அழிவின் விழிம்பில்..-40
>> ஞாயிறு, 29 ஜூலை, 2012
நீலகிரி வரையாடு
Nilgiri tahr-hinitragus hylocrius-ogilby

தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளிலும் கேரளாவில் உள்ள ஆனைமலை பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1300 முதல் 2600 மீட்டர் உயரமுள்ள சில தனிபடுத்தப்பட்ட பகுதிகளிலும் நீலகிரி வரையாடுகளை காணலாம்.இவை 5 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக குட்டிகளுடன் காணப்படும்.இவற்றுக்கு இனச் சேர்க்கையென்று குறிப்பிட்ட பருவம் கிடையாது.ஒரு பெண் வரையாடு ஒரு ஈற்றில் இரண்டு குட்டிகள் ஈனும்.
இறைச்சிக்காக வேட்டையாடுவதாலும் ,ஊண் உண்ணும் விலங்குகள் இவற்றை கொன்று தின்று விடுவதாலும் ,உறைவிடங்கள் மாறுதலுக்கு ஆளாவதாலும் இவ்வரையாடுகள் அழிவுக்கு இலக்காகி இருக்கின்றன.ஓரினக் காடு வளர்ப்பு,தோட்ட பயிர்கள் சாகுபடி ஆகிய செயலகள் ,வரையாடுகளின் இயற்கை உறைவிடங்களை மாற்றிவிடுகின்றன்.எனவே இவற்றுக்கு தேவையான பசும்புல் நிலங்கள் மாற்றத்துக்குள்ளாகி இவற்றின் வாழ்வையே நாசமாக்கி விடுகின்றன.