அழிவின் விழிம்பில்..-50

>> திங்கள், 30 ஜூலை, 2012


இமயமலை மோனால் ஃபெசன்ட்
Himalayan Monal pheasant-lophophorus impejanus(latham)


ஆண்பறவைக்கு ,மினுக்கு பச்சை இறகுகள்,நீள்வடிவமான பச்சை நிறக் கொண்டை ,நீல வண்ணக்கழுத்து மற்றும் கொண்டை ஆகியன் இருப்பதால் பார்ப்பதற்க்கு மிக அழகாக தோன்றும்.பெண் பறவைக்கு பழுப்பு வண்ண இறகுகள் இருக்கும்.

இமயமலை மோனால் ஃபெசன்ட் பறனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் தற்போது இமாசலப் பிரதேசத்தில் சில இடங்களில் மட்டுமே தென்படுகிறது. 




அழிவின் விழிம்பில்..-49


மேற்கத்திய டிராகோபன்

Western Tragon-tragopan melanocephalus(j.e.gray)



வண்ணமிகு இப்பறவை.கோழி வகையை சேர்ந்த்து.குறிப்பாக ஆண்பறவை செந்நிறத்தில் வட்ட வடிவ வெண்புள்ளிகள் கொண்டு அழகாக இருக்கும்.முகத்தோல் இறகுகளற்ற நல்ல் செந்நிறத்திலும் ,தொண்டைப் பகுதி திண்ணிய நீல நிறத்துடனும் அமைந்திருக்கும்.பெண் பறவை சாம்பல் நிறத்தில் கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடன் இருக்கும்.ஒரு காலத்தில் இமயமலைப் பகுதி முழுவதும் நிறைந்திருந்த இப்பறவை ,உறைவிட அழிப்பால் இகவும் குறைந்து விட்டது.தற்போது இமாசலப் பிரதேசத்திலும் ,காஷ்மீரின் சில பகுதிகளிளும் மட்டுமே தென்படுகிறது.  

அழிவின் விழிம்பில்..-48


லிக் ஃபுளோரிகான்
Likh florican –sypheotides indica (j.f.miller)
லிக் ஃபுளோரிகான் பறவை இந்தியாவில் உயர்ந்து வளர்ந்த புற்பகுதிகளிலும் ,புதர்களிலும் காணப்படுகிரது .உறைவிட அழிப்பாலும்,இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதாலும் இது அபூர்வ பறவையாகி விட்ட்து.இனச் சேர்க்கை காலங்களில் இப்பறவைக்கு தலை,கழுத்து,கீழ்ப்பகுதிகளில் கறுமை படர்ந்த மங்கிய மஞ்சள் நிறத்திலும் பக்கவாட்டு பகுதிகள் வெண்மை நிறத்திலும் கொண்டை இறகுகள் கறுமையாகவும் இருக்கும்.பெண் பறவை சற்றுப் பெரியதாகவும் ,கருமை படர்ந்த இள மஞ்சள் நிறத்திலும் இருக்கும்



அழிவின் விழிம்பில்..-47


பெரிய இருவாட்சி
Great Pied Hornbill-Buceros Bicornis Homrai(Hodgson)
அள்வில் கழுகை ஒத்திருக்கும் பெரிய இருவாட்சிக்கு கொம்பு போன்ற அலகும்,பெரிய ‘V’ வடிவமான தலைகவசமும் கொண்டு ,குழிவான வடிவத்தில் காணப்படும்.உடல் கருமையும் வெண்மையும் கல்ந்திருக்கும்.முகமும் கீழ்ப்பகுதிகளும் கருமையாகவும் ,கழுத்தும் வயிற்றின் கீழ்ப்பகுதியும் வெள்ளையாகவும் இருக்கும்.வால் பகுதி வெண்மையான வரிகளை கொண்டிருக்கும்.
கேரளா வரை செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி,அருணாசலப் பிரதேசத்தில் உள்ள கீழ் இமய மலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருவாட்சி வாசம் செய்கின்றன.இது பழங்கள்,பெர்ரிகள் அத்தி பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளும் ,பல்லி வகைகள் ,பாம்புகள் ,எலிகள் மற்றும் கூட்டிலிருக்கும் சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும்

அழிவின் விழிம்பில்..-46


மாபெரும் இந்திய பஸ்டர்டு
Great Indian Bustard-Ardeotis Migriceps(vigors)
இளம் நெருப்பு கோழி போன்ற அளவுடைய பஸ்டர்டு பறவை நிலத்தில் வாழும் பெரும் பற்வையாகும்.திண்ணிய மஞ்சள் நிறமுடைய சிறகுகள் ,அவற்றின் ஓரத்தில் கறுப்பு வண்ணம்,கருமை நிறக் கொண்டை,வெண்மையான நீண்ட கழுத்து,வெள்ளை நிறம் உடைய உடலின் கீழ்ப்பகுதிகள் ஆகியன இதனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளங்களாகும்.ஒரு காலத்தில் வங்காளம் ,அஸ்ஸாம் ,தென்மைசூர் நீங்கலாக ,இந்தியா முழுவதும் காணப்பட்ட இப்பறவை ,தற்போது ராஜஸ்தானின் வறண்ட் பகுதிகள்,குஜராத் மற்றும் மகராஷ்டிராவில் அகமது நகர் மாவட்டம் ஆகிய இடங்களில் மட்டுமே தென்படுகிறது.. 

அழிவின் விழிம்பில்..-45



ஜெர்டன் கோர்சர்
Jerdon’s courser-cursorius bitorquatus(blyth)
உலகில் காணப்படும் அரிய பறவைகளில் ஜெர்டன் கோர்சர் ஒன்றாகும்.1900 ஆம் ஆண்டு முதல் எவர் கண்ணுக்கும் தென்படாத்தால் இப்பறவை முற்றிலும் அழிந்து விட்ட்தாக்க் கருதப்பட்டு வந்த்து.ஆயினும் 1986 ஆம் ஆண்டு பம்பாய் இயற்கை வரலாற்று மையம் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கோதாவரிப் பள்ளதாக்கில் இப்பறவை உயிருடன் இருப்பதை கண்டறிந்தது.


இப்பறவைக்கு இளச்சிவப்பான பழுப்பு வண்ண இறகுகளும் ,திண்ணிய பழுப்பு நிறக் கொண்டையும் அகன்ற வெள்ளி மாலை சூட்டிய கழுத்துப் பகுதியும் இருக்கும்.முகவாய்க் கட்டையும் ,தொண்டைப் பகுதியும் வெண்மையாக காணப்படும்.வயிற்றுப் பகுதி சாம்பல் வெண்மையாக தோன்றும்.வால்பகுதி இறகுகள் கருமை படிந்த வெண்ணிறத்தில் இருக்கும்.இப்பறவை ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தபூர்,கடப்பா,நெல்லுர்,மற்றும் கோதாவரிப் பள்ளதாக்கிலுள்ள பத்ராசலத்திலும் ,மகாராஷ்டிராவிலுள்ள சிரோன்கா பகுதியிலும் தென்படுகிறது.

அழிவின் விழிம்பில்..-44


பறவைகள்

சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு “மிசோசாயிக்” இடையுயிர் மண்ணூழிக் காலத்தில் ஊர்வனத்திலிருந்து தோன்றி பூமியெங்கும் பற்வைகள் பரவின.இவை பல்வேறு அளவுகள் உருவகங்கள் வண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் கொண்டு திகழ்கின்றன.எல்லாக கண்டங்களிலும் காணப்படுகின்றன.எங்கெல்லாம் ஒதுக்கிடங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வாழும் திறன் படைத்தவை.தற்போது 8600 உயிரின் வகை பிரிவுகள் உள்ளன.இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை சில டஜன்களே.
இம்மாபெரும் பறவை கூட்ட்த்தை பற்வை முறைமையாளர்கள் 27 இனக் குழுமங்களாகவும் 155 குடும்பங்களாகவும் வகைபடுத்தியுள்ளனர்.
மனிதனுக்கு தெரிந்த முதல் பறவை “ஆர்க்கியோடீரிக்ச்” எனப்படும் மிகப் பழமையான ஊர்வன்வற்றுக்கும் பறப்பன வற்றுக்கும் இடையிலான ஒரு விலங்காகும்.இது பவேரிய புதைப் படிவத்திலிருந்து தெரியவருகிறது. பறவைகள் உலகம் என்பது பத்து பைசாவை விட எடை குறைந்த ஹம்மிங் பறவை முதல் 135 கிலோக்கும் அதிக எடை கொண்ட நெருப்பு கோழி வரை அடங்கும்.
இந்திய பற்வை உயிரினத் தொகுதியில் சிறப்புமிக்க பல்வகை பறவைகள் உள்ளன.தற்போது உலகில் காணப்படும் 27 பற்வைகள் இனக்குழுமங்களில் இந்தியாவில் 21 இனக் குழுமங்கள் 1200 உயிரின வைகை பிரிவுகள் தென்படுகின்றன. இது உலகில் கானப்படும் 8600 வகைபிரிவுகளில் 14 விழுக்காடு. பறவைகளின் துணை வகைக்ளையும் நீர் மற்றும் நிலப் பறவைகளையும் சேர்த்து இந்தியாவில் உள்ள பறவைகளின் வகைப் பிரிவுகள் 2060 என்று கொள்ளலாம்.இதில் 1750 வகை பிரிவுகள் இந்தியாவில் வாழ்பவை.
ஆயினும் மனிதனின் நடவடிக்கைகள் உறைவிட ஒழிப்பு காடுகள் அழிப்பு மற்றும் மாசுபாடுகளினால் பல பற்வைகள் ஆபூர்வமாகி அழிவுக்கு இலக்காகி உள்ளன.தற்போது தேவை பற்வைகளை காக்கும் கடுமையான பாதுகாப்பு முயற்சிகளே. அதில் ஆபத்தின் விழிம்பில் உள்ள பற்வைகளை வரும் பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.


அழிவின் விழிம்பில்...-43


ஹிஸ்பிட்டு காட்டு முயல்
Hispid gare-caprolagus hispiddus(pearson)

ஹிஸ்பிட்டு காட்டு முயலுக்கு தடித்த குட்டையான முள் மயிர் இருக்கும்.இது பொதுவாக திண்ணிய பழுப்பு நிறமும்,கீழ்ப்பகுதிக்ளில் வெண்மை நிறமும் இருக்கும்.கருங்காட்டு முயலுடன் ஒப்பிடுகையில் இதன் காதுகள் சிறியவையாகத் தோன்றும்.
ஒரு காலத்தில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள டெராய்ப் பகுதி அஸ்ஸாம்,மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் காணப்பட்ட ஹிஸ்பிட் காட்டு முயல் தற்போது ஒடுங்கி விட்டது.சற்று மெதுவாக ஓடக் கூடிய இம்முயல் வேர்கள், மரப்பட்டைகள் சிறுசெடி கொடிகள் ம்ற்றும் இலைகளை உண்டு வாழ்கிறது.ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை ஈனும்.உண்ணும் உணவில் உள்ள சத்துப்பொருட்களை கிரக்கிப்பதற்காக இதற்கு சிறப்பான செரிமான தொகுப்பு உறுப்புக்கள் உண்டு.இது தனது சாணத்துடன் ஓரளவே செரிக்கப்பட்ட உண்வையும் வெளியேற்றுகிறது. புழுக்கைகள் என்றழைக்கப்படும் ஓரளவே செரிக்கப்பட்ட ஆகாரத்தை இது மீண்டும் உட்கொள்ளுகிறது.இவ்வாறு உட்கொள்ளப்பட்ட ஆகாரம் மீண்டும் செரிக்க்ப்படுவதால் இதிலிருந்து முக்கிய வைட்டமின்கள் உடலுக்கு கிடைகின்றன.
குட்டிகள் ஈன்ற் உடனேயே பெண் முயல் மீண்டும் இனச் சேர்க்கைக்கு தயாராகிவிடுவதால் ஈனும் திறம் மிக அதிகம்

அழிவின் விழிம்பில்..-42


மார்க்கோர் காட்டு ஆடு
Markhor-capra falconeri(wagner)

மார்க்கோர் காட்டு ஆடு பருத்த உடல் மற்றும் அடர்ந்த மென் மயிர் கொண்ட்து.கிடா ஆட்டிற்கு முட்டி வரை தொங்கும் சாம்பல் நிற பிடரி மயிர் இருப்பது குறிப்பிட்த்தக்கது.பெட்டை ஆட்டிற்க்கு இந்த பிடரிமயிர் முவாய்க் கட்டை வரை மட்டுமே தொங்கி காணப்படும்.கிடாவிற்கு நீண்ட தட்டையான முறுக்கப்பட்ட ஒரு சோடி கொம்புகள் காணப்படும்.பெட்டை ஆட்டின் கொம்புகள் குறுகியவை.
நீண்ட முடியுடைய மார்க்கோர் ஆட்டின் உரோமம் குளிர் காலத்தில் அழுக்குப்படிந்த சாம்பல் நிரத்திலும் வெயில் காலத்தில் நீளம் குறைந்து செம்பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
மார்க்கோர் காட்டு ஆடுகள் 12 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக மேயும்.இவை காஷ்மீர் உள்ளிட்ட மேற்கு இமயமலை பகுதிகளில் 600 முதல் 3600 மீட்டர் உய்ரமுள்ள இடங்களில் வசிக்கினறன. 

அழிவின் விழிம்பில்..-41


இபெக்ஸ் காட்டாடு
Ibex-cabra ibex)linnaeus)

இமய மலை பகுதிகளில் தென்படும் இபெக்ஸ் காட்டு வெள்ளாடு கட்டுடல் கொண்ட நேர்த்தியான விலங்கு .ஆண் ஆட்டிற்க்கு நீண்ட தாடியும் நீண்ட தட்டையான வளைந்த கொம்புகளூம் இருக்கும்.பெண் ஆடுகளின் கொம்புகள் சிறியன.இதன் நிறம் பருவ காலங்களைப் பொருத்து அமையும்.குளிர்காலத்தில் சாமபல் பூசிய மஞ்சள் நிறமும் வெயில் காலத்தில் கிடாவிற்கு வெண் திட்டுக்கள் நிறைந்த திண்ணிய பழுப்பு நிரமும் பெட்டைக்கு மஞ்சள் பழுப்பு நிரமும் காணப்படும்.
இபெக்ஸ் காட்டு வெள்ளாடு 2500 முதல் 7000 மீட்டர் வரை உயரமுள்ள இடங்களில் வசிக்கும்.இந்த ஆட்டிலிருந்து கத்தரிக்கப்படும் உரோமம் மிகவும் உயர்தரமானது.புகழ்மிக்க “பாஷ்மினா” சால்வைகள் ,காலுறைகள் மற்றும் கையுறைகள் செய்ய பயன்படுகிறது


அழிவின் விழிம்பில்..-40

>> ஞாயிறு, 29 ஜூலை, 2012


நீலகிரி வரையாடு
Nilgiri tahr-hinitragus hylocrius-ogilby


இமயமலை வரையாட்டுடன் தொடர்புள்ள நீலகிரி வரையாடு தென்னிந்தியாவில் காணப்படும் ஒரே வகை மலை வெள்ளாடு ஆகும்.திண்ணிய உடலமைப்புடைய இது நல்ல விரை திறனும் கொண்டது.பாறை மலைப் பகுதிகளில் வாழத் தன்னை தகவமைத்து கொள்ளும் திறமை படைத்தது.இளமையில் சாமபல் அல்லது பழுப்பு நிறமாகவும் இருக்கும் உடல் நிறம் வயது முதிர்ந்த்தும் கருமையாகி விடும்.பெட்டை மட்டும் குட்டி ஆடுகள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.நன்கு வளர்ச்சியடைந்த வரையாட்டிற்க்கு முதுகில் நரைத்த திட்டு போன்ற அமைப்பும் கழுத்தில் குறுகிய பிடரி மயிறும் காணப்படும்.தலையின் பின்புறம் தோன்றும் ஒரு சோடிக் கொம்புகள் இணையாக எழும்பி பின்பக்கம் வளைந்து நெருக்கமாக குறுக்கு வாட்டில் செல்லும் திரைவுச் சுருக்கங்கள் கொண்டு தோற்றமளிக்கும்.

தமிழ்நாட்டில் நீலகிரி மலைகளிலும் கேரளாவில் உள்ள ஆனைமலை பகுதியிலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் 1300 முதல் 2600 மீட்டர் உயரமுள்ள சில தனிபடுத்தப்பட்ட பகுதிகளிலும் நீலகிரி வரையாடுகளை காணலாம்.இவை 5 முதல் 50 எண்ணிக்கை கொண்ட மந்தைகளாக குட்டிகளுடன் காணப்படும்.இவற்றுக்கு இனச் சேர்க்கையென்று குறிப்பிட்ட பருவம் கிடையாது.ஒரு பெண் வரையாடு ஒரு ஈற்றில் இரண்டு குட்டிகள் ஈனும்.

இறைச்சிக்காக வேட்டையாடுவதாலும் ,ஊண் உண்ணும் விலங்குகள் இவற்றை கொன்று தின்று விடுவதாலும் ,உறைவிடங்கள் மாறுதலுக்கு ஆளாவதாலும் இவ்வரையாடுகள் அழிவுக்கு இலக்காகி இருக்கின்றன.ஓரினக் காடு வளர்ப்பு,தோட்ட பயிர்கள் சாகுபடி ஆகிய செயலகள் ,வரையாடுகளின் இயற்கை உறைவிடங்களை மாற்றிவிடுகின்றன்.எனவே இவற்றுக்கு தேவையான பசும்புல் நிலங்கள் மாற்றத்துக்குள்ளாகி இவற்றின் வாழ்வையே நாசமாக்கி விடுகின்றன. 

அழிவின் விழிம்பில்..-39


இமயமலை வரையாடு
Himalayan tahr-hermitragus Jemlahicus(h.smith)

இமயமலை வரையாடு ஒரு மலி வெள்ளாடாகும்.கழுத்திலிருந்தும் தோள்பட்டையில் இருந்தும் தொங்கும் நீண்ட முடி முட்டி வரை காணப்படும்.இதன் பிடரி மயிர் பறட்டையாக தோற்றமளிக்கும்.திடமான தேகம் வலுவான கால்கள் குறுகிய விரைப்பான் காதுகள் மற்றும் பின்னோக்கி வளைந்த கொம்புகள் கொண்டு விளங்கும்.உடல் செந்நிறம் சார்ந்த பழுப்பு நிறமாக்க் காணப்படும்.
இதன் பெயருக்கேற்ப கஷ்மீர் முதல் பூட்டன் வரையிலான இமய மலை பகுதிகளில் 3000 முதல் 4000 மீட்ட்ர் உயரமான இடங்களில் ஓக் மற்றும் இதர மரங்கள் மூடிய பாறைச் சரிவுகளில் வாசம் செய்கிறது.குளிர் காலங்களில் இது தாழ்வான பகுதிகளுக்கு சென்று வருகிறது

அழிவின் விழிம்பில்..-38


திபேத்திய சிறுமான்
Tibetan Gazelle-procapra picticaudata(hodgson)

அளவில் வெள்ளாட்டை ஒத்திருக்கும் திபேத்திய சிறுமான திண்ணிய நிறமும் பின் நோக்கி கூராக வளைந்த கொம்புகளும் கொண்டு விளங்கும்.வால் குறுகியும் முனையில் கருமையாகவும் இருக்கும்.பெண்மானுக்கு கொம்புகள் கிடையாது.
திபேத் பீடபூமி வடகிழக்கு லடாக் பகுதி ,குமான் மலைகள்,சிக்கிம் ஆகிய பகுதிகளில் திபேத்திய சிறு மான்கள் காணப்படுகின்றன

அழிவின் விழிம்பில்..-37


சிங்கார மான் (அ)இந்திய சிறுமான்
Chinkara-gazella dorcas (Linnaeus)

சிங்கார மான் என்று அழைக்கப்படும் ,இந்திய சிறுமான் பேரழகு வாய்ந்த ஒன்றாகும்.மெல்லிய தேகம்,லேசாக வலைந்த கொம்புகள்,அவற்றில் நெருங்கி அமைந்த வளையங்கள்,லேசான செக்கர் நிறம் ஆகியவை இம்மானின் சிறப்பு அம்சங்களாகும்.முகவாய்க்கட்டை மார்பு மற்றும் கீழ்ப் பகுதிகள் வெண்மையாக இருக்கும்.பெண்மானின் கொம்புகள் சிறியன.
வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் உள்ள சிறிய வகை காடுகள்,புதர்க்காடுகள், மற்றும் மித வறண்ட பகுதிகளில் 10 முதல் 20 எண்ணிக்கையுள்ள சிறு சிறு மந்தைகளாக இவை காணப்படுகிண்றன.இவை புற்கள்,இலைகள் மற்றும் கனிந்த பழங்களை உட்கொள்ளும்.இஅவை விரை திறம் கொண்டு வெகு வேகமாக ஓடக்கூடியவை

அழிவின் விழிம்பில்..-36


எலி மான்
Mouse deer-Tragulvs Meminna-erxleben
எலி மானின் தோள்பட்டை உயரம் 25 முதல் 30 செ.மீ வரை இருக்கும்.மிகச் சிறியதாக உருவம் படைத்த இதற்க்கு கொம்புகள் இல்லை.ஆனால் சிறிய வால் உண்டு.நிறம் ஆலிவ் பழுப்பாகவும் ,உடலில் மேற்பகுதிகளில் இதுவே வெண்மையாக மாறியும் காணப்படும்.ஆண்மானுக்கு  கோரைப் பற்களே ஒரு சோடி தந்தங்களாக மாறிக் காணப்படும்.மருள்கின்ற குண்முடைய எலிமான் ,தென்னிந்தியா,மத்திய பிரதேசம்,ஒரிஸ்ஸா, மற்றும் பீஹார் மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் 1800 மீட்டர் உயரமுள்ள இடங்களில் காணப்படுகிறது.இது புற்களையும் இலைகளையும் உணவாக கொள்கிறது.
குறிப்பு:இது சத்தியமங்கள  காடுகளில் திம்பம் பகுதியில் காணப்படுகிறது.அந்த பகுதியில் நான் தங்கியிருந்த போது இரவு நேரங்களில் வெகு அருகிலேயே வந்துவிடும்.வாழிடம் மற்றும் உணவு பிரச்சனையால் இவை எங்களின் மீந்து போன உணவுகளை உண்பதற்க்காக வரும்.
இதை வெகு சுலபமாக கையால் பிடித்து விடலாம்


அழிவின் விழிம்பில்..-35

>> வெள்ளி, 27 ஜூலை, 2012


கஸ்துரி மான்
Musk deer-moschus moschiferus(Linnaeus)
ஆண் கஸ்தூரி மானுக்கு வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்புலுக்கு அருகே தோலுக்கடியில் ‘மஸ்க்’ சுரப்பி இருப்பது அதன் சிறப்பு.இனச் சேர்க்கை பருவத்தில் பெண் மானைக் கவரும் பொருட்டு ,இந்த மஸ்க் சுரப்பியிலிருந்து நல்ல மணம் வீசும்.இனச் சேர்க்கை நேரங்களில் மட்டும் ஆண் கஸ்தூரி மான்கள் பெண் மான்களுடன் காணப்ப்டும்.பிற சமயங்களில் தனியாகவே தென்படும்.பக்லில் ஒளிந்து கொண்டிருந்துவிட்டு இரவில் உணவை தேடி திரிந்து உண்ணும் .கூர்மையான தலை,பெரிய காதுகள்,சிறிய வால்,கொம்புகள் இல்லாமை ஆகியவை கஸ்தூரி மானின் சிறப்புக்களாகும்.ஆன் மானுக்கு ஒரு சோடி தந்தங்கள் உண்டு.இதன் தோலில் பழுப்பு மற்றும் தங்க நிறம் கொண்ட மென் மயிர் காணப்படும்.இப்போதுள்ள மான்க்ளுக்கு எல்லாம முன்பே தோன்றி கஸ்தூரி மான்,காஷ்மீர் முதல் அருணாசலப்பிரதேசம் வரையிலான உயர்ந்த மலைகளில் வாசம் செய்கிறது.இது மரப்பாசிகள்,பெரணிகள்,பூக்கள்,இலைகள்,மற்றும் புற்களை உண்டு வாழ்கிறது.தோள்பட்டை உயரம் 50 செ.மீ உயரம் வரை இருக்கும்.இவற்றின் உடலமைப்பு கச்சிதமாகவும் காலகள், பனி படர்ந்த வழுக்குகின்ற பாறைகள் நிறைந்த இடங்களில் நடப்பதற்கேற்றவாறு வலுவுடன் குளம்புகளைக் கொண்டிருக்கும்.
வாசனைத் திரவியங்களை தயார் செய்ய உதவும் மஸ்க் சுரப்பிகளைப் பெறும் பொருட்டு கஸ்தூரி மான்கள் இரக்கம்ற்ற முறையில் கொல்லப்படுவதால் இவற்றின் என்ணிக்கை வெகுவாக குறைந்து பேரழிவிற்கு இலக்காகி இருக்கின்றன.  

அழிவின் விழிம்பில்..-34


கறுப்பு மான்.
Black buck-antilope cervicapra (Linnaeus)
உலகில் காணப்படும் மான்களிலேயே மிகவும் நேர்த்தியானது கறுப்பு மான் ஆகும்.நன்கு முதிர்ச்சியடைந்த ஆண்மானுக்கு கருமையான அல்லது கருமை பட்ர்ந்த பழுப்பு நிற உடல் இருக்கும்.உடலின் கீழ்ப்பகுதிகள் வெண்மையாகவும் கண்களைச் சுற்றிலும் வெண்மையான திட்டுகளும் இருக்கும்.இதர்கு 50 முதல் 60 செ.மீ.நீளமுள்ள ஒரு சேடிச் சுருட்டைக் கொம்புகள் உண்டு.பெண்மான் அள்வில் சிறியதாகவும் மஞ்சள் பழுப்பான உடலும் ,கீழ் பகுதிகளில் வெண்மையாகவும் ,கொம்புகள் அற்றும் காணப்படும்

ராஜஸ்தான் ,குஜராத்,மகாராஷ்டிரம்,கர்நாடகம்,மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சமவெளிப் பிரதேசங்களிலும் திறந்த வெளி புதர்க்காடுகளிலும் இவை வசிக்கின்றன.ஒரு மந்தையில் 10 முதல் 30 க்கும் அதிகமான எண்ணிக்கையில் காணப்படும் இவ்வகை மான்கள்,உலகிலேயே மிகவேகமாக ஓடக் கூடியவை.புற்கள்,இலைகள்,பழங்கள் மற்றும் வேலமரங்களின் காயகள் இவற்றின் ஆகாரமாகும்.
இறைச்சி,தோல் மற்றும் பொழுது போக்கிற்க்காக வேட்டையாடப் பட்ட்தாலும் ,உறைவிடம் அழிக்கப் பட்ட்தாலும் இவற்றின் எண்ணிகை வெகுவாக்க் குரைந்துள்ளது.இவற்றில் பொரும்பாலனவை பாதுகாக்க்ப்பட்ட வன்விலங்கு சரணாலயங்களிலும் தெசிய பூங்காக்களிலும் உயிர் பிழைத்து வருகின்றன.மத அடிப்படையில் பல் நூற்றாண்டுகளாக இம்மான்களை பாதுகாத்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஷ்னோ ப்ழங்குடியினர் பாராட்டப்பட வேண்டியவர்கள்.இம்மாநிலத்தில் ‘கெஜார்லி’ பகுதியில் மக்கள் குடியிருப்புகளிடையே கருப்பு மான்கள் சுதந்திரமாக நடமாடுவதை இன்றும் காணலாம்

அழிவின் விழிம்பில்..-33


காஷ்மீர் மான்
Kashmir Stag or hangul-Cervus Elaphus hanglu(Wanger)
ஹங்கல் என்றழைக்கப்படும் காஷ்மீர் மான் உருவத்தில் சற்றும் பெரியதாகவும்,பிளவு பட்ட கொம்புகளைக் கொண்டும் காணப்படும்.ஒவ்வொரு கொம்பிலும் 5 முதல் 6 வரை கிளைக் கொம்புகள் இருக்கும்.உடலின் நிறம் இலேசான அல்லது திண்ணிய பழுப்பு நிறமுடையதாகவும் பிட்டத்தில் வெள்ளைத் திட்டும் காணப்படும்.உடம்பின் இரு புறமும் கால்களிலும் நிறம் மங்கித் தோன்றும்.முகவாய்க் கட்டையும் காதுகளும் வெண்ணிறத்தில் காணப்படும்.

காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் வடபகுதி மற்றும் இமாசலப் பிரதேசத்தின் வடக்கு சம்பா பகுதியில் உள்ள ஆற்றும் படுகையை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் காஷ்மீர் மான்கள் 2 முதல் 18 வரை எண்ணிக்கையுள்ள குழுக்களாகத் தென்படுகின்றன.காஷ்மீரில் 10 ,000 அடி உய்ரமுள்ள ‘தாட்சிகாம்’ பகுதியில் இவை இருக்கின்றன.வெயிற்காலங்களில் மந்தைகளாகச் சேர்ந்து கீழ்நோக்கி வ்ந்துவிடும்.துரதிர்ஷ்டமாக இம்மானகளின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது.நடப்பு நூற்றாண்டின் ஆரம்பத்தில் 5000 ஆக இருந்த இவற்றின் எண்ணிக்கை தற்போது இரட்டை இலக்கத்தில் குறைந்துவிட்டது  

அழிவின் விழிம்பில்..-32


தாமின் மான்
Thanmin or Brow antlered deer-crevus eldi eldi –(m’clelland)
சாமபார் மான போன்று தோற்றமளிக்கும் தாமின் மான்.உருவத்தில் சற்றுச் சிறியது ஆனால் அழகு வாயந்தது.இதன் கொம்புகள் ஏறக்குறைய வட்ட வடிவாக இருக்கும்.இரண்டு முதல் பத்து சிறிய கிளைக் கொம்புக்ளை பெற்றிருக்கும்.மான் கொம்பின் முதற்கிளை நீளமாக அமைந்து முக்கிய கொம்புடன் சேர்ந்துவிடுவதால் இதற்கு வட்ட வடிவம் கிடைக்கிறது.இது புருவத்தின் மேல் அமைந்திருப்பதால் இம்மான் “புருவ கொம்பு மான்” என்றும் அழைக்கப்படுகிறது.இதன் உடல் செற செறப்பாக இருக்கும்.ஆண்மான் குளிகாலத்தில் திண்ணிய நிறத்துடனும் காட்சியளிக்கும்.பெண்மான்களும் குட்டிகளும் இளம்ஞ்சள் நிறம் கொண்டிருக்கும் .குட்டிகளூக்கு உடலில் புள்ளிகள் உண்டு.

திறந்த வெளிப் புதர்காடுக்ளை விரும்பும் தாமின்மானகள்,தற்போது மணிப்பூரில் லோக்டாக் ஏரில் கரையருகேயுள்ள “கெய்புல் லம்ஜா தேசியப் பூங்காவில்” காண்ப்ப்டுகின்றன.இவை மந்தைகளாகச் சேர்ந்து புற்களை மேயும்.சில சமயங்களில் காட்டோரப் பகுதியில் உள்ள பயிர்களையும் மேய்வதுண்டு.

அழிவின் விழிம்பில்..-31


நாலு கொம்பு மான்
Four-Horned Antelope-Tetraccrous quadricornis(blain ville)

நாலு கொம்புமான்கள் ,பிளவுபட்ட குளம்புகள் கொண்ட அசை போடும் பாலூட்டி வகையைச் சார்ந்தவை.இவற்றுக்கு நன்கு வளர்ச்சியுற்ற கண்பார்வை ,நுகர்ச்சி மற்றும் கேட்கும் செவித்திறன் இருப்பதால்,மிகவும் வேகமாக செல்லக்கூடியவை.


கொம்பு மான்க்ளில் இந்த வகை நாலு கொம்பு மான் மிகவும் வித்தியசமானது.ஆண் மாண்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த நான்கு குறுகிய கூர்மையான கொம்புகள் இருக்கின்றன.முன்புறமாக அமைந்துள்ள முதல் சோடி கொம்புகள் 5 முதல் 6 செ.மீ நீளம் கொண்டு குமிழ் போன்று குறுகி இருக்கும்.பின்புறமுள்ள 2 வது சோடி கொம்புகள் நீளம் 12 செ.மீ இருக்கும்.இதன் உடல் 1 மீட்டர் நீள்மும்,தோள்பட்டை உயரம் 60 செ.மீ வர இருக்கும்.உடலில் காணப்படும் மெல்லிய குறுகிய மென்மயிர், மேற்பகுதியில் செம்பழுப்பாகவும் ,கீழ்ப்பகுதியில் வெண் பழுப்பாகவும் தோன்றும்.ஒவ்வொரு காலுக்கு முன்புறமும் கருநிறப் பட்டை காணப்படும்.முன்னங்கால்களில் இப்பட்டை அகலமாக இருக்கும்.
தீபகற்ப இந்தியாவில் மேடு பள்ளங்கள் நிறைந்த மலை பகுதிகளில் நாலு கொம்பு மான்கள் தென்படுகின்றன்.இவை அடர்ந்த காடுகளில் வசிப்பதில்லை.நீரைப் பருகும் பொருட்டு இவை ஒற்றையாகவோ சோடிகளாகவோ நீர் நிலைகளுக்கருகில் காணப்படும்.  


புரியாத புதிர்!!

>> வியாழன், 26 ஜூலை, 2012


ஆண் வேட்டையாடினான்,பெண் சேகரித்தாள் .ஆண் பாதுகாத்தான்,பெண் பராமரித்தாள்.இதன் பலனாக அவர்களது மூளையும் உடலும் எதிர் எதிர் திசையில் பரிணாமம் அடைந்தன.
குறிப்பிட்ட வேலைகளுக்குகேற்ப அவர்களுடைட உடல் பரிணாமாம் அடைந்தபோது கூடவே அவர்களுடைய மனமும் மாறியது .பல ல்ட்சக்கனக்கான வருடங்களில் ஆN பெண் மூளைகள் வேறுபட்ட வழிகளில் தொடர்ந்து பரிணாம்ம் அடைந்தன.இப்போது தகவல்களை அலசி ஆராய்ந்ததில் ஆணும் பெண்ணும் வேறுவேறு விதமாக செயலபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் வேறு வேறுவிதமாக சிந்திக்கிறார்கள்.
என்பதுகளில் இருந்து ஆணுக்கும் பெண்ணுற்கும் உள்ள வேறுபாடுகள், ஆண்-பெண் மூளைகள் செயல்படும் விதங்கள் பற்றி தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன்.பரந்து விரிந்த மனித மனதினுள் நுழைந்து பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.இவை அனைத்துமே ஒரே விசயத்தை சுட்டி காட்டுகின்றன.எல்லாமே சமமானவை அல்ல. ஆணும் பெண்ணும் வேறு வேறு.இந்த வேற்றுமைகளுக்கு காரணம் சமுக திணிப்புகள்தான் என்று 20ம் நூற்றாண்டில் விளக்கப்பட்டது.
நமது பெற்றோர் ,ஆசிரியர்களின் மனோபாவங்களினால்தான் நாம் உருவாகிறோம்.அவர்கள் பதிலுக்கு சமூகத்தின் மனோபாவங்களால் உருவானவர்கள்.
பெண் குழந்தைகளை பொம்மைகளோடு விளையாடவிடுகிறோம்.ஆண் குழந்தைகளுக்கு ராணுவீரன்,துப்பாக்கி,போன்ற பொம்மைகளோடு விளையாடுகிறார்கள்.ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் மனம் தூய கரும்பலகையைப் போலிருக்கிறது.அதன் மேல் ஆசிரியர்கள் ,தங்கள் தேர்வுகளை ,விருப்பங்களை எழுதலாம் என்றுதான் சமீபகாலம் வரை நம்பப்பட்டு வந்தது.
நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட வித்த்தில் சிந்திக்கிறோம் என்பது பற்றிய வேறுபட்ட கருத்துகளை கூறும் உயிரியல் சான்றுகள் இப்போது கிடைத்துள்ளன.
நமது ஹார்மோன்களும் ,மூளை கம்பி இணைப்புகளும்தான் ந்மது மனோபாவங்கள் ,தேர்வுகள்,நடத்தைகளை பெரும்பாலும் முடிவு செய்கின்றன என்பதை ஏற்றுக் கொள்ளத்தக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஒரு தனியான தீவீல் ஆண் குழந்தைகளையும் ,பெண் குழந்தைகளையும் வளரவிட்டால் கூட ,பெற்றோரோ ,சமூகமோ வழிகாட்டாவிட்டால் கூட பெண்குழந்தைகள் கட்டி அனைத்து ,தொட்டு ,தோழிகளை உருவாக்கும். பொம்மைகளோடு விளையாடும்.அதே சமயம் ஆண் குழந்தை மற்ற குழந்தைகளோடு மனத்தாலும் உடலாலும் போட்டியிட்டு ஏற்றத்தாழ்வுகள் உள்ள குழுக்களை உருவாக்கும்.
நாம் பிறப்பதற்கு நீண்ட காலம் முன்பே நாம் எப்படி சிந்திக்கிறோம் செயலபடுகிறோம் என்பதை நமது மூளையில் எப்படி நரம்புகள் பின்னியிருக்கின்றன,நமது ஹார்மோன்கள் எப்படி உடலில் ஊடுருவுகின்றன என்ற இரண்டு காரணங்கள்தான் தீர்மானிக்கின்றன.குறிப்பிட்ட சூழல்களில் நமது உடல் எப்படி செயல்புரியும் என்பதை தீர்மானிக்கும் உள்ளுணர்வுகள் நமது ஜீன்கள்தான்.
ஆணும் பெண்ணும் சமமா என்பது அரசியல் நியாய அடிப்படையில் கேட்கப்படவேண்டிய கேள்வி.அவர்கள் ஒன்று போலிருக்கிறார்களா என்பது விஞ்ஞானபூர்வமான கேள்வி.

நமது உயிரியல் , நமது நட்த்தையை பாதிக்கிறது என்ற கருத்தை எதிர்ப்பவர்கள் பால் வேற்றுமையை எதிர்ப்பவர்கள்.ஆனால் இரண்டு வேற்பட்ட விஷயங்களான சமத்துவத்திற்கும் ஒத்தன்மைக்கும் உள்ள வேற்றுமை பற்றிஅவர்கள் குழம்பி போயிருக்கிறார்கள்.
முன்ன்னி தொல்பொருள் இயலாளர்கள், இனவியலாளர்கள், உளவியலாளர்கள், உயிரியலாளர்கள், நரம்பியலாளர்களின் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சந்தேகமோ விருப்பு வெறுப்போ இல்லாமல் ஆணுக்கும் பெண்ணுற்குமான மூளை வெறுபாடுகள் இப்போது தெளிவாகிவிட்டன.
வேறுபாடு என்பது சமத்துவதிற்கு எதிர்சொல் அல்ல.சமத்துவம் என்பது நாம் செய்யவிரும்பும் செயல்களைத் தேர்ந்தெடுக்க ந்மக்கு சுதந்திரம் இருப்பது.வேறுபாடு என்பது ஆண்களும் பெண்களும் ஒரே விஷ்யங்களைச் செய்ய விரும்ப மாட்டார்கள் என்பதுதான்.  

இன்றைய சிந்தனைக்கு..


ஆடை குறைப்பு தேவையா.....

காதல் உணர்வு இன விருத்திகாகவே என்பது விதி.ஆனாலும் அதன் முதல் ல்டசியம் இன்ப நுகர்ச்சியே...
இரண்டு ஆசைகள் ம்னைதனை ஆள்கின்றன.ஒன்று தர்காப்புணர்வு இன்னொன்று பாலுணர்வு.தற்காப்புணர்வு தனி ம்னைதனைக் காக்கிறது.பாலுணர்வு இனத்தையே காக்கிறதுஎன்கிறார் வாண்டிவெல்டு.ஆண் மிருகங்கள் பெண் மிருகங்களின் மேல் கொண்ட காம இச்சைக்காகத் தமது உயிரையே பணயம் வைத்துப் போராடுவதும் ,மற்ற மிருகங்களுடன் போட்டியிடுவதும் வாடிக்கை.மனிதன் மட்டும் என்ன வாழ்கிறான்..ஆதிகாலத்திலிருந்து பாதிப் போர்க்களங்கள் காதல் போட்டிகளின் விலைவே. நீதிமன்றங்களில் பாதி வழக்குகளைக் காதல் விவகர்ரங்கள்தான் உருவாக்குகின்றன ‘என்கிறார் கவிஞர் கண்ணதாசன்
பெண்களைப் பெறுத்தவரை உடல் அங்கங்கள் அனைத்தும் பாலுணர்வை தூண்டக்கூடியதே. இது இயறகையான அமைப்பு.இதை மாற்ற இயலாது. அப்படி இயற்கையை மாற்ற முயன்றால் மனித இனம் வரலாற்றில் என்றும் காணாத சோகத்தை சந்திக்க நேரிடும்
பெண்களின் உடல் அங்கங்களை பார்க்கும் ஆண்களின் உணர்ச்ச் தூண்டப்படுவது உண்மையே. பெரும்பான்மையோர் இதை மனதால் அடக்கியாள்பவர்கள் .சிலர் இதை போதையில் இருக்கும் போது நில தவறி தான் செயவது என்ன்வென்று தெரியாமல் பெண்களின் மேல் அதீதீவிரமாக கை வைத்துவிடுகிறார்கள். தவ்று என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த தவ்றின் அடிபடையை நோக்கி அதனை களையமுற்படும் போதுதான் இத்தகைய குற்றங்களை சமூகத்தில் இருந்து அறவே அகற்றமுடியும்.
உடை உடுத்துவது உங்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்று பலரும் உரக்க சொல்கிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி பொது இடங்களில் அடுத்தவ்ரின் ஆட்சேபனைக்கு இடம் அளிக்கும் வகையில் ஆடை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதம் சமபந்தப்பட்ட விசய்ங்களில் தனிப்பட்ட ஆடை முறைகளை கட்டாயமாக பயன்படுத்தவேண்டும் .ஆனால் நிதர்சனம் அப்படியா உள்ளதா?? நாங்கள் அப்படித்தான் எங்களின் அங்கங்கள் தெரிய ஆசை உடுத்துவொம் என்பவர்கள் அவர்களின் மத தளங்களுக்கு போகச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. செருப்படி விழும்.
இரவு நேரங்களின் பயனப்படுபவர்கள் சுடிதார் அணியலாம் .மிகசிறந்த உடலை மறைக்கும் ஆடை. அவையும் இறுக்கமாக அணியாமல் லூசாக இருந்தால் நன்று. பொது இடங்களில் உடலை இறுக்கி பிடிக்கும் லெக்கிங்கிஸ் போன்ற உடைகள் மிகுந்த கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதை விட பார்ட்டிக்கு போகிறவர்கள் உடலின் அங்கங்களை காட்டும் தோல் உறுத்து காட்டும் அளவுக்கு உடை அணிந்து செல்வது.அவை உளவியல் ரீதியாக நீங்கள் செகஸ்க்கு தயாராக இருப்பதன் அறிகுறி. மற்றவர்களுக்கு என்னை பார் என அழகை பார் என்று சொல்லாமல் சொல்வது. இவை ஒருவகையில் மொளனாமாக் நான் செக்ஸ்க்கு தயார் என்று சொல்வது..

இது தேவையா.....

அழிவின் விழிம்பில்..-30

>> புதன், 25 ஜூலை, 2012


சதுப்புநில மான்
Swamp dear-cervus duvaceli(g.cuvier)
கிளைகள் கொண்ட கொம்புகளுடன் அழகாக காணப்படுவதால் சதுப்பு நில மான் ,இந்தியில் பாரஹ் சிங்கா என்றழைக்கப்ப்டும் சிறப்பு வயந்த விலங்காகும்.இதற்கு அழகிய உரோமம் நிறைந்த தோல் இருப்பதால் இதன் உடல் மினுமினுப்பாக காணப்படுகிறது,வெயில் காலத்தில் இதன் நிறம் மங்கிவிடும். அவ்வப்போதுகொம்புகள் உதிர்க்கப்படுவதால் புதிய கொம்புகள் வெல்வெட் துணி போன்ற மென்மையான தோலுடன் தோன்றும். முதிர்ச்சி அடைந்த்தும் கொம்புகள் கெட்டிப்படுவதால் இனச் சேர்க்கை காலங்களில் தோலுறைகள் உதிர்ந்து விடும்.

இம்மான்கள் அடர்ந்த புற்களை உண்டு வாழும் பொதுவாக ஒரு மந்தையில் 30 முதல் 50 மான்கள் வரை காணப்படும்.ஆயினும் சிலவற்றில் நூற்றுக்கணக்கிலும் இருப்பதுண்டு .ஆண்மான்கள் இனச் சேர்க்கையின் போது மட்டும் பெண் மான்களுடன் சேர்ந்து காணப்படும். இனச் சேர்க்கை முடிந்தவுடன் ஆண்மான்கள் பெண் மான்களை விட்டு விட்டு வெளியேறி இதர ஆண்மான்களுடன் மந்தை அமைத்துக்கொள்ளும்.சில மான்கள் ஏகாந்த வாசிகளாக மாறிவிடும்.பெண் மானகள் தமது குட்டிகளுடன் சேர்ந்து மந்தை அமைத்து கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட இடங்களில் சுற்றிகொண்டிருக்கும். வயதான இன்னும் இனச்சேர்க்கை செய்யவல்ல ஒரு பெண்மானே இம்மந்தையின் தலைவர்.
வடக்கு மற்றும் கிழக்கிந்திய பகுதிகள் ,உத்திரப்பிரதேசம் ,அஸ்ஸாம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள சதுப்பு நிலங்கள் அல்லது வறண்ட புலநிலங்கள் நிறைந்த பகுதிக்ளில் சதுப்புநில மானகள் வாசம் செய்கின்றன. 

அழிவின் விழிம்பில்..-29


இந்திய காடு எருமை(கார்)
Gaur-Bos gaurus-(h.smith)

”கார்” என்ற்ழைக்கப்படும் இந்திய காட்டெருமை,மிகப் பெரியதும் கரிய நிறமுடையதுமாகவும்.அமெரிக்க காட்டெருமையுடன் ஒப்பிடும்போது இதற்க்கு குறுகிய கால்களும் வெள்ளையான பாதங்களும் இருக்கும்.இஅதன் முடி குறுகியும் திண்ணிய பழுப்பு அல்லது கருஞ்சிவப்பு அல்லது கருப்பு நிறத்துடன் இருக்கும்.வால் குறுகி கரிய குஞ்சத்துடன் காணப்படும் .ஆண்-பெண் என் இருபால்களிலும் கொம்புகள் நன்கு வள்ர்ந்திருக்கும்.

இவை 6 முதல் 12 எண்ணிகை கொண்ட மந்தைகளாக அடர்ந்த வெப்ப மண்டல காடுகளில் காணப்படும்.குறிப்பாக அருணாசலப் பிரதேசம்,நாகலாந்து,அஸ்ஸாம்,மிசோராம்,மேற்கு வங்காளம்,பீஹார்,ஒரிஸ்ஸா, மத்திய பிரதேசம்,தமிழ்நாடு,கர்நாடகம்,கேரளம் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளில் இவை காண்ப்படுகின்றன.இவை புறகள் ,மூங்கில் தழைகள்,இலைகள் மற்றும் மரப்பட்டைகளை உண்டு வாழ்கின்றன,

அழிவின் விழிம்பில்..-28


காட்டெருமை
Wild buffalo-bubalus bubalis (Linnaeus)

காட்டெருமை பெருமபாலும் வீட்டெருமையைப் போன்றே காணப்படும்.கரும்பலகை நிறத்தை கொண்ட இதன் காலகள் நேராக்க் கருமையாக இருக்கும்.முட்டிக்கு கீழே அழுக்குப்படிந்த வெண்மை நிறம் காணப்படும்.கொம்புகள் தட்டையாகவும் அரச்சுற்றுப் போல மேல் நோக்கி வளைந்தும் இருக்கும்.ஆண்-பெண் இருபாலுக்கும் கொம்புக்ள் ந்ன்கு வளர்ந்திடுக்கும், ந்ன்முடைய வீட்டு எருமைகள் இவற்றிலிருந்து தோன்றியவையே.

சதுப்பு நில புற் காடுகள் ,அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா அருணாசலப் பிரதேசம் ,மத்திய பிரதேசத்தில் சில பகுதிகள் ,மேற்கு ஓரிஸ்ஸா கிழக்கு மஹாராஷ்டிரா ஆகிய பகுதிக்ளில் உள்ள ச்ம்வெளிப் பகுதிக்ளில் இவை வசிக்கின்றன.இவை சிறிய மந்தைகளாக புல் மேய்வதையும் குளம் குட்டைகளில் பகலில் அடிக்கடி புரள்வதையும் காணலாம்  

அழிவின் விழிம்பில்..-27


சடை  மாடு
wild yak-bos mutus-(prze walski)

பசுவுடன் தொடர்புடைய சடைமாடு ,உருவத்தில் பெரியதாகும் .இது 20,000 அடி(6000மீட்டர்)உய்ரமுள்ள பகுதிகளில் காண்படுகிறது.நீண்ட தாழ்வான உடலமைப்புடைய இது தொங்கிய தலை குறுகிய காலகள் உடல் முழுவதும் செற செறப்பான  நீண்ட கருமை பட்ர்ந்த பழுப்பு நிற முடி ஆகியவற்றை கொண்டிருக்கும்.ந்னாகு முதிர்ச்சியடைந்த ஆண் சடை மாடு 1800 பவுண்டு(816 கிலோ)எடை கொண்டிருக்கும்.பெண் சடை மாடு சிறியதாகவும் குறுகிய கொம்புகளுடனும் இருக்கும்.இமய மலையில் உள்ள பனிபடர்ந்த பகுதிகளுக்கேற்ற மிகக் குளிரான சூழ்நிலையில் பிழைத்து வாழ இதனால் முடியும்.

 ச்டைமாடுகள் புற்கலையும் புதர்களையும் உண்டு பிழைக்கும்.தந்து மூஞ்சியினாலும் குளம்புகளாலும் பனிக்கட்டிகளை அகற்றி அவர்றின் கிழே இருக்கும் புற்கலையும் மேய வல்லவை.அருந்த நீர் இல்லாவிடில் பனிக்கட்டிகளையே உண்டு விடும்.இந்தியாவில் லடாக் மற்றும் குமான் மலைகளில் காட்டுச் ச்டை மாடுகள் காணப்படுகின்றன்.இமய மலையின் உச்சிப பகுதிகளில் வாழும் மக்கள் பல நூற்றாண்டுகளாக  சடை மாடுகளை வீட்டு உப்யோகத்திற்கு ப்யன்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு வீட்டுச்  சூழலுக்கு பயிற்றுவிக்கப்பட்ட சடை மாடுகள் அள்வில் சிறியதாகவும் உடலில் வெண்மையான அல்லது செந்நிற திட்டுக்களுடன் கானப்படுகின்றன.பொதி சுமக்கும் விலங்களாகவும் ச்டை மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அழிவின் விழிம்பில்..-26


ஆசிய காட்டுக் கழுதை
asiatic wild ass-asinus hemionus khur(lesson)

ஆசிய காட்டுக் கழுதை குதிரையை விட சிறியதாகவும் வீட்டுக் கழௌதையை விட பெரியதாகவும் இருக்கும்.உடலின் நிறம் சாமபல் அல்லது மஞ்சள் பழுப்பு நிறமாகவும் வயிற்றின் அடிப்பாகத்தில் வெண்பட்டையாகவும் இருக்கும்.கருப்பு முனையுடன் கூடிய நீண்ட கூர்மையான காதுகள் உண்டு.திண்ணிய பழுப்பு நிறம் கொண்ட பிடறிமயிரும்,இதனை தொடர்ந்துவரும் கறுப்புக் கோடு ,முதுகில் சென்று வால் முனை வரை காணப்படும்.

‘கட்சு ராண்’ பகுதியில் உள்ள உவர்நில பகுதிக்ளில் காணப்படும் ஆசிய காட்டுக் கழுதை புதர்களையும் புற்களையும் வறட்டுச் செடிக்ளையும் உண்டு வாழவல்லது.ஒரு காலத்தில் வட்மேற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காண்ப்பட்ட ஆசியக் காட்டுக் கழுதை த்ற்போது மனிதனின் குறுக்கீடுகளாலும் ஆடுமாடுக்ளின் மேய்ச்சலாலும் இஅவை மூலம் பரப்படும் நோய்களாலும் எண்ணிக்கையில் மைகவும் குறைந்து விட்டன.

ஆசிய காட்டுக் கழுதையுடன் நெருங்கிய உறவுள்ள மற்றொரு கழுதை திபேத் காட்டுக்க்ழுதை ஆகும்.ஆபத்துக்கு இலக்காகி இருக்கும் இஅந்தக் கழுதை திபேத் .லடாக் மற்றும் சிக்கிமில் தென் படுகிறது.ஆசியக் காட்டுக்கழுதையை விஅட் அள்வில் பெரியதாகவும் நிறத்தில் கறுமையாகவும் இருக்கும்.

அழிவின் விழிம்பில்..-25

>> செவ்வாய், 24 ஜூலை, 2012


எறும்புத் தின்னி
the indian pangolin -manis crassicaudata(gray)

” பங்கோலின்” என்றழைக்கப்படும் எறும்பு தின்னிகள் கூரிய நுண்ணறிவுள்ள விலங்குகளாகும்.மற்ற பாலூட்டிகளை போல் அல்லாமல் உடல் முழுவதும் அமைந்துள்ள செதில்கள் இதற்குப் பாதுகாப்பு கவசமாக பயன் படுகிறது.உடலில் உள்ள முடிகளே காலப் போக்கில் செதில்களாக மாறிவிட்டன.உடலின் அடிப்பகுதியில் செதிள்களுக்கிடையே கரடுமுரடான முடிகள் இருப்பதைக் காணலாம்.அச்சுருத்தப்படும் நேரங்களில் தனது உடலை  இரும்பு குண்டைப் போல சுருட்டிக் கொள்ளும் இதன் தனமை,ஒரு சிறப்பு மிக்க அமசமாகும்.இதர்க்கு நல்ல உடல் வலு இருப்பதால இவ்வாறு சுருட்டி கொண்ட இதன் உடலை திருமப இயலபான நிலைக்கு விரிப்பது என்பது ந்ம்மால் இயலாத செயலே.
 
தந்து முன்னங்காலகளைவிட் நீளமான மழுங்கிய நகங்களால் எறும்புகலையும் செதிள்களையும் தோண்டியெடுத்து  இது திண்ணும் திறன் கொண்டது.இது பொதுவாக பொந்துக்ளில் வசித்தாலும், ந்ன்கு மரமேறி மர எறும்புக்ளை தேடி உண்ணும்.பற்றிப் பிடிக்கும் திறம் கொண்ட வால்,எறும்புத்தின்னி மரமேறும்போது தேவையான பிடிமானதை கொடுக்கிறது.

இந்திய எறும்புத்தின்னி ச்ம்வெளி பகுதிக்ளிலும் இமயமலையில் சற்றுத் தாழ்வான பகுதிக்ளிலும் காணப்படுகிறது.பங்கோலின் இனத்தைசார்ந்த சீனா பங்கோலின் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு இமய்மலை பகுதிகளில் காணப்படுகிறது.உறைவிட் அழிப்பாழும் மருத்துவ குண்ம கொண்டது என்ற தவறான நம்பிக்கையாலும் இது வேட்டையாடப் படுவதால் இதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. 

அழிவின் விழிம்பில்..-24


சிவப்பு பாண்டா
red panada-ailurus fulgens -(f.cuvier)

சிவப்பு பாண்டா இரவில் வேட்டையாடும் மரத்தில் வசிக்கும் விலங்காகும்.கரடிக் குடும்பத்திற்க்கு நெருங்கிய பூனை போன்று தோன்றும் சிவப்பு பாண்டா அழகிய ரோமம் அடர்ந்த செக்கர் நிறத் தோல கொண்டது.வெள்ளையான முகமும் உருண்டையான தலையும் கொண்டது.மென்மயிர்க் கொத்துள்ள வாலும் அதில் மங்கிய அல்லது திண்ணிய செந்நிற வளையங்களும் வால முனையில் கருமையும் காணப்படும்.
தரையில் மெதுவாக செல்லும் சிவப்பு பாண்டா மரங்களில் வேகமாக ஏறக் கூடியது.நேபாளம் ,சிக்கிம்,பர்மா மற்றும் தென் சீனாவை ஒட்டியுள்ள இமயமலை பகுதிகளில் காணலாம்.மூங்கில்  தலைகள் ,பழங்கள்,வேர்கள் ,பூச்சிகள்,பற்வையின் முட்டைகள் ஆகியவற்றை தின்று வாழும்.ஆயினும் உயிரியல் வளர்க்கப்படும் சிவப்பு பாண்டாக்கள் ரொட்டி,பால் ,முட்டைகள் மற்றும் சிறிய பறவைகளை கூடத் தின்னவல்லவை.இது பூனையை போலச் சீறவும் கரடியை போல உறுமவும் ,நாயை போல குரைக்கவும் வல்லது.பொதுவாக இது தந்து மூஞ்சியை நீரில் வைத்து கரடியைப் போல நீரை உறிஞ்சிக் குடிக்கும்.பூனையை போல சிவப்பு பாணட தனது வளை நகங்களை சற்றெ காலுக்குள் இழுத்து வைத்து கொள்ளக்கூடியது. 

அழிவின் விழிம்பில்..-23


கரடிப் பூனை
(binturong(or)bear cat-arctictis binturong (raffles)

பூனைக் குடும்பத்தை சார்ந்த மற்ற பூனைகள் போல் அல்லாமல் கரடி போல் இருப்பதாலும் பறட்டையான உடல் இருப்பதாலும் இது கரடி பூனை எனப் பெயர் பெற்றது.இது அடர்ந்த காடுகளில் 2000 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வசிக்கும்.கருமையான முடிகொண்ட தோலுள்ள இப்பூனையின் உடலில் வெள்ளை அல்லது மங்கிய மஞ்சள் நிறமுடைய முடிகளும் இருப்பதால் நரைத்தது போல் தோன்றும்.இதன் குறுகிய காதுகளின் முனையில் நீளக் கொத்தாக முடி இருக்கும்.இதன் பற்கள் சிறியன.
 
கரடிப்பூனை மரத்ஹில் வசிக்கவல்லது.இதன் அடர்த்தியான வால் மரக்கிளையைப் பிடிக்க மற்றொரு கரம் போல உதவுகிறது.இது இரவில் வேட்டையாடும் விலங்காதலால் பகல் நேரத்தில் மரப் பொந்துகளில் தலையை வாலுக்கடியில் சுருட்டி வைத்து இருக்கும்.பொழுது சாய்ந்ததும் மரப்பொந்தை விட்டு வெளியேறி சற்றெ திறந்த தனது உதடுகள் மூலம் “உஸ்” என்ற சீறல் ஒலி எழுப்பிக்கொண்டே தந்து இரையைதேடிப் புறப்படும்.

அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் காடுகளில் கரடிப்பூனை வசிக்கிறது.அடர்ந்த மரங்களினுடே இது மெதுவாக ஆனால் திறமையாக இடம்பெய்ர்ந்து செல்லக்கூடியது.இது சிறிய வகை பாலூட்டிகள் பறவைகள் மீன் மண்புழுக்கள் பூச்சிகள் மற்றும் பழங்களை தின்று வாழ்கிறது. 

அழிவின் விழிம்பில்..-22


புள்ளி லிங்சாங்
(spotted linsang-prionodon pardicolor(hodgson))

புள்ளி லிங்சாங் புனுகுப் பூனை நீள் வடிவான உடலும் முறுகிய் மங்கிய நிறமுள்ள் தோலும் அதில் கரும் புள்ளிகளும் கொண்டு  விள்ங்கும்.நன்கு ம்ரமேறவும் திறமையாக வேட்டையாடவும் வல்லது.கூர்மையான தலை சிறிய காலகள் குறுகிய வால் வாலில் 8 முதல் 10 வரை கரு வளையங்கள் ஆகியவை கொண்டு விளங்கும்.உடல் முழுவது நீளப்பாங்காக வரிசையாக அமையப் பெற்ற் புள்ளிகள் கழுத்து மற்றும் கால்களின் அடிப்பகுதியில் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியான வரிகளைப் போலத்தெரியும்.

மலைப் பகுதிக்ள் மற்றும் காடுகள் நிறைந்த மத்திய மற்றும் கிழக்கு இமயமலை பகுதியில் புள்ளி லிங்சாங் வாழ்கிறது.பூச்சிகள் பறவைகள் மற்றும் சிறிய வகை பாலுட்டிகள் இதன் இரையாகும்.தரையில் தந்து வயிற்றுப்பகுதியில் உர்ந்து இஅரை விலங்கினைப் பிடிக்கும்.இது மிகவும் மெலிந்து கணப்படுவதால் ,கனத்த உடல் கொண்ட நஞ்சுடைய பாம்பு என்றே பல சமயம் மறுபட்டுத் எண்ணத் தோன்றும்.

அழிவின் விழிம்பில்..-21


புனுகுப் பூனை.
(the civets)

புனுகுப் பூனைகள் (viverridae) ' விவரிடே’ என்னும் குடும்பட்த்தைச் சேர்ந்தது.பூனைகள் இஅவற்றின் உறவினர்கள் என்று சொல்லாம்.புனுகுப்பூனை நீண்ட உடலையும் குறுகிய காலகளையும் நீள் வடிவமான தலையையும் துறுத்திய மூஞ்சியையும் கொண்டது.கூர்மையான பார்வை ந்ன்கு மோப்பம் பிடிக்கும் நாசி ,துல்லியமாக கேட்கும் செவிகள் ஆகியன் இதன் சிறப்பு அம்சங்களாகும்.புனுகுப்பூனைகளை முற்றிலுமான ஊண் உண்ணும் விலங்குகள் என்று வகைப்படுத்த முடியாது .அவ்வப்போது இவை தாவரங்களையும் உண்டு வாழும்.

அழிவின் விழிம்பில்..-20

>> ஞாயிறு, 22 ஜூலை, 2012


கரடி.
(sloth bear-melursus ursinus(shaw))

இதற்கு நீண்ட பறட்டையான கருவண்ண முடியும் மார்பில் ‘ V ' வடிவமான வெண்ணிற குறியும் இருக்கும்.தலை பெரியதாகவும் மூஞ்சி துறுத்திக் கொண்டும் இருப்பதால முகம் முக்கோன வடிவமாக தெரியும்.காலகளில் தட்டையான பாதங்களும் அவ்ற்றின் முன்புறம் நீண்ட வெண்ணிற வளை நகங்களும் இருக்கும்.கரட்டியின் பாதச்சுவடுகள் பார்ப்பதற்க்கு மனிதனின் பாதச் சுவடுகள் போன்றே தெரியும்.

பாறைகள் மிகுந்த இடங்கள் நீர் நிலைகளுக்கு அருகேயுள்ள காடுகள் ஆகிய இடங்கலில் ஏறக்குறைஉ இந்தியா முழுவதும் காணப்படும்.இது இரவில் இஅரை தேடும் பழக்கம் கொண்டது.பழங்கள் பூக்கள் வேர்த் தண்டுகள் தேன் எறும்புகள் பற்வைகள் மற்றும் முட்டைகளே இஅதன் ஆகாராமாகும்.  

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP