முகனூல் நாட்குறிப்புகள்.

>> ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஊறுகாய் என்பது உண்மையில் உப்பு தண்ணிரீல் ஊறவைத்த காய் தான்.இன்னும் மேலை நாடுகள் பலவற்றில் இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.ஆனா எவன் கன்டுபிடித்தான் என்று தெரியவில்லை..அதில் மசாலா வைச்சேர்த்து நாக்கில் எச்சில் ஊறவைத்தது....இவனுக்கு வைக்கனும் சிலை!!!


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நல்லது...யாருக்கு ஆப்பிள் விற்கரவனுக்குதான்!!
எவன் இந்த கட்டுக்கதையை தொடங்கி வைத்தானோ ...அவனை ஆளை வைச்சு அடிக்கனும். பொதுவாக நமது உடலானது நம்மை சுற்றியுள்ள காலநிலை இயற்கை இவற்றோடு நெருங்கிய தொடர்புடையது.அதனால் அந்த கால நிலையில் என்ன விளைகிறதோ அதையே உண்ணும் வகைகையில் இந்த பிரபஞ்சம்அமைந்துள்ளது.பலாப்பழம் கிடைத்த அதை சாப்பிடு... சீத்தாப்பழம் கிடைக்கும் அதை சாப்பிடு....அதை விட்டு விட்டு ஆப்பிள் கிடைக்காத நேரத்திலும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்து எல்லாம் சாப்பிட சொல்லலை.


ஒரு உணவின் ருசி என்பது எதை எதனோடு சேர்ந்து பரிமாறுகிறிர்கள் என்பதில் தான் உள்ளது சூட்சமம்.சமீபத்தில் இதை அவதனிக்கும் பெரும்பாக்கியம் கிடைததது.பெரும்பாலான டுமீல் இல்லத்து அரசிகள் டிப்ரண்டாக செய்கிறேன் என்ற பெயரில் உணவு வகைகளை கொலை செய்கிறார்கள். அதே போல் இவர்களின் சட்னியில் பாவம் தக்காளி... இந்த தக்காளி சட்னியேவே போட்டு கொல்ராங்க... எனக்கு என்னமோ ஒரு டவுட் இருக்கு..இவங்க சமையலை இவங்க சாப்பிடராங்களா என்று....நான் நினைக்கிறேன்..சமைச்சு வைச்சு புகைப்படம் எடுத்து முகனூலில் பதிந்துவிட்டு ஒட்டலுக்கு போய் சாப்பிடுவாங்கனு.
# பாவம் குடும்பத்தார்...


இட்லிக்கு சட்னி சாம்பார் இரண்டும் தான் ஆப்ட்.அல்லது கறிகுழம்பு .இதிலும் சூட்சமம் உண்டு.. சட்னி என்றால் கெட்டி ..மித தன்மை....தண்ணீர் போல இருப்பது செமியாக இருப்பது பல வகைகள் உண்டு.இடலியின் பதத்தை பொறுத்து சட்னி இருக்கவேண்டும் இதே குஷ்பு இட்லிக்கு கெட்டி சட்னி வைத்தால் விக்கி கொண்டு தான் சாகனும்.குக்கர் இட்லிக்கும் இதே போல தான். இடலி குண்டானில் கிடைக்கும் வீட்டு மெது மெது இட்லிக்கு காலையில் கெட்டி சட்னியை விட தாளித்த கொஞ்சம் லிக்வீடாக இருக்கிர சட்னி ஆப்டாக இருக்கும் இதே மாலை என்றால் கெட்டி சட்னி ஆப்டாக இருக்கும்.இருப்பதிலேயே இடலிக்கு பக்காவான துணை பொதினா சட்னி தான் சைவத்தில்.அசைவத்தில்..என்ன கேள்வி இது... குடல் கறி.இதில் இடலிக்கு அசைவ குழம்பு தண்ணீர் மாதிரி இருந்தால் ஊறபோட்டு அடிக்கலாம்...சாம்பார் என்றால் காயக்றிகள் போடாத சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் தான் செம காம்போ!! இது தவிர கத்திரிக்காய் போட்ட சாம்பாரும் நல்ல இருக்கும் ஆனால் இது போன்ற சிற்றுண்டிகளுக்கு சாம்பார் செய்யும் போது காய்களை சின்ன் சின்னதாக நறுக்கி போட வெண்டும்.அது தனித்த அனுபவத்தை கொடுக்கும்!!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP