இன்றைய சிந்தனைக்கு
>> வெள்ளி, 20 ஜூலை, 2012
” எப்படி இருக்கீங்க ?” மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் கேள்வி.இதற்கு
பெரும்பாலோனரின் பதில் “எதோ போகுது,இருக்கிறேன்”..இப்படித்தான் பலரும் பதில் அளித்திருக்கிறோம்.ஏன் ..??
இன்றைய அவசரமான உலகத்தில் எல்லோருக்கும் கனவு உண்டு. ஆனால் ஒரு கனவு
முடிந்தவுடன் மற்றொரு கனவு நம்மை சூழ்ந்து கொள்கிறது. தயராக இருக்கிறது மற்றொரு கனவு!!நம்மைக்
களவு கொள்ள.!! நெருக்கடி!!
அதீத உலகில் வாழ்தல் என்பது ஏதோ பலருக்கு பணம் அல்லது பொருளோ சம்பாதித்து வாழ்வதல்ல.வெறும்
ந்ம குடும்பத்துடன் பணத்தை சம்பாதீத்தோமோ பொருளை வாங்கினோமோ என்பதும் வாழ்தல்
அல்ல.
சகமனிதரோடு இணைந்து வாழ்தல். இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த சிறு உதவிகளை
செய்து வாழ்தல் என்பது.பேருந்தில் ப்யணம் செய்கிறோம் .முதியவருக்காக உங்களின்
இருக்கை விட்டுக் கொடுத்துப்பாருங்கள். அன்றைய நாளில் நீங்கள் மிகுந்த உற்சாகத்தோடு
மனநிறைவோடு இருப்பீர்கள்.
இப்படிச் சிறு உதவிகளை சகமனிதருக்கு செய்வதன் மூலம் நீங்கள் இச்சமுகம்
உங்களுக்கு வழங்கும் வாழக்கைக்கு சிறந்த பிரதிபகரமாக செய்வதாக இருக்கும்.
வாழ்தலுக்கும் இருத்தியலுக்கும் உள்ள வித்தியாசங்களை
உணருங்கள்.வாழ்க்கை வாழ்வதற்கே.... மனிதம் மலரட்டும் வசந்தங்களோடு
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக