புதிய தலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தலைமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி

>> ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012


புதிய தலைமுறை முதல் ஆண்டு-இறுதிப பகுதி


பொதுவா தமிழில் செய்தி சேனல்கள் என்பது ஒரு ஸ்ட்டி கேமரா முன் ஒருவர் அமர்ந்து செய்தியை பிராம்டில் வாசிப்பதும், கொஞ்சம் பைட் இருந்த போதும் சுமார் 20 நிமிட்த்திற்கு செய்தியை ஒப்பேத்திடர மனநிலை தான் நிலவி வந்தது. நான் செய்தி பிரிவில் உதவி ஆசிரியரை பணியில் இருந்தால் நன்றாகவே தெரியும்..இதை மீறீ நீங்க ஏதாவது கிரியேட்டிவ்வா வேலை செய்யலாம் என்று நினைத்தாலும் ஒன்று நிர்வாகம் ஒத்துவராது அல்லது விசுவல் எடிட்டர் ஒத்துவரமாட்டார். இது நிதர்சனம்.இந்த சமயத்தில் பரவலா முக்க்கிய ஊர்களுக்கு நிருபரை போட்டு அவங்களும் கொஞ்சம் நாலேஜ் கூட இருக்கிர மாதிரி ஆளை போட்டாங்க புதிய தலைமூறை .இதிலையும் எல்லோரும் கொஞ்சம் சின்ன வயதா இருக்கிர மாதிரி பார்த்திட்டாங்க.. காரணம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிரவங்க.. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையில் சொல்வ்தையும் கேடகமாட்டாங்க.. அதனால தேவையில்லாத பிரச்சனை என்று அதை முன்கூட்டிய தவிரத்த்து அழகானவிசயம் ..விவரமான விசயமும் கூட.

இதுவரை செய்தி மொழி பொதுவா எழுத்து நடையாக தான் இருக்கும் வழக்கு மொழியாக இருக்காது. வழக்கு மொழியும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொருவிதமாக பேசுவார்கள். இது கொஞ்சம் பிர்ச்சனையான விசயமும் கூட.. பலரும் சொல்வாங்க வழக்கு மொழியை செய்திக்கு பயனபடுத்தனும் .. ஆனால் எந்த பகுதி வழக்குமொழியை பயன்படுத்தரது என்பது குழப்பமான விசயம். பிரச்சனையான விசயமும் கூட.இதை ந்டைமுறை படுத்த முயற்சி செய்தவகையில் இவர்களை பாராட்டலாம். ஆனால் விவரமாக இவர்கள் தேர்ந்தெடுத்த்து பேச்சு வழக்கு மொழி அல்ல. மிடில்கிளாஸ் மக்கள் பேசும் பொது மொழியை.பொதுவாக் தமிழகம் முழுவதும் மிடில்கிளாஸ் மக்கள் பேசுவதை ந்னறாக கவனித்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தமிழும் ஆங்கிலமும் கலந்த பேச்சு இருக்கும் . அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். அதுதான் இவர்களின் ஆடியன்ஸ் என்பதையும் முதலியே முடிவு செய்துவிட்ட்தால் இவரக்ளுக்கு வசதியாக போய்விட்ட்து.ஆனால் நடைமுறை படுத்தும்போது அதில் கோட்டை விட்டார்கள் என்பதே உண்மை. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மொழி உச்சரிப்பலும் தேவையில்லாத சொற்களையும் பயன்படுத்தரது இவங்களிடம் நல்ல தெரியும்.
காட்சி ஊடகத்தை பொருத்தவரை பயன்படுத்த கூடாத சொற்கள் என்பது தான் முக்கியம். அதை இவர்களின் செய்தியாளர்களால் தவிர்க்க இயல்வில்லை. இதற்கு முறையான பயிற்சி கொடுத்தால் அல்லது ஒரு சிஸ்டம் கொண்டுவந்தால் இக்குறையை போக்கலாம்.
இப்படி போய்கொண்டுருக்கும் போது இவர்கள் கண்ணில் பட்ட்துதான் பள்ளிக்கரனை சதுப்புநிலம் தீப்பற்றி எரிந்த்து. அதை நன்றாக கவரேஜ் செய்தார்கள். ஆனால் அதை நல்ல விதமாக காட்டுகிறேன் என்று செம சொதப்பல் சொதப்பினார்கள். அதைவிட அதன் முக்கியதனமை அறியாத இவர்கள் அதன் பாலோப் செய்தியும் மக்களுக்கு வழங்கவில்லை. அதை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது மட்டும் அல்ல. தமிழக மீனவர்களின் பிரச்சனையிலும் இவர்கள் போதுமான கவரேஜ் அளிக்கவில்லை. அவ்வப்போது மற்ற செய்தி சேனலகள் சொல்வதுபோலதான் ஆட்டைய போட்டார்கள்.இதே தான் ஜெயலலிதாவின் பெங்களுர் வழக்கிலும் செய்தார்கள்.
சமீபத்தில் லண்டன் ஒலிம்பிக்கை சிறப்பாக வழங்குவதற்கு ரம்யாவை லண்டன் அனுப்பினார்கள். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அட்டகாசமான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். தற்போது தமிழகத்தை கலக்கி வரும் கிரனை வழக்கிலும் இவர்கள் இதே மாதிரி தான் மக்களுக்கு பாவ்லா காட்டினார்கள். மற்ற கிரானைட் குவாரிகளில் விதி மீறினார்கள் என்று சொல்லிவிட்டு முக்கிய குவாரி அதிபரை பற்றிய செய்தியை மலுங்கடித்தார்கள்...இப்படி இவர்கள் ஆட்டைய போட்ட கதை பல உள்ளது.




கட்டுரை நீண்டு கொண்டே போவதால் இதை முடிப்போம்.இந்த முதல் ஆண்டில் புதிய தலைமுறை பொருத்தவரை செய்தி சேனல்களின் எண்ணத்தை மாற்றியதில் முக்கிய பங்கிருக்கிறது.ஆங்கில ஊடகங்களின் ஸ்டைலில் தர முயற்சி செய்கிறார்கள். ஆனால் அழகா இருந்த பத்தாது.. ஆரம்பத்திற்கு நல்ல இருக்கும் .. மக்களும் பார்ப்பாங்க.. நீண்ட காலம் அல்லது மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமரனும் என்றால் தரம் இருக்க வேண்டும் மக்களின் பிரச்சனைகளை குறிப்பாக அடிப்படை மக்களின் பிரச்சனைகளை நீண்ட விவாத்திற்கு உள்ளாகவேண்டும் . ஏன்னொனில் இப்போது பல செய்தி சேனலகள் வர இருக்கிறது.. ஏற்கொனவே GTV ம்ற்றும் சத்தியம் போட்டி போட களத்தில் உள்ளது . சத்தியம் ஓரளவு விளம்பரமும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே நெருக்கடி உள்ளது புதிய தலைமூறைக்கு. விரைவில் பாலிமரும் செய்தி சேனலில் களம் இறங்குகிறது.. ஆகவே புதிய தலைமுறை விடியலா... இல்லை ஓணம் பண்டிக்கை போடும் அவியலா என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.. 

Read more...

புதியதலைமுறை முதலாம் ஆண்டு...-2

>> சனி, 25 ஆகஸ்ட், 2012


 புதியதலைமுறை முதலாம் ஆண்டு...


பொதுவா காட்சி ஊடகத்தில் தனக்கான இடத்தை தக்க வைப்பது கொஞ்சம் சிரமான காரியம் அல்ல அது ரத்தம் வடியும் காரியம். மக்கள் போரடிக்குது நினைத்தவுடன் சேனலை மாற்றிவிடுவார்கள். மிண்டும் அவர்களை பார்வையாளரா கொண்டு வருவது மலையை கட்டி இழுப்பது போலத்தான். அதனால் எப்போது மக்களுக்கு புதுப்புது செய்திகளை கொடுத்து தான் ஆகனும்.. அதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிராங்க.. இது ஒரு வகையில் ஒரு சேடிஸ்ட் மனநிலை தான்.. என்ன பன்றது மக்கள் அப்படி ஆயிட்டாங்க...சரி மீண்டும் நம்ம விசயத்து வருவோம்... ஆட்சி மாற்றத்தால் சன் அமைதியா இருக்க .. அதே சமயம் மேக்ஸிஸ் பிரச்சனை.. ஸ்பெக்டராம் பிரச்சனையில் திமுக பம்மி கொண்டு இருந்தால் பிரதர்ஸ் அவங்களை காப்பாத்திக்க்வே ரொமப கூர்மையா இருந்தாங்க.. இது பத்தாது என்று சாக்ஸ் வேற ஒரு பக்கம் நாறிட்டு இருந்தார்.. அப்ப அவங்களின் சேனலின் கதி ரொம்ப சிக்கல் தான்.. பத்தாதுக்கு எஸ் சி வி வேற டப்பா டான்ஸ் ஆடிருச்சு.. சுமார் அதில் மட்டும் 1100 கேடி (வருட வருமானம்) அவுட்.. என்னத்தை தின்ன பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்தாங்க...அது இவங்களுக்கு நல்ல வாகா அமைஞ்சது ..இல்லை என்றால் இவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுருப்பாங்க... ஜி டிவி க்கு ஆன கதி தான் இவங்களுக்கும் ஆயிருக்கும்.

சரி ஒரளவு நல்ல பெயர் கிடச்சிருச்ச்சு.. புதுப் புது அர்த்தங்கள், கொஞ்சம் சோறு, என்கவுண்டர் மேட்டர் என்று லைம் லைட்டுக்கு வந்தவங்க அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிச்சு இருந்தப்ப ஜல்லிக்கட்டை நேரடியா லைவ் செய்தாங்க... இது இவங்களை தொடர்ந்து நேயர்களை தக்க வைக்க உதவுச்சு. இதே நேரத்தில் ஆரம்பித்த யெப்பிஸ்க்கு மட்டும் தான் நிகழ்ச்சி ..உள்ள ஒரு மேட்டரும் இல்லை என்றாலும் இரண்டு விசயம் மக்களுக்கு பிடிச்சது .. ஒன்று இது செய்தி சேனலில் புதுசா இருந்த்து ..மற்றொன்று அந்த குண்டு பையனும் ஒல்லி பொண்ணும். அடிக்கிர செம ரகளைகள்.. மக்களின் மனதில் பச்சக்குனு ஒட்டிக்குச்சு.. அப்பறம் என்ன அந்த நிகழ்ச்சியும் நல்ல ஹிட்.. குறிப்பா இளையவர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ்..இதை தொடர்ந்து இவங்க அரம்பிச்ச நேர்பட பேசு,களம் இறங்கியவர்கள், ரொளத்திரம் பழகு போன்ற நிகழ்சிகளில் ரொளத்திரம் பழகு தி பெஸ்ட்.. சமுகத்தில் நடக்கும் பல குறைபாடுகளை அட்டகாசமா வெளிப்படுத்தினாங்க.. அதிலும் குறிப்பா தாமிரபரணி மணல் திருட்டை வெளிப்படுத்தினப்ப பொது தளத்தில் அனைவராலும் பாராட்டப்பட்ட்து . அருமையா பதிவு அது. துணிந்து அடிச்சாங்க.. அதற்கு உண்மையில் இவர்களை பாராட்டித்தான் தீரனும். குட்.பாய்ஸ்.. இதற்கிடையில் இவர்களுக்கு அலவா மாதிரி ஒரு பிரச்சனை கிடைச்சுது... அது கூடங்குளம் அணு உலை பிரச்சனை.. கிடைச்ச வாய்ப்பை நல்ல பிடிச்சுகிட்டு சும்ம பிச்சு உதறினாங்க.. போட்டு லைவ்வா தாக்கிட்டாங்க.. அந்த பிரச்சனை எட்டுத்திக்கும் பரவ் இவங்கதான் காரணம்.. நல்ல எடுத்திட்டு போக போக மத்த சேனலகள் எல்லாம் மார்க்கெட்டில் அவுட்டாக ஆரம்பிச்சுட்டாங்க...அப்ப தான் முதலிடம் என்று பேச்சு கிளம்பிச்சு .. உடனே சன் அட்டா .. நாம தூங்கிட்டோம்.. விழித்துக்கொள்ள ஆரம்பிச்சுது.. 

ஆனால் இதே நேரத்தில் இவங்க ஆட்டைய போட ஆரம்பிச்சுட்டாங்க.. கூடங்குளம் பிரச்சனை ஓரளவுக்கு லைம் லைட்டுக்கு வந்தவுடன் இவங்களுக்கு எங்கிருந்து பிரசர் வந்துச்சுனு தெரிய்லை.. இவங்க அப்ப அப்ப பல்டி அடிக்க ஆரம்பிச்சாங்க.. இதே நேரத்தில் புதிய தலைமுறையில் பல உள்ளடி பிரச்சனைகளால் பலரும் வெளியே போக ஆரம்பிச்சாங்க..சொதப்பல் ஆரம்பமாக ஆரம்பிச்சு....
எல்லாரும் போல இவர்களும் ஈழம் பிரச்சனையை கையில் எடுத்தாங்க.. ஆமா தமிழன் உணர்ச்சிக்கு அடிமை என்பதை தெள்ளத்தெளிவா புரிஞ்சுகிட்டு இலங்கைக்கு பயங்கர பிலடப்போடு கிளம்பினாங்க... பலவிளம்பரங்கள் போட்டு தாக்கினாங்க.. உண்மை நிலவரம் என்று கிளம்பினவங்க  சத்தம் இல்லாம திரும்பி வந்தாங்க.. உண்மை நிலவரம் என்று இவங்க அடிச்ச பலடி மெக பல்டி... உட்டாலக்கடி வேலை... நன்றாக ஜிங் ஜிங் அடிச்சாங்க... இலங்கை அரசுக்கு.முதல் முறைய மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி மக்களை ஏமாற்றினாங்க.. இவங்களுக்கு அது இறங்கு முகம்.. செம் அடி ..பார்வையாளர்களை பொறுத்த வரை. அதற்கு பதில் இவங்க அந்த அசைன்மெண்டை தொட்டுருக்கமா இருந்தால் இருந்த ஆடியன்ஸை காப்பாத்தியிருக்கலாம்.. இது மற்ற சானலுக்கு ஒரு பாடம் .. அடவாண்டேஜ்.. தேவையில்லாதில் மூக்கை நுழைத்து அடிவாங்கினாங்க்.....இது மட்டுமா...

இன்னும் தொடரும் இவங்க.. அடி பட்ட...கதை.. 

Read more...

புதியதலைமுறை முதல் ஆண்டு.-- 1

>> வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012


 புதிய தலைமுறை  முதல் ஆண்டு...


புதிய தலைமுறை முதல் ஆண்டு... எழுத்தாழுமை மாலன் அவர்களை ஆசிரியராக கொண்டு இதழாய் மக்களின் கைகளில் இளமையாய் நுழைந்தது. புலனாய்வு இதழ்கள் சக்க போடு போட்டு காசு பார்த்துக்கொண்டு இருந்த நிலையில் அதிகம் டேபிள் ஜேர்னலிசம் கொஞ்சம் மக்களின் குறிப்பாக இளையவர்களின் மனதில் உள்ள சே இதை திருந்த முடியாது என்கிற பிரச்சனைகளை மையப்படுத்தி வெளிவந்து மக்கள் மனதில் நச் என்று இடம் பிடித்தது. குறிப்பாக ஒரு இதழுக்கு காட்சி ஊடகத்தில் நாள் முழுவதும் விளம்பரம் கொடுத்து நாளிதழ்களிலும் நல்ல விளம்பரம் கொடுத்து கும் என்று வந்திருங்கினார்கள். எஸ் ஆர் எம் என்னும் பலதுறை வியாபார நிருவனத்திடம் இருந்து மிகுந்த பணபலம் உள்ள பின்புலத்தில் இருந்து பிறந்ததால் இதழுக்கு உள்ள பணப்பிரச்சனை இதற்கு இல்லை என்பது இதற்கு கூடுதல் வரப்பிரசாதம்.

மக்களிடம் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி தக்க சமயத்தில்  அதாவது கடந்த ஒரு வருடம் முன் காட்சி ஊடகத்திலும் செய்தி சேனலை ஆரம்பித்து களத்தில் குதித்தார்கள்.இந்த சேனலை தொடக்கத்தில் ஊடக மன்னர்கள் கண்டு கொள்ளவில்லை.எல்லா சேனல்களை போலவே இவர்களும் இருப்பார்கள் என்று நினைத்தார்கள். அதே நேரத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதும் வசதியாக போய்விட்ட்து எஸ் ஆர் எம் குழுவுக்கு.பொதுவாக இவர்களின் தலைவர் பாரிவேந்தரின் கட்சியை முன்னிலைப்படுத்தும் என்று தான் ஊடகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலோர் நினைத்தார்கள்.ஆனால் நட்ந்த்தோ... முற்றிலும் வேறு!!
மங்கிய காட்சி,சொன்னதை திருப்பி திருப்பி சொல்லும் ம்னோபாவம்,நான் சொலரது தான் செய்தி ,தனக்கு வேண்டாதவர்களின் நல் செய்தியை மட்டுப்படுத்துவது என்று தான் பெரும்பாலும் செய்தி சேனலகள் இருந்து வந்தன அதுவரை. மேலும் செய்தி சேனல்க்கு என்று இருந்த நவீன மனோபாவங்கள் ஒன்றும் இல்லாத மொக்கை சேனலகள் மத்தியில் கம்பீரமாய் கடையை விரித்த்து புதிய தலைமுறை. சேனல் ஆரம்பிக்கும் முன் டெக்னிக்கல் விசய்ங்களில் இவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நல்ல முயற்சி. முதல் முறையாக HD முறையில்..துள்ளிய காட்சிகள்... இளைமை பட்டாளம் .. என்று புதிய கனவுகளோடு களம் இறங்கினார்கள்.
பொதுவாக சிவப்பு,ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்கள் அதிகம் கண்களை ஈர்க்கும். பொதுவாக ஜரோப்பிய மற்றும் ஸ்கேண்டி நாடுகளில் இந்த கலரை அதிகம் பார்க்கலாம்.இதற்க்கு முன்னால் மிகமுக்கியமான விசயத்தை சொல்லனும்.. இது வரை உள்ள அனைத்து செய்தி சேனலகளும் பொதுவாக தங்கள் கொள்கைகளை ,நிகழ்ச்சிகளை தங்களது ஒட்டு வங்கியிடம் சேர்க்கும் எண்ணத்தில் மனதில் வைத்தே ஆரம்பிக்கப்பட்ட்து. இதில் நடுநிலைமை என்னும் பெரும்பானமை வாக்காளர்கள் ,மக்களை கவரதற்கு எந்த சேனலும் நினைக்கவில்லை. அல்லது தெரிவில்லைய???
அந்த நடுநிலை மற்றும் புதியதாக(ஒவ்வொரு தேர்தலிலும் 7 முதல் 10 சதவீதம் புதிய்தாக ஓட்டு போட வாக்குசாவடிக்கு வருகிறார்கள்) ஒட்டுப்போடும் இளையவர்களை மனதில் வைத்து அவர்களையே ஆடியன்ஸாக வைத்து தான் புதியதலைமுறை களம் இறங்கியது.  சபாஷ்.. நல்ல சிந்தனை,
களம் இறங்கியாச்சு.. போன ஆக்ஸ்ட் 24.. வந்து என்ன செய்தார்கள்....
முதலில் அந்த வண்ணம்,துள்ளியம்,இளமை போன்றவற்றால் மக்களுக்கு அட என்று திரும்பி பார்த்தார்கள். குறிப்பாக காலையில் 15 நிமிட நேரடி நிகழ்ச்சி நல்ல கான்சப்டா இருந்த்து. எல்லோருக்கும் பிடிச்சது . செய்திதாள்களில் வரும் செய்திகளை இருவர் அலசுவது ..ஜென்ராம் வழங்கிய நிகழ்ச்சி. பேச்சு சம்பந்தப்பட்ட தமிழ்நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்குபவர் அதிகம் பேசிக்கொண்டிருந்த போது குறைவான பேச்சு அதுவும் நேரடியாக என்றவுன் எல்லோருக்கும் சட்டுனு பிடிச்சது....அட என்று எல்லோரும் உற்று கவனிக்க ஆரம்பித்தார்கள்...அடுத்து இறக்கினாங்க பாருங்க....அது..


கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு.... சும்மா சொல்லக்கூடாது. பா.ராகவன் எழுதிய புத்தகம் ஊ... வெளிவந்த போது சக்கை போடு போட்ட புத்தகம் கிழக்கு வெளியீடு. அதை அப்படியே பா,ரா திரைகதை எழுத ஹரி தொகுக்க... சும்மா ஆரம்பத்திலெ இருந்து ஜிவ்னு பத்திகிச்சு... முதல் பாலில் சிக்ஸ்ர் அடிச்ச மாதிரி.. அட்டகாசம் பன்னிடாங்க... இப்ப தான் மக்கள் டே இவங்க என்ன்மோ நல்ல பன்றாங்கடா என்று நிமிர்ந்து உடகார்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க...இதை தக்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசனையில் தலையை பிச்சுட்டு இருக்கப்ப... கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்ட லஷ்மி இவங்க மடியில் வந்து அமர்ந்த அந்த சம்பவம்....சென்னை என்கவுண்டர் மேட்டர்...
துக்குடா கேமராவை.. அடரா லைவ்வை... அடிச்சாங்க.. பாருங்க... எல்லோரும் புதிய தலைமுறை சேனலை வைச்சு கண்ணு எடுக்காமா பார்க்க வைச்சாங்க... அந்த தகவலை முதல் முறையா சொன்னவங்க இவங்கதான்.. காலையில் 4 மணிக்கு சூப்பரா முதல் பைட்டை மக்களுக்கு காட்டிடாங்க.. அதை பக்கவா பிடிச்சு நல்ல கிராபிக்ஸ் செய்து சும்மா புலனாயவு பத்திரிக்கைகள் தோர்த்து போகும் அளவுக்கு நல்ல கதை சொன்னாங்க... மக்களும் பாட்டி சொன்ன கதையை கேட்கர மாதிரி .. அப்படியே மகுடிக்கு மயங்கும் பாம்பாய்.. மயங்கிட்டாங்க புதிய தலைமுறையிடம்..
.....கரண்ட் போயிருச்சு... கொசுக்கடி தாங்க முடியலை...இன்னும் எடிட் செய்யலை... கரண்ட் வந்த பிறகு கதையை சொல்ரேன்... ஒகேவா...

Read more...

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP