அழிவின் விழிம்பில்..-10

>> சனி, 21 ஜூலை, 2012


தங்க நிறப்பூனை
(golden cat-felis(temmincki vigors & horsfield)

வீட்டுப் பூனையைவிடச் ச்ற்று பெரியதாகவும் செழுமையான பொன்னிறம் கலந்த பழுப்பு நிறத்தோழும் கொண்ட தங்க நிறப்பூனை சிக்கிம் முதல் அஸ்ஸாம் வரையிலான கிழக்கும் பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கிறது.கண்களை ஒட்டியுள்ள கிழக்குப் பகுதியில் உள்ள வெண்ணிறப் பட்டைகளும் வெண்ணிறக் கிடைக்கோடுகளும் அதனைச் சுற்றி கருமையான கரைகளும் இதன் சிறப்பம்சங்களாகும்

அழிவின் விழிம்பில்..-9


பனிச் சிறுத்தை
(snow leopard-panthera unica(schrobar)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்  வாழும் சிறுத்தை அல்லது கருஞ்சிறுத்தையுடன் ஒப்பிடுகையில் பனிச் சிறுத்தையும் படைச் சிறுத்தையும் பேரழிவுக்கு இலக்காகி இருக்கின்றன.தோற்றத்தில் கருஞ்சிறுத்தையை விட பனிச்சிறுத்தை சிறியதாயினும் நீண்ட முடி நிறைந்த உடலைப்பினால் பெரியதாக தோற்றமளிக்கிறது.

பனி அடர்ந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்வதற்காக தடித்த மென்மையான அழிகிய மென்மயிர் படர்ந்த பால் வென்மையான தோழும் அதில் மங்கிய சாம்பல் வண்ண ரோசா வடிவப் புள்ளிதிட்டுகளும் இதர்க்கு காணப்படும்.இது இமயமலை பகுதிகளில் 3000 மீட்டர் முதல் 4000 மீட்டர் வரை உயரமுள்ள மலை பகுதிகளில் வாழ்கிறது.குளிகாலத்தில் 2000 மீட்டர் வரை இறங்கி வந்து விடும்.இது காட்டு ஆடுகள் ,செம்மறியாடுகள்,இபெக்ஸ் ஆடு,மார்க்கோர் ஆடு,காட்டு முயல் மற்றும் பறவைகளை வேட்டையாடி உண்ணும்.

அழிவின் விழிம்பில்..-8


சிறுத்தைப் பூனை.
(leopard cat-felis bengalensis kerr)

பார்ப்பதற்க்கு சின்னஞ்சிறிய சிறுத்தை போன்ற தோற்றமளிக்கும் சிறுத்தை பூனை,அள்வில் வீட்டுப் பூனை போன்று காணப்படும் .இது காண்போரை கவரும் வண்ணத்தில் அமைந்துள்ளது.வெளிரிய மஞ்சள் நிறத்தோழும் அதில சாம்பல் அல்லது கருப்பு நிறப்புள்ளிகளும் கானப்படும்.

இந்தியா முழுவதும் காணப்படும் சிறுத்தைப் பூனை ,காட்டும்பகுதிகளில் வாழக்கூடியது.மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் வீட்டுக் கோழிகளையும் இதர வீட்டு விலங்குகளையும் கவ்விச் சென்றுவிடும். சாதரண சிறிய வகை பாலுட்டிகளையும் பறவைகளையும் உண்டு வாழும்.

அழிவின் விழிம்பில்...-7


பெரிய புள்ளி சிறுத்தை (அ) படைச்சிறுத்தை
(clouded leopard-neofelis nebulasa(griffith))

சாதரண சிறுத்தையை விட பெரிய புள்ளிச் சிறுத்தை அளவில் சிறியாதானாலும் ,அதிநீண்டவாலுடன் காணப்படும். பழுப்பு வண்ண உடலில் கருமையான வட்டப்பட்டைகளும் ,பட்டைகளுக்குகிடையே மங்கலான இடைவெளியும் காண்ப்படுவதால் இது இப்பெயர் பெற்றது.தலையில் புள்ளிகளும் முகத்தில் பட்டைகளும் கணப்ப்டும்.வயிற்றுப் பகுதியிலும் காலகளிலும் பெரிய முட்டை வடிவான கரிய புள்ளிகளும் நீண்ட வாலில் சாமபல் நிறமுடைய வளையங்களும் காணப்படும்.

சில்லிமில் உள்ள அடர்ந்த பசுங்காடுகளிலிம் அருணாசலப் பிரதேசம் ,நாகலாந்து மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தின் கிழக்கும் பகுதிகளிலும் படைச் சிறுத்தை காணப்படுகிறது.மரங்களில் வாசம் புரிந்து இரவிலே வேட்டையாடும் படைச் சிறுத்தி பொதுவாக சிறிய பாலுட்டிகளையும் பற்வைகள் மான் ஆடு போன்ற பெரிய வகை தாவரம் உண்ணும் விலங்களையும் வேட்டையாடி வாழும்.

அழிவின் விழிம்பில்-6


ஹூலாக் கிப்பான்(அ) வெள்ளை புருவக் குரங்கு
(hoolock gibbon-hylobates hoolack (harlan))

இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கினம் ஹூலாக் கிப்பான்.வாலில்லாக் குரங்கு இனங்கலிலே மிக அருமையாக குட்டி கரணம் அடிக்க கூடியது.உடல் முழுவ்தும் கருமையான முடி.வட்ட வடிவமான முகம் புருவத்தில் வெண்ணீறப் பட்டை நீண்ட கைகள் வால் இல்லாமை ஆகியவை இதன் உடலமைப்பு.இதர்க்கு வளையத்தக்க தோள்பட்டை இருப்பதால் கைகளை நனகு அசைக்க முடியும்.இதன் நீணட கைகள் கொக்கிகள் போல மரக்கிளைகலை பிடித்து கொள்ளும்.மரக்கிலையை ஒரு கையினால் பற்றிக்கொண்டு ஊசாலாடிக் கொண்டே மற்றொரு கையால் அடுத்த கிளையை பற்றிக்கொள்ளும் அழகே தனி!!ஒரே தாவலில் 3 மீட்டர் நீள தூரத்தை கடந்து விடும்.காட்டு மரங்களினூடே இவ்வாறு தாவிச் செல்லும் இதன் வேகம் அசாத்தியமானது.தாவுதற்க்காக கிளையைவிட அதிக உயரத்தில் ஊசலாடி தனது கைகளை மேலெழுப்பி உடலை முன் வைத்து அடுத்த கிளையைப் பற்றிக் கொள்ளும்.

கிப்பான்குரங்கு நிற்கும்போது கூட அதன் நீண்ட கைகளில் உள்ள விரல்கள் தரையை தொட்டுக்கொண்டு இருக்கும்.மூக்கு சற்றே மேடாக இருப்பதால் மற்ற வாலில்லாக குரங்கு இனங்களை விட இது மாறுபட்டு இருக்கிரது.இதன் திண்ணிய புருவமேடுகளையும் சிறீய சாயவான முன்நெற்றியையும் மறைத்து பார்த்தால் கிப்பான் குரங்கு  மனிதனை போலவே காட்சியளிக்கும்.

இந்தியாவில் வட கிழக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் ஹூலாக் கிப்பான் காணப்படுகிறது.இது பங்களாதேஷ் பர்மா சீனா ஆகிய நாடுகளில் சில பகுதிகளிலும் காணப்படுகிரது.பழங்கல் இழைகள் பூக்கள் மற்றும் பூச்சிகளை உண்டு வாழ்கிறது.இதன் குடும்பம் அளவான சிறு குடும்பம். ஒரு ஆண் ஒரு பெண் மற்றும் மூன்று அல்லது நான்கு குட்டிகளே இருக்கும்.

அழிவின் விளிம்பில்..-5


பெரிய தேவாங்கு(slow loris-nycticebus coucang (boddaert))

பெரிய தேவாங்கு நன்கு உருண்டு திரண்டு காட்சியளிக்கும் .பெருத்த உடலும் வட்ட வடிவமான கண்களும் கண்களைச் சுற்றிலும் கரும் பழுப்பு வண்ண வளையமும் கொண்டு தோற்றம் அளிக்கும்.மொட்டையான வாலும் உண்டு .இதன் உடலில் மெல்லிய அடர்ந்த வெள்ளி நிற முடியும் முதுகின் மையப்பகுதியில் பழுப்பு வண்ணப் பட்டையும் இருக்கும்

நன்கு வளர்ச்சியடைந்த கட்டைவிரலும் பாத விரல்களும் மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள ஏதுவாக இருக்கின்றன்.ஒல்லித்தேவாங்கு போலவே இதுவும் இரவில் வேட்டையாடி உண்ணும் திறமை கொண்டது.பழங்கள்,பூச்சிகள் மற்றும் சிறு செடி கொடிகளே இதன் ஆகாரமாகும். 

அழிவின் விளிம்பில்..-4


ஒல்லித் தேவாங்கு(slender loris-loris tardigradus(linnaeus))

சிறிய ஒல்லியான உடலமைப்பும் கூர்மையான பெரிய கண்களும் கொண்டது ஒல்லித்தேவாங்கு.நீண்ட காலகள் ந்ன்கு வளர்ந்த ஆட்காட்டி விரல் பெரிய காதுகள்,வால் இல்லாமை ஆகிய்வை தேவாங்கின் குறிப்பிடத்தக்க அமச்ங்களாகும் இதன் உடல் திண்ணிய பழுப்பு நிறமும் வெள்ளி நிற முடியும் கொண்டுள்ளது.ஒல்லித் தேவாங்கு இரவில் வேட்டையாடி உண்ணும் விலங்காகும்.இது மரங்களிலும் புதர்களிலும் ஏறியும் திரிந்தும் ,தீங்கனிகள்,பூச்சிகள் மரத்தேரைகள் பல்லி வகைகள் சிறு பற்வைகள் ஆகியவற்றை உண்டும் வாழ்கிறது .இது பகல் நேரத்தில் தன் உடலை பந்து போல சுருட்டிக் கொண்டு தலையைக் கால்களுக்கிடையே புதைத்து கொண்டு கைகளால் மரத்தினைப் பற்றி கொண்டு ஒய்வெடுத்துக் கொள்ளுதல் விசித்திரமாக தோற்றமளிக்கும்.

இந்த தென்னிந்திய உச்சவுயர்வு உயிரினம் கேரளா,தமிழ்நாடு ,கர்நாடக்ம்,ஆந்திரப்பிரதேசம் ஆகிய் மாநிலங்களில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.கண் நோயகளுக்கு நிவாரணம் அளிக்க வல்லது என்ற தவறான கருத்தினாலும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு தேவைப்படுவதாலும் இது மிகுந்த அளவில் வேட்டையாடப் படுவதால் ,இதன் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது.

அழிவின் விளிம்பில்..-3


நீலகிரி மந்தி(nilgiri langur-presbytis johni(fischer)

நிலகிரி மந்தி பளபளப்பான கருமையான உடலும் மஞ்சளும் பழுப்பு வண்னமும் கல்ந்த தலையும் அமையப் பெற்றது.இதன் உடல் அளவு சாதரண குரங்கைப் போன்றே இருக்கும் .இதற்க்கு நீண்ட வால் உள்ளது.இதன் பெயர் நமக்கு சுட்டி காட்டுவது போல மேற்குத தொடர்ச்ச்சி மலையில் உள்ள நீலகிரியில் இது காணப்படுகிறது.கர்நாடகவில் உள்ள குடகு பகுதியிலிருந்து தமிழ் நாட்டில் உள்ள பழனி மலை வரையிலும் ,ஆனைமலை பிரம்மகிரி பகுதிகலிலும்,கேரளாவில் உள்ள ஏலக்காய் மலை வரையிலும் இவ்வகை குரங்குகள் பரவிக்கிடக்கின்றன்..

இவை 5 முதல் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களகவே திரியும்.இதன் முக்கிய தீனி பழங்கள்,இலைகள் மற்றும் தண்டுகளாகும்.அவ்வப்போது விளை நிலங்களையும் வேட்டையாடும். சோலைகாடுகளை மனிதன் அழித்து ஆகிரமித்து கொண்டதால் அமீபகாலத்தில் இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.மேலும் இதன் மென்மயிர் அடர்ந்த தோலுக்காகவும் சிற்றின்ப உணர்ச்சியை தூண்டும் மருந்து கொண்டுள்ளதாகக் க்ருதப்ப்டும் இதன் இறைச்சிக்காகவும் வேட்டையாடபடுவதால் இது ஆபத்துக்கு இலக்காகி இருக்கிறது.

அழிவின் விளிம்பில்..-2


கருமையான முகம்,பொன்னிறம் அல்லது பாலேட்டு நிறமான முடி .நீண்டவால் ..ஆகியவையே நிற மந்தியின் அங்க் அடையாளங்களாகும்.இது இமயமலையின் அடிவாரங்க்ளில் சில குறிப்பிட்ட இடங்க்ளிலும் அஸ்ஸாம் பூடான் எல்லை பகுதியில் சங்கோஷ் மற்றும் மானஸ் அறுகளுக்கு இடைப்பட்ட் பகுதிகளிலும் காணப்படுகிறது. 

பெரும்பாலும் உயர்ந்த மரங்களிலேயே வசிக்கும் .கிளை விட்டு கிளை தாவுகையில் இதன் நீண்ட வால் சமனிலை உண்டு பண்ணும் உறுப்பாகப் பயன்படுகிறது

அழிவின் விளிம்பில் -1


சிங்க வால் குரங்கு(lion tailed macaque-macaca silenus(linnaeus):

இந்தியாவில் உள்ள உயிரினங்களில் மிகவும் ஆபத்துக்குள்ளாகி இருப்பது சிங்கவால் குரங்கு.கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளதாக்கில் நீர்மின் திட்டம் ஆரம்பிக்க முனைந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட சலசலப்பில் ,இது மக்கள் கவனத்திற்க்கு வந்தது.இத்திட்டம் கைவிடப்பட்டதால் சிங்கவால் குரங்கின் எதிர் காலம் ஒளிபெற்றத் திகழ்கிறது.கறுப்பு முடியும் நன்கு அடர்ந்த சாம்பல் நிறமுடைய பிடரி மயிரும் வாலின் முனையில் கொத்தான முடியமைப்பும் கொண்டு காண்பதற்க்கு கோமாளி போலத் தோற்றமளிக்கும்.இது பசுமையான் வெப்பமண்டல்க் காடுகளில் தங்கி அங்குள்ள பழங்கள் இலைகள் மொட்டுக்கள் ஆகியவற்றை உண்டு வாழ்கிறது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள் நீலகிரி,ஆனைமலை. ஏலக்காய் மலை,அமைதிப்பள்ளதாக்கு ,மற்றும் பெரியார் சரணாயலத்தில் இக்குரங்கு காணப்படுகிறது.

வெப்ப மண்டல்க் காடுக்ளில் தாக்கும்பிடித்து வசிக்கும் சிங்கவால் குரங்கு மிகவும் வலிமையான் விலங்காகும்.இது பருத்த உடலும் கட்டைக் குட்டையான காலகளும் துருத்திய வட்டமான் மூஞ்சியும் தடித்த புருவங்களும் கொண்டு காணப்படுகிறது.இதன் கன்னப்பை உண்வை ஒதுக்கிச் சேர்த்து இருத்திப் பின்னர் சாவகாசமாக உண்பதற்க்கு பயன்படுகிறது

இன்றைய சிந்தனைக்கு


சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பது சிந்தனை சொற்கள்.ஆனால் நாமோ சுவரை பற்றி கவலைப்படாமல் சித்திரம் வரைய முற்படுகிறோம்,
இன்று நம்மில் 99 சதவீதம் பேருக்கு பால் வேறுபாடு அற்று இருப்பது அஸிடிட்டி பிரச்சனை. சிலருக்கு தெரிந்தும் பலருக்கு தெரியாமலும்!!வயிறு உப்பசம், திடிரென்று வயிற்று வலி,நெஞ்சுக்கு கீழே வலிப்பது,முதுகு மற்றும் மூட்டுகளில் வலி வருவது போன்ற அனைத்தும் இதன் வேலை தான்.
முறையற்ற உணவுப்பழக்கம்,நஞ்சான உணவு, கலப்பட எண்ணெய்,ரோட்டோர கடைகளின் சுத்தமற்ற உணவு ஆகியவைகளில் வருவது இது.உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்துதான் படுக்கைக்கு செல்லவேண்டும் என்பது மருத்துவரின் அறிவுரை.ஆனால் நாமோ சாப்பிட்டவுடன் அப்படியே படுக்கையில் படுப்பது!!
காலையில் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் சூடாக மெதுவடையும் டீயும் குடிப்பது இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தினசரி வழக்கம். இது மிக முக்கிய காரணம் அஸிடிட்டி வருவதற்கு.
அஸிடிட்டி வந்தால் குறைந்தபடசம் ஒரு நாள் உங்களுக்கு அவுட்.மருந்துகள் எடுத்தாலும் கூட. அதற்கு இதை வராமல் தடுக்க பார்ப்பதே உத்தமம்
ஒமிஸ்.ஜிண்டக்,பேன் டி போன்ற மருந்துகள் இதற்கு மாற்று. அஸிடிட்டி தொடரும் படசத்தில் அவை பெப்டிக் அல்சர் மற்றும் கனைய பாதிப்பு அளவுக்கு சென்றுவிடும்.

உங்கள் உடல்நலத்திலும் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள்.. பிறகு சிந்தியுங்கள் பணம்..வேலை போன்றவ்ற்றை.. இலையென்றால் பணம் பொருள் எல்லாம் இருக்கும்..வாய்க்க்ய் ருசியா ஒன்னும் சாப்பிட முடியாது... 

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP