டும் நடனமும் உண்டு!பெண் குருவிக்கு ஆண் குருவியின் உதவும்
மனப்பான்மை ஆச்சர்யபடவைக்கும் அளவுக்கு இருக்கும்.
இளவேனில் காலத்தில் குருவிகள் கூடு கட்ட
ஆரம்பிக்கிறது.விட்டு முகடுகளின் சந்து,வீட்டுக்கூரை,கிணற்று இடுக்குகள்,மழைநீர்
வழியும் குழாய்கள்,பழைய கட்டங்கள்,ஓடுள்ள, தகரம் பதிக்கப்பட்ட கட்டங்கள்,கூரை
வீடுகள் போன்ற இடங்களில் புல் ,வைக்கோல்,பஞ்சு,மென்மயிர் ,இறகு என்று எளிதில்
கிடைக்கும் பொருட்களே வைத்தே குடு கட்டும்.
சுமார் 3 முதல் 6 முட்டைகள் வரை இட்டு 14
நாள்கள் அடைகாக்கும்.முட்டை வெண்மை ,பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும். 15
நாள்களில் முட்டை பொரிந்துவிடும்.பிறந்த குஞ்சுகளுக்கு ஒன்று அல்லது இரண்டு
வாரங்களுக்குப் பிறகே கண் திறக்கும்.
மனித ஆபத்துகளில் இருந்தும்
பருந்து,காகம்,பூனை போன்ற எதிர் விலங்களிடம் இருந்தும் தப்பிக்கும் குருவிகள்
சுமார் 10 ஆண்டுகல் முதல் அதிகபட்சமாக 13 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
1990 களில் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்
சிட்டுக்குருவிகளை பற்றி வெளியிட ஆரம்பித்தார்கள் மனித பழக்கவழக்கங்களில்
ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள்,தகவல் தொழில்நுடப் புரட்சி,இயற்கையை
சிரழிக்கும் நடவ்டிக்கைகள்தான் இவைகள் அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாக காரணம்
சொல்லப்பட்ட்து.ஆனால் இவை உலகம் முழுவதற்கும் இது பொருந்தாது என்பதுதான் உண்மை!
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு அலைபேசி
அலைகள் தான் முக்கிய காரணம் என்று இந்தியாவில் சொல்லப்படுகிறது.இந்தியாவில் இது
குறித்த ஆராய்ச்சிகள் எதுவும் செய்யப்படவில்லை. இது ஸ்பெயினில் நடைபெற்ற சிறிய
ஆராய்ச்சியின் முடிவில்
குருவிகளின் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு மின்காந்த
அலைகளும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்ட ஒரு குறிப்பை கொண்டே இந்தியாவில்
முன்மொழியப்பட்டது.சுத்தமான அக்மார்க் “காப்பி” !!இது நமது அப்பட்டமான மேம்போக்குத் தன்மையே வெளிப்படுத்துகிறது!!
குருவிகளுக்கு முக்கிய உணவு
தாணியங்கள். தானியங்களை இடித்து புடைக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தது.அதிலிருந்து
சிதறும் தானியங்கள் ,பொக்குகள் குருவிகளுக்கு உணவாகும்.நமது உணவு முறையிலிருந்து
கேழ்வரகு,கம்பு,சாமை,தினை,சோளம் போன்ற தானியங்களும் மறைந்துவிட்டன.பிறகு எப்படி
குருவிகளுக்கு உணவு கிடைக்கும்?
இதே போல் நாம் புழக்கடையில் பாத்திரம்
தேய்த்த காலம் போய் வீட்டுக்குள் கழுவப்படுகின்றன. குருவிகளுக்கு உணவாகிக்கொண்டு
இருந்த எஞ்சிய உணவுப்பொருட்கள் இப்போது பாதாளச் சாக்கடையில் நேரிடையாக கலக்கின்றன-காக்கையும்
குருவியையும் பாடிய பாரதியின் வாழ்ந்த நாட்டில்!!!
நமது வீடுகள் இப்போது நவீன ரூபத்திற்கு
மாற்விட்டது மற்றொரு முக்கிய காரணம்.ஓட்டு வீடுகளோ ,சுவரில் பொந்து,இடவெளி வைத்தோ
வீடுகள் இப்போது கட்டப்படுவதில்லை. குளிர்சாதனம் வைப்பதற்காக ஜன்னல்கூட வைக்காமல்
கண்ணாடி ,அலுமினியம் வைத்து முழுதாக மூடி விடுகிறார்கள்.இந்த வீடுகளில் குருவிகள்
எப்படி கூடு கட்டமுடியும்?இது முக்கிய காரணம் என்று சிட்டு குருவிகளை பற்றிய ஆய்வு
நிருவனம் தெரிவிக்கிறது.
அவரை ,புடலை ,பாகல்,பீர்க்கம் போன்ற
கொடித்தாவரஙக்ளில் இருக்கும் சின்ன சின்ன புழுக்களே குஞ்சுகளின் உணவு.இதுபோன்ற
வீட்டுத்தோட்டஙக்ளில் தான் தாய்பறவை குஞ்சுகளுக்கு உணவு தேடும்.ஆனால் இப்படிப்பட்ட
வீட்டுத்தோட்டங்கள் நகரங்களில் எங்கே இருக்கின்றது?
இதுதவிர வீட்டுத்தோட்டங்கள் ,வயல்களில்
தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் அதில் உள்ள பூச்சிகள் ,சிறு புழுக்கள் .இறந்துவிடுகின்றன.இவைகள்
குஞ்சுகளுக்கு கிடைக்காமல் வளர்ச்சி
தடைபடுகிறது. பூச்சிக்கொல்லிகளால் தானியங்கள் நஞ்சாகின்றன. அவைகளை உண்ணும் குருவிகளின்
வாழ்நாள் சுருங்குகிறது.
பெட்ரோல்,டீசல் வாகன்ங்களில் இருந்து
வெளியாகும் புகையில் உள்ள மீத்தைல் நைட்ரேட் என்ற நச்சுப்புகை சிட்டுக்குருவிகளின்
உணவான பூச்சிகளை கொலகிறது என்கிறது ஒரு ஆய்வு.இதனால் சிட்டுக்குருவிகளும்
,சிட்டுக்குருவிகளை உண்டு வாழும் மற்ற உயிரின்ங்களும் பாதிக்கப்படுகின்றன.உயிரின
உணவுச் சங்கிலியே தகர்ந்து போகிறது.
இவைதவிர தானியங்களும் உணவுப்பொருள்களும்
பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதால்,தானியங்கள் எங்குமே சிதற
வாய்ப்பில்லாமல் போவதாலும் அதன் உணவில்
தடையை ஏற்படுத்துகிறது -உணவுக்காக இருந்த
கொஞ்ச அரிசையும் குருவிகளுக்கு ஈந்த எம் பாரதியின் தேசத்தில்!!!
மனிதர்களின் வாழ்க்கைமுறை மாற்றங்களால்
நகரங்களில் வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகள் அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன.சிட்டுக்குருவி
சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் ஒர் குறியீடு.அதன் அழிவு நகரம்
நரகமாய் வருவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.மாற்ற வேண்டியது நமது வாழ்வியல்
முறைகள். அதுவரை வெற்றுத் தினங்களும் கோஷங்களும் சிட்டுக்குருவிகளின் அழிவைத்
தடுக்க இயலாது.