அழிவின் விழிம்பில்..-44

>> திங்கள், 30 ஜூலை, 2012


பறவைகள்

சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு “மிசோசாயிக்” இடையுயிர் மண்ணூழிக் காலத்தில் ஊர்வனத்திலிருந்து தோன்றி பூமியெங்கும் பற்வைகள் பரவின.இவை பல்வேறு அளவுகள் உருவகங்கள் வண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் கொண்டு திகழ்கின்றன.எல்லாக கண்டங்களிலும் காணப்படுகின்றன.எங்கெல்லாம் ஒதுக்கிடங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வாழும் திறன் படைத்தவை.தற்போது 8600 உயிரின் வகை பிரிவுகள் உள்ளன.இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை சில டஜன்களே.
இம்மாபெரும் பறவை கூட்ட்த்தை பற்வை முறைமையாளர்கள் 27 இனக் குழுமங்களாகவும் 155 குடும்பங்களாகவும் வகைபடுத்தியுள்ளனர்.
மனிதனுக்கு தெரிந்த முதல் பறவை “ஆர்க்கியோடீரிக்ச்” எனப்படும் மிகப் பழமையான ஊர்வன்வற்றுக்கும் பறப்பன வற்றுக்கும் இடையிலான ஒரு விலங்காகும்.இது பவேரிய புதைப் படிவத்திலிருந்து தெரியவருகிறது. பறவைகள் உலகம் என்பது பத்து பைசாவை விட எடை குறைந்த ஹம்மிங் பறவை முதல் 135 கிலோக்கும் அதிக எடை கொண்ட நெருப்பு கோழி வரை அடங்கும்.
இந்திய பற்வை உயிரினத் தொகுதியில் சிறப்புமிக்க பல்வகை பறவைகள் உள்ளன.தற்போது உலகில் காணப்படும் 27 பற்வைகள் இனக்குழுமங்களில் இந்தியாவில் 21 இனக் குழுமங்கள் 1200 உயிரின வைகை பிரிவுகள் தென்படுகின்றன. இது உலகில் கானப்படும் 8600 வகைபிரிவுகளில் 14 விழுக்காடு. பறவைகளின் துணை வகைக்ளையும் நீர் மற்றும் நிலப் பறவைகளையும் சேர்த்து இந்தியாவில் உள்ள பறவைகளின் வகைப் பிரிவுகள் 2060 என்று கொள்ளலாம்.இதில் 1750 வகை பிரிவுகள் இந்தியாவில் வாழ்பவை.
ஆயினும் மனிதனின் நடவடிக்கைகள் உறைவிட ஒழிப்பு காடுகள் அழிப்பு மற்றும் மாசுபாடுகளினால் பல பற்வைகள் ஆபூர்வமாகி அழிவுக்கு இலக்காகி உள்ளன.தற்போது தேவை பற்வைகளை காக்கும் கடுமையான பாதுகாப்பு முயற்சிகளே. அதில் ஆபத்தின் விழிம்பில் உள்ள பற்வைகளை வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP